Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு- கிழக்கு அபிவிருத்திக்காக அரச தலைவர் சிறப்புச் செயலணி!!

Featured Replies

வடக்கு- கிழக்கு அபிவிருத்திக்காக அரச தலைவர் சிறப்புச் செயலணி!!

 

 

 

 
 

வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளின் அபி­வி­ருத்­திக்­காக அரச தலை­வர் சிறப்­புச் செய­லணி நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­கான அர­சி­தழ் கடந்த 4ஆம் திகதி அரச தலை­வ­ரின் பதில் செய­லர் சுமித் அபே­சிங்­க­வி­னால் வெளி­யி­டப்­பட் டுள்­ளது.

வடக்கு அபி­வி­ருத்­திக்­காக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், அரச அதி­கா­ரி­களை உள்­ள­டக்­கிய சிறப்­புச் செய­லணி அமைக்­கப்­ப­டும் என்று, 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4ஆம் திகதி வடக்கு மாகாண ஆளு­நர் அலு­வ­ல கத்­தில் நடை­பெற்ற நிகழ்­வில் உரை­யாற்­றும்­போது தெரி­வித்­தி­ருந்­தார்.

இதன் பின்­னர் கடந்த மார்ச் மாதம் முற்­ப­கு­தி­யில் மட்­டக்­க­ளப்­பில் உரை­யாற்­றிய அரச தலை­வர், வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளின் அபி­வி­ருத்­திக்­கான செய­லணி அமைக்­கப்­ப­டும் என்று கூறி­யி­ருந்­தார்.

 

இவ்­வா­றா­ன­தொரு நிலை­யில் வடக்கு – கிழக்க மாகா­ணங்­க­ளின் அபி­வி­ருத்­திக்­காக அரச தலை­வர் சிறப்­புச் செய­லணி அமைக்­கப்­பட்­டுள்­ளது. 48 பேர் உறுப்­பி­னர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­து­டன், இதன் செய­ல­ராக வே.சிவ­ஞா­ன­சோதி நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.

‘போரின் பின்­னர் வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளில் இது­வரை முன்­னெ­டுக்­கப்­பட்ட அபி­வி­ருத்­தித் திட்­டங்­களை மீளாய்வு செய்­வ­தற்­கா­க­வும் மாகா­ணங்­க­ளின் அபி­வி­ருத்­திச் செயற்­பா­டு­களை துரி­தப்­ப­டுத்­து­வ­தற்­கா­க­வும் அர­சால் ஆரம்­பிக்­கப்­பட்ட அபி­வி­ருத்தி வேலை­க­ளுக்­கான வழி­காட்­டல்­கள் மற்­றும் ஆலோ­ச­னை­களை வழங்­க­வேண்­டும் என்­பது எனக்கு தெரிய வந்­துள்­ள­தா­லும் தேசிய ஒற்­றுமை மற்­றும் ஒரு­மைப்­பாடு, சம­நி­லைப் பொரு­ளா­தார மற்­றும் சமூக ரீதி­யி­லான வரு­மா­னத்­தின் விருத்­திக்­காக அபி­வி­ருத்­திச் செயற்­பாட்­டின் மூலம் அணு­கு­வது இன்­றி­மை­யா­த­தெ­னக் கரு­தப்­ப­டு­வ­தா­லும் இந்­தச் செய­ல­ணியை நிய­மிக்­கின்­றேன்’ என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால அர­சி­த­ழில் தெரி­வித்­துள்­ளார்.

அரச தலை­வ­ரி­னால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள செய­ல­ணி­யின் உறுப்­பி­னர்­கள், வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளின் அபி­வி­ருத்­திப் பணி­களை நெறிப்­ப­டுத்­தல், கூட்­டி­ணைத்­தல் மற்­றும் தொட­ராய்வு செய்­தல் வேண்­டும்.

செய­ல­ணி­யின் பணி­க­ளாக 7 விட­யங்­க­ளும் அரச தலை­வ­ரால் பட்­டி­யல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளில் தற்­போது செயற்­ப­டுத்­தப்­ப­டும் பல்­து­றை­சார் நிகழ்ச்­சித் திட்­டங்­கள் மற்­றும் கருத்­திட்­டங்­க­ளின் முன்­னேற்ற நில­மையை மீளாய்வு செய்­தல்.

முன்­னு­ரிமை அவ­தா­னம் தேவைப்­ப­டும் துறை­கள் மற்­றும் குழுக்­களை இலக்கு வைக்­கும் புதிய திட்­டங்­களை முன்­னெ­டுத்­த­லும் நிதி வளங்­களை அளித்­த­லும்.

மாகா­ணங்­க­ளின் அனைத்து அபி­வி­ருத்­திச் செயற்­திட்­டங்­க­ளி­லும் தேவை­யான போது தலை­யி­டு­தல், வழி­காட்­டு­தல்.

மாகா­ணங்­க­ளின் அபி­வி­ருத்­தித் திட்­டங்­க­ளில் முத­லீடு செய்து நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­காக தனி­யார் துறை மற்­றும் பல்­த­ரப்பு அபி­வி­ருத்தி நிறு­வ­னங்­கள் ஆகி­ய­வற்­றின் ஆத­ர­வை­யும் பங்­கேற்­பை­யும் ஊக்­கு­வித்­த­லை­யும் பெற்­றுக்­கொள்­ளல்.

அர­சுக்­கும் மாகாண நிறு­வ­னங்­க­ளுக்­கும் இடை­யே­யும் அரச மற்­றும் தனி­யார் துறை­க­ளுக்கு இடை­யே­யும் மற்­றும் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­கள், சிவில் சமூ­கத் துறை­க­ளுக்கு இடை­யே­யும் பணி­களை ஒருங்­கி­ணைப்­புச் செய்­தல்.

மாகா­ணங்­க­ளின் அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­க­ளின் நடை­மு­றைப்­ப­டுத்­தல் பற்­றிய ஒட்­டு­மொத்த கண்­கா­ணிப்பை நிறை­வேற்­று­தல்.

மாகா­ணங்­க­ளின் அபி­வி­ருத்­தித் திட்­டங்­களை துரி­மாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு தடை­யாக இருக்­கின்ற ஏதே­னும் தடை­களை இனங்­கண்டு, அவற்­றைத் தவிர்த்­துக் கொண்டு, துரித தீர்­வு­கள் தொடர்­பாக உரிய அதி­கா­ரி­க­ளுக்கு அறி­வுரை வழங்­கல், என்­பன குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன.

இந்­தச் செய­லணி உரிய பணி­களை முன்­னெ­டுக்க சகல உத­வி­க­ளை­யும் சகல தக­வல்­க­ளை­யும் வழங்­க­வேண்­டும் என்று அரச பணி­யா­ளர்­கள் அனை­வ­ருக்­கும் அரச தலை­வர் பணிப்­புரை விடுத்­துள்­ளார்.

http://newuthayan.com/story/09/வடக்கு-கிழக்கு-அபிவிருத்திக்காக-அரச-தலைவர்-சிறப்புச்-செயலணி.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கூட்­ட­மைப்பு எம்.பிக்­க­ளுக்கு – செய­ல­ணி­யில் இட­மில்லை!!

 

 

வடக்கு -– கிழக்கு மாகாண அபி­வி­ருத்­திக்­காக உரு­வாக்­கப்­பட்­டுள்ள அரச தலை­வர் சிறப்­புச் செய­ல­ணி­யின் உறுப்­பி­னர்­க­ளாக தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் எந்­த­வொரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை. வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் செய­ல­ணி­யில் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளார்.

செய­ல­ணி­யின் உறுப்­பி­னர்­க­ளாக 48பேர் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­னால் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர். அவர்­க­ளில் 20பேர் அர­சி­யல்­வா­தி­கள்.

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, நிதி அமைச்­சர் மங்­கள சம­ர­வீர, வடக்கு அபி­வி­ருத்தி அமைச்­சர் டி.எம்.சுவா­மி­நா­தன், தேசிய ஒரு­மைப்­பாடு, நல்­லி­ணக்­கம் மற்­றும் அரச கரும மொழி­கள் அமைச்­சர் மனோ கணே­சன், நெடுஞ்­சா­லை­கள் மற்­றும் அபி­வி­ருத்தி அமைச்­சர் கபீர் ஹசிம், மின்­வலு மற்­றும் புதுப்­பிக்க சக்தி அமைச்­சர் ரஞ்­சித் சியாம்­பி­லாப்­பிட்­டிய, காணி மற்­றும் நாடா­ளு­மன்ற மறு­சீ­ர­மைப்பு அமைச்­சர் கயந்த கரு­ணா­தி­லக்க, சுகா­தார அமைச்­சர் ராஜித சேனா­ரத்ன,வீட­மைப்பு மற்­றும் நிர்­மா­ணத்­துறை அமைச்­சர் சஜித் பிரே­ம­தாச, துறை­மு­கங்­கள் மற்­றும் கப்­பல்­துறை அமைச்­சர் மகிந்த சம­ர­சிங்க, கடற்­தொ­ழில் அமைச்­சர் விஜித் விஜ­ய­முனி சொய்சா, விவ­சாய அமைச்­சர் மகிந்த அம­ர­வீர, கைத்­தொ­ழில் மற்­றும் வாணிப அமைச்­சர் ரிசாத் பதி­யு­தீன், விஞ்­ஞான தொழில்­நுட்ப ஆராய்ச்சி, திறன்­கள் அபி­வி­ருத்தி, தொழில் பயிற்சி மற்­றும் கண்டி மர­பு­ரி­மை­கள் அமைச்­சர் சரத் அமு­னு­கம, நக­ரத் திட்­ட­மி­டல் மற்­றும் நீர்­வ­ழங்­கல் அமைச்­சர் ரவூக் ஹக்­கீம், நீர்­பா­சன, நீர்;வழங்­கல், இடர்­மு­கா­மைத்­துவ அமைச்­சர் துமிந்த திசா­நா­யக்க, வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் க.வி.விக்­னேஸ்­வ­ரன், கிழக்கு மாகாண முத­ல­மைச்­சர், இரா­ஜாங்க அமைச்­சர் ஏ.எச்.எம்.பௌசி, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் காதர் மஸ்­தான் ஆகி­யோர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

 

எஞ்­சிய 28பேர் 26 பேர் அரச அதி­கா­ரி­க­ளா­க­வும், இரு­வர் அரச தலை­வ­ரின் பிர­தி­நி­தி­க­ளான ஆளு­நர்­க­ளும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் 16பேரில் ஒரு­வ­ரும் இந்­தச் செய­ல­ணி­யில் உள்­வாங்­கப்­ப­ட­வில்லை.

அதே­போன்று ஆளும் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான அங்­க­ஜன் இரா­ம­நா­தன், திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் ஆகி­யோ­ரும் செய­ல­ணி­யில் உள்­வாங்­கப்­ப­ட­வில்லை.

பேச்சு நடத்­தும்

இந்­தச் செய­லணி நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளமை தொடர்­பில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பு­டன் பேச்சு நடத்­த­வில்லை. செய­லணி தொடர்­பான அர­சி­தழ் வெளி­யா­கிய பின்­னரே இது தொடர்­பில் தமக்­கும் தெரி­ய­வந்­த­தாக கூட்­ட­மைப்பு வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் உள்­வாங்­கப்­ப­டாமை தொடர்­பில், எதிர்­கட்­சித் தலை­வ­ரும், கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன், அரச தலை­வர் மைத்­தி­ரி­பா­ல­வு­டன் பேச்சு நடத்­து­வார் என்­றும் அந்த வட்­டா­ரங்­கள் குறிப்­பிட்­டன.

http://newuthayan.com/story/09/கூட்­ட­மைப்பு-எம்-பிக்­க­ளுக்கு-செய­ல­ணி­யில்-இட­மில்லை.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

தமிழ்க் கூட்­ட­மைப்­பின் முகத்­தில்  எட்டி உதைத்­து­விட்­டார் மைத்­திரி

அரி­ய­ணை­யேற்­றிய ஏணியை மறந்து 
செயற்­ப­டு­வ­தா­கச் சாடல்

sritharan-jaffna-tna-mp-750x400.jpg
 
 
 
 

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன அரி­ய­ணை­யே­று­வ­தற்கு ஏணி­யாக இருந்த தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை இன்று காலால் எட்டி உதைத்­துள்­ளார். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான சி.சிறீ­த­ரன் இவ்­வாறு குற்­றஞ் சாட்­டி­னார்.

நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று நடை­பெற்ற தேசிய பாது­காப்பு நிதிய திருத்­தச் சட்­ட­வ­ரைவு மீதான விவா­தத்­தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

மகிந்த ராஜ­பக்ச, மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகிய இரு­வ­ருமே தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரி­கள்­தான். மோச­மான எதி­ரியை மாற்­று­வ­தற்­காக ஆட்சி மாற்­றத்­துக்கு வாக்­க­ளிக்­கு­மாறு தமிழ் மக்­க­ளி­டம் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு கோரிக்கை விடுத்­தது. இவ்­வாறு ஏணி­யாக இருந்­த­வர்­களை எட்டி உதைக்­கும் வகை­யில் அரச தலை­வர் இன்று செயற்­பட்டு வரு­கி­றார்.

 

எதிர்க்­கட்­சி­யில் இருக்­கின்ற போதி­லும் வடக்கு, கிழக்கு அபி­வி­ருத்­தி­க­ளில் பங்­கேற்­க­வேண்­டிய கடப்­பாடு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு இருக்­கின்­றது. வடக்கு, கிழக்­குக்கு அரச தலை­வ­ரால் சிறப்­புச் செய­ல­ணி­யொன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது.

வடக்கு, கிழக்­குக்­கான சிறப்­புச் செய­ல­ணி­யி­லி­ருந்து அந்­தப் பகு­தி­யைப் பிரி­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தும் கட்­சி­யான கூட்­ட­மைப்பு கவ­னத்­தில் எடுக்­கப்­ப­டா­மல் விடப்­பட்­டுள்­ளது. கூட்­ட­மைப்­பின் முகத்­தில் தனது காலால் எட்டி உதைக்­கும் வகை­யில்­மைத்­திரி செயற்­பட்­டுள்­ளார்.

அதே­வேளை, இலங்­கை­யில் இருக்­கின்ற படை­க­ளில் ஏனைய மாகா­ணங்­க­ளில் இல்­லா­த­ளவு வடக்­கி­லும், கிழக்­கி­லும் படை­யி­னர் குவிக்­கப்­பட்­டுள்­ள­னர். படை­யி­னர் இனப் படு­கொ­லை­யில் ஈடு­பட்­ட­னர் என்­பது உல­க­றிந்த விட­யம். சரத் பொன்­சேகா உள்­ளிட்ட தள­ப­தி­க­ளும் ஈடு­பட்­ட­னர். இவ்­வாறு படு­கொ­லை­க­ளில் ஈடு­பட்ட இரா­ணு­வம் மரம் வளர்ப்பு, வீடு கட்­டு­தல் போன்ற நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டு­வ­ரு­கின்­றது.

இர­ணை­ம­டுக் குளத்­துக்­குப் பின்­ப­கு­தி­யில் பெரிய இரா­ணு­வக் குடி­யி­ருப்பு அமைக்­கப்­பட்டு வரு­கின்­றது. இது ஏன் நடக்­கின்­றது? – என்­றும் கேள்வி எழுப்­பி­னார். (c-

http://newuthayan.com/story/11/தமிழ்க்-கூட்­ட­மைப்­பின்-முகத்­தில்-எட்டி-உதைத்­து­விட்­டார்-மைத்­திரி.html

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.