Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரசுக்கட்சியின் செயற்குழு இன்று கூடுகிறது: கனடா காசு இன்று விவகாரமாகலாம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக்கட்சியின் செயற்குழு இன்று கூடுகிறது: கனடா காசு இன்று விவகாரமாகலாம்!

June 16, 2018
 

தமிழரசுக்கட்சியின் மையச்செயற்குழு கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு முல்லைத்தீவில் நடைபெறவுள்ளது. இந்தக்கூட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலில் வெற்றிபெற்றவர்களில் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உள்ளானவர்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

தமிழரசுக்கட்சி பத்திரிகையான புதிய சுதந்திரன் பெருமெடுப்பில் ஆரம்பிக்கப்பட்ட போதும், அது தற்போது விற்பனையில் பெரு வீழ்ச்சியடைந்துள்ளது. கட்சி உறுப்பினர்கள் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் வாங்குகிறார்களே தவிர, மற்றும்படி மக்களை சென்றடையவில்லை. பத்திரிகையை எப்படி விஸ்தரிப்பது, மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது என்பது பற்றியும் ஆராயப்படவுள்ளது.

 

இளைஞர் அணி, தொழிற்சங்கம் அமைத்தல், மகளிர் அணி அமைத்தல் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தல் பின்னடைவு தொடர்பில் ஆராய அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்பட்டு, அது தொடர்பிலும் ஆராயப்படும்.

இந்த குழுவின் தலைவராக கனடாவை சேர்ந்த குகதாசன் உள்ளார். உள்ளூராட்சி தேர்தலில் தமிழரசுக்கட்சியின் பின்னடைவிற்கு இந்த கனடா அணியே காரணமென கட்சிக்குள் பரவலான அபிப்பிராயம் எழுந்துள்ளது. முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை இவர்களே திட்டமிட்டு, இங்கு அனுப்பிவைத்துள்ளனர்.

அத்துடன், எம்.ஏ.சுமந்திரனுக்கு நெருக்கமாக உள்ள மாகாணசபை உறுப்பினர்கள் கனடிய அணியின் பிடியில் உள்ளனர். அவர்களிற்கு கனடாவில் இருந்து பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. யாழ் மாநகரசபை மேயர் ஆனல்ட், மாகாணசபை உறுப்பினராக இருந்தபோது கனடா சென்று வந்திருந்தார். அதற்கு “ஸ்பொன்சர்“ செய்தவர் குகதாசன்.

தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் இருக்க, இந்த புதியவர் அணியே கனடிய அணியால் முக்கியத்துவப்படுத்தப்பட்டு, அடிக்கடி கனடாவிற்கு அழைக்கப்பட்டுள்ளது. இது கட்சிக்குள் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

உள்ளூராட்சி தேர்தல் தோல்வியை ஆராய அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக, தோல்விக்கு காரணமான குகதாசனே நியமிக்கப்பட்டுள்ளார். கள்ளனிற்கு பொலிஸ் வேலை கொடுத்ததை போன்ற விடயம் என, நியமனம் நடந்த உடனேயே தமிழ் பக்கம் குறிப்பிட்டிருந்தது. இந்த குழுவின் முன்னால் தோன்றி தமது கருத்துக்களை வெளியிட்ட தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவர்கள் மூவர், கனடிய அணியை வெளிப்படையாகவே குற்றம்சாட்டியுள்ளதாக தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்துள்ளது.

ஆனல்டிற்கு “ஸ்பொன்சர்“ செய்யப்பட்ட விவகாரத்தை ஒரு தலைவர் குறிப்பிட, அந்த குழுவின் தலைவர் அவசரகதியில் மறுத்துள்ளார். எனினும், அதற்கான ஆதாரங்களை அவர் சமர்ப்பித்தபோது, குகதாசன் மௌனமாக இருந்துள்ளார்.

இன்றைய அறிக்கையில் கனடிய அணியின் அதிகரித்த தலையீடும் சறுக்கலிற்கு காரணமா இல்லையா என்பது குறிப்பிடப்பட்டுள்ளதா என்பது மதியமளவில் தெரிந்துவிடும்.

இதேவேளை, சுன்னாகம் பிரதேசசபை தவிசாளர் தெரிவில் கட்சியின் முடிவை மீறி செயற்பட்ட ஜி.பிரகாஸ் விவகாரத்தில் என்ன முடிவெடுக்கப்படும் என்பதும் இன்று தெரிந்துவிடும். மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சீ.வீ.கே.சிவஞானம் உள்ளிட்டவர்கள் தொலைபேசியில் அறிவுறுத்திய பின்னரும் பிரகாஸ் கட்சிக்கு எதிராக தவிசாளர் தெரிவில் போட்டியிட்டார். இதையடுத்து விளக்கம்கோரி அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

 

ஆனால் அதன்பின்னர் அவர் கட்சி தலைமையுடன் நெருக்கமாக இருக்கிறார். அண்மையில் உயிரிழந்த பிரதேசசபை உறுப்பினரின் மரணவீட்டிற்கு இருவரும் ஒன்றாகவே வந்திருந்தனர். இதுதவிர. மாவையின் மகனை இளைஞரணி தலைவராக்குவதற்கும் பிரகாஸின் உதவியை மாவை மகன், பொருளாளர் கனகசபாபதி ஆகியோர் கோரினர். கனகசபாபதியின் வீட்டில் இதற்கான சந்திப்பு நடைபெற்றிருந்தது.

நடவடிக்கை எடுப்பதை போல காண்பித்தபடி, கள்ள உறவை பேணிக்கொண்டிருக்கும் நிலையில், பிரகாஸிற்கு எதிராக இன்று ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

http://www.pagetamil.com/8533/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.