Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தேர்தல்களை பிற்போடும் செயல் பசித்தவரை ஏமாற்றுவதைப் போன்றது

Featured Replies

தேர்தல்களை பிற்போடும் செயல் பசித்தவரை ஏமாற்றுவதைப் போன்றது

Page-02-CityGMGPage1Image0008-36bb222c30f6312bc6d304a1419ee51c9ed4f53e.jpg

 

நிந்­தவூர் நிருபர்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

தேர்தல் ஒன்றில் நாங்கள் வாக்­குகள் மூல­மாக மக்கள் பிர­தி­நி­தி­களை தெரிவு செய்­வ­தனால் மட்டும் ஜன­நா­ய­கத்தை நிலை நாட்ட முடி­யாது. மக்கள் பிர­தி­நி­திகள் மக்­க­ளுடன் கலந்­து­ரை­யாடி மக்­களின் கருத்­துக்­களைப் பெற்று செயற்­பட வேண்டும். பெரும்­பான்­மை­யி­னரின் விருப்­புக்கு மாத்­திரம் முத­லிடம் கொடுப்­ப­தனால் ஜன­நா­ய­கத்தை பாது­காத்துக் கொள்ள முடி­யாது. தேர்­தலில் தோல்­வி­ய­டைந்­த­வர்­களை பழி

வாங்­கு­வதன் ஊடா­கவும் ஜன­நா­ய­கத்தை பாது­காத்துக் கொள்ள முடி­யாது. உண்­மை­யான ஜன­நா­யகம் என்­பது பெரும்­பான்­மை­யி­னரின் கருத்து, விருப்பம் சிறு­பான்­மை­யி­னரின் கருத்­திற்கும், விருப்­பத்­திற்கும் குந்­தகம் விளை­விக்­கா­த­தாக இருக்க வேண்டும்.இவ்­வாறு தேர்தல் ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய சாய்ந்­த­ம­ருது பெரிய பள்­ளி­வாசல் முன்­றலில் நேற்று (சனிக்­கி­ழமை) தேசிய வாக்­காளர் தினத்­தை­யொட்டி நடை­பெற்ற வைப­வத்தில் பிர­தம அதி­தி­யாகக் கலந்து கொண்டு உரை­யாற்றும் போது தெரி­வித்தார்.

அம்­பாரை மாவட்ட அர­சாங்க அதிபர் துசித பி.வணி­க­சிங்க தலை­மையில் நடை­பெற்ற இவ்­வை­ப­வத்தில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,

நீங்கள் எல்­லோரும் உங்­களின் பெயரை வாக்­காளர் இடாப்பில் பதிவு செய்ய வேண்டும். வாக்­கா­ளர்­க­ளாக பதிவு செய்தால் மட்டும் போதாது வாக்­கு­களை அளிக்­கவும் வேண்டும். அந்த வாக்கை அச்­ச­மின்றி, பய­மின்றி பயன்­ப­டுத்த வேண்டும்.

பிறந்த அனை­வரும் மர­ணத்தை அடைந்தே தீரு­வார்கள். இதி­லி­ருந்து யாரும் விடு­பட முடி­யாது. இது போலவே 18 வய­திற்கு மேற்­பட்ட அனை­வ­ருக்கும் வாக்­கு­ரிமை உள்­ளது. இதில் மதம், இனம், குலம், ஆண், பெண் என்ற எந்தப் பாகு­பாடும் காட்­டப்­ப­டு­வ­தில்லை.

ஜன­நா­யகம் என்­பது வாக்­கு­ரி­மையில் தங்­கி­யுள்­ளது. அதே போன்று நாட்டின் இறைமை கூட வாக்­கு­ரி­மை­யில்தான் தங்­கி­யுள்­ளது. எமது இந்த வாக்­கு­ரிமை மூலம் நாட்டின் அர­சியல் யாப்பின் படி நிறை­வேற்று அதி­கா­ர­மு­டைய ஜனா­தி­ப­தியை தெரிவு செய்­கின்றோம். அதே போன்று சட்டம் இயற்றும் அதி­காரம் மக்­க­ளுக்­கு­ரி­யது. அது மக்­க­ளினால் தெரிவு செய்­யப்­படும் பிர­தி­நி­தி­களைக் கொண்ட பாரா­ளு­மன்­றத்­தினால் நிறை­வேற்­றப்­ப­டு­கின்­றது. இவை அனைத்­துக்கும் வாக்­க­ளிக்க வேண்டும்.

எங்­க­ளுக்கு வாக்­க­ளிப்­ப­தற்கு தத்­துவம் இருக்­கின்­றது. ஆனால், மாகாண சபைத் தேர்தல் இல்­லா­தி­ருப்­ப­தனால் வாக்­க­ளிக்க முடி­யா­துள்­ளது. ஒரு தேர்­தலை நடத்­தா­தி­ருப்­பது அல்­லது ஒத்திப் போடு­வது ஜன­நா­ய­கத்­திற்கு விரோ­த­மாகும். தேர்­தலைப் பிற்­ப­டுத்­து­வது எப்­படி இருக்­கின்­ற­தென்றால் பசித்­தி­ருப்­ப­வ­ருக்கு சிறிது நேரத்தில் உணவு தரு­கின்றோம், நாளைக்கு தரு­கின்றோம், இரண்டு நாட்­களின் பின்னர் தரு­கின்றோம் என்று ஏமாற்­று­வ­தனைப் போன்­றுள்­ளது.

தேர்தல் ஆணைக் குழு தேர்­தல்­களை பிற்­போ­டு­வ­தற்கு எதி­ரா­னது. ஆகவே, இந்தத் தேர்­தலை நடத்­து­வ­தற்­கு­ரிய சட்­டத்தை உரு­வாக்க வேண்­டி­ய­வர்கள் பாரா­ளு­மன்­றத்தில் உள்­ள­வர்கள். அடுத்த வாரம் நாங்கள் அர­சியல் கட்­சி­களின் தலை­வர்­க­ளுடன் தேர்தல் ஏன் பிற்­போட்டுச் செல்­லப்­ப­டு­கின்­ற­தென்று கலந்து பேச­வுள்ளோம். தேர்­தலை உட­ன­டி­யாக நடத்தக் கூடிய சட்ட திருத்­தங்­களை விரை­வாகச் செய்ய வேண்­டு­மென்று அவர்­களை கேட்க இருக்­கின்றோம்.

கடந்த காலங்­களில் உரிய முறைப்­படி தேர்­தல்­களை நடத்­தா­தி­ருந்­த­மையால் ஏற்­பட்ட விளை­வு­களைக் கூற­லா­மென்று நினைக்­கின்றேன். தற்­போது கிழக்கு மாகாண சபைத் தேர்தல் ஒத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது. அத­னால்தான் இதனைக் கூறு­கின்றேன்.

எமது நாட்டில் 1980ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை­யான காலப் பகு­தி­களில் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் வாக்­கு­களை பயன்­ப­டுத்­து­வ­தற்கு தடைகள் ஏற்­பட்­டன. வாக்குச் சாவ­டி­க­ளுக்கு வந்து துப்­பாக்­கி­களைக் காட்டி வலுக்­கட்­டா­ய­மாக வாக்­கு­களை அளித்­தார்கள். மிகவும் மோச­மான வகையில் மூன்று தேர்­தல்கள் நடை­பெற்­றுள்­ளன. 1999ஆம் ஆண்டு நடை­பெற்ற வடமேல் மாகாண சபைத் தேர்தல், 1982ஆம் ஆண்டு நடை­பெற்ற சர்­வ­ஜ­ன­வாக்­கெ­டுப்பு, 1981ஆம் ஆண்டு மே மாதம் யாழ்ப்­பா­ணத்தில் நடை­பெற்ற அபி­வி­ருத்தி சபைத் தேர்தல் ஆகி­ய­வையே அத்­தேர்­தல்­க­ளாகும்.

1999ஆம் ஆண்டு வடமேல் மாகாண சபைத் தேர்­தலின் பின்னர் தேர்தல் சட்­டத்திற் காணப்­படும் கரு­மே­கங்­களை இல்­லாமல் செய்யும் வாய்ப்பு எங்­க­ளுக்கு கிடைத்­தது.

அடுத்து இரண்டு முக்­கி­ய­மான தேர்­தல்­களின் பின்னர் அழி­வுகள் ஏற்­பட்­டன. அதா­வது, 1983ஆம் ஆண்டு தேர்­தலின் போது இளை­ஞர்­களைக் கொண்ட கட்சி ஒன்று கணி­ச­மான வாக்­கு­களைப் பெற்றுக் கொள்ளும் நிலை காணப்­பட்­டது. அக்­கட்சி 10 இற்கும் மேற்­பட்ட பாரா­ளு­மன்ற ஆச­னங்­களைப் பெற்றுக் கொள்ளும் நிலை இருந்­தது. 1982ஆம் ஆண்டு மிகவும் மோச­மான வகையில் நடத்­தப்­பட்ட சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பினால் பாரா­ளு­மன்ற தேர்தல் 1989ஆம் ஆண்­டிற்கு ஒத்தி வைக்­கப்­பட்­டது. இதனால், தேர்­தலில் நம்­பிக்கை வைத்­தி­ருந்த அந்த இளை­ஞர்­களைக் கொண்ட கட்சி ஜன­நா­ய­கத்தில் நம்­பிக்கை இழந்­தார்கள். இதனால், அவர்கள் காடு­க­ளுக்குள் சென்று ஆயுதப் போராட்­டத்தில் ஈடு­பட்­டார்கள். இதனால் 1988 மற்றும் 1989ஆம் ஆண்­டு­களில் சுமார் 11 ஆயி­ரத்­திற்கு மேற்­பட்­ட­வர்கள் மர­ணத்தை சந்­திக்க நேரிட்­டது.

1981ஆம் ஆண்டு யாழ்ப்­பா­ணத்தில் நடை­பெற்ற மாவட்ட அபி­வி­ருத்திச் சபைத் தேர்­தலின் போது தேர்­தலை நடத்­து­வ­தற்­கு­ரிய அதி­கா­ரிகள் நிய­மிக்­கப்­பட்ட போதிலும், குரு­நாகல் போன்ற இடங்­க­ளி­லி­ருந்து வேறு நபர்கள் யாழ்ப்­பா­ணத்­திற்கு அனுப்­பப்­பட்டு மிகவும் மோச­மான வகையில் அந்தத் தேர்தல் நடத்­தப்­பட்­டது. இதனால், யாழ்ப்­பா­ணத்தில் சிறு­சிறு குழுக்­க­ளாக இயங்­கிய இளை­ஞர்கள் ஒன்று சேர்ந்து மாபெரும் சக்­தி­யாக மாறி­னார்கள். அங்­கி­ருந்த மத்­திய தர வர்க்­கத்­தி­னரும் எங்­க­ளுக்கு வலட் தேவை­யில்லை. புலட் தேவை என்ற முடி­வுக்கு வந்­தார்கள். அந்த ஆயுதப் போராட்­டத்தின் கார­ண­மாக சுமார் மூன்று இலட்­சத்­திற்கும் மேற்­பட்­ட­வர்கள் உயிர் இழந்­தார்கள்.

இந்தப் பேச்சுக்களை கேட்டுக் கொண்டிருந்தால் மாத்திரம் ஜனநாயகத்தை அடைந்து கொள்ள முடியாது. ஜனநாயகத்தைப் படிக்க வேண்டும். அது பற்றி சிந்திக்க வேண்டும். அடுத்தவர்களுக்கு ஜனநாயகத்தையும், அதன் அவசியத்தையும் எடுத்துக் கூற வேண்டும் என்றார் ..

இவ்வைபவத்தில் தேர்தல் ஆணைக் குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்ன ஜீவன் எச்.கூல், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா, சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் தலைவர் எம்.ஏ.ஹனீபா ஆகியோர்களும் உரையற்றினார்கள். இஸ்லாமிய பாரம்பரிய நிகழ்வுகளும் இடம்பெற்றன. பெருந்தொகையான பொது மக்கள் கலந்து கொண்டார்கள்.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2018-06-24#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.