Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்­னொரு ஹிட்­லரை அனு­ம­திக்­குமா உலகம்?

Featured Replies

இன்­னொரு ஹிட்­லரை அனு­ம­திக்­குமா உலகம்?

sama01-b861c9a457879a139f51b4b18734a001a56eeef2.jpg

 

 

கோத்­தா­பய ராஜபக் ஷ இரா­ணுவ ஆட்­சியை – கடும்­போக்கு ஆட்­சியை விரும்­பு­பவர். அத­னையே தனது அடை­யா­ள­மாக நிரூ­பிக்­கவும் எத்­த­னிப்­பவர். இது அவரைச் சுற்­றி­யி­ருப்­ப­வர்­க­ளுக்கு நன்­றா­கவே தெரியும். 

அதனால் தான், அவ­ரது அந்த அடை­யா­ளத்தை முன்­னி­லைப்­ப­டுத்தி, அவரை மேல் மட்­டத்­துக்குக்  கொண்டு வர முனை­கி­றார்கள். 

ஆனால், அர­சியல் என்­பது வேறு. அதற்கும் இரா­ணுவ ஆட்­சிக்கும் ஒரு­போதும் ஒத்­துப்­போ­காது. ஜன­நா­யகப் பாரம்­ப­ரி­யங்­களை மதிக்­கின்ற வகை­யி­லான, பண்­பு­களைக் கொண்­ட­வர் க­ளுக்குத்தான் அர­சியல்  பொருத்­த­மு­டை­யது 

 

 

ஹிட்­ல­ராக மாறி, இரா­ணுவ ஆட்­சியின் மூலம், நாட்டைக் கட்­டி­யெ­ழுப்ப வேண்டும் என்று, கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு அஸ்­கி­ரிய பீடத்தின் அனு­நா­யக்க தேர­ரான, வண. வெத­ருவே உபாலி தேரர் வழங்­கிய ஆசி, பெரும் பர­ப­ரப்பை தோற்­று­வித்­தி­ருக்­கி­றது.

கோத்­தா­பய ராஜபக் ஷவின் 69 ஆவது பிறந்த நாளை முன்­னிட்டு, மிரிஹானயில் உள்ள வீட்டில் நடந்த சமய நிகழ்­வி­லேயே, அனு­நா­யக்க தேரர் இவ்­வாறு ஆசி வழங்­கி­யி­ருக்­கிறார்.

மூன்று பௌத்த பீடங்­க­ளி­னதும் உயர் பிர­தி­நி­தி­களும், மஹிந்த ராஜபக் ஷ, சமல் ராஜபக் ஷ, பசில் ராஜபக் ஷ போன்­ற­வர்­களும் இந்த நிகழ்வில் பங்­கேற்­றி­ருந்­தனர்.

இதன்­போதே, இரா­ணுவ ஆட்சி, ஹிட்லர் போன்ற சொற்­களின் ஊடாக கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு உசார் ஏற்றும் முயற்­சிகள் நடந்­தி­ருக்­கின்­றன. எனினும், ஊட­கங்­களில் வெளி­யா­னவை போன்று, அனு­நா­யக்கர் அவ்­வாறு கூற­வில்லை என்றும், “அவர்கள் உங்­களை ஹிட்லர் என்று அழைத்தால், அப்­போது ஹிட்­ல­ராக மாறி நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­புங்கள்” என்றே அஸ்­கி­ரிய அனு­நா­யக்கர் ஆசி வழங்­கி­ய­தா­கவும் இன்­னொரு தக­வலும் உள்­ளது.

கோத்­தா­பய ராஜபக் ஷ அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வாரா இல்­லையா- அதற்­கான தகு­தி­களை அவர் கொண்­டி­ருக்­கி­றாரா இல்­லையா- என்­பது பற்­றிய வாதங்கள் எல்லாம் ஒரு­புறம் நடந்து கொண்­டி­ருக்கும் நிலையில், அவரை ஒரு கடும்­போக்­கு­வாத ஆட்­சி­யா­ள­ராக உரு­வாக்­கு­வதில் இன்­னொரு தரப்பு ஈடு­பட்­டி­ருக்­கி­றது என்­பது மறுக்க முடி­யாத உண்மை.

முன்­னைய ஆட்­சிக்­கா­லத்தில் கோத்­தா­பய ராஜபக் ஷ அசைக்க முடி­யாத இரும்பு மனி­த­ரா­கவே உலா வந்­தவர். ஜனா­தி­ப­தி­யாக இருந்த மஹிந்த ராஜபக் ஷவே, பல­வே­ளை­களில் கோத்­தா­பய ராஜபக் ஷவின் பேச்­சுக்கு மடங்கிப் போன­தாக கூறப்­ப­டு­வ­துண்டு.

சில சந்­திப்­பு­களின் போது, இயல்­பாக பேசிக்­கொண்­டி­ருக்கும் மஹிந்த ராஜபக் ஷ, கோத்­தா­பய ராஜபக் ஷ வரு­கிறார் என்­றதும் பேச்சை மாற்றிக் கொண்­ட­தா­கவும் கூட பலரும் கூறி­யி­ருக்­கி­றார்கள்.

கோத்­தா­பய ராஜபக் ஷ இரா­ணுவ ஆட்­சியை ஒத்த ஒரு கட்­ட­மைப்பை ஏற்­ப­டுத்தி வைத்­தி­ருந்தார். மஹிந்த ராஜபக் ஷவிடம் இருந்த நிறை­வேற்று அதி­காரம் என்ற கவ­சத்தை, அதற்குச் சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொண்டார்.

கொழும்பு நகரை அழ­கு­ப­டுத்­தி­யது உள்­ளிட்ட சில விட­யங்­களில் அவ­ரது கடும்­போக்கும், எடுக்கும் முடி­வு­களை பின்­வி­ளை­வு­களைப் பற்றி யோசிக்­காமல் நடை­மு­றைப்­ப­டுத்தும் குணமும், பல­ராலும் ஆத­ரிக்­கப்­ப­டு­கி­றது.

ஆனால், நடை­முறை அர­சி­யலில் அவர் ஒரு ஜன­நா­யக ஆட்­சியை நடத்தக் கூடிய இயல்­பு­டை­யவர் அல்ல என்­பது, அவ­ரது பெரும் பல­வீ­ன­மாகப் பார்க்­கப்­ப­டு­கி­றது.

கோத்­தா­பய ராஜபக் ஷ இரா­ணுவ ஆட்­சியை – கடும்­போக்கு ஆட்­சியை விரும்­பு­பவர். அத­னையே தனது அடை­யா­ள­மாக நிரூ­பிக்­கவும் எத்­த­னிப்­பவர். இது அவரைச் சுற்­றி­யி­ருப்­ப­வர்­க­ளுக்கு நன்­றா­கவே தெரியும்.

அதனால் தான், அவ­ரது அந்த அடை­யா­ளத்தை முன்­னி­லைப்­ப­டுத்தி, அவரை மேல் மட்­டத்­துக்குக் கொண்டு வர முனை­கி­றார்கள்.

ஆனால், அர­சியல் என்­பது வேறு. அதற்கும் இரா­ணுவ ஆட்­சிக்கும் ஒரு­போதும் ஒத்­துப்­போ­காது. ஜன­நா­யகப் பாரம்­ப­ரி­யங்­களை மதிக்­கின்ற வகை­யி­லான, பண்­பு­களைக் கொண்­ட­வர்­க­ளுக்குத் தான் அர­சியல் பொருத்­த­மு­டை­யது.

மஹிந்த ராஜபக் ஷவை அமெ­ரிக்கா எதேச்­சா­தி­காரி என்று குறிப்­பிட்­டி­ருந்­தாலும், அவர் தேர்­தல்­களை ஒழுங்­காக நடத்தி, தான் ஜன­நா­யக ஆட்­சியை நடத்­து­வ­தாக காட்டிக் கொண்­டவர்.

ஆனாலும், அவ­ரது ஆட்­சியை, தனது முரட்­டுத்­த­ன­மான இரா­ணுவ போக்கில் நாட்டை வழி­ந­டத்திச் சென்று, மேற்­கு­ல­கினால் எதேச்­சா­தி­கார ஆட்சி என்ற விமர்­ச­னங்­களை தோற்­று­விக்க கார­ண­மாக இருந்­தவர் கோத்­தா­பய ராஜபக் ஷ.

மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சியின் போது, இவர் எடுக்கும் முடி­வு­களே பெரும்­பாலும் இறு­தி­யா­ன­தாக இருந்து வந்­தது. கடும்­போக்கு வாதமும், இறுக்­க­மான இரா­ணுவ நிர்­வாகம் போன்ற கெடு­பி­டி­களும், இரா­ணுவ ஆட்சி நடக்கும் நாடு போன்ற தோற்­றப்­பாட்டை உரு­வாக்­கி­யது. அதனைத் தான் மீண்டும் அஸ்­கி­ரிய அனு­நா­யக்கர் போன்­ற­வர்கள் எதிர்­பார்க்­கி­றார்கள். அனு­நா­யக்கர் மாத்­தி­ர­மன்றி, கோத்­தா­பய ராஜபக் ஷவைச் சுற்­றி­யி­ருப்­ப­வர்­களும் அதனைத் தான் விரும்­பு­கி­றார்கள். 

ஆட்சி மாற்­றத்­துக்குப் பின்னர் ராஜபக் ஷவி­ன­ருடன் அதிகம் ஒட்டிக் கொண்டு செயற்­படும்- கோத்­தா­பய ராஜபக் ஷவுடன் இணைந்து எலிய அமைப்பை உரு­வாக்­கி­யதில் முன்­னின்று செயற்­பட்ட கலா­நிதி தயான் ஜய­தி­லக அண்­மையில் விடுத்த எச்­ச­ரிக்கை இதனைச் சார்ந்­த­தா­கவே இருந்­தது.

கோத்­தா­பய ராஜ­பக்ச பய­ணிக்கும் வழி தவ­றா­னது, பண முத­லை­களும், முன்னாள் இரா­ணுவ அதி­கா­ரி­க­ளான கடும்­போக்­கா­ளர்­க­ளுமே அவரைச் சுற்­றி­யி­ருக்­கி­றார்கள் என்ற தொனியில் அவர் கருத்து வெளி­யிட்­டி­ருந்தார்.

கோத்­தா­பய ராஜபக் ஷ இவ்­வா­றான போக்கில் நீடித்தால், சர்­வ­தேச மட்­டத்தில் அவரால் ஆத­ரவைப் பெற முடி­யாமல் போகும் என்ற கருத்தை முன்­வைத்து தான், தயான் ஜய­தி­லக இந்தக் கருத்தை வெளி­யிட்­டி­ருந்தார்.

அதா­வது கோத்­தா­பய ராஜபக் ஷ அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் கள­மி­றங்­கு­வ­தானால், அதற்கு முன்னர் அவர் தன்னை ஒரு ஜன­நா­ய­க­வா­தி­யாக- சிவில் ஆட்­சியை நடத்தக் கூடிய நிர்­வா­கி­யாக இருப்பார் என்­பதை நிரூ­பிக்க வேண்டும் என்று தயான் ஜய­தி­லக போன்­ற­வர்கள் எதிர்­பார்ப்­ப­தாக தெரி­கி­றது.

ஆனால், கோத்­தா­பய ராஜபக் ஷவினால் இது­வ­ரையில் அந்த தகை­மையை நிரூ­பிக்­கவும் முடி­ய­வில்லை. அவரைச் சுற்­றி­யி­ருப்­ப­வர்கள் நிரூ­பிக்­கவும் விடப் போவ­தில்லை.

அஸ்­கி­ரிய அனு­நா­யக்கர் போன்­ற­வர்­களும் சரி, றியர் அட்­மிரல் சரத் வீர சேகர போன்­ற­வர்­களும் சரி, கோத்­தா­பய ராஜபக் ஷவை ஒரு ஹிட்­ல­ராக- இரும்பு மனி­த­ராக, இரா­ணுவ ஆட்­சியை ஒத்த ஒரு நிர்­வா­கத்தை ஏற்­ப­டுத்தக் கூடி­ய­வ­ராக உரு­வாக்­கு­வ­தி­லேயே குறி­யாக இருக்­கி­றார்கள்.

அதற்­கான தூண்­டு­தல்­களைக் கொடுத்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள். இதன் மூலம் தான் நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­பலாம் என்று அவரை நம்ப வைக்க முனை­கி­றார்கள்.

அவர்கள் அவ்­வாறு நம்­பு­வது ஒற்­றை­யாட்­சியை இரும்­புக்­க­ரங்­களால் உறு­திப்­ப­டுத்த வேண்டும் என்ற அடிப்­ப­டை­யி­லா­னது.

அதி­காரப் பகிர்வு முயற்­சி­களைத் தோற்­க­டித்து, வடக்­கையும், கிழக்­கையும், இறுக்­க­மான பிடியில் வைத்துக் கொண்டு, தமி­ழர்­களை அடக்­கி­யாள வேண்டும் என்ற பேரி­ன­வாதச் சிந்­த­னையின் அடிப்­ப­டை­யி­ன­லா­னது.

கோத்­தா­பய ராஜபக் ஷவை வைத்தே அதனைச் செய்­யலாம் என்று அவர்கள் நினைக்­கி­றார்கள். ஆனால், அவர்­க­ளுக்கு ஒன்று மட்டும் புரி­யாமல். இருக்­கி­றது.

நவீன உலகம், சர்­வா­தி­கா­ரி­க­ளையோ, இரா­ணுவப் பாணி ஆட்­சி­யா­ளர்­க­ளையோ விரும்­பு­வதும் இல்லை, விட்டு வைப்­பதும் இல்லை.

ஜன­நா­யக அர­சி­ய­லுக்கு ஒத்­து­வ­ரா­த­வர்­களை, அதி­கா­ரத்­துக்கு வர­வி­டாமல் தடுப்­ப­தையும், அவ்­வாறு வந்­த­வர்­களை விரட்­டு­வ­தையும் சர்­வ­தேச அர­சியல் ஒரு ஒழுக்­க­மா­கவே பின்­பற்றி வரு­கி­றது.

அண்­மையில், மஹிந்த ராஜபக் ஷவு­ட­னான சந்­திப்பின் போது, அமெ­ரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் கூறி­ய­தாக சொல்­லப்­ப­டு­கின்ற விட­யங்­களில் இதுவும் ஒன்று.

பயங்­க­ர­வா­தத்தை இரும்­புக்­கரம் கொண்டு நசுக்­கு­வது வேறு, ஜன­நா­யக அர­சி­யலை அதற்­கு­ரிய மாண்­புகள், பண்­பு­க­ளுடன் கொண்டு நடத்­து­வது வேறு என்று, குறிப்­பிட்டே, கோத்­தா­பய ராஜபக் ஷ பொருத்­த­மற்ற வேட்­பாளர் என்­பதை மஹிந்­த­விடம் அமெ­ரிக்கத் தூதுவர் விளக்­கி­ய­தாக சொல்­லப்­ப­டு­கி­றது.

ஆனாலும், கோத்­தா­பய ராஜபக் ஷவை ஒரு இரா­ணுவ ஆட்­சி­யா­ள­ராக- ஹிட்­ல­ராக, உரு­வாக்கி விடும் முனைப்­புகள் தான் தெற்கில் தீவி­ர­ம­டைந்­தி­ருக்­கின்­றன.

இத்­த­கைய உசுப்­பேற்­றல்­க­ளுக்கு கோத்­தா­பய ராஜபக் ஷவும், அடி­மைப்­பட்டுக் கொண்­டி­ருக்­கிறார் போலவே தோன்­று­கி­றது.

ராஜபக் ஷவி­னரின் தரப்­பினால், ஜனா­தி­பதி வேட்­பாளர் இவர் தான் என்று, அவர் இன்­னமும், உறு­தி­யா­கவும் அதி­கா­ர­பூர்­வ­மா­கவும் அறி­விக்­கப்­ப­ட­வில்லை.

ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு அடிப்­படைத் தேவை­யான- அமெ­ரிக்­காவின் இரட்டைக் குடி­யு­ரி­மை­யையும் அவர் துறக்­க­வில்லை.

அதற்­குள்­ளா­கவே, அவரை முன்­னி­றுத்தி ஒரு இரா­ணுவ ஆட்­சிப்­பா­ணி­யி­லான, ஹிட்­ல­ராட்­சியை ஏற்­ப­டுத்த வேண்டும் என்று ஒரு குறு­கிய சிந்­தனை கொண்ட கூட்டம் கிளம்­பி­யி­ருக்­கி­றது.

கடந்த ஆட்­சிக்­கா­லத்தில், மஹிந்த ராஜபக் ஷவை தோற்­க­டிப்­பதில் ஞான­சார தேரரின் பொது பல­சேனா முக்­கிய பங்­காற்­றி­யது. கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு நெருக்­க­மாக இருந்த பொது பல­சே­னாவின் நட­வ­டிக்­கை­களால் அதி­ருப்­தி­ய­டைந்த முஸ்­லிம்கள், மஹிந்த ராஜபக் ஷவிடம் இருந்து வில­கி­னார்கள்.

அதே­போன்­ற­தொரு நிலை இப்­போது உரு­வாகி வரு­வது போலுள்­ளது. கோத்­தா­பய ராஜபக் ஷவைச் சுற்­றி­யி­ருப்­ப­வர்கள், அவரை ஒரு சர்­வா­தி­கா­ரி­யாக உரு­வாக்கப் போவ­தாக கிளப்பி விடும் மாயை, ஜன­நா­யக அர­சியல் சக்­தி­க­ளையம் சாதா­ரண மக்­க­ளையும் அச்­சத்­துக்குள் தள்­ளி­யி­ருக்­கி­றது.

இது, கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு எதி­ரான ஓர் அலையைத் தோற்­று­விக்கும் சூழலை உரு­வாக்­கலாம்.

ஏனென்றால் ஜனா­தி­பதி தேர்தல் என்­பது, தனியே சிங்­கள மக்­களின் வாக்குகளால் தீர்மானிக்கப்படுவதல்ல. தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளும் முக்கியமானவை.

அதனைக் கருத்தில் கொள்ளாமல், கோத்தாபயவைக் கொண்டு ஓர் இராணுவ ஆட்சியை, ஏற்படுத்தி, அவரை ஒரு ஹிட்லராக மாற்றி சிங்களப் பேரினவாத கனவுகளை நனவாக்கலாம் என்று எதிர்பார்த்தால் அது முட்டாள்தனம்.

நாட்டை மீண்டும் சர்வாதிகார ஆட்சிக்குள் செல்வதற்கு அனுமதியேன் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருப்பதும், இதனை அடிப்படையாக வைத்துத் தான்.

ஆனாலும், கோத்தாபய ராஜபக் ஷவைச் சுற்றி சிங்கள பௌத்த கடும்போக்காளர்கள் கட்டியெழுப்பி வரும் கோட்டை அவர்களுக்கே ஆபத்தானது. இது மஹிந்த ராஜபக் ஷவுக்கு தெரியாத சூத்திரம் அல்ல.

இருந்தாலும் அவர் இதனை விட்டுப் பிடிக்க நினைக்கிறார் போலும், ஏனென்றால், கோத்தாபய ராஜபக் ஷ தன்னை மிஞ்சியவராக வளருவதை அவரும் விரும்பவில்லை.

தனது விருப்பங்களுக்கு அப்பால் கோத்தாபய ராஜபக் ஷவை சுற்றி உருவாக்கப்பட்டு வரும் ஒளிவட்டத்தை மஹிந்த இரசிக்கவில்லை. அதனால் தான் அவர் அமைதியாக இருக்கிறார்.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-06-24#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.