Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"தமிழ் தலைமைகளின் பிரிவு தமிழ் மக்களை அழிக்கும் ஒரு செயற்பாடாகும்"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"தமிழ் தலைமைகளின் பிரிவு தமிழ் மக்களை அழிக்கும் ஒரு செயற்பாடாகும்"

தமிழ் மக்­க­ளு­டைய ஆத­ர­வினை பெற்­றுக்­கொண்ட தமிழ் தலை­மைகள்  பிரிந்து நிற்­கு­மானால் அது தமிழ் மக்­களை அழிக்­கின்ற ஒரு செயற்­பா­டா­கவே அமையும். அதற்கு நாம் இட­ம­ளிக்கக் கூடாது. நாம் அனை­வரும் ஒற்­று­மை­யாக ஒரு­மித்து ஓர் தூணாக நிற்க வேண்டும்  என தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா.சம்பந்தன்  தெரி­வித்தார். 

sampanthan.jpg

வட முத­ல­மைச்சர் சீ.வி.விக்­கி­னேஸ்­வ­ரனது உரைகள் அடங்­கிய 'நீதி­ய­ரசர் பேசு­கின்றார்' என்ற நூல் வெளி­யீ­டா­னது நேற்­றைய தினம் யாழ்ப்­பாணம் வீர­சிங்கம் மண்­ட­பத்தில் இடம்­பெற்­றது. இந் நிகழ்வில் கலந்­து­கொண்டு சிறப்­பு­ரை­யாற்றும் போதே இரா.சம்பந்தன் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.  

அவர்  தொடர்ந்து  உரை­யாற்­று­கையில்,  

எம்­மி­டையே வேறு­பட்ட கருத்­துக்கள் இருக்­கலாம். நாம் வேறு­பட்­டி­ருக்­கலாம். அவற்றை நாம் பேசித் தீர்த்­துக்­கொள்ள வேண்டும். நாம் ஒற்­று­மை­யாக நிற்க வேண்டும். ஒரு­மித்து நிற்க வேண்டும். தமிழ் மக்­க­ளது ஒற்­று­மை­யா­னது தம்­மு­டைய தலை­வி­தியை மாத்­தி­ர­மின்றி இந் நாட்டின் தலை­வி­தி­யையே மாற்றும் என்பதை வெளிக்காட்டியுள்ள நாம் அதனை எப்­போதும் பாது­காக்க வேண்டும்.

தமிழ் மக்­களின் உரி­மைகள் அவர்­களின் உரித்­துக்கள் இலங்கை அர­சாங்­கத்தால் மறுக்­கப்­பட்ட காலத்தில் அதனை பெற்­றுக்­கொள்­வ­தற்­காக ஆயு­த­மேந்­திய தமி­ழீழ விடு­தலைப் புலி­களை அழிப்­ப­தற்கு உத­விய சர்­வதே­சத்­துக்கு,   தமிழ் மக்­களின் நீண்ட கால இனப் பிரச்­சி­னைக்­கு­ரிய தீர்­வினை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­கு­ரிய தார்­மீக கடமை உள்­ளது என்­பதை புரிந்­து­கொண்டு செயற்­பட.

சாதா­ர­ண­மாக ஒரு நாடு சுதந்­திரம் அடைய முன்பு அந் நாட்டில் வாழ்­கின்ற மக்­களின் அனைத்து பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்­வா­னது முன்­வைக்­கப்­பட்டு அந்த தீர்­வுகள் ஒரு அர­சியல் சாச­னத்தில் உள்­ள­டக்­கப்­பட்டு அவை நட­மு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்டும். ஆனால் துர­திர்ஷ்ட வச­மாக இலங்­கையை பொறுத்தவரையில் அவ்வித­மாக நடை­பெ­ற­வில்லை. அவ்­வாறு நடை­பெற்­றி­ருந்தால் 1948 இலங்கை சுதந்­திரம் அடையும் போது தமி­ழர்­க­ளது தேசிய பிரச்­சினைக்கு தீர்வு காணப்­பட்­டி­ருக்கும்.

இது தொடர்­பாக நான் சில விட­யங்­களை கூற வேண்டும்.  நாடு சுதந்­திரம் அடைய முன்பு இங்கு வந்த டொனமூர் ஆணைக்­குழு முன்பு கண்­டிய தலை­வர்கள் கருத்­துக்­களை கூறும் போது, இந் நாட்டில் சமஷ்டி ஆட்சி முறை ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும் எனக் கூறி­னார்கள். ஆனால் அதனை நாம் ஏற்­க­வில்லை. யாழ்ப்­பா­ணத்து இளைஞர் கழகம், தமக்கு  பூரண சுதந்­திரம் கேட்­டது. அதா­வது சிறு­பான்மை இனத்­த­வ­ருக்கும் பெரும்­பான்மை இனத்­த­வ­ருக்கும்  ஐம்­ப­துக்கு ஐம்­பது கேட்டோம்.  ஆனால் பிராந்­திய ரீதி­யான அதி­கா­ரங்­களை நாம் ஒரே நாட்­டுக்குள் கேட்­க­வில்லை.

தமிழ் மக்கள் தாம்  மிகவும் பெரும்­பான்­மை­யாக வாழ்ந்த பிர­தே­சங்­களில் எமது உள்­ளக சுய­நிர்­ணய உரி­மையின் அடிப்­ப­டையில் எமது இறை­யாண்­மையின் அடிப்­ப­டையில் பிராந்­திய சு­யாட்சி வேண்டும் என்று கேட்­க­வில்லை. நாங்கள் நாடு பூராக ஐம்­ப­துக்கு ஐம்­பது கேட்டோம். பிராந்­திய சுயாட்சி கேட்­டி­ருந்தால் இந்த பிரச்சினையை அப்­போது தீர்த்­தி­ருக்­கலாம். ஆனால் கேட்­க­வில்லை. இதனால் பிரச்­சினைகள் இப்­போதும் தொடர்­கின்­றன. 

நாடு சுதந்­திரம் அடைந்த பிற்­பாடு முதல் நட­வ­டிக்­கை­யாக இந்­திய வம்­சா­வளி மக்­களின் பிரஜா உரிமை பறிக்­கப்­பட்­டது. பெரும்­பான்மை இன மக்கள் தமிழ் பிர­தே­சங்­களில் குடி­யேற்­றப்­பட்­டார்கள். கிழக்கு மாகா­ணத்தின் தோற்றம் மாற்­ற­ம­டைந்­தது. அது தற்­போது வடக்கு மாகா­ணத்தில் இடம்­பெ­று­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. அது நிறுத்­தப்­பட வேண்­டிய விடயம். இவ்­வி­த­மான கரு­மங்­களை, நாங்கள் பிராந்­திய சுயாட்­சி­யுடன் அதி­கா­ரங்­களை பெற்­றி­ருந்தால் தவிர்த்­தி­ருக்­கலாம். அது முடிந்த கதை. இதனை கதைப்­பதால் எந்த பிர­யோ­ச­னமும் வரப்­போ­வ­தில்லை. 

இன்­றுள்ள பிரச்­சி­னையை எதிர்­நோக்க வேண்டும். நாடு பூரா­கவும் உள்ள மக்கள் இதனை என்ன வித­மாக பெறப் போகின்றோம். சர்­வ­தேச ரீதி­யாக என்­ன­வி­த­மாக அணுகப் போகின்றோம். வட­கி­ழக்கில் இதனை என்னவித­மாக அணு­கப்­போ­கின்றோம் என்­பன  தொடர்­பாக முடி­வெ­டுக்க வேண்­டி­யது அத்­தி­யா­வ­சி­ய­மா­ன­தாகும்.

இன்று நாட்டில் எல்லா மாகா­ணங்­களும் கூடிய அதி­கா­ரங்­களை கேட்­கின்­றன. காணி அதி­காரம், சட்ட ஒழுங்கு அதி­காரம் என கேட்­கின்­றார்கள். அந்த விட­யத்தில் நாம் மிகவும் உறு­தி­யாக இருக்­கின்றோம். இவை தவிர மத்­திய அர­சாங்­கத்தின் தலை­யீடு இருக்கக்கூடாது எனவும், ஆளு­நரின் அதி­கா­ரங்கள் கட்­டு­ப்ப­டுத்­தப்­பட வேண்டும் எனவும்  கேட்­கின்­றார்கள். அண்­மையில் தென்­மா­காண முத­ல­மைச்சர் ஆளுநர் பதவி நீக்­கப்­பட வேண்டும் என கூறி­யி­ருக்­கின்றார்.

இந்­நி­லையில் நாங்கள் யாரையும் பகைக்க வேண்­டி­ய­தில்லை. எல்­லோ­ரு­டனும் நட்­பு­றவை பேண வேண்டும். நியா­யத்தை நீதியை விளக்க வேண்டும். பல்­வேறு நாடு­களில் பல இனம் வாழ்­கின்ற நிலையில் அங்கு எவ்­வி­த­மான ஆட்­சி­மு­றையை பின்­பற்­றி­யி­ருக்­கின்­றார்கள் என்­பதை விளக்க வேண்டும். அதனை தென்­ப­குதி மக்கள் அறிய வேண்டும். அதனை தற்­போது அவர்கள் அறிந்­து­கொண்டு வரு­கின்­றார்கள். தென்­ப­குதி மக்கள் எல்­லோரும் துவே­ச­மா­ன­வர்கள் இல்லை. துவே­ச­மா­ன­வர்கள் இருக்­கின்­றார்கள். ஆனால் அவர்கள் பெரும்­பான்­மையில் இல்லை.

இன்று ஒரு அர­சியல் சாச­னத்தை உரு­வாக்க ஒரு முயற்சி நடை­பெற்று  வரு­கின்­றது. அத­னூ­டாக நிரந்­த­ர­மான அர­சியல் தீர்­வினை எட்­டு­வ­தற்கு வழி­யி­ருக்­கு­மாக இருந்தால் அந்த சந்­தர்ப்­பத்தை நாம் பயன்­ப­டுத்த வேண்டும். அதனை இழக்க கூடாது. எங்­க­ளு­டைய பங்­க­ளிப்பை செய்ய வேண்டும். அடிப்­படை விட­யங்­களை நாம் அதற்­காக விட்­டுக்­கொ­டுக்க முடி­யாது. ஆனால் நாங்கள் ஈடு­பட்டு எமது மக்­க­ளுக்கு உரிய பாது­காப்பை, அவர்­க­ளுக்கு உரிய உரிமை­களை அங்­கீக­ரிக்கக்கூடிய வழி இருந்தால் அதனை நாம் இழக்கக்கூடாது. அதனை நாம் தெளி­வாக புரிந்­து­கொள்ள வேண்டும் என்றார். 

http://www.virakesari.lk/article/35492

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.