Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க செய்தி நிறுவனத்தில் துப்பாக்கிச்சூடு: 5 பேர் பலி

Featured Replies

அமெரிக்க செய்தி நிறுவனத்தில் துப்பாக்கிச்சூடு: 5 பேர் பலி

அமெரிக்காபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

அமெரிக்காவில் உள்ள மேரிலாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் பலியாகியுள்ளனர் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

அனாபோலிஸில் உள்ள `கேபிடல் கேசட்` செய்தியறையின் கண்ணாடி வழியாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

சமீப காலத்தில் அந்த செய்தித்தாள் நிறுவனத்துக்கு சமூக ஊடகங்களில் ’வன்முறை அச்சுறுத்தல்கள்’ வந்ததாக தெரிவித்த போலிஸார், இது செய்தி நிறுவனம் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்று தெரிவித்துள்ளனர்.

மேரிலாண்டில் வசிக்கும் 30 வயதுக்கு மேல் உடைய வெள்ளை நிற மனிதர் கைது செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அமெரிக்காபடத்தின் காப்புரிமைREUTERS

அதிகாரிகளுடன் விசாரணைக்கு ஒத்துழைக்க, சந்தேக நபர் மறுப்பதாக கூறப்படுகிறது. மேலும் சிபிஎஸ் நியூஸின் தகவல்படி, அவர் அடையாளத்தை கண்டுபிடிக்க முடியாத வகையில் விரல் ரேகைகளை அழித்துவிட்டதாகவும் தெரிகிறது.

போலி கிரனேட் குண்டுகளையும் கண்ணீர் புகை குண்டுகளையும் தனது பையில் அவர் வைத்திருந்ததாக போலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் அவர் "பெரிய துப்பாக்கியை" பயன்படுத்தியதாக தெரிவித்த அவர்கள் மேற்கொண்டு எந்தவித தகவல்களையும் அளிக்கவில்லை.

வெடிகுண்டாக இருக்கலாம் என கருதிய பொருளை செயலிழக்கச் செய்ததாக போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

சம்பவம் நடைபெற்ற கட்டடத்திலிருந்து 170 பேர் பாதுகாப்பாக வெளியே கொண்டு வரப்பட்டதாக போலிஸார் தெரிவித்தனர்.

"நீங்கள் உங்கள் மேசையில் அமர்ந்து பணி செய்து கொண்டிருக்கும்போது பலர் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளாவது போன்ற சத்தத்தையும், துப்பாக்கிதாரி மீண்டும் துப்பாக்கியில் குண்டை நிரம்பும் சத்தத்தையும் கேட்பதை போன்றதை காட்டிலும் திகிலூட்டும் சம்பவம் வேறேதும் இருக்க முடியாது"

"அது ஒரு 'போர் பகுதியை' போன்று காட்சியளித்தது" என சம்பவத்தில் பாதிக்கப்பட்ட செய்தியாளர் ஃபில் டேவிஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா

மாகாணத் தலைவர் ஸ்டேவ் சூஷ், தகவல் அறிந்ததும் 60 நொடிகளில் போலிஸார் வந்தடைந்தனர். அப்போது சந்தேக நபர் மேசைக்கு அடியில் ஒளிந்து கொண்டிருந்தார் என்று தெரிவித்தார். மேலும் போலிஸாருக்கும் சந்தேக நபருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

எச்சரிக்கை நடவடிக்கையாக நியூயார்க் நகரில் அமைந்துள்ள செய்தி நிறுவனங்களுக்கு பயங்கரவாத தடுப்பு குழுக்களை நிறுத்தியுள்ளதாக நியூயார்க் நகர போலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த நிகழ்வு குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/global-44652646

  • தொடங்கியவர்

துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்ற தருணம் எப்படியிருந்தது- டுவிட்டரில் பத்திரிகையாளர்கள்

 

அமெரிக்காவின் அனாபொலிஸ் நகரத்தில் உள்ள கப்பிட்டல் கசட் பத்திரிகை நிறுவனத்தின் அலுவலகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிபிரயோகத்தில் ஐவர் கொல்லப்பட்டுள்ள அதேவேளை சம்பவம் இடம்பெற்றவேளை அலுவலகத்தில் காணப்பட்ட பத்திரிகையாளர்கள் தங்கள் அனுபவங்களை டுவிட்டர்மூலம் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

நபர் ஒருவர் துப்பாக்கிபிரயோகத்தில் ஈடுபடுகின்றார் தயவு செய்து காப்பாற்றுங்கள் என அன்டனி மெசெஞ்சர்  என்பவர் டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.

தற்போது அவர் பாதுகாப்பாக உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனிநபர் ஒருவர் எங்கள் அலுவலகத்தில் உள்ள பலர் மீது துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டுள்ளார் சிலர் கொல்லப்பட்டுவிட்டனர் என பில் டேவிஸ் என்பவர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

பின்னர் பல்டிமோர் சன்னிற்கு கருத்து தெரிவித்துள்ள அவர் துப்பாக்கிபிரயோகம் இடம்பெற்ற எங்கள் அலுவலகம் யுத்தம் இடம்பெறும் பகுதிபோல காணப்பட்டது என தெரிவித்துள்ளார்.

US_SHOOTING..jpg

தனியொரு நபர் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்ற வேளை நாங்கள் எங்கள் மேசைகளிற்குள் ஒளிந்துகொண்டோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் மேசைக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் போது பலர் சுடப்படுவதை பார்ப்பது போல மோசமான அனுபவம் வேறு எதுவும் இருக்கமுடியாது, துப்பாக்கிரவைகள் முடிவடைந்த பின்னர் மீண்டும் அவர் தயாராவதை பார்ப்பது அதனை விடபயங்கரமானது என அவர் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிபிரயோகம் முடிவடைந்த பின்னரும் அனைவரும் மேசைகளின் கீழ் ஒளிந்திருந்தோம்,உடனடியாக காவல்துறையினர் வந்தனர், துப்பாக்கிதாரியை கைதுசெய்தனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கப்பிட்டல் கசட்டின் பணியாளர்கள் தங்களுடைய மற்றும் சகாக்களின் பாதுகாப்பு குறித்தும் டுவிட்டரில் பதிவுசெய்துள்ளனர்.

http://www.virakesari.lk/article/35724

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.