Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி, பிரதமரின் செயற்பாடுகள் ஏமாற்றத்தை அளிக்கிறது - மாவை

Featured Replies

ஜனாதிபதி, பிரதமரின் செயற்பாடுகள் ஏமாற்றத்தை அளிக்கிறது - மாவை

 

 
 

ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் இரண்டு பக்­கங்­களில் இருந்து ஆற்­று­கின்ற கடமை எங்­க­ளுக்கு ஏமாற்­றத்­தை­த்த­ரு­கின்­றது. இந்த ஏமாற்றம் மூன்று ஆண்­டு­க­ளாக தொடர்ந்து வரு­கின்­றது.  ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் ஒன்­றாக வேலை செய்து வடக்கு கிழக்கு தேசத்தை கட்­டி­யெ­ழுப்­ப­வேண்டும்  என்று இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா தெரி­வித்தார். 

mavai.jpg

"உத்­தி­யோ­க­பூர்வப் பணி"  ஜனா­தி­பதி மக்கள் சேவையின் 8 ஆவது வேலைத்­திட்டம் யாழ் வீர­சிங்கம் மண்­ட­பத்தில் நேற்று  ஆரம்­பித்து வைக்­கப்­பட்ட நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்

இந்த சேவையை நாம் வர­வேற்­கின் றோம். வட­ப­குதி கிழக்கு என்­பன 30 ஆண்­டு­க­ளுக்கு மேற்­பட்ட காலப்­ப­கு­தி­யாக  போரினால் பாதிக்­கப்­பட்ட பிர­தே­ச­மாகும். 

மக்கள் எதிர்­பார்த்­தது போன்று 2015 ஆம் ஆண்டு ஜன­வ­ரி­யிலும் அதற்குப் பின் ஆகஸ்ட் மாதத்­திலும் நடை­பெற்ற தேர்­தல்­களில்    எங்­க­ளுயுடைய மக்கள் குறிப்­பாக தமிழ்பேசு­கின்ற மக்கள் மிக உயர்ந்­த­ளவில் தங் கள் தீர்ப்பை வழங்கி உங்­களை தெரிவு செய்­தார்கள். 

பாரா­ளு­மன்றத் தேர்­த­லிலே பிர­தமர் ரணில் விக்­கி­ரம சிங்க தலை­மையில் ஏனைய கட்­சி­களும்  இணைந்த அமைச்­ச­ரவை  அமைந்­தது. வடக்கு கிழக்கு மாகா­ணத்தில்,  அதே பாணியில் தமிழ்­தே­சியக் கூட்­ட­மைப்­புக்கு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு எங்­க­ளது மக்கள்  வாக்­க­ளித்­துள்­ளார்கள். 

நான் குறிப்­பிட வேண்­டிய விடயம் என்­ன­வென்றால் ஜனா­தி­ப­தியும்   இந்த அரசு ஆட்­சி­யி­னரும்  எமது மக்­க­ளுக்கு முன்னாள்,  அளித்த வாக்­கு­று­தியை நிறை­வேற்­று­வதில் தவ­றி­வ­ரு­கின்­றது.  3 ஆண்­டு­க­ளாக இத­னை­தொ­டர்ந்து வரு­கின்­றனர்.   குறிப்­பாக வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் இப்­போது ஜனா­தி­ப­தி­யி­னு­டைய பணிப்பில் பிர­த­ம­ரு­டைய ஆலோ­ச­னையில் உள்­நாட்டு  அமைச்சர் என்ற வகையில் அனைத்து விட­யங்­க­ளுக்கும் பொறுப்­பேற்று இங்கு  வந்­துள்­ளனர். 

எங்­க­ளு­டைய  மக்­க­ளு­டைய ஆதங்கம் என்­ன­வென்றால் ஜனா­தி­ப­தியும்  பிர­த­மரும்   இரண்டு பக்கத்தில் இருந்து ஆற்­று­கின்ற கடமை எங்­க­ளுக்கு ஏமாற்­றத்­தை­த­ரு­கின்­றது. தமிழ் மக்­களும்   குறிப்­பாக ஜனா­தி­ப­தியும்  பிர­த­மரும் ஒன்­றாக வேலை செய்­வ­தற்கு ஒரு தேர்தல் அறிக்­கைக்கு ஏற்­பவே வாக்­க­ளித்து நீங்கள் வெற்­றி­பெற்­றி­ருக்­கின்­றீர்கள்.

தென்­னி­லங்­கையில் நீங்கள் பிளவு பட்­டி­ருந்தால் ஒரு வேளை ஜனா­தி­ப­தி­யாக வேறொரு சிங்­க­ளத்­த­லைவர் வருவார்.  பிர­த­ம­ரா­கவும் வேறொரு சிங்­க­ளத் த­லைவர் வருவார். ஆனால் நாங்கள் உங்கள் அமைச்­சுக்­களின் பங்­கா­ளிகள் அல்ல. நாங்கள் உங்கள் திட்­டங்­க­ளுடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் அல்ல.  அமைச்சுப் பத­வி­க­ளுக்­காக போரா­ட­வில்லை. முப்­பது வருட காலப்­போ­ரிலே எங்­க­ளு­டைய தேசம் அழிக்­கப்­பட்டு மக்கள் கொல்­லப்­பட்­டுள்­ளார்கள். 

எங்­க­ளு­டைய தேசத்­தையும் மக்­களின் வாழ்­வா­தா­ரத்­தையும் மீள­கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கா­கத்தான் நாங்கள் உங்­க­ளுடன் வேலை­செய்­கின்றோம். இதில் நாங்கள் பல ஏமாற்­றங்­களை அடைந்­தி­ருக்­கின்றோம். நீங்கள் இந்த நிகழ்ச்சித் திட்­டத்தில் மக்­க­ளு­டைய தேவை­களை நிறை­வேற்ற வந்­தி­ருந்­தாலும்  வடக்கு மாகா­ணத்தில் குறிப்­பாக யாழ்.மாவட்­டத்தின்  மீள்­கு­டி­யேற்­றத்­திற்கு என 2016 ஆம் ஆண்டு 14 ஆயிரம் மில்­லியன் அர­சாங்­கத்­தினால் ஒதுக்­கப்­பட்­டது. 2017 ஆம் ஆண்டு 9ஆயிரம் மில்­லியன் 2018 ஆம் ஆண்டு 5 ஆயிரம் மில்லியன் கூட ஒதுக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. அதில் மூன்றில் ஒரு பங்­கைத்­தானும் ஒதுக்கி இருக்­கி­றீர்­களா என மென்­மை­யாகக் கேட்­க­வேண்­டி­ய­வர்­க­ளா­க­வுள்ளோம். 

உரத்து குரல் கொடுக்­க­வேண்­டிய நேரம் வரும் வரை பார்த்­துக்­கொண்­டி­ருக்­கின்றோம். ஆன­ப­டி­யினால் சாதா­ரண மக்­க­ளுக்கு   ஆயிரம் தேவைகள் இருக்­கின்­ற­போதும் நூறு­தே­வை­க­ளா­வது நிறை­வேற்­றப்­ப­ட­வேண்டும். 

அர­சாங்கம் மனம் திறந்து தாங்கள் செய்த விட­யங்கள்  ஒதுக்­கிய நிதி  தொடர்பில் பேச­வேண்டும். நாங்கள் உங்­களை வர­வேற்­கின்றோம். உங்கள் திட்­டங்­க­ளுக்கு வர­வேற்பு அளித்தோம். ஆனால் ஏமாந்து விட்டோம்.  இந்த அர­சாங்­கத்தின் மீது நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை வந்­த­போது பிர­தமர் 12 விட­யங்­களைக் குறிப்­பிட்டு கடிதம் ஒன்றை அனுப்­பினார். ஆனால் நாங்கள் அதற்கு ஒப்­பந்தம் செய்­ய­வில்லை. ஜனா­தி­ப­தி­யு­டனும் ஒப்­பந்தம் செய்­ய­வில்லை. மக்­க­ளு­டைய தேவைகள் நிறை­வேற்­றப்­ப­ட­வேண்டும் என்­ப­தற்­கா­கத்தான் பாரா­ளு­மன்­றத்தில் உங்­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­கின்றோம். 

இந்த நிகழ்ச்சி  எங்­க­ளுக்கு ஆறு­த­லைத்­தந்­தாலும் மகிழ்ச்­சி­ய­டை­ய­வில்லை. மூன்று ஆண்­டு­க­ளுக்குள் நிறை­வேற்­றப்­ப­ட­வேண்­டிய பல விட­யங்கள் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. ஜனா­தி­பதி பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­று­கின்­ற­போதும் தேர்­த­லின்­போதும் ஆறு­மா­தத்­திற்குள் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட நிலங்கள் விடு­விக்­கப்­ப­டு­வ­தா­கக்­கூ­றினார். ஆனால் அதனை விடு­விக்­க­வில்லை. 

எங்­க­ளு­டைய தேசத்தை மீளக்­கட்­டி­யெ­ழுப்­பு­கின்ற விட­யத்தில் நாங்கள் ஏமாற்றம் அடைந்­துள்ளோம். கடந்த வரவு செலவுத் திட்­டத்­தின்­போது கூட்­ட­மைப்பின் சார்பில் ஜனா­தி­பதி, பிர­தமர், நிதி­ய­மைச்­ச­ருடன் கலந்­து­ரை­யா­டி­ய­போது 16விட­யங்கள் சொல்­லப்­பட்­டுள்­ளன.

எங்­க­ளுடைய மக்­க­ளுக்கு நிலம் இல்லை வீடுகள் இல்லை.  முன்னாள் போரா­ளிகள் அவர்­க­ளுக்­கான வேலை­வாய்ப்பு பெண் தலை­மைத்­துவ குடும்­பங்கள் போன்­ற­வற்­றுக்கு திட்­டங்­களை உரு­வாக்கி அந்த நிதியை விடு­விக்­க­வேண்டும்.

தென்­னி­லங்­கையில் இருந்து  வடக்கு கிழக்­கிற்கு ஊழி­யர்­களை நிரப்ப வேண்டாம். இப்­ப­கு­தி­க­ளுக்கு எமது பகுதி இளைஞர்­க­ளுக்கே வேலை வாய்ப்பு வழங்­க­வேண்டும். வடக்கு, கிழக்கு என பல திட்­டங்கள் ஒதுக்­கப்­ப­டு­கின்­ற­போது அவை இன்னும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. நாங்கள் கொள்­கைக்­காக நீண்ட கால­மாக மக்­களால் தெரிவு செய்­யப்­பட்டு வரு­கின்­ற­போது அண்­மையில் ஜனா­தி­பதி ஒரு செய­ல­ணியை அமைத்­தி­ருக்­கின்றார். 

இதில் வடக்கு கிழக்கை சேர்ந்த பாரா­ளு­மன்ற பிர­தி­நி­திகள் சம்­பந்­தப்­ப­டாமல் அமைச்­சர்­களை மட்டும் கொண்டு செய­லணி அமைத்­தி­ருக்­கின்­றார்கள். ஒரு  முஸ்லிம் பிர­தி­நி­தியை நிய­மிப்­பதில் நாங்கள் கவ­லைப்­ப­ட­வில்லை. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மஸ்­தானை நிய­மித்­துள்­ளீர்கள்.  முத­ல­மைச்­சரை நிய­மித்­துள்­ளீர்கள். ஆனால் பாரா­ளு­மன்ற உறுப்பினர்களை நியமிக்கவில்லை. இதற்கு நாங்கள் எங்கள் கண்டனத்தை தெரிவிக்கின்றோம். ஜனாதிபதி ஒரு கூட்டத்தை நடத்துகின்றார். பிரதமர் மற்றுமொரு கூட்டத்தை நடத்து கின்றார். இந்த நடவடிக்கையில் மாற்றம் வரவேண்டும்.   

மக்கள் பல்வேறு துன்பங்களைச் சந்தித்துக்கொண்டு வருகின்றார்கள்.  குறிப் பாக பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர் துஷ்பிரயோகம், வாள்வெட்டுக்கள் போன்றவை அதிகரித்துக் காணப் படுகின்றன. இதுமட்டுமன்றி நுண்கடன் திட்டங்களினால் பெண்களை அச்சுறுத் தும் நடவடிக்கைகள் அதிகரித்து வருகின் 

றன. எனவே இந்த நுண்கடன் திட்டங் கள் மீளப்பெறப்படவேண்டும். இதற்கான  கோரிக்கையை ஜனாதிப பிரமரிடம் முன் வைத்துள்ளோம். உங்களிடமும் இதனைக்கூறுகின்றேன். அடுத்த அமைச்சரவைக்குள் அனைவரும் ஒன்றிணைந்து திட்டங்களைமுன்னெடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன். 

http://www.virakesari.lk/article/35897

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.