Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய மீனவர்கள் 12 பேர் கைது

Featured Replies

இந்திய மீனவர்கள் 12 பேர் கைது

 

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய, ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்களை கைதுசெய்துள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

india.jpg

அந்த வகையில் இன்று அதிகாலை 3 மணியளவில் கச்சத்தீவு அருகே தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த குறித்த மீனவர்களை கைதுசெய்த இலங்கை கடற்படையினர் அவர்களின் இரு படகுகளையும் வலைகளையும் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தேவதாஸ், பிரான்சிஸ், சம்ஜஸ், சுதன் மற்றும் அலெக்ஸ்பாண்டியன் உள்ளிட்ட 12 பேரிடமும் விசாரணைகளை மேற்கொண்ட கடற்படையினர், மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

http://www.virakesari.lk/article/36054

  • தொடங்கியவர்

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் மீது புதிய சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு?

fishermen-arrest.jpg?resize=800%2C402

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை கைது செய்துள்ள இலங்கை, புதிய சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்துள்ள இலங்கை கடற்படை மீனவர்களை, மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்தநிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் மீது முதல்முறையாக புதிய சட்டத்தின் கீழ் வழக்குபதிய இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாகவும், கொழும்பு நீரியல் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் 50 லட்சம் ரூபா முதல் ஒன்றரைக் கோடி ரூபா வரை மீனவர்களுக்கு அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளதாகவும், அதனை கட்ட தவறினால் 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கவும் புதிய சட்டத்தில் இடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/2018/86592/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.