Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இன்று ஒத்திவைப்புவேளை பிரேரணை

Featured Replies

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இன்று ஒத்திவைப்புவேளை பிரேரணை

 

மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் இன்று ஒத்திவைப்புவேளைப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது. இதற்கான அறிவித்தலை கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் விடுத்துள்ளார்.

sumanthiran.jpg

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த 2017 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதத்­துடன் 3 மாகாண சபை­களின் பத­விக்­காலம் நிறை­வ­டைந்­துள்ள நிலையில் தேர்தல் முறையில் சீர்­தி­ருத்­தங்­களைக் கொண்டு வரு­வ­தற்­காக மாகாண சபை தேர்தல் சட்ட விதி­களில் மாற்­றங்கள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ள­தால் மேற்­கூ­றிய 3 மாகாண சபை­க­ளி­னதும் தேர்­தல்கள் இன்று வரை நடை­பெ­றா­துள்ள அதே­வேளை, 2018 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதத்­துடன் மேலும் 3  மாகாண சபை­களின் பத­விக்­காலம் முடி­வ­டை­ய­வுள்­ள­துடன் தேர்தல் சட்ட சீர்தி­ருத்­தங்கள் இன்னும் முடி­வ­டை­யா­துள்­ள­தால் எந்­த­வொரு மாகாண சபைக்கும் தேர்­தலை நடத்த முடி­யாத சூழ்­நிலை காணப்­ப­டு­கின்­றது. தேர்தல் சட்ட விதி­களின் திருத்­த­மா­னது உட­ன­டி­யாக செய்து முடிக்­கப்­பட வேண்­டிய தேவை இதனால் எழு­கின்­றது. இதன் மூலம் பல்­வேறு மாகா­ணங்­களைச் சேர்ந்த மக்­களின் உரி­மைகள் மேலும் மறுக்­கப்­ப­டாமல் செய்ய முடியும்.

மாகாண சபை தேர்தல் சட்ட விதி­களில் சீர்­தி­ருத்­தத்தை உட­ன­டி­யாக மேலும் தாம­த­மின்றி செய்து முடிக்­கு­மாறு நாம் அரசை வலி­யு­றுத்­து­கின்றோம்.

எதிர்­வரும் 2 மாதங்­க­ளுக்குள் இச் சீர்­தி­ருத்­தங்­களை செய்யத் தவறும் பட்சத்தில் 2017 ஆம் ஆண்டு மாகாண சபை (திருத்தம்) சட்டம் இல.17 உடனடியாக நீக்கப்படுவதன் மூலம் தேர்தலை உடனடியாக நடத்தி முடிக்க அரசை நாங்கள் வலியுறுத்துகின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/36099

  • கருத்துக்கள உறவுகள்

இவர் சட்டாம்பியர்.. பின் வாசல் புகழ்.. சுமந்திரனுக்கு..  வடக்கு மாகாணத்தில் தான் சொல்லுறதை சொல்லுற ஒரு கிளிப்பிள்ளை.. முதலமைச்சராகனும் என்ற தேவை கடுமையாக எழுந்துள்ளது.

மக்கள் இந்த விசமத்துக்கு இடமளிப்பது ஆபத்தாக அமையும். 

  • தொடங்கியவர்

மக்களை மக்களே ஆளும் அதிகாரத்தை உறுதிப்படுத்த வேண்டும் - சம்பந்தன்

 

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி )

ஜனநாயகத்தை பலப்படுத்த அதிகார பரவலாக்கல் உறுதிப்படுத்தப்பட்டு, மக்களை மக்களே ஆளும் அதிகாரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

sampanthan.jpg

பாராளுமறத்தில் இன்று மாகாணசபை தேர்தல் குறித்த சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

பிளவடையாத நாட்டுக்குள் அரசியலமைப்பின் மூலமாக அதிராக பரவலாக்கல் ஒன்றினை பெற்றுக்கொண்டு அதன் மூலம் சமத்துவத்துடன் வாழ வேண்டும் என்பதை நாம் உறுதியான கோரிக்கையாக வலியுறுத்தி வருகின்றோம். 

கடந்த கால தவறுகளிலிருந்து படிப்பினை பெற்றுக்கொண்டு அடுத்த கட்ட ஆரோக்கியமான நகர்வுகளை நாம் முன்னெடுக்க வேண்டும். புதிய அரசியல் அமைப்பு ஒன்று உருவாக்காது விட்டால் நாட்டுக்கு எந்த விடிவுகளும்  இல்லை. தீர்வுகளுக்கும் முன்னேற்றங்களுக்கும் புதிய அரசியல் அமைப்பு ஒன்று அவசியம். இதையே நாம் ஆரம்பத்திலிருந்து தெரிவித்து வருகின்றோம். 

இது குறித்து சிந்தித்து இறுதித் தீர்வொன்று பெறப்படுவது குறித்து ஏன் சிந்திக்காது உள்ளீர்கள். பிளவுபடாத  நாட்டுக்குள் நிரந்தரத் தீர்வு ஒன்று எமக்கு வேண்டும்.  மாகாணசபைகள் உயிரோட்டம் உள்ளதாக அமைய வேண்டும். மாகாண அரசு, மாகாண ஆட்சி அமையப்பெற வேண்டும். 

ஆகவே மாகாண சபைத் தேர்தல்கள் நடத்துவதற்கு முன்னர் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டு சபைக்கு புதிய அரசியல் அமைப்பினை கொண்டவர வேண்டும். மாகாணசபை முறைமைகள், அதிகார பரவலாக்கல், அதியுச்ச அதிகார பகிர்வு அரசியல் அமைப்பில் உறுதிப்படுத்தபட வேண்டும். தேர்தல்கள் காலதாமதம் இல்லாது இடம்பெற வேண்டும். மக்களின் ஜனநாயகம் பலமடைய வேண்டும். அதன் மூலமாக மக்களே தம்மை ஆளும் ஜனநாயக சூழல் பலமடைய வேண்டும் என்றார்.

http://www.virakesari.lk/article/36133

  • தொடங்கியவர்

கிழக்கு மாகாண மக்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளன: சுமந்திரன்

 

 

கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள மக்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மாகாணசபைத் தேர்தல்கள் பிற்போடப்படுவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) சபை ஒத்திவைப்புப் பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாண சபைகளுக்கான பதவிக்காலம் கடந்த ஒக்டோபர் மாதத்துடன் நிறைவடைந்துள்ளன. மேலும் மூன்று சபைகளின் பதவிக்காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் நிறைவடையவுள்ளது.

இந்நிலையில், மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தாது தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டு வருவதானது ஜனநாயகத்தையும், மக்களின் உரிமைகளையும் மீறும் செயலாகும்.

மாகாணசபை திருத்தச்சட்டமூலத்துக்கு அமைய எல்லை நிர்ணய அறிக்கை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குள் சபையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும். அப்படி நிறைவேற்றப்படாத பட்சத்தில் சபாநாயகர் தலைமையில் மீளாய்வுக் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

http://athavannews.com/?p=699594-கிழக்கு-மாகாண-மக்களின்-உரிமைகள்-மீறப்பட்டுள்ளன:-சுமந்திரன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.