Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திணைக்கள அதிகாரிகளுடன் – டெனீஸ்வரன் இன்று சந்திப்பு!!

Featured Replies

திணைக்கள அதிகாரிகளுடன் – டெனீஸ்வரன் இன்று சந்திப்பு!!

 

 

deniswaran-720x430.jpg

 
 
 
 

வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராமிய அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்கு வரத்து மற்றும் வர்த்தக வாணிப அமைச்சுக்குரிய திணைக்களத் தலைவர்கள், வேறு எந்தவொரு அமைச்சர்களினதும் உத்தரவுகளை ஏற்றுச் செயற்பட வேண்டாம் என்று மாகாணசபை உறுப்பினர் பா.டெனீஸ்வரன் கடிதம் அனுப்பியுள்ளார்.

வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராமிய அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் வர்த்தகவாணிப அமைச்சின் கடிதத் தலைப்பில், அமைச்சர் எனக் குறிப்பிட்டு அவரால் திணைக்களத் தலைவர்களுக்கு நேற்றுக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ளதாவது-,

கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 23ஆம் திகதி ஒரு சிலரது தவறான முடிவினாலும், நடவடிக்கைகளாலும் எனது அமைச்சுச் சார்ந்த பணிகளை முன்னெடுக்க முடியாமல் முட்டுக்கட்டை போடப்பட்டமையும், அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் தாங்கள் நன்கு அறிவீர்கள்.

 

தற்பொழுது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் பிழையென்றும், வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராமிய அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்துமற்றும் வர்த்தகவாணிப அமைச்சராக தொடரமுடியுமென்றும், அதற்கு எவரும் இடயூறாக இருக்கக் கூடாது என்றும் மேன் முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு அண்மையில் பிறப்பித்துள்ளது.

அந்த வகையில் எனது அமைச்சு சார்ந்த திணைக்கள அதிகாரிகள் என்ற வகையில் பின்வரும் பணிப்புரைகள் தங்களுக்கு இத்தால் வழங்கப்படுகின்றது.

கடந்த 29ஆம் திகதிக்குப் பின்னர் எனது அமைச்சு சார்ந்த விடயதானங்களில் அமைச்சர் என்ற போர்வையில் யாரேனும் உத்தரவு பிறப்பித்தால் அதனை முன்னெடுக்கவேண்டாம் என்றும், திணைக்களம் சார் நாளாந்த நடவடிக்கைகளுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படாதவண்ணம் பணிகளை முன்னெடுக்குமாறும், 2018ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி வேலைத் திட்டங்களை மிகவிரைவாக நிறைவேற்றுமாறும், எவரேனும் அபிவிருத்தி சார்ந்த வேலைத்திட்டங்களுக்கும் திணைக்களத்தின் நாளாந்த செயற்பாட்டுக்கும் இடையூறாகவோ அல்லது முட்டுக்கட்டையாகவோ இருப்பின் அதனை உடன் எனக்குஅறியத்தருமாறும், மேற்படி பணிப்புரைகளை மீறும் சந்தர்ப்பத்தில் அதனால் ஏற்படும் சட்டவிளைவுகளுக்குத் தாங்களே பொறுப்பேற்க வேண்டுமென்றும் இத்தால் அறியத்தருகின்றேன்.

2018ஆம் ஆண்டுக்கான எமது அமைச்சு சார்ந்த மாகாண குறித்துரைக்கப்பட்ட நிதியின் கீழ் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் மாவட்டரீதியாக மாவட்டஉத்தியோகத்தரை உள்ளடக்கியதான மீளாய்வு கூட்டமொன்று விரைவாக நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதால் அது தொடர்பில் சிறப்புக் கலந்துரையாடலுக்கு திணைக்களத் தலைவர்களாகிய தாங்கள் இன்று பிற்பகல் 2 மணிக்கு மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்குச் சமூகமளிக்குமாறு இத்தால் வேண்டப்படுகின்றீர்கள் – என்றுள்ளது.

http://newuthayan.com/story/10/திணைக்கள-அதிகாரிகளுடன்-டெனீஸ்வரன்-இன்று-சந்திப்பு.html

நீதிமன்றம் உங்களை பதவி நீக்குவதற்கு முதல்வருக்கு அதிகாரம் இல்லை எனக்கூறியே உங்களின் பதவி நீக்கத்திற்கு தடை போட்டுள்ளது.( இது சத்தியசீலன், ஐங்கரநேசன், குருகுலராசா எல்லாருக்கும் பொருந்தும்). ஆனால் உங்கள் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து அது உங்களை விடுவிக்கவில்லை. நீங்கள் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்காமல் மீண்டும் நீங்கள் பதவியேற்பதில் எவ்வித முகாந்திரமும்  இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

இவர் எதுக்கு முந்திரிக்கொட்டை மாதிரி பதவிக்கு அலைகிறார். இவர் மீது சிங்கள நீதிமன்றங்கள் என்ன நடவடிக்கை எடுக்குது என்பதல்ல இப்ப முக்கியம். இவரின் நடவடிக்கைகள்.. இப்ப மக்களை இவர் மீது சந்தேகம் கொள்ள வைப்பதால்.. இவர் எல்லா அரசியல் நடவடிக்கைகளில் இருந்தும்.. உடனடியாக விலகி இருந்து..

முதலமைச்சர் அவருக்கு சொறீலங்காவால்... அனுமதிக்கப்பட்ட சட்ட வரையறைக்குள் இருந்து இவர் மீதான விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க கால அவகாசம் வழங்க இவர் ஒத்துழைக்க வேண்டும்.

சொறீலங்காவின் பொம்மை.. பின் வாசல்.. சுமந்திரன் தூண்டலுக்கு துலங்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.