Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படுமா?

Featured Replies

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படுமா?

  • தொடங்கியவர்

மகிந்த மிக விரைவான – தேர்தலொன்றை எதிர்பார்ப்பதேன்?

 

 

Mahinda-April-12-2015-750x430.jpg

 
 
 
 

ஏன் விரை­வில் ஒரு தேர்­தல் இடம்­பெ­றப்­போ­கி­றது என மகிந்த ராஜ­பக்ச யூகிக்­கி­றார்?
தலைமை அமைச்­ச­ருக்­கெ­தி­ரான நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ரணை வாக்­க­ளிப்­பின் பின்­னர் கூட்டு அர­சி­லி­ருந்து வௌியே­றிய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் 16பேர் கொண்ட குழு, அக­தி­கள் போல அலைந்து திரிந்து, தங்­களை ஏற்­றுக்­கொள்ள எந்­த­வொரு கட்­சி­யு­மில்­லா­மல் இறு­தி­யாக சிறி­லங்கா மக்­கள் முன்­ன­ணி­யு­டன் சங்­க­ம­மா­கி­யுள்­ளது.

இது தொடர்­பாக ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளி­டம் கருத்­துத் தெரி­வித்த 16பேர் குழு­வின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டபிள்யூ.டி.கே சென­வி­ரட்ன, இனி­மேல் தங்­களை எவரும் 16பேர்க் குழு­வென குறிப்­பி­டக் கூடாது என­வும், தாங்­கள் கூட்டு அரசை விட்டு வில­கிய காலத்­தில் இருந்தே எதிர்க்­கட்­சி­யாக இருந்து வந்­த­தா­க­வும், இப்­போது தங்­க­ளின் பேதங்­கள், கருத்து வேறு­பா­டு­களை மறந்து சிறி­லங்கா மக்­கள் முன்­ன­ணி­யு­டன் இணைந்து தற்­போ­தைய கூட்டு அரசை பத­வி­யில் இருந்து அகற்­று­வதே தங்­கள் கொள்கை என­வும் கூறி­னார். அத்­து­டன் சிறி­லங்கா மக்­கள் முன்­ன­ணி­யின் அங்­கத்­து­வம் பெற­வேண்­டிய தேவை தங்­க­ளுக்கு இல்லை என­வும் கூறி­னார்.

16 பேர் குழு­வின் உறுப்­பி­னர்
லக்ஸ்­மன் யாபா அபே­வர்­தன
வெளி­யிட்டு கருத்து
இந்த 16பேர் குழு­வின் மற்­று­மொரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான லக்ஸ்­மன் யாப்பா அபே­வர்­தன இது பற்­றிக் கூறு­கை­யில், தாங்­கள் சிறி­லங்கா மக்­கள் முன்­ன­ணி­யின் அடுத்த குழுக்­கூட்­டத்­திற்கு அழைக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­க­வும், அந்­தக் கூட்­டம் மகிந்த ராஜ­பக்­ச­வின் கொழும்பு இல்­லத்­தில் ராஜ­பக்­ச­வின் தலை­மை­யில் நடை­பெ­ற­வுள்­ள­தா­க­வும், அத்­து­டன் சிறி­லங்கா மக்­கள் முன்­ன­ணி­யு­டன் ஒரே கட்­சி­யாக இணைந்து அடுத்து வர­வுள்ள தேர்­த­லின்­போது செயல்­பட உள்­ள­தா­க­வும் கூறி­னார்.
16பேர் குழு­வின் உறுப்­பி­னர்­க­ளான திலங்க சும­தி­பால, தயா­சிறி ஜய­சே­கர மற்­றும் எஸ்.பி.திசா­நா­யக போன்ற நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் இந்­தச் சந்­திப்­பின்­போது பிர­சன்­ன­மாகி இருக்­க­வில்லை.

 

இதற்­கி­டை­யில் தேசிய சுதந்­திர முன்­ன­ணி­யின் தலை­வர் விமல் வீர­வன்ச, அர­சி­லி­ருந்து பிரிந்­து­ வந்த எவ­ரை­யும் தான் அன்­பு­டன் வர­வேற்­ப­தா­க­வும், தலைமை அமைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ர­ணை­யின்­போது அதற்கு ஆத­ர­வாக செயல்­பட்­ட­மைக்கு 16பேர் கொண்ட குழு­வி­னரைப் பாராட்­டு­வ­தா­க­வும் தெரி­வித்­தார். அத்­து­டன் ராஜ­பக்­ச­வின் கரங்­க­ளைப் பலப்­ப­டுத்தி ராஜ­பக்­சவை எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக்கி, இந்தக் கூட்டு அரசை வீழ்த்தி அர­ச­மைப்­புக்­கான 20ஆவது திருத்­தத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வோம் என எதிர்­பார்ப்­ப­தா­க­வும் கூறி­னார்.

16பேர் குழு­வின் மற்­றொரு உறுப்­பி­ன­ரான சுசில் பிரேம ஜயந்­த­வி­டம் நீங்­கள் அர­ச­த­லை­வர் தேர்­த­லில் எவ­ருக்கு ஆத­ர­வ­ளிப்­பீர்­கள் என கேட்­கப்­பட்ட பொழுது, அவர் அதற்கு இன்­னும் காலம் இருக்­கி­றது என­வும், தற்­ச­ம­யம் தாங்­கள் கூட்டு எதி­ர­ணி­யு­டன் இணைந்து ஏனைய தேர்­தல்­களை எதிர்­கொள்­ளப் போவ­தா­க­வும் கூறி­னார்.

‘‘நியூ­யோர்க் டைம்ஸ்’’
பற்­ற­வைத்­துள்ள வெடி
நியூ­யோர்க் டைம்ஸ் பத்­தி­ரி­கை­யில் அண்­மை­யில் வௌியான ஒரு செய்­தி­யில், இலங்கை சீனா­வி­ட­மி­ருந்து பல வகை­யி­லும் கடன்­க­ளைப்­பெற்று சீனா­வின் கைப்­பி­டிக்­குள் சிக்­கிக்­கொண்­டி­ ருக்­கி­றது என­வும், முன்­னைய அர­சின் ஆட்­சி­யில், மகிந்த ராஜ­பக்­ச­வின் அர­ச­த­லை­வர் தேர்­தல் பரப்­பு­ரை­க­ளுக்­காக சீனா பெருந்­தொகை நிதியை வழங்­கி­யி­ருந்­த­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

2015ஆம் ஆண்டு நல்­லாட்சி நாட்­டில் மலர்­வ­தில் முக்­கிய பங்­காற்­றிய பிர­ஜை­கள் கூட்டு நிர்­வா­கங்­கள் குழு, வெகு அண்­மை­யில் வௌியா­கி­யுள்ள பெரிய ஊழல் விவ­கா­ர­மா­கக் கரு­தப்­ப­டும், 2015ஆம் ஆண்டு அர­ச­த­லை­வர் தேர்­தல் பரப்­பு­ரை­க­ளுக்­காக சீனா, மகிந்த ராஜ­பக்­ச­வுக்கு வழங்­கி­ய­தா­கக் கூறப்­ப­டும். நிதி உதவி பற்­றிய விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கு­மாறு அரச தலை­வ­ரை­யும், தலைமை அமைச்­ச­ரை­யும் கேட்­டுள்­ளது.

சீனா இந்­தக் குறிப்­பிட்ட நிதியை சைனா மேர்ச்­சன்ற் போர்ட் ஹோல்­டிங் நிறு­வ­னம் (CHINA MERCHANT PORT HOLDINGS COMPANY) மூலம் காசோ­லை­யாக அல­ரி­மா­ளி­கைக்கு அனுப்­பி­யி­ருந்­த­தா­க­வு।ம், அத­னைப் பெற்­றுக்­கொண்­ட­வர் ஒரு பௌத்த பிக்கு என­வு।ம், அந்­தப் பணத்­திற்கு என்ன நடந்­துள்­ளது என்­பது ஆரா­யப்­ப­ட­வேண்­டு­மெ­ன­வும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இது சம்­பந்­த­மாக பிரதி அமைச்­சர் ரஞ்­சன் ராம­நா­யக ஏற்­க­னவே நிதிக்­குற்­றங்­களை விசா­ரணை செய்­யும் பிரி­வி­டம் குற்­றச்­சாட்­டொன்­றைப் பதிவு செய்­துள்­ளார்.

முன்­னாள் மத்­திய வங்­கி­யின் ஆளு­நர் அஜித் நிவாட் கப்­ரால் மற்­றும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் நாமல் ராஜ­பக்ச ஆகி­யோர் குறித்த விட­யம் தொடர்­பாக உப்­புச் சப்­பற்ற கருத்­துக்­க­ளைத் தெரி­விக்­கின்­ற­னர். இந்­தப் பணம் மகிந்த ராஜ­பக்­ச­வி­ட­மி­ருந்து மீளப்­பெ­றப்­பட வேண்­டும் என்­ப­து­தான் பிர­ஜை­கள் கூட்டு நிர்­வாக இணைப்­பா­ளர் சமன் ரட்­ண­பி­ரி­ய­வின் நிலைப்­பா­டா­கும்.

மகிந்த தரப்­பி­னர் மீண்­டும்
ஆட்­சிக்கு வரு­வதை நாட்டு மக்­கள்
ஏற்­கப்­போ­வ­தில்லை என்­கி­றார்
சமன் ரட்­ண­பிரிய
சர்­வா­தி­கா­ரப் போக்­கில் ஆட்­சி­பு­ரிந்த மகிந்த ராஜ­பக்ச மற்­றும் அவ­ரது சகோ­த­ரர் கோத்­த­பாய ராஜ­பக்ச ஆகி­யோர், மீண்­டும் ஆட்­சிக்கு வரு­வதை பொது­மக்­கள் எந்தச் சந்­தர்ப்­பத்­தி­லும் அனு­ம­திக்­கக் கூடாது. இந்த இரண்டு சகோ­த­ரர்­க­ளை­யும் மக்­கள் எப்­ப­டி­யா­வது ஓரங்­கட்­டி­விட வேண்­டும் என­வும் சமன் ரட்­ண­பி­ரிய கூறி­யுள்­ளார்.

அம்­பாந்­தோட்டை துறை­முக விவ­கா­ரம் தொடர்­பாக 7.5மில்­லி­யன் டொலர்­களை அப்­போ­தைய அர­ச­த­லை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வின் தரப்­பி­னர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டமை தொடர்­பாக இலங்கை மற்­றும் சீனா ஆகிய இரு நாடு­க­ளின் அர­சு­க­ளும் தனித்­த­னி­யாக விசா­ர­ணை­கள் நடத்­த­வேண்­டு­மென ஐக்­கிய தேசி­யக் கட்சி வலி­யு­றுத்­து­கி­றது.

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஹர்­சன ராஜ­க­ருணா ஊட­கங்­க­ளுக்குக் கருத்­துத் தெரி­விக்­கை­யில் சீனா­வின் ‘‘ஒரு­பாதை, ஒரு­ வழித்தடம்’’ என்ற தொனிப்­பொ­ரு­ளின் அடிப்­ப­டையே நூறு வீதம் ஊழல் அற்­றது என்­ப­து­தான். இந்த துறை­முக நிறு­வ­ன­மும் சீன நாட்­டி­னது என்ற கார­ணத்­தால், சீன அர­சும் இந்த ஊழல் பற்றி­ய­தொரு விசா­ர­ணையை மேற்­கொள்ள வேண்­டும் என­வும், ஐக்­கிய தேசி­யக் கட்சி இது சம்­பந்­த­மாக அரச தலை­வர் ஆணைக்­கு­ழு­வொன்­றின் ஊடாக விசா­ரணை நடத்­த­வேண்­டும் என­வும் தாங்­கள் அர­ச­த­லை­வர் மைத்­தி­ரி­பால சிரி­சே­ன­வைக் கேட்­டுக் கொண்­டுள்­ள­தா­க­வும் கூறி­னார்.

இங்கு குறிப்­பிட்­டுள்ள சீன துறை­முக நிறு­வ­னம் ஏற்­க­னவே அவர்­க­ளின் முன்­னைய நிர்­வாக ஊழல் கார­ண­மாக பங்­க­ள­தேஷ் மற்­றும் பிலிப்­பைன்ஸ் ஆகிய நாடு­க­ளின் கறுப்­புப்ப பட்­டி­ய­லில் சேர்க்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது என­வும் கூறிய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ராஜ­க­ருணா, கிராம மக்­க­ளுக்கு ராஜ­பக்ச தரப்­பி­னர் துணி­ம­ணி­கள், மணிக்­கூ­டு­கள் போன்­ற­வற்றை இல­வ­ச­மாக விநி­யோ­கித்­த­மை­யைத் தாம் நேரில் கண்­ட­றிந்­துள்­ள­தா­கக் கூறி­ய­து­டன், கட்­டா­யம் இது சம்­பந்­த­மாக விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டு­மெ­ன­வும் அவர் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

நிதி­மோ­சடி இடம்­பெற்­றி­ருப்­பின்
மகிந்­த­வுக்கு எதி­ராக
சட்ட நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு
சவால் விடுக்­கி­றது இணை­யத்­தள
ஊட­க­வி­ய­லா­ளர் அமைப்பு
இணை­யத்­தள ஊட­க­வி­ய­லா­ளர்­கள் தேசிய இயக்­கம், இலங்கை அர­சுக்கு ராஜ­பக்ச குடும்­பத்­து­டன் இர­க­சிய உற­வு­கள் எது­வும் இல்­லாத பட்­சத்­தில், சம்­பந்­தப்­பட்ட இந்த நிதி மோசடி செய்த மகிந்த ராஜ­பக்­ச­வுக்கு எதி­ராக சட்­ட­ந­ட­வ­டிக்கை எடுக்­கும்­படி சவால் விடு­வித்­துள்­ளது. அம்­பாந்­தோட்டை துறை­முக நிர்­மா­ணம் தொடர்­பான முன்­னைய அர­சின் கொடுக்­கல் வாங்­கல்­க­ளின்­போது 7.6மில்­லி­யன் அமெ­ரிக்க டொலர் நிதி­மோ­சடி இடம்­பெற்­றமை தொடர்­பான குற்­றச்­சாட்­டுக் குறித்து விசா­ரணை மேற்­கொள்ள இதுவே சரி­யான தரு­ணம் என்­றும், அர­ச­த­லை­வர் ஆணைக்­குழு உட­ன­டி­யா­கவே இதற்­னாக நட­வ­டிக்­கை­எ­டுக்­க­வேண்­டு­மெ­ன­வும் இணை­யத்­தள ஊட­க­வி­ய­லா­ளர் தேசிய இயக்­கத்­தின் தலை­வர் சது­ரங்க டி.அல்­விஸ் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

இதே­வேளை ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­தி­ட­மி­ருந்து 1.1மில்­லி­யன் ரூபா நிதியை தேர்­தல் பரப்­பு­ரைச் செயற்­பா­டு­க­ளுக்­காக மகிந்த ராஜ­பக்ச பெற்­றுக்­கொண்­டமை பற்றி பேச்­சுக்­கள் அந்த நாட்­டு­டன் ஆரம்­பிக்­கப்­ப­ட­வி­ருந்­த­தா­க­வும் அமைச்­சர் லக்­சு­மன் கிரி­யெல்ல தெரி­வித்­தார்.
மறு­பு­றத்­தில் முன்­னாள் மத்­திய வங்கி ஆளு­நர் அஜித் நிவாட் கப்­ரல் மகிந்த ராஜ­பக்­ச­விற்கு எதி।­ரான நியூ­யோர்க் ரைம்ஸ் பத்­தி­ரி­கை­யின் குற்­றச்­சாட்­டுக்­களை நிரா­க­ரித்­துள்­ளார். அத்­து­டன் இலங்கை சீனா­வி­டம் கடன்­பட்டு அந்த நாட்­டுக்கு அடி­மை­யா­கி­விட்­டது போன்­ற­தொரு அபிப்­பி­ரா­யத்தை உரு­வாக்­கு­வதே நியூ­யோர்க் ரைம்ஸ் பத்­தி­ரி­கை­யின் குறிக்­கோள் என­வும் அஜித் நிவாட் கப்­ரல் தெரி­வித்­தார்.

அத்­தோடு குறித்த கட்­டு­ரை­யின் ஆசி­ரியை தனது கட்­டுரை தொடர்­பா­கத் தம்மை பேட்டி கண்­ட­போது தான் தெரி­வித்த எந்த விப­ரங்­க­ளும் நியூ­யோர்க் பத்­தி­ரி­கை­யில் வெளி­வ­ர­வில்லை என்­றும் தெரி­வித்த முன்­னாள் மத்­திய வங்கி ஆளு­நர், மகிந்த ராஜ­பக்ச அரசு, கடன்­தொ­கையை 71வீத­மாக குறைந்­தி­ருந்­தது என­வும், இலங்கை சீனா­வின் கடன் பிடிக்­குள் மாட்­டிக் கொண்­டுள்­ளது என கூறு­வதை ஏற்­றுக்­கொள்ள இய­லாது என­வும் குறிப்­பிட்­டார்.

சீனா­வை­விட அமெ­ரிக்­கா­வி­ட­மி­ருந்தே
இலங்கை அதி­க­ளவு கடன் பெற்­றுள்ளது
இலங்கை சீனா­வை­விட அமெ­ரிக்­கா­வி­டம் இருந்­து­தான் அதி­க­மான நிதி­யைக் கட­னா­கப் பெற்­றுக்­கொண்­டுள்­ளது. ஆகவே இலங்கை அந்த நாடு­க­ளுக்­குத்­தான் அடி­மை­யா­குமே தவிர, சீனா­வுக்கு அல்ல என அவர் தொடர்ந்து கருத்­துத் தெரி­வித்­தார். ஐக்­கிய தேசி­யக் கட்சி பிணை­முறி மோச­டி­யூ­டாக பணம்­பெற்று தேர்­தல் நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­பட்­டமை நிரூ­பிக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், ஏன் அதைப்­பற்றி விசா­ரணை நடத்­தா­மல் இன்­னும் மகிந்த ராஜ­பக்­ச­வுக்கு எதி­ராக நிரூ­பிக்­கப்­ப­டாத குற்­றச்­சாட்­டி­னைப்­பற்றி விசா­ரிக்க முயல்­கி­றீர்­கள் என்ற கேள்­வி­யை­யும் அஜித் எழுப்­பி­யுள்­ளார்.

மகிந்­த­வின் ஆட்­சிக் காலத்­தில் பெறப்­பட்ட மொத்­தக் கடன்­தொகை டொலர் 26மில்­லி­யன் என­வும் இதில் சீனா­வி­ட­மி­ருந்து பெறப்­பட்­டது. 4அல்­லது 5பில்­லி­யன் டொலர்­கள் மட்­டுமே என்று கூறி­னார். மகிந்த ராஜ­பக்ச துறை­மு­கத்தை எந்த நாட்­டுக்­கும் விற்­கவோ அல்­லது ஒப்­பந்த அடிப்­ப­டை­யிலே கொடுக்­கவோ இல்லை என­வும் அதனை தற்­போ­தைய அரசே அப்­ப­டிச் செய்­துள்­ளது என்­றும் அவர் தெரி­வித்­தார்.

சீன தூத­ர­கத்­தின் அர­சி­யல் பேச்­சா­ள­ரான லுவே சொங் இது­பற்­றிக் கூறு­கை­யில் இது முழு­மை­யான அர­சி­யல் பின்­னணி கொண்டதொன்று என­வும், இது முற்­றி­லும் பொய்­யா­ன­தொரு அறிக்கை என­வும் கூறி­யுள்­ளார். நியூ­யோர்க் பத்­தி­ரி­கை­யின் மகிந்த ராஜ­பக்­ச­விற்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்கு இலங்­கை­யின் பல­த­ரப்­பட்­ட­வர்­க­ளும் கன்­ட­னம் தெரி­வித்­த­து­டன் அவர்­கள் போர்­மு­டி­வ­டைந்த பின்­னர் இலங்­கையை கட்டி எழுப்­பும் பணி­யில் சீன ஆற்­றும் பங்­க­ளிப்பை பாராட்­டி­யுள்­ள­தா­க­வும் லுவே சொங் குறிப்­பிட்­டார்.

எப்­ப­டி­யான தடங்­கல்­கள் உரு­வாக்­கப்­பட்­டா­லும், இரு­நாட்­டுத் தலை­வர்­க­ளா­லும் கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்ள ஒப்­பந்­தங்­கள் சரி­யா­கவே நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டும் என அவர் தெரி­வித்­தார்.

நியூ­யோர்க் பத்­தி­ரி­கை­யில் கூறப்­ப­டும் குற்­றச்­சாட்டு பற்றி மகிந்த ராஜ­பக்ச கருத்­துத் தெரி­விக்­கை­யில், இது தன்­னு­டைய பெய­ருக்கு களங்­கம் கற்­பிக்­கும் இலங்கை அர­சின் செயல்­பா­டு­கள் என்று கூறி­னார். விரை­வில் ஒரு தேர்­தல் வர­வி­ருப்­ப­தால் கடந்த 3வரு­டங்­க­ளா­கவே கூட்டு அரசு ராஜ­பக்­சக்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­பட்டு வந்­துள்­ளது என­வும், ஐக்­கிய தேசிய அடுத்த தேர்­தல் வரும்­வரை இந்த நட­வ­டிக்­கை­களை தொட­ரப்­போ­கி­றது என்­றும் கூறிய அவர், தான், குறிப்­பிட்ட அந்த நியூ­யோர்க் டைம்ஸ் பத்­தி­ரி­கைக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்க உள்ள போதி­லும், மக்­கள் அந்த பத்­தி­ரிகை செய்­தியை நம்­ப­மாட்­டார்­கள் என­வும் கூறி­னார்.

இது­போன்ற நட­வ­டிக்­கை­க­ளின் ஊடாக இந்த அரசு மக்­களை முட்­டாள்­க­ளாக்க முனை­கி­றது என­வும், மக்­கள் அவற்றைக் கண்டு ஏமா­ற­மாட்­டார்­கள் என­வும், ‘‘ராஜ­பக்ச ஒரு ஊழல்­வாதி’’ என்ற சுலோ­கம் இனி­மே­லும் மக்­க­ளி­டையே எடு­ப­டாது என்­ப­து­டன், வர­வி­ருக்­கும் தேர்­தல் இதனை ஐக்­கிய தேசிய கட்­சிக்கு எடுத்­துக் காட்­டும் என்­றார் மகிந்­த­ரா­ஜ­பக்ச.

http://newuthayan.com/story/10/மகிந்த-மிக-விரைவான-தேர்தலொன்றை-எதிர்பார்ப்பதேன்.html

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.