Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐஎஸ் அமைப்பிடமிருந்து புதுடில்லி காப்பாற்றப்பட்டது எப்படி?

Featured Replies

ஐஎஸ் அமைப்பிடமிருந்து புதுடில்லி காப்பாற்றப்பட்டது எப்படி?

 

 
 

இந்திய தலைநகர் புதுடில்லி மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஐஎஸ் தற்கொலைகுண்டுதாரி மேற்கொண்டிருந்த திட்டத்தை ஐஎஸ் அமைப்பிற்குள் ஊருடுவியதன் மூலம் இந்திய புலனாய்வு அமைப்பினை சேர்ந்தவர்கள் முறியடித்துள்ளனர்.

இந்தியாவின் வரலாற்றில் முன்னெடுக்கப்பட்ட மிகத்திறமையான துணிச்சலான புலனாய்வு நடவடிக்கை மூலம் புதுடில்லியை இந்திய அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர்.

ஐஎஸ் அமைப்பிற்குள் ஊருடுவிய இந்திய புலனாய்வாளர்கள் குறிப்பிட்ட ஐஎஸ் தற்கொலைதாரிக்கு தங்குமிடத்தை ஏற்பாடு செய்துகொடுத்துள்ளனர் மேலும் அவரிற்கு  வெடிபொருட்களையும் வழங்கியுள்ளனர்.

குறிப்பிட்ட ஐஎஸ் உளவாளி பொறியியல் மாணவன் என்ற போர்வையில் புதுடில்லியில் தங்கியிருந்த வேளை அவரை உன்னிப்பாக அவதானித்தவண்ணமிருந்து இந்திய அதிகாரிகள் 2017  செப்டம்பர் மாதம் அவரை கைதுசெய்துள்ளனர்.

குறி;ப்பிட்ட தற்கொலை குண்டுதாரியை கைதுசெய்த இந்திய அதிகாரிகள் அந்த நபரை உடனடியாக ஆப்கானிஸ்தான் கொண்டு சென்றுள்ளனர்.

isisd.jpg

இந்திய அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட நபர் தற்போது ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்காவின் முக்கிய தளமொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

குறிப்பிட்ட நபர் வழங்கியுள்ள தகவல்களை அடிப்படயாகவைத்தே ஆப்கானில் உள்ள அமெரிக்க படையினர் தலிபான் அமைப்பினர் மீது சமீபத்தில் பல வெற்றிகர தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர் எனதகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய புலனாய்வாளர்கள் 18 மாதங்களாக ஆப்கானிஸ்தான், துபாய், புதுடில்லி உட்பட பல நாடுகளில் மேற்கொண்ட தொடர் கண்காணிப்பு நடவடிக்கையின் போது பாக்கிஸ்தானில் பயிற்சி பெற்ற 12 தீவிரவாதிகள் குண்டுதாக்குதல்களை மேற்கொள்வதற்காக அனுப்பபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த 12 பேரில் 20 வயதை கடந்த செல்வந்தர் ஒருவரின் மகனிடம் புதுடில்லியை தாக்குவதற்கான பொறுப்பை வழங்கியுள்ளனர்.

அதற்காக புதுடில்லி வந்த அந்த இளைஞன் அங்குள்ள பொறியியல் கல்லூரியொன்றில் இணைந்துள்ளான்,முதலில் விடுதியில் தங்கியிருந்த இளைஞன் பின்னர் தொடர்மாடியொன்றில் குடியேறியுள்ளான்.

குறிப்பிட்ட நபர் தப்பிச்செல்வதை தடுப்பதற்காக சுமார் 80 பேரை இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாக கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தியுள்ளனர்.

ரோ அமைப்பு தனது கண்காணிப்பின் கீழ் இருந்த நபர்களின் வங்கிபணபரிமாற்றத்தை அவதானித்த பின்னரே புதுடில்லி இலக்கு வைக்கப்படுகின்றது என்பதை கண்டறிந்தது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தருணத்திலேயே ரோ அமைப்பு ஐஎஸ் அமைப்பிற்குள் ஊருடுவ தீர்மானித்துள்ளது.

தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்ட ரோ புதுடில்லிக்கு வரும் ஐஎஸ் உறுப்பினருடன் நண்பராவதற்கு ஒருவரை தெரிவு செய்துள்ளது.

ரோவின் அந்த உறுப்பினர் ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவரிற்கு தங்குமிடம் மற்றும் வெடிபொருட்களை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

அவ்வேளை அந்த நபரை சுற்றி ரோ அமைப்பு தனது கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட நபர் புதுடில்லியில் உள்ள பல இடங்களை சென்று பார்த்து தனது இலக்கை தெரிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் ஆப்கானிஸ்தானில் உள்ள தனது சகாக்களிற்கு அவர் தொடர்ச்சியாக தகவல்களை வழங்கிவந்துள்ளார்.

இதன் பின்னர் தீடிரென அதிகாலைவேளையில் ஐஎஸ் அமைப்பின் உறுப்பினர் தங்கியிருந்த தொடர்மாடிக்கு சென்ற இந்திய அதிகாரிகள் அவரை கைதுசெய்துள்ளனர்.

http://www.virakesari.lk/article/36438

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.