Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘‘அபத்தமாக பேசாதீங்க’’ - லண்டன் எதிர்ப்பு போராட்டத்தால் கடுப்பான ட்ரம்ப்: பதிலடி கொடுத்த மேயர்

Featured Replies

‘‘அபத்தமாக பேசாதீங்க’’ - லண்டன் எதிர்ப்பு போராட்டத்தால் கடுப்பான ட்ரம்ப்: பதிலடி கொடுத்த மேயர்

 

 

 
trum-1PNG

லண்டன் நகரில் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரிய அளவில் போராட்டம் நடந்த நிலையில் அந்நகர முஸ்லிம் மேயரை தாக்கி ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, ட்ரம்பின் பேச்சு அபத்தமானது என மேயர் சாதிக் கான் பதிலடி கொடுத்துள்ளார்.

ட்ரம்ப், அவரது மனைவி மெலினா ஆகியோர் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இங்கிலாந்து பிரதமர் தெரஸா மே, ராணி எலிபெத் உள்ளிட்டோரை ட்ரம்ப் சந்தித்து ஆலோசனை நடத்தினார். ட்ரம்ப் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘ட்ரம்ப் திரும்பி போ’ என்ற கோஷத்துடன் லண்டனில் பேரணிகள் நடந்தன.

 
 

சமூக வலைத்தளங்களிலும் எதிர்ப்பு பிரசாரங்கள் நடந்து வருகின்றன. லண்டன் மையப்பகுதியில் உள்ள சதுக்கத்தில் திரண்ட ஆயிரக்கணக்கானோர் ட்ரம்புக்கு எதிராக கண்டன பதாகைகளை ஏந்தியும், முழக்கமிட்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

BRITAIN-US-DIPLOMACY-TRUMPjpg
 

ட்ரம்ப்பை கிண்டல் செய்து அவர்கள் பலூன்களையும் பறக்கவிட்டனர். ட்ரம்ப், பேபி பலூன் ஒன்றை போராட்டக்காரர்கள் பறக்க விட்டனர். இதனால் ட்ரம்ப் கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.

லண்டன் நகரில் ட்ரம்ப் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரிய அளவில் போராட்டம் நடந்தபோது அதனை கட்டுப்படுத்தாமல் சாதிக் கான் அலட்சியமாக இருந்து விட்டதாக ட்ரம்ப் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

இதைத் தொடர்ந்து சாதிக் கானை விமர்சித்து ட்ரம்ப் கருத்து கூறியுள்ளார். ‘‘லண்டனின் மேயராக இருக்கும் நீங்கள் மிக பயங்கரமான செயலை செய்துள்ளீர்கள்’’ எனக் கூறியுள்ளார். லண்டனில் குற்றச்செயல்கள், கொலைகள் அதிகரித்து வருவதற்கு வெளிநாடுகளில் இருந்து இங்கு குடியேறி வருபவர்களே காரணம் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்துள்ள சாதிக் கான், ‘‘தீவிரவாதம் என்பது உலகளாவிய பிரச்சினை. ஐரோப்பிய நகரங்கள் அனைத்தையும் பாதித்துள்ளது. ஆனால் ட்ரம்ப் மற்ற எந்த நாட்டின் மேயரை பற்றியும் பேசவில்லை. ஆனால் என்னை பற்றி பேசுகிறார். ட்ரம்பின் இதுபோன்ற பேச்சு குறித்து பிரதமர் தெரஸா மே தான் பேச வேண்டும். ட்ரம்பு என்ன வேண்டுகிறார் என்பதை அவர் தான் கேட்க வேண்டும். இதுபற்றி நான் பேசப் போவதில்லை. மற்ற நாடுகளில் இருந்து இங்கிலாந்தில் குடியேறுபவர்களால் தான் குற்றச் செயல்கள் அதிகரிப்பதாக கூறுவது அபத்தமானது’’ எனக் கூறியுள்ளார்.

லண்டன் நகர மேயராக இருக்கும் சாதிக் கான், பாகிஸ்தானில் இருந்து லண்டனில் குடியேறிய வம்சாவளியினர். அவரது தந்தை ஓட்டுநராக இருந்து 1960-ம் ஆண்டு லண்டனில் குடியேறினார். இங்கிலாந்தில் தற்போது எதிர்கட்சியாக இருக்கும் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த மேயர் சாததிக் கான், ட்ரம்ப் பற்றி ஏற்கெனவே கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பிட்ட சில நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் அமெரிக்கா வருவதற்கு ட்ரம்ப் அரசு தடை விதித்தது. அப்போது ட்ரம்பின் செயலை சாதிக் கடுமையாக விமர்சித்தார்.

http://tamil.thehindu.com/world/article24420027.ece

  • தொடங்கியவர்

ராணி எலிசபெத்தை வெயிலில் காக்க வைத்த அதிபர் டிரம்ப்

 
அ-அ+

4 நாள் பயணமாக லண்டன் சென்றுள்ள டிரம்ப் இங்கிலாந்து ராணி எலிசபெத்தை வெயிலில் காக்க வைத்த சம்பவம் குறித்து அந்நாட்டு மக்கள் டிரம்ப்பை கிண்டல் செய்துள்ளனர். #trump #QueenElizabeth

 
 
 
 
ராணி எலிசபெத்தை வெயிலில் காக்க வைத்த அதிபர் டிரம்ப்
 
லண்டன்:

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இங்கிலாந்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக லண்டன் சென்றார்.

அவர் இங்கிலாந்து ராணி எலிசபெத்தை சந்திக்க திட்டமிட்டார். பொதுவாக ராணியை சந்திக்க வரும் அரசியல் தலைவர்கள் முன்கூட்டியே வந்து விடுவார்கள்.

ஆனால் அதிபர் டிரம்ப் 10 நிமிடம் காலதாமதமாக வந்தார். இதனால் ராணி எலிசபெத் 10 நிமிடம் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் ராணி அவதிப்பட்டார்.
 
மேலும் ராணியை சந்திக்க வரும்போது முதலில் அவர்கள் தான் கைகொடுக்க வேண்டும். ஆனால் டிரம்ப் கை கொடுக்காத காரணத்தால் ராணியே முன்வந்து கை கொடுத்துள்ளார்.
 
201807141145105136_1_gktquk2x._L_styvpf.jpg
 
அடுத்தபடியாக பாதுகாப்பு படையினர் டிரம்புக்கு மரியாதை செலுத்தினர் அப்போது பாதுகாவலர்கள் அணிவகுத்து நிற்க தலைவர்கள் நடந்து செல்ல வேண்டும். இதில் ராணி முன்னே செல்ல மற்றவர்கள் அவருக்கு பின்னால் நடந்து செல்ல வேண்டும். இதுதான் நெறிமுறை.
 
201807141145105136_2_trump-1._L_styvpf.jpg
 
ஆனால் டிரம்ப் எதையும் கண்டுகொள்ளாமல் ராணியை முந்திக்கொண்டு நடந்து சென்றார். இடது பக்கமாக வாருங்கள் என ராணி செய்கையால் தெரிவித்தும் அது டிரம்புக்கு புரியவில்லை.
 
சிறிது தூரம் நடந்து சென்ற டிரம்ப் அதன்பின்னர் தன்னை சரிசெய்துகொண்டு 15 நிமிடங்கள் காத்திருந்து விட்டு ராணி முன்னோக்கி வந்தவுடன் ஒன்றாக சேர்ந்து நடந்து வந்துள்ளார்.
 
201807141145105136_3_trump3._L_styvpf.jpg

இதுபோன்ற மரியாதை செலுத்தும் நிகழ்வில் ராணி நடந்து செல்லும்போது அவரது கணவர் பிலிப் ஒரு அடி பின்னே தான் நடந்து வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிரம்பின் இந்த நடைமுறையை இங்கிலாந்து மக்கள் கிண்டல் செய்துள்ளனர். ஒரு நாட்டிற்கு வருகையில் நெறிமுறை என்ன என்பதை கற்றுக்கொண்டு வாருங்கள். இந்த டிரம்புக்கு நெறிமுறை என்பது குறித்து தெரியாது போல என தெரிவித்துள்ளனர். #trump #QueenElizabeth

https://www.maalaimalar.com/News/World/2018/07/14114510/1176443/Donald-Trump-keeps-Queen-Elizabeth-standing-in-heat.vpf

  • தொடங்கியவர்

அவர் மிக மிக அழ­கா­னவர் - ட்ரம்ப்

 

 
 

பிரித்­தா­னிய எலி­ஸபெத் மகா­ரா­ணியார் உள்ளும் புறமும் அழ­கா­னவர் என அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் தெரி­வித்­துள்ளார். 

trump.jpg

பிரித்­தா­னி­யா­வுக்கு விஜயம் செய்த  அவர்  வின்ட்ஸர் மாளி­கையில்  எலி­ஸபெத் மகா­ரா­ணி­யா­ருடன் (92  வயது)  மேற்­கொண்ட சந்­திப்பின்  பின்னர்   பிரித்­தா­னிய   ஊட­க­மொன்­றுக்கு  அளித்த பிரத்­தி­யேகப் பேட்­டியின் போதே  இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

அத்­துடன் மகா­ரா­ணியார்  அற்­பு­த­மான ஒருவர் எனவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார். அவ­ரது பேட்­டி­யா­னது நேற்று திங்­கட்­கி­ழமை  காலை  ஐ.ரி.வி. தொலைக்­காட்­சியின்  'குட் மோர்னிங் பிரிட்டன்'  நிகழ்ச்­சியில்  ஒளிப­ரப்­பப்­பட்­டது. 

"அவர்  அதி­க­ள­வான சக்­தி­யையும்  திட­காத்­தி­ரத்­தையும்  கூர்­மை­யையும் கொண்ட  அற்­பு­த­மான பெண். அவர் பிர­மா­த­மான ஒருவர். அவர் உன்­ன­த­மா­னவர். அவர் மிக மிக அழ­கா­னவர் என டொனால்ட் ட்ரம்ப்   தெரி­வித்தார்.

தான் அவ்­வா­றான அற்­பு­த­மான பெண்ணை  இறு­தியில் சந்­தித்­த­மையை  ஒரு கௌர­வ­மாக கரு­து­வ­தாக அவர் மேலும் கூறினார்.

"அவர்  (மகா­ரா­ணியார் ) வெளியே மட்டும் அழ­கா­னவர் அல்ல. அவர் அகத்­தேயும் புறத்­தேயும் அழ­கா­ன­வ­ராக உள்ளார். அவர் மிகவும் அழ­கா­ன­வரும் விசே­டத்­துவம் பொருந்­திய ஒரு­வ­ரு­மாவார்"   என ட்ரம்ப் குறிப்பிட்டார்.

2000  ஆம் ஆண்டில்  88  ஆவது வயதில் மர­ண­மான   தனது தாயா­ரான  மேரி ஆன் ட்ரம்ப்  எலி­ஸபெத்  மகா­ரா­ணி­யாரின்  ரசி­கை­யாக இருந்­த­தாக  அவர் தெரி­வித்தார்.

எலி­ஸபெத் மகா­ரா­ணியார்  தனது 66  வருட கால முடி­யாட்சி காலத்தில் அமெ­ரிக்­காவில் ஹாரி எஸ். ட்ரூமன்  முதல்  டொனால்ட் ட்ரம்ப் வரை 13  பேர் ஜனா­தி­பதி பத­வியை வகித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

http://www.virakesari.lk/article/36699

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.