Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோத்­தாவை வெட்­டி­யா­டு­கி­றாரா மஹிந்த?

Featured Replies

கோத்­தாவை வெட்­டி­யா­டு­கி­றாரா மஹிந்த?

SAMAKALAM140718-PG01-R1Page1Image0008-299d3f151a17ec7e454616f691cd4294d9da83ab.jpg

 

தமிழ்­மக்­களைப் பொறுத்­த­ வ­ரையில், ஜனா­தி­ப­தி­யாக யார் வர வேண்டும் என்ற எதிர்­பார்ப்­பெல்லாம் கிடை­யாது. ஏனென்றால், சிங்­களத் தலை­வர்கள் யாரை­யுமே அவர்கள் விருப்­புக்­கு­ரிய தலை­வ­ராக ஏற்றுக் கொள்ளும் மனோ­ நி­லையில் இல்லை 

2020 ஜன­வ­ரிக்கு முன்னர், ஜனா­தி­பதித் தேர்தல் நடத்­தப்­பட்டே ஆக வேண்­டிய நிலையில், அடுத்த ஜனா­தி­பதி எப்­ப­டிப்­பட்­ட­வ­ராக இருக்க வேண்டும் என்று பல்­வேறு தரப்­பி­னரும் தமது கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்தி வரு­கின்­றனர். தமக்குள் ஒரு­வரை மனதில் வைத்துக் கொண்டே, இவ்­வா­றான கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்­றனர்.

ஐ.தே.கவினர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே பொருத்­த­மான வேட்­பாளர் என்­கின்­றனர். ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் ஒரு சிலர், மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே மீண்டும் தெரி­வாக வேண்டும் என்­கி­றார்கள். இன்னும் சிலர், மஹிந்த ராஜபக் ஷ கை காட்­டு­ப­வரால் தான் ஜனா­தி­ப­தி­யாக முடியும் என்­கி­றார்கள்.

அதே­வேளை, கூட்டு எதி­ரணி, பொது­ஜன முன்­னணி, மஹிந்த அணி என்று எந்தப் பெயரை வைத்துக் கொண்­டாலும், அந்த தரப்பில் கோத்­தா­பய ராஜபக் ஷ, பசில் ராஜபக் ஷ, சமல் ராஜபக் ஷ என்று பல பெயர்கள் முன்­மொ­ழி­யப்­ப­டு­கின்­றன.

ஆனால், தமிழ்­மக்­களைப் பொறுத்­த­வ­ரையில், ஜனா­தி­ப­தி­யாக யார் வர வேண்டும் என்ற எதிர்­பார்ப்­பெல்லாம் கிடை­யாது. ஏனென்றால், சிங்­களத் தலை­வர்கள் யாரை­யுமே அவர்கள் விருப்­புக்­கு­ரிய தலை­வ­ராக ஏற்றுக் கொள்ளும் மனோ­நி­லையில் இல்லை.

எனினும், கோத்­தா­பய ராஜபக் ஷ போன்ற – அவ­ரது தரப்­பி­லுள்­ள­வர்கள் மீண்டும் ஆட்­சிக்கு வந்து விடக்­கூ­டாது என்­பதில், தமிழ் மக்கள் உறு­தி­யாக இருக்­கி­றார்கள்.

ஆனால், தென்­னி­லங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் நிலை­மைகள் வேறு­மா­தி­ரி­யாக உள்­ளன.

அங்கு கோத்­தா­பய ராஜபக் ஷவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கு­வ­தற்கு தேவை­யான எல்லாச் சூழல்­களும் உரு­வாக்­கப்­பட்டு வரு­வதை மறுக்க முடி­யாது.

ராஜபக் ஷ குடும்­பத்­துக்குள் குழப்பம் நில­வு­கி­றது, கோத்­தா­பய ராஜபக் ஷவை வேட்­பா­ள­ராக நிறுத்­து­வது, பசி­லுக்கும் மஹிந்­த­வுக்கும் பிடிக்­க­வில்லை, கோத்­தா­வுக்கும், பசி­லுக்கும் இடையில் அதி­காரப் போட்டி நடக்­கி­றது என்­றெல்லாம் செய்­திகள் வெளி­யாகி வந்த போதும், அதனைப் பொய் என்று நிரூ­பிப்­பதில் ராஜபக் ஷவினர் அதீத அக்­கறை கொண்­டுள்­ளனர்.

அண்­மையில், பொது­ஜன முன்­னணி தலை­மை­ய­கத்­துக்கு கோத்­தா­பய ராஜபக் ஷ வந்­ததும், அவ­ருடன் மஹிந்த, பசில் இணைந்து நின்று எங்­க­ளுக்குள் எந்தப் பிரச்­சி­னையும் கிடை­யாது என்று கூறி­யதும் கவ­னிக்­கத்­தக்க விட­யங்கள்.

பொது­ஜன முன்­னணி தலை­மை­ய­கத்­துக்கு கோத்­தா­பய ராஜபக் ஷ வந்­தது, அவ­ரது அர­சியல் பிர­வே­ச­மா­கவும் பார்க்­கப்­ப­டு­கி­றது. ஆனால் அவர் இன்­னமும் தனது அர­சியல் பிர­வே­சத்தை வெளிப்­ப­டை­யாக அறி­விக்­க­வில்லை.

அப்­போது அவ­ரது கையில் உள்ள அமெ­ரிக்க குடி­யு­ரி­மையும், அதனை விலக்கிக் கொள்ள முனையும் போது ஏற்­படக் கூடிய சிக்­கல்­களும்- அவர் தனது அர­சியல் நுழைவு விட­யத்தை அறி­விக்­காமல் தாம­திப்­ப­தற்குக் கார­ண­மாக இருக்­கலாம். அதே­வேளை, கோத்­தா­பய ராஜபக் ஷ ஒன்றும், சாதா­ரண அர­சியல் பிர­வே­சத்தை விரும்­ப­வில்லை. அவர் பாரா­ளு­மன்றத் தேர்­த­லிலோ மாகா­ண­சபைத் தேர்­த­லிலோ கள­மி­றங்கத் தயா­ராக இல்லை.

அவ­ரது ஒரே குறி, ஜனா­தி­பதித் தேர்தல் தான். அதனால் தான், அண்ணன் அழைத்தால் வருவேன் என்று இழுத்­த­டித்துக் கொண்­டி­ருக்­கிறார். சாதா­ரண அர­சி­ய­லுக்கு வரு­வ­தாயின் அவர் ஏற்­க­னவே வந்­தி­ருப்பார். அதற்கு அவர் அண்­ணனின் அனு­ம­திக்­காக காத்­தி­ருக்க வேண்­டிய அவ­சி­யமும் இருந்­தி­ருக்­காது.

உச்ச பத­வியில் அமரும் இலக்கு மாத்­தி­ரமே கோத்­தா­பய ராஜபக் ஷவிடம் இருக்­கி­றது. அதற்­கான தடைக்­கற்­களும் அவ­ருக்கு இருக்­கின்­றன என்­பதில் சந்­தே­க­மில்லை.

ஒரு பக்­கத்தில் கோத்­தா­பய ராஜபக் ஷ தன்­னையும், தனது கோட்­பா­டு­க­ளையும், சிங்­கள மக்கள் மத்­தியில் கொண்டு செல்­வ­தற்­காக, அடுத்­த­டுத்து புதிய அமைப்­பு­களை உரு­வாக்கி, கூட்­டங்­களை நடத்திக் கொண்­டி­ருக்­கிறார்.

முதலில் அவர் ‘எலிய’ என்ற அமைப்பை உரு­வாக்­கினார். பின்னர் ‘வியத் மக’ அமைப்பை உரு­வாக்­கினார். இப்­போது, தனது நெருங்­கிய சகா­வான, மேஜர் ஜெனரல் கமல் குண­ரத்­னவின் தலை­மையில் ‘ஹரி மக’ என்ற அமைப்பை கடந்த வாரம் உரு­வாக்­கி­யி­ருக்­கிறார்.

இந்த அமைப்­பு­களின் ஊடாக, கோத்­தா­பய ராஜபக் ஷவை அடுத்த ஜனா­தி­ப­தி­யாக்கும் இலக்­குடன் - முன்னாள் இரா­ணுவ அதி­கா­ரிகள், கடும் போக்கு சிங்­களப் பேரி­ன­வா­தி­களால், பிர­சா­ரங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

எலிய, வியத் மக போன்ற கோத்­தாவை முன்­னி­லைப்­ப­டுத்தி பிர­சாரம் செய்யும் அமைப்­புகள் அனைத்­துமே, தெற்­கி­லுள்ள சிங்­கள மக்­களை மாத்­தி­ரமே குறி­வைத்து செயற்­ப­டு­கின்­றன என்­பதைக் கவ­னிக்க வேண்டும்.

அதா­வது, தமிழ் மக்கள் செறி­வாக வாழும், வடக்கு கிழக்கில் இந்த அமைப்­புகள் எந்தக் கூட்­டத்­தையும் நடத்­த­வில்லை. இதி­லி­ருந்தே, அவர்கள் சிங்­கள மக்­க­ளுக்­கான கொள்­கையை- அவர்­க­ளுக்­கான அர­சி­யலை மாத்­திரம் முன்­னி­றுத்திச் செயற்­ப­டு­கி­றார்கள் என்­பது தெளி­வாக தெரி­கி­றது.

இந்த அமைப்­பு­களின் கூட்­டங்­களில் உரை­யாற்­று­ப­வர்கள், கோத்­தா­பய ராஜபக் ஷ போன்ற ஒரு­வரால் மாத்­தி­ரமே நாட்டைக் காப்­பாற்ற முடியும் என்ற தொனியில் பிர­சாரம் செய்து வரு­கி­றார்கள்.

உதா­ர­ணத்­துக்கு, கடந்த வாரம் ‘ஹரி மக’ அமைப்பை உரு­வாக்கும் கூட்­டத்தில் உரை­யாற்­றிய மேஜர் ஜெனரல் கமல் குண­ரத்ன, தெளி­வான பார்­வையும், உறு­தி­யான முடி­வையும் எடுக்கக் கூடிய ஒருவர் தான் நாட்டின் அடுத்த ஜனா­தி­ப­தி­யாக வேண்டும் என்றும், அத்­த­கைய தகை­மை­யு­டைய ஒரே ஒருவர் கோத்­தா­பய ராஜபக் ஷ தான் என்றும் கூறி­யி­ருந்தார்.

ஏற்­க­னவே கோத்­தா­பய ராஜபக் ஷவுக்­காக, தொடர்ச்­சி­யாக பிர­சா­ரங்­களில் ஈடு­பட்டு வரு­பவர் கமல் குண­ரத்ன. அவர் இப்­போது ‘ஹரி மக’ அமைப்­புக்கு தலைமை தாங்கி, அந்தப் பிர­சா­ரங்­களை அடுத்த கட்­டத்­துக்கு கொண்டு செல்ல முனை­கிறார்.

அதே­வேளை, கண்டி, பூஜாப்­பிட்­டி­யவில் கடந்த வாரம் நடந்த கருத்­த­ரங்கு ஒன்றில் உரை­யாற்­றிய இலங்கை இரா­ணு­வத்தின் முன்னாள் தொண்டர் படைத் தள­ப­தி­யான மேஜர் ஜெனரல் லலித் தவு­ல­கல, இரா­ணு­வத்­தி­னரின் கஷ்­டங்­களை அறிந்த ஒரு­வரே, அடுத்த முறை ஜனா­தி­ப­தி­யாக வேண்டும் என்று கூறி­யி­ருக்­கிறார்.

இவர் இரா­ணு­வத்­தி­னரின் கஷ்­டங்­களை அறிந்த ஒருவர் என்று கூறு­வது கோத்­தா­பய ராஜபக் ஷவை தான் என்­பதைக் கண்­டு­பி­டிப்­ப­தற்கு ஒன்றும் , பெரிய மூளை­சா­லி­யாக இருக்க வேண்­டி­ய­தில்லை.

மேஜர் ஜெனரல் லலித் தவு­ல­க­லவும் கூட கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு நெருக்­க­மா­னவர் தான். மேஜர் ஜெனரல் கமல் குண­ரத்ன, லெப்.கேர்ணல் கோத்­தா­பய ராஜபக் ஷ, மேஜர் ஜெனரல் லலித் தவு­ல­கல ஆகிய மூவரும் கஜபா படைப்­பி­ரிவை சேர்ந்­த­வர்கள். போர்­மு­னையில் ஒன்­றாகப் பணி­யாற்­றி­ய­வர்கள்.

அவர்கள், இரா­ணு­வத்தை விட்டு வெளியே வந்த பின்­னரும், சில வேலைத் திட்­டங்­க­ளுக்­காக ஒன்­று­பட்டுச் செயற்­படத் தொடங்­கி­யி­ருக்­கி­றார்கள். முப்­ப­டை­க­ளையும் சேர்ந்த பல படை அதி­கா­ரிகள், முன்னாள் தள­ப­திகள் கோத்­தா­பய ராஜபக் ஷவை அடுத்த ஜனா­தி­ப­தி­யாக்கி விட வேண்டும் என்ற இலக்­குடன் திரி­கி­றார்கள்.

இரா­ணு­வத்­தி­னரின் துன்­பங்­களை அறிந்த ஒருவர் தான் ஜனா­தி­ப­தி­யாக வேண்டும் என்றால், அதன் அர்த்தம் என்ன? முப்­ப­டை­க­ளையும் சேர்த்தால், மூன்று இலட்சம் பேர் கூட வராது. ஆனால், இலங்­கையின் மொத்த சனத்­தொகை, 24 மில்­லியன்.

24 மில்­லியன் மக்­களின் துன்­பங்­களை அறிந்­தவர் அடுத்த ஜனா­தி­ப­தி­யாக வேண்­டுமா அல்­லது, வெறும் 3 இலட்சம் படை­யி­னரின் துன்­பங்­களை அறிந்த- அவர்­களின் விருப்­புக்­கேற்ப செயற்­படக் கூடிய ஒருவர் ஜனா­தி­ப­தி­யாக வேண்­டுமா என்­பதே இப்­போ­துள்ள கேள்வி.

தமக்குப் பிடித்­த­மான ஒருவர் ஜனா­தி­ப­தி­யாக வேண்டும் என்று ஒருவர் எதிர்­பார்ப்­பது அவ­ரது தனிப்­பட்ட சுதந்­திரம். ஆனால், அதனை அடுத்­தவர் மீது திணிக்க முற்­ப­டு­வது தான் பிரச்­சினை.

கோத்­தா­பய ராஜபக் ஷ விட­யத்தில், அவரை அடுத்த ஜனா­தி­ப­தி­யாக்கி விட வேண்டும் என்­ப­தற்­காக, திணிப்பு முயற்சி தான் நடந்து கொண்­டி­ருக்­கி­றது.

இந்தக் கட்­டத்தில், கூட்டு எதி­ர­ணியைச் சேர்ந்த – மஹிந்த ராஜபக் ஷவுக்கு மிகவும் நம்­பிக்­கை­யான நெருக்­க­மான ஒரு­வ­ரான பாரா­ளு­மன்ற உறுப்­பினர் குமார வெல்­கம அண்­மையில் பாரா­ளு­மன்­றத்தில் நிகழ்த்­திய உரை முக்­கி­ய­மா­னது.

அது கோத்­தா­பய ராஜபக் ஷவின் அர­சியல் பிர­வே­சத்­துக்கு ஆப்பு வைக்கும் வித­மாக உள்­ளது.

மக்­களின் துன்­பங்­களை அறிந்த ஒருவர் தான் அடுத்த ஜனா­தி­ப­தி­யாக வேண்டும். அதற்கு அவர் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்­தி­ருக்க வேண்டும். குறைந்­த­பட்சம் ஒரு பிர­தேச சபை உறுப்­பி­ன­ரா­க­வேனும் இருந்தால் தான், அவரால் மக்­களின் பிரச்­சி­னை­களை புரிந்து கொள்ள முடியும் என்று கூறி­யி­ருந்தார்.

ஆனால் கோத்­தா­பய ராஜபக் ஷ பிர­தேச சபை உறுப்­பி­ன­ரா­க­வேனும் இருந்­த­வ­ரில்லை. அவர் வெறு­மனே இரா­ணு­வத்­தி­னரின் பிரச்­சி­னை­களை புரிந்து கொண்­ட­வ­ராக மாத்­தி­ரமே இருந்­தா­ரே­யன்றி, மக்­களின் பிரச்­சி­னை­களைப் புரிந்து கொண்­ட­வ­ராக இருக்­க­வில்லை.

குமார வெல்­கம மாத்­தி­ர­மன்றி கூட்டு எதி­ர­ணி­யுடன் இணைந்து செயற்­படும், திஸ்ஸ விதா­ர­ணவும் கூட இட­து­சாரிக் கட்சி என்ற வகையில் கோத்­தா­பய ராஜபக் ஷவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக ஏற்க முடி­யாது என்று கூறி­யி­ருக்­கிறார்.

ஏற்­க­னவே, வாசு­தேவ நாண­யக்­கா­ரவும் கூட, கோத்­தா­வுக்கு எதிர்ப்புத் தெரி­வித்­தி­ருந்தார்.

கோத்­தா­பய ராஜபக் ஷவை அர­சி­யலில் முற்­ப­டுத்தும் ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்­கி­யுள்ள சூழலில், ஒரு பக்­கத்தில் அவரை அதி­கா­ரத்­துக்குக் கொண்டு வரு­வ­தற்­கான பிர­சா­ரங்கள் நடந்து கொண்­டி­ருக்க, இன்­னொரு பக்­கத்தில் அதற்கு மாறான பிர­சா­ரங்­களும் தீவி­ர­ம­டையத் தொடங்­கி­யி­ருப்­பதை காண முடி­கி­றது,

இதில் ஆச்­ச­ரியம் என்னவென்றால், மஹிந்த தரப்பில் இருந்தே இந்த எதிர்ப்புக் குரலும் எழும்புகிறது. மஹிந்தவுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் தான் இதனை சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள்.

இது மஹிந்தவின் இன்னொரு திட்டத்தை செயற்படுத்துவதற்கான முன்னாயத்தமோ என்றும் சந்தேகிக்க வேண்டியுள்ளது.

கோத்தாபய ராஜபக் ஷவை வேட்பாளராக முற்படுத்த வேண்டிய நெருக்கடி மஹிந்தவுக்கு அதிகரித்திருந்தாலும், அதனை வேறொரு வழியில் வெட்டியாடுவதற்கு மஹிந்த திட்டமிட்டுள்ளாரா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

பொதுஜன முன்னணி தலைமையகத்துக்கு கோத்தாபய ராஜபக் ஷ சென்ற பின்னர், ராஜபக் ஷவினர் ஒன்றுபட வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது என்று கூறியிருக்கிறார் சமல் ராஜபக்ஷ.

இது எதனைக் காட்டுகிறது என்றால், ராஜபக் ஷவினர் ஒன்றாக இல்லை அவர்களுக்குள் முரண்பாடுகள் உள்ளன என்பதை தானே.

அவ்வாறாயின், கோத்தாபய ராஜபக் ஷவை வெட்டியாடுவதற்கு மஹிந்த ராஜபக் ஷ முற்படுகிறாரோ என்று சந்தேகம் எழுவதில் ஆச்சரியமில்லையே.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-07-15#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.