Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வான்பகுதியால் வருவதற்கு முன்னர் தரையில் விடுதலைப் புலிகளை முறியடிப்போம்: பிரசாத் சமரசிங்க.

Featured Replies

வான்பகுதியால் வருவதற்கு முன்னர் தரையில் விடுதலைப் புலிகளை முறியடிப்போம்: பிரசாத் சமரசிங்க.

"தமிழீழ விடுதலைப் புலிகள் வான்பகுதியால் வருவதற்கு முன்னர் அவர்கள் தரையில் முறியடிக்கப்படுவார்கள்" என்று சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை ஊடகத்துறையினர் மத்தியில் கருத்துத் தெரிவித்த போதே இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

"விடுதலைப் புலிகளை தரையில் அழித்த பின்னர் வான்புலிகள் தொடர்பாக அச்சமடையத் தேவையில்லை" எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பங்குபற்றிய விமானப் படையின் பேச்சாளர் குறுப் கப்டன் அஜந்த குரே தெரிவித்ததாவது:

"விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் இருந்து நாட்டைப் பாதுகாக்க வான்படை தனது முழு வளத்தையும் பயன்படுத்தும். முற்பாதுகாப்பு நடவடிக்கையாகவே முன்னாள் வான்டையின் வானோடி ஒருவர் வைத்திருந்த சிறிய ரக வானூர்தியை நாம் கைப்பற்றியுள்ளோம்.

அவர் ஒரு பயிற்சியாளராக இருந்தவர், இலகு ரக வானூர்தியை கொள்வனவு செய்வதற்காக அரசாங்கத்திடம் இருந்து அனுமதியையும் பெற்றவர் ஆவார்.

எனவே அவர், அந்த வானூர்தியை நாட்டுக்குள் கொண்டுவந்தது சட்டரீதியானது. ஆனால் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு அதனை எமது பாதுகாப்பில் வைத்துள்ளோம்.

அந்த வானூர்தி எமது கையில் இருக்கும் வரை விடுதலைப் புலிகளால் அதனை கைப்பற்ற முடியாது" என்றார் அவர்.

-Puthinam-

றம்புட்டான் மாமாதான் அரசாங்கத்தில் பெரிய ஜோக்கர். இவருக்குப் போட்டியாக பிரசாத் சமரசிங்க வந்துவிட்டாரா.

றம்புட்டான் மாமாதான் அரசாங்கத்தில் பெரிய ஜோக்கர். இவருக்குப் போட்டியாக பிரசாத் சமரசிங்க வந்துவிட்டாரா.

ஐயா அவர்கள் மகிந்த அன் பமிலி மூவீஸ் தயாரிக்கும் ‘புலியை வென்ற சிங்கம்’ என்ற திரைப்படத்தின் நடிகர்கள்.தங்களுக்கு கொடுத்த பாத்திரத்தில் சிறப்பாக நடிக்க முயல்கிறார்கள்.அது சரி இந்த நடிகர்களுக்கு எங்களுடைய ஊடகம் ஒன்றும் இப்ப அடிக்கடி சான்ஸ் கொடுக்கிறதே?.... அவர்களை மடக்கி கேள்வி எதுவும் கேட்காமல் அவர்கள் வந்து தங்டை புழுகுகளை எங்கடை தளத்தில கொட்டிவிட்டு போக சந்தர்ப்பம் கொடுக்கிறது தான் நடுநிலைமை போல கிடக்கு

இதுகள் திருந்தாத ஜென்மங்கள். இந்த புத்தர் ஏன் அங்க போய்சேர்ந்தாரோ தெரியாது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமர்த்தோல்விகளின் உண்மை நிலை வெளியே வந்தால்

கட்சியின் பதவிக்காலத்துக்கு சங்கூதிவிடும், எனவே

புலிகள் பரிசளிக்கும் இழப்புகள் எல்லாம்

கட்சிகளின் ஊள்வினை மென்று விளுங்குகின்றது.

சர்வதேசத்தின் முற்றத்து ஒப்பாரிக்கு,

ஒப்புக்குகூட இளப்புக்களைச் சொல்லி அழமுடியாது

பொய் விதைத்த வினை நெஞ்சை சுடுகின்றது அரசுக்கு.

வாய்ச்சொல்லில் கெட்டித்தனத்தைக் காட்ட அரசு என்ற தகுதிக்கு மிகவும் சுலபம்தான்.

அதையே தன் தலைக்கே வினையாக வைத்துவிட்டது, புலிகளின் போர்த்தந்திரம்.

பாவம் மகிந்த அன்ட் பமிலி ரொம்ப பயந்துபோயிருக்கிறாங்க, அவங்களுக்கு வால் பிடிக்கிறதுக்கு எல்லோரும் சேந்து யாள்ரா அடிக்கிறாங்க அதில 1 பகுதிதான் இது, பாவம் 1 வயசு போன கிழவன் வைத்திருந்த பழுதடைந்த விமானத்த போய் எடுத்துட்டு வந்து எதோ சவுண்ட் விடுறானுக கிறுக்கணுக

  • கருத்துக்கள உறவுகள்

இன்று:-வான்பகுதியால் வருவதற்கு முன்னர் தரையில் விடுதலைப் புலிகளை முறியடிப்போம்: பிரசாத் சமரசிங்க

நாளை:-

எங்கள் ராடர்கள் எல்லாம் லீவில் போன தகவலை தெரிந்துகொண்டு வந்து தாக்கியது கோழைத்தனமானது????

இன்று:-வான்பகுதியால் வருவதற்கு முன்னர் தரையில் விடுதலைப் புலிகளை முறியடிப்போம்: பிரசாத் சமரசிங்க

நாளை:-

எங்கள் ராடர்கள் எல்லாம் லீவில் போன தகவலை தெரிந்துகொண்டு வந்து தாக்கியது கோழைத்தனமானது????

உமக்கு 1 விஷயம் தெரியுமோ யாரும் லீவிலா போகலையாம் அங்கே யாருக்கும் ராடர இயக்கவே தெரியாதாம், இந்தியகாரங்க சொல்றாங்க யாருமே ராடர பற்றி பயிற்ச்சி எடுக்க வரல என்டு :P

முடிவில் ஒருபடையும் இல்லாமல் அழியப்போகிறது சிங்களம்

நீங்களே அனுமதி கொடுப்பீங்கள். பிறகு பறிப்பீங்கள். உங்களுக்கு உன்கடை சிங்கள சனத்திலையே நம்பிக்கை இல்லை. பிறகு கிழகிலை தமிழ் மக்களை நம்பிக்கையாய் பார்ப்பினமாம்

விரைவில் தரையால் வா ...... ஆடி வா, பாடி வா...... இப்படிக்கு காத்திருக்கும்........சிங்களம் தரையால் வந்து சிங்களம் தரைமட்டமான புதுக்கதை படிக்க ஓடி வா பாடி வா.........

இனி ஊரில பட்டம் பறந்தா கூட பட்டத ஏவுகண வச்சு சுட்டு எரிக்க போறனுகள் :lol::)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.