Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை

Featured Replies

சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை

 

eu-flag-300x200.jpgமரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்தினால், வணிகச் சலுகைகளை சிறிலங்கா இழக்கும் ஆபத்து ஏற்படும் என்று, ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்தவாரம் அறிவித்திருந்தார்.

இதையடுத்து. மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகள் அதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

மரணதண்டனையை நடைமுறைப்படுத்துவதை தடுத்து, மரணதண்டனைக்கு எதிரான சிறிலங்காவின் பாரம்பரியத்தை காப்பாற்றுமாறு சிறிலங்கா அதிபர், மைத்திரிபால சிறிசேனவிடம், ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் கூட்டாக கோரியுள்ளனர்.

கனடா மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, நெதர்லாந்து, ருமேனியா, ஆகிய நாடுகளின் தூதுவர்கள் இந்த கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

சிறிலங்கா அதிபர் தமது முடிவில் இருந்து பின்வாங்குவார் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும், மரணதண்டனையை நடைமுறைப்படுத்தினால், 28 ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி முன்னுரிமை வாய்ப்புகளை சிறிலங்கா இழக்க நேரிடும் என்றும், ஐரோப்பிய ஒன்றிய இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, சிறிலங்கா மரணதண்டனையை நடைமுறைப்படுத்தினால், ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையை கொழும்பு  உடனடியாக இழக்கும் என்று ஐரோப்பிய ஒன்றிய இராஜதந்திர வட்டாரங்கள் ஏஎவ்பியிடம் தெரிவித்துள்ளன.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தின் மோசமான மனித உரிமைகள் நிலைமையால் ஐரோப்பிய ஒன்றியத்தின், ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையை சிறிலங்கா இழக்க நேரிட்டது.

7 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த 2017ஆம் ஆண்டிலேயே இந்தச் சலுகை மீண்டும் வழங்கப்பட்டது.

http://www.puthinappalakai.net/2018/07/17/news/31938

  • தொடங்கியவர்

மரண தண்­ட­னையை அமுல்­ப­டுத்த வேண்டாம்:ஜனா­தி­ப­திக்கு ஐரோப்­பிய ஒன்­றியம், கனடா அவ­சர கடிதம்

01PR16072018Page1Image0017-6c355da30d9791ea11e955c7c34d6121927c047d.jpg

 

(ரொபட் அன்­டனி)

மரண தண்­ட­னை­யா­னது மனித குலத்தின் கௌர­வத்­திற்கும் மனித உரி­மை­க­ளுக்கும் எதி­ரா­னது. மீண்டும் குற்­றங்கள் இடம்­பெ­று­வதை தவிர்க்­கக்­கூ­டிய திறனை மரண தண்­டனை கொண்­டி­ருக்­க­வில்லை.

 ஆனால் தவ­றான தீர்ப்­புகள் கார­ண­மாக அநா­வ­சி­ய­மான உயி­ரி­ழப்­பு­க­ளுக்கு முகம் கொடுக்­க­வேண்டி ஏற்­ப­டலாம் . எனவே மரண தண்­டனை விதிக்கும் தீர்­மா­னத்தை கைவிட்டு விடுங்கள் என்று ஐரோப்­பிய நாடு­களும் கன­டாவும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கோரிக்கை விடுத்­துள்­ளன.

மீண்டும் மரண தண்­டனை அமுல்­ப­டுத்­தப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்டு வரு­கின்ற தக­வல்கள் தொடர்பில் தெளி­வு­ப­டுத்­தலைக் கோரி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு அனுப்­பி­யுள்ள கடி­தத்­தி­லேயே ஐரோப்­பிய நாடு­களும் கன­டாவும் இந்த விட­யத்தை தெரி­வித்­துள்­ளன.

இலங்­கை­யி­லுள்ள ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் அலு­வ­ல­கமும் ஐரோப்­பிய நாடு­களின் தூத­ர­கங்­களும் கனடா உயர்ஸ்­தா­னி­க­ரா­ல­யமும் இணைந்து இந்தக் கடி­தத்தை ஜனா­தி­ப­திக்கு அனுப்­பி­யுள்­ளன.

அதா­வது அண்­மைய நாட்­க­ளாக இலங்­கையில் மரண தண்­டனை மீண்டும் அமுல்­ப­டுத்­த­வுள்­ள­தாக தக­வல்கள் வெளி­வ­ரு­வ­தா­கவும் இது தொடர்பில் அர­சாங்­கத்தின் சரி­யான நிலைப்­பாடு என்ன என்றும் அந்த நாடுகள் கேள்வி எழுப்­பி­யி­ருக்­கின்­றன.

  அது­மட்­டு­மன்றி தாம் இந்த மரண தண்­டனை அமுல்­ப­டுத்தும் விட­யத்தை முழு­மை­யாக எதிர்ப்­ப­தா­கவும் எந்­த­வொரு சூழ்­நி­லை­யிலும் எந்­த­வொரு சம்­ப­வத்­திற்கும் இதனை அமுல்­ப­டுத்த தாம் இணங்­க­மாட்டோம் என்றும் ஐரோப்­பிய நாடு­களும் கன­டாவும் ஜனா­தி­ப­திக்­கான தமது கடி­தத்தில் தெரி­வித்­தி­ருக்­கின்­றன.

 மரண தண்­ட­னை­யா­னது மனித குலத்தின் கௌர­வத்­திற்கும் மனித உரி­மை­க­ளுக்கும் எதி­ரா­னது. மீண்டும் குற்­றங்கள் இடம்­பெ­று­வதை தவிர்க்­கக்­கூ­டய திறனை மரண தண்­டனை கொண்­டி­ருக்­க­வில்லை. ஆனால் தவ­றான தீர்ப்­புகள் கார­ண­மாக அநா­வ­சி­ய­மான உயி­ரி­ழப்­பு­க­ளுக்கு முகம் கொடுக்­க­வேண்டி ஏற்­ப­டலாம் எனவும் ஐரோப்­பிய நாடு­களும் கன­டாவும் இந்தக் கடி­தத்தில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளன.

எனவே மரண தண்­ட­னையை அமுல்­ப­டுத்த வேண்டாம் என்றும் இலங்­கை­யா­னது மர­ண­தண்­டனை எதிர்ப்­பது தொடர்­பான பாரம்­ப­ரி­யத்தை தொட­ர­வேண்டும் என்றும் ஐரோப்­பிய நாடு­களும் கன­டாவும் ஜனா­தி­ப­தி­யிடம் கோரிக்கை விடுத்­துள்­ளன.

ஜனா­தி­ப­திக்கு அனுப்­பப்­பட்­டுள்ள இந்தக் கடி­தத்தில் இலங்­கைக்­கான ஐரோப்­பிய ஒன்­றிய அலு­வ­லகம் பிரித்­தா­னிய உயர்ஸ்­தா­னி­க­ரா­லயம், பிரான்ஸ் தூத­ரகம், ஜேர்மன் தூத­ரகம், இத்­தாலி தூத­ரகம் மற்றும் நெதர்­லாந்து, ருமே­னியா, நோர்வே ஆகிய நாடு­களின் தூத­ர­கங்கள் மற்றும் கனடா உயர்ஸ்­தா­னி­க­ரா­லயம் என்­ப­ன­வற்றின் பிர­தி­நி­திகள் கைச்­சாத்­திட்­டுள்­ளனர்.

இலங்­கையில் மீண்டும் மரண தண்­ட­னையை அமுல்­ப­டுத்­து­வது தொடர்பில் ஆராய்­வ­தாக கடந்­த­வாரம் அர­சாங்கம் தெரிவித்திருந்தது. குறிப்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சிறைகளில் இருந்தவாறு போதைப்பொருள் கடத்தலை மேற்கொள்ளும் கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்திருந்தது. எப்படியிருப்பினும் கடந்த 1976ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் மரண தண்டனை அமுல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-07-17#page-1

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, நவீனன் said:

மரண தண்­ட­னையை அமுல்­ப­டுத்த வேண்டாம்:ஜனா­தி­ப­திக்கு ஐரோப்­பிய ஒன்­றியம், கனடா அவ­சர கடிதம்

உங்கடை கடிதங்கள் கதையள் ஒண்டும் அங்கை எடுபடாது......பேசாமல் உதவிப்பணம் அனுப்புற வேலையை மட்டும் பாருங்க :cool:

  • கருத்துக்கள உறவுகள்

2_C7_B94_E2-_A5_F6-455_E-_A9_C3-_CE665_C

Edited by Kavi arunasalam

அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கில் கொத்துக் கொத்தாகக் கொல்லப் படும்போது கைகட்டி வேடிக்கை பார்த்தவர்கள் , போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்குவதை தடை செய்வதற்காக அவசரக்கடிதம் அனுப்புவதும் , எச்சரிக்கை விடுவதும் வியப்பாக உள்ளது. இது தான் இவர்களின் மனிதநேயம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.