Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13 போராளிகள் - 1 தமிழீழ தேசிய துணைப் படை வீரரின் வீரச்சாவு அறிவித்தல்கள்.

Featured Replies

13 போராளிகள் - 1 தமிழீழ தேசிய துணைப் படை வீரரின் வீரச்சாவு அறிவித்தல்கள்.

தமிழீழ விடுதலைக்காக களப்பலியாகிய 13 போராளிகளினதும் தமிழீழ தேசியத் துணைப்படை வீரர் ஒருவரினதும் வீரச்சாவு அறிவித்தல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர்.

விபரம் வருமாறு:

23.03.07 இல் மன்னார் தம்பனைப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் பெருமெடுப்பிலான முன்னேற்ற நடவடிக்கையின் போது இடம்பெற்ற நேரடி மோதலின் போது கப்டன் சோழன் என்ற போராளி வீரச்சாவடைந்துள்ளார்.

23.03.07 இல் மன்னார் தம்பனைப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் பெருமெடுப்பிலான முன்னேற்ற நடவடிக்கையின் போது இடம்பெற்ற நேரடி மோதலின் போது போராளிகள் இருவர் வீரச்சாவடைந்துள்ளனர்.

கப்டன் சோழன் என்று அழைக்கப்படும் மன்னார் மாவட்டத்தை சொந்த முகவரியாகவும் பெரிய பண்டிவிரிச்சான் மடு மன்னாரை தற்காலிக முகவரியாகவும்,

காளிமுத்து மலர் மொட்டைப்பாலத்தடி திருவையாறு கிளிநொச்சியை தற்காலிக முகவரியாகவும் கொண்ட காளியப்பன் ஜெபமாலை ஆகிய போராளிகளே வீரச்சாவடைந்தவர்கள் ஆவர்.

24.03.07 இல் மன்னார் மாவட்டப் பகுதியில் சிறிலங்காப் படையினருடன் இடம்பெற்ற நேரடி மோதலின் போது மேஜர் தூயவன், லெப். கேணல் கலையரசன் அல்லது மொறிஸ் ஆகிய போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

24.03.07 இல் யாழ். மாவட்டத்தில் சிறிலங்காப் படையினருடன் இடம்பெற்ற நேரடி மோதலின் போது லெப். அறிவுமகன் என்ற போராளி வீரச்சாவடைந்துள்ளார்.

24.03.07 இல் யாழ். மாவட்டத்தில் சிறிலங்காப் படையினருடன் இடம்பெற்ற நேரடி மோதலின் போது போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

லெப். அறிவுமகன் என்று அழைக்கப்படும் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த சோதிலிங்கம் நிரஞ்சன் என்ற போராளியே வீரச்சாவடைந்தவர் ஆவார்.

24.03.07 இல் மன்னார் மாவட்டப் பகுதியில் சிறிலங்காப் படையினருடன் இடம்பெற்ற நேரடி மோதலின் போது போராளிகள் இருவர் வீரச்சாவடைந்துள்ளனர்.

மேஜர் தூயவன் என்று அழைக்கப்படும் மணல்குளம் உயிலங்குளம் மன்னாரை சொந்த முகவரியாகவும் ஆட்காட்டிவெளி அடம்பன் மன்னாரை தற்காலிக முகவரியாகவும் மேரி அன்ரனித்தா இரணைமடு கிளிநொச்சியை வேறு முகவரியாகவும் கொண்ட செபமாலை பிறேம்குமார்

லெப். கேணல் கலையரசன் அல்லது மொறிஸ் என்று அழைக்கப்படும் யாழ். மாவட்டத்தை சொந்த முகவரியாகவும் இலக்கம் 190 விசுவமடுவை தற்காலிக முகவரியாகவும் கொண்ட நற்றிணை திருவருட்செல்வன் ஆகிய போராளிகளே வீரச்சாவடைந்தவர்கள் ஆவர்.

28.03.07 இல் நாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற மோதலின் போது தமிழீழ தேசிய துணைப்படை வீரர் ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

2 ஆம் லெப். கருணாநிதி என்று அழைக்கப்படும் முல்லைத்தீவு தொட்டியடி விசுவமடுவைச் சேர்ந்த பாலசிங்கம் கருணாநிதி என்பவரே வீரச்சாவடைந்தவர் ஆவார்.

29.03.07 இல் முல்லைத்தீவு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் இடம்பெற்ற நேரடி மோதலின் போது போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

லெப். கேணல் கனிவளன் அல்லது குட்டிவீரன் என்று அழைக்கப்படும் யாழ். மாவட்டத்தை சொந்த இடமாகவும் இல. 28 அசோக் அன்பு குடியிருப்பு முகாம், புதுக்குடியிருப்பு முல்லைத்தீவை தற்காலிக முகவரியாகவும் கொண்ட சிவநேசன் சிவப்பிரியன் என்றபோராளியே வீரச்சாவடைந்தவர் ஆவார்.

29.03.07 இல் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற தவறுதலான வெடிவிபத்தின் போது போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

லெப். கேணல் கோகுலன் என்று அழைக்கப்படும் யாழ். மாவட்டத்தை சொந்த முகவரியாகவும் பாடசாலை பின்வீதி முதலாம் வட்டாரம் வேணாவில் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவை தற்காலிக முகவரியாகவும் கொண்ட நாகராஜா மதனகுமார் என்ற போராளியே வீரச்சாவடைந்தவர் ஆவார்.

29.03.07 இல் மணலாறுப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற நேரடி மோதலின் போது போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார்.

லெப். கேணல் தேவன் என்று அழைக்கப்படும் வவுனியாவை சொந்த முகவரியாகவும் 141 கட்சன் வீதி வட்டக்கச்சி கிளிநொச்சியை தற்காலிக முகவரியாகவும் கொண்ட இராசையா கண்ணன் என்ற போராளியே வீரச்சாவடைந்தவர் ஆவார்.

29.03.07 இல் வன்னிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் போராளி ஒருவர் சாவடைந்துள்ளார்.

வீரவேங்கை வன்னி மாணன் என்று அழைக்கப்படும் நெடுங்கேணி பெரியகுளத்தை நிரந்தர முகவரியாகவும் பூரணம் கரடிக்குளம் தண்டுவான் முல்லைத்தீவை தற்காலிக முகவரியாகவும் கொண்ட சுப்பையா ஜெயராம் சத்தியசீலன் என்றபோராளியே சாவடைந்துள்ளார்.

இம்மாவீரர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றனர்.

-Puthinam-

மாவீரர்களிற்கு வீரவணக்கங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

அந்த வீர மறவர்கட்கு வீர வணக்கங்கள். நீங்கள் தமிழர்களின் மனங்களில் என்றென்றும் வாழ்வீர்கள்.

தாயக விடுதலை என்ற உயரிய இலட்சியத்தை நெஞ்சிலே சுமந்து அந்த இலட்சியத்தை வெல்வதற்காக தமது இன்னுயிர்களையே ஈந்த இவ்வீரமறவர்ளிற்கு எனது வீரவணக்கங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.