Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு!’ - நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி காட்டம் #LiveUpdate

Featured Replies

`மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு!’ - நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி காட்டம் #LiveUpdate

 
 

பா.ஜ.க அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது அ.தி.மு.க எம்பி வேணுகோபால் பேசுகையில்  `தாய் போல் செயல்படவேண்டிய மத்திய அரசு, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகத்தை நடத்துகிறது. மற்ற மாநிலங்களைவிடத் தமிழகத்துக்கு குறைவான நிதியே ஒதுக்கப்படுகிறது. தமிழக அரசின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கிறது. 2019ம் ஆண்டு தேர்தல் குறித்து மக்களே முடிவு செய்வார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்ததற்கு மத்திய அரசுக்கு நன்றி’ என்றார். 

ராகுல் காந்தி

மோடியை கட்டித்தழுவிய பின்னர் கண்ணடித்த ராகுல் காந்தி..

 

 

ராகுல் காந்தி

ராகுல் காந்தி பேசி முடித்ததும் பிரதமர் மோடியின் இருக்கைக்கு சென்று அவரை கட்டியணைத்தார். ராகுல் காந்தி பேசிக்கொண்டிருந்த போது பிரதமர் மோடி இடைஇடையே சிரித்துக் கொண்டே ராகுலின் உரையை கவனித்துக் கொண்டிருந்தார். ராகுல் காந்தி பேச்சும் மோடியின் ரியாக்‌ஷனும் அவையில் கலகலப்பை ஏற்படுத்தியது. 

 

 

மோடி

ராகுல் காந்தி பேச்சு.. 

*பிரதமரின் சிரிப்பில் ஒரு பதற்றம் தெரிகிறது.

*பிரதமர் நாட்டுக்காக உழைக்கவில்லை; சில தொழிலதிபர்களுக்காக உழைக்கிறார்.

*அமித்ஷா மகன் ஜெய் ஷா விவகாரத்தில் மத்திய அரசு மெளனம் காப்பது ஏன்?

*என் கண்ணைப் பார்த்து பிரதமர் பேச வேண்டும். ஆனால் அதனை அவர் தவிர்க்கிறார். 

*மத்திய அரசின் பொய் வாக்குறுதிகளால் விவசாயிகளும், இளைஞர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

*மக்களின் வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் தருவதாகக் கூறி பிரதமர் ஏமாற்றியுள்ளார். 

*நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பேசிய ராகுல் காந்தி பிரதமர் நாட்டுக்காக உழைக்காமல், தொழிலதிபர்களுக்காக வேலை செய்கிறார் என குற்றம் சாட்டினார்

65_13543.jpg

*நம்பிக்கையில்லா தீர்மானத்தை பா.ம.க புறக்கணித்தது. பா.ம.க-வின் நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் இன்று நாடாளுமன்றம் செல்லவில்லை.  

*சிவசேனா நம்பிக்கையில்லா தீர்மானத்தை புறக்கணித்துள்ளது பா.ஜ.க-வுக்கு சாதகமாக அமையும். சிவசேனாவுக்கு அவையில் 18 உறுப்பினர்கள் உள்ளனர்.   

*நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் சிவசேனா பங்கேற்காது என அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வரும் அதன் கூட்டணிக் கட்சியான சிவசேனா திடீரென மக்களவையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க போவதில்லை என முடிவு செய்துள்ளது. 

*நம்பிக்கையில்லா தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய தெலுங்கு தேசம் எம்.பி ஜெயதேவ் கல்லா `இது மோடி அரசுக்கும் ஆந்திராவுக்கும் நடக்கும் தர்மயுத்தம்’ என்றார். 

ஜெயதேவ் கல்லா

*விவாதம் தொடங்கியதுமே பிஜு ஜனதாதளம் கட்சி   விவாதத்தில் பங்கேற்கப் போவதில்லை என்றுக் கூறி வெளிநடப்பு செய்தது. இது பா.ஜ.க-வுக்கு ஆதரவான நிலைபாடு ஆகும்.  

* நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறும் என மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன்   அறிவித்துள்ளார். 

 * நாடாளுமன்றத்தில்,  பா.ஜ.க அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதான விவாதம்   தொடங்கியுள்ளது. 
 

 

மோடி


மத்திய பட்ஜெட் வெளியான பிறகு, ஆளும் பா.ஜ.க-வுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது தெலுங்கு தேசம். ஆந்திர மாநிலத்தின் நீண்டநாள் கோரிக்கையான தலைநகர் அமராவதிக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குதல் மற்றும் போலவரம் அணைக்கட்டு, விசாகப்பட்டினம், விஜயவாடா உள்ளிட்ட நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் குறித்த அறிவிப்புகள் வெளியாகாததைக் காரணம் காட்டி, கூட்டணியிலிருந்து பிரிந்தார் சந்திரபாபு நாயுடு.  அதன்பின், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என தெலுங்கு தேசம் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் முன்னதாக நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது தொடர்ந்து வலியுறுத்திவந்தன. 

ஆனால் தெலுங்கு ராஷ்ட்ரிய சமிதி, அ.தி.மு.க போன்ற கட்சிகள் வேறு பல கோரிக்கைகளை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டுவந்ததால், எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சபாநாயகர்  சுமித்ரா மகாஜன்  ஏற்கவில்லை. இந்த நிலையில்தான், நேற்று முன்தினம் தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது,  தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினர் உள்ளிட்ட 6 பேர் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என சபாநாயகரிடம் மனு அளித்தனர். இதை ஏற்ற சுமித்ரா மகாஜன், வரும் 20-ம் தேதி நம்பிக்கையில்லாத் தீர்மானம்குறித்து விவாதிக்கப்படும் என அறிவித்தார்.
அதன்படி, இன்று மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம்குறித்து விவாதிக்கப்பட உள்ளது. 

*தெலுங்கு தேசம் கட்சி எம்.பிக்கள் அனைவரும் இன்று நாடாளுமன்றத்துக்கு வர வேண்டும் என அக்கட்சியின் கொறடா உத்தரவு பிறப்பித்தார். ஆனால், எம்.பி. திவாஹர் ரெட்டி  மட்டும் நாடாளுமன்றத்துக்கு வரப் போவதில்லை என அறிவித்துள்ளார். `பா.ஜ.க அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தால், எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை’ என்று அவர் கூறியுள்ளார். 

*`பா.ஜ.க. அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வாய்ப்பு இல்லாவிட்டாலும், தார்மீக அடிப்படையில் தி.மு.க-வின் முழுமனதான ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
*’ஆந்திரா பிரச்னைகளுக்காக, நாடாளுமன்றத்தில் அம்மாநில அரசு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்திருக்கிறது. தமிழக அரசு காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 22 நாள்கள் வெளியில் இருந்து போராடினார்கள். எந்த மாநிலமும் முன்வந்து நமக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. அப்படி இருக்கும்பட்சத்தில், நாம் எதற்காக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்?’ என்பது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நிலைபாடு! 

https://www.vikatan.com/news/india/131427-noconfidence-vote-live-updates.html

  • தொடங்கியவர்

பிரதமர் மோதியை ஆரத்தழுவிய ராகுல்: நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ருசிகரம்

மத்திய பாஜக அரசின் மீது நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தின்போது யாரும் எதிர்பாராதவிதமாக பிரதமர் நரேந்திர மோதியை காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி கட்டியணைத்தார்.

பிரதமர் மோதியை ஆரத்தழுவிய ராகுல் காந்திபடத்தின் காப்புரிமைLSTV

பிரதமர் மோதியும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியும் அரசியல் ரீதியாக ஒருவர் மீது ஒருவர் சமீப மாதங்களில் கடுமையான கருத்துக்களை பரிமாறி வந்த நிலையில், நாடாளுமன்றத்தில் நடந்த இந்த நிகழ்வு முற்றிலும் எதிர்பாராத ஒன்றாகவும், வியப்பளிப்பதாகவும் கருதப்படுகிறது.

இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் மத்திய அரசு மீது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் காலை 11 மணிக்கு தொடங்கியது.

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் தொடக்கத்தில் பேசிய மக்களைவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், இன்று மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு நடக்கும் என்றும், தான் மதிய உணவு இடைவேளைக்கு செல்லப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.

தெலுங்கு தேசம் கட்சி தொடங்கி பல கட்சி உறுப்பினர்களும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேசிய நிலையில், பகல் 1 மணிக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி இந்த தீர்மானத்தின் மீது உரையாற்ற தொடங்கினார்.

அப்போது ராகுல் காந்தியும், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கடுமையாக மோதிக் கொண்டனர். ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக ராகுல் காந்தி தெரிவித்த சில கருத்துக்களுக்கு நிர்மலா சீதாராமன் கடுமையான கண்டனங்களை தெரிவித்தார்.

''ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவதாக கூறியது பாஜக. ஆனால், அது நடக்கவில்லை. ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற பிரதமர் மோடி ஏமாற்றம் மட்டுமே அளித்துள்ளார்'' என்று ராகுல் காந்தி தனது உரையில் குற்றம்சாட்டினார்.

''என் கண்ணை பார்த்து பிரதமர் மோதி பேச வேண்டும். ஆனால், அவர் அதனை தவிர்க்கிறார். மேலும், பாதுகாப்பு அமைச்சர் உண்மையை வெளிப்படையாக விளக்கவேண்டும்'' என்று ராகுல்காந்தி தனது உரையில் தெரிவித்தார்.

2 மணி அளவில் தனது உரையை நிறைவு செய்த ராகுல்காந்தி, பிரதமர் மோதியின் இருக்கைக்கு சென்று அவருடன் கைகுலுக்கினார். அப்போது சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இது போதாது என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார். உடனே பிரதமர் மோதியை ராகுல்காந்தி ஆரத்தழுவினார். மோதியும் ராகுல்காந்தியை செல்லமாக தட்டினார். பின்னர், இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர்.

பிரதமர் மோதியை ஆரத்தழுவிய ராகுல் காந்திபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

முன்னதாக, கடந்த 18-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பாஜக அரசு மீது தெலுங்குதேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது.

இது தொடர்பாக தமிழக கட்சிகளான திமுக, அதிமுகவைச் சந்தித்து ஆதரவு கேட்பதற்கு தெலுங்குதேசம் எம்.பி.க்கள் குழுவினர் சென்னை வந்தது குறிப்பிடத்தக்கது.

https://www.bbc.com/tamil/india-44901071

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நவீனன் said:

பா.ஜ.க அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது அ.தி.மு.க எம்பி வேணுகோபால் பேசுகையில்  `தாய் போல் செயல்படவேண்டிய மத்திய அரசு, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகத்தை நடத்துகிறது. மற்ற மாநிலங்களைவிடத் தமிழகத்துக்கு குறைவான நிதியே ஒதுக்கப்படுகிறது. தமிழக அரசின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.

சொந்த மக்களையே மாற்றாந் தாய் மனப்பான்மையுடன் நடாத்தும் போது மத்திய அரசிடம் எப்படி கேள்வி கேட்க முடியும்?

  • தொடங்கியவர்

சரமாரி வார்த்தைப் போர்: நரேந்திர மோதி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்விபடத்தின் காப்புரிமைEPA

இந்தியாவின் மத்திய பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.

நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 126 வாக்குகளும், 325 வாக்குகளும் கிடைத்தது. மொத்தம் 451 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்களித்தனர்.

மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்விபடத்தின் காப்புரிமைLSTV Image captionமத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

முன்னதாக, வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது.

தெலுங்கு தேசம் கட்சி தொடங்கி பல கட்சி உறுப்பினர்களும் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேசிய நிலையில், பகல் 1 மணிக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி இந்த தீர்மானத்தின் மீது உரையாற்றினார்.

இறுதியில், தனது அரசுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோதி இரவு சுமார் 10.15 மணிக்கு தனது பதிலுரையை தொடங்கினார்.

'ராகுலின் கண்ணை பார்த்து பேசவேண்டிய அவசியம் இல்லை'

காங்கிரஸின் செயல்பாடுகளை நகைச்சுவையுடன் விமர்சித்த நரேந்திர மோதி, தனது ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டார்.

 

 

தனது கண்ணை நேருக்கு நேராக பார்த்து பிரதமரால் பேசமுடியாது என்ற ராகுலின் விமர்சனத்திற்கு, ''ஆமாம்! நான் பின் தங்கிய, ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவன், உங்களைப்போன்ற வசதியான குடும்பத்தை சேர்ந்தவரின் கண்ணோடு கண் பார்த்து பேசமுடியுமா?'' என்று வினவினார்.

காங்கிரஸை நம்பிய சரண்சிங், சந்திரசேகர் போன்ற முன்னாள் பிரதமர்களையும், ஜெய் பிரகாஷ் நாரயணன், வல்லபாய் படேல், பிரணாப் முகர்ஜி என நம்பியவர்களை அந்த கட்சி கைவிட்டதாக பிரதமர் மோதி விமர்சித்தார். எனவே, தனக்கு ராகுல் காந்தியின் கண்ணைப் பார்த்து பேச வேண்டிய அவசியம் இல்லை என்று நரேந்திர மோதி கூறினார்.

மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்விபடத்தின் காப்புரிமைLSTV

''நாங்கள் ஆட்சியில் இருப்போம், நாங்கள் இல்லையென்றால் நாட்டில் நிலைத்தன்மையை நீடிக்க விடமாட்டோம் என்று கருதும் காங்கிரஸ், இருக்கும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் சதிச் செயல்களை செய்கிறது'' என்று சாடினார் பிரதமர் மோதி.

தலித், பின்தங்கியவர்கள், ஏழைகள், விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்க முயலாமல், குறுக்குவழியில் வெற்றி பெற விரும்புகிறது காங்கிரஸ் என்று கூறிய அவர், அம்பேத்காரின் கொள்கைகளை எள்ளி நகையாடிய அந்த கட்சி இன்று அவரின் பெயரில் வாக்கு கேட்கிறது என்று குற்றம் சாட்டினார்.

''ஒரு குடும்பத்தின் கனவு, ஆசைக்கு எதிராக யாரை வேண்டுமானாலும்,ஏன் நாட்டின் நலனையும் பந்தயமாக வைக்கிறார்கள்'' என்று பிரதமர் மோதி காங்கிரஸை சாடினார்.

 

 

பொருளாதார முன்னேற்றம், வங்கி சீர்திருத்தம், மின்சார வசதியை பரவலாக்கியது, சர்வதேச அளவில் இந்தியாவை பெருமைப்படுத்துவது என பல்வேறு விஷயங்களை தந்து அரசின் சாதனைகளாக அவர் கோடிட்டு காட்டினார்.

அரசியல் லாபங்களுக்காக தெலங்கானா உருவக்கப்பட்டது

18 ஆண்டுகளுக்கு முன்பு வாஜ்பாயின் ஆட்சியில் உத்தராகண்ட், ஜார்கண்ட் என மூன்று மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது அமைதியாக நடைபெற்ற மாநில பிரிப்பு நடவடிக்கை, ஆந்திர மாநிலம் பிரிக்கப்படும்போது சிக்கலாக உருவெடுத்தது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்விபடத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES

நாட்டின் நலனுக்காக அல்ல, அரசியல் லாபங்களுக்காக தெலங்கானா உருவக்கப்பட்டது என்று கூறிய பிரதமர், மாநிலத்தை பிரிக்கும்போது, இரண்டில் ஒன்றாவது தங்களுக்கு கிடைக்கும் என்ற காங்கிரஸின் ஆசை, நிராசையாகிவிட்டது என்று கூறினார்.

''சிறப்பு சலுகை ஒரு மாநிலத்திற்கு கொடுத்தால் அதன் தாக்கம் பிற மாநிலங்களுக்கும் ஏற்படும். இருந்தபோதிலும், சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்படும் மாநிலங்களுக்கு நிகராக ஆந்திராவுக்கு சிறப்பு நிதியுதவி திட்டத்தை கொடுத்திருக்கிறோம். அதை ஏற்றுக்கொண்ட மாநில அரசு மத்திய நிதியமைச்சருக்கு நன்றி சொன்னது'' என்று அவர் நினைவுகூர்ந்தார்.

நாங்கள் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற தயாராக இருந்தோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி பிரிந்தபோது, ஒய்.எஸ்.ஆரின் வியூகத்தில் சிக்க வேண்டாம் என்று எச்சரித்தேன். நிலைமையை ஆந்திர மாநிலமும் அறியும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

''நாங்கள் நாட்டின் பாதுகாவலர்கள், ஏழைகளின், விவசாயிகளின், இளைஞர்களின் நன்மையில் பங்களிப்பவர்கள், உங்களைப் போல் வியாபாரிகள் அல்ல'' என்று பிரதமர் மோதி மேலும் கூறினார்.

பிரதமர் மோதியை ஆரத்தழுவிய ராகுல் காந்திபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

முன்னதாக, ஆவேசத்துடன் பாஜக அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை அடுக்கி, நீண்ட உரையாற்றி, சில பரபரப்புக்களையும் ஏற்படுத்தினார் ராகுல் காந்தி.

அப்போது ராகுல் காந்தியும், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் கடுமையாக மோதிக் கொண்டனர். ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக ராகுல் காந்தி தெரிவித்த சில கருத்துக்களுக்கு நிர்மலா சீதாராமன் கடுமையான கண்டனங்களை தெரிவித்தார்.

''ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவதாக கூறியது பாஜக. ஆனால், அது நடக்கவில்லை. ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற பிரதமர் மோடி ஏமாற்றம் மட்டுமே அளித்துள்ளார்'' என்று ராகுல் காந்தி தனது உரையில் குற்றம்சாட்டினார்.

''என் கண்ணை பார்த்து பிரதமர் மோதி பேச வேண்டும். ஆனால், அவர் அதனை தவிர்க்கிறார். மேலும், பாதுகாப்பு அமைச்சர் உண்மையை வெளிப்படையாக விளக்கவேண்டும்'' என்று ராகுல்காந்தி தனது உரையில் தெரிவித்தார்.

2 மணி அளவில் தனது உரையை நிறைவு செய்த ராகுல்காந்தி, பிரதமர் மோதியின் இருக்கைக்கு சென்று அவருடன் கைகுலுக்கினார். அப்போது சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இது போதாது என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார். உடனே பிரதமர் மோதியை ராகுல்காந்தி ஆரத்தழுவினார். மோதியும் ராகுல்காந்தியை செல்லமாக தட்டினார். பின்னர், இருவரும் கைகுலுக்கிக் கொண்டனர்.

பிரதமர் மோதியை ஆரத்தழுவிய ராகுல் காந்திபடத்தின் காப்புரிமைLSTV

முன்னதாக, கடந்த 18-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் பாஜக அரசு மீது தெலுங்குதேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது.

https://www.bbc.com/tamil/india-44906981

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.