Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"தமிழர்கள் ஆழக்கூடிய வட மாகாண சபையை யாரும் ஆண்டுவிடலாம் என்று எண்ண கூடாது"

Featured Replies

"தமிழர்கள் ஆழக்கூடிய வட மாகாண சபையை யாரும் ஆண்டுவிடலாம் என்று எண்ண கூடாது"

 

 

 

"தேசியத்தை நினைக்கின்ற கட்சிகள் ஒன்றிணைந்து எங்களினுடைய மாகாண சபையில் நல்லதொரு ஆட்சியை நடத்தக்கூடிய ஒரு இலக்கை கொண்டு வரவேண்டும்" என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

1983ஆம் ஆண்டு ஜீலை கலவரத்தில் கொலைசெய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கமான ரெலோவின் ஸ்தாபகர் தங்கத்துரை, தளபதி குட்டிமணி மற்றும் முன்னணி போராளிகளான ஜெகன், தேவன், நடேசுதன், குமார் உள்ளிட்ட கலவரத்தில் கொல்லப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்களின் 35 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று நினைவு கூறப்படுகின்றது.

இதனை முன்னிட்டு கறுப்பு ஜீலை நினைவேந்தல் கிண்ண உதைப்பந்தாட்ட  சுற்றுபோட்டியின் ஆரம்ப நிகழ்வு நகரசபை மைதானத்தில் நடைபெற்றது. அந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு உரையாற்றிய அடைக்கலநாதன்,

selvam_adaykkalnathan.jpg

"எங்களுக்குள்ளேயே நாங்கள் விமர்சனம் செய்பவர்களாக, எங்களுக்குள்ளேயே நாங்கள் சண்டை பிடிப்பவர்களாக மாறியிருக்கின்றோம். எங்களினுடைய இனத்தின் விடுதலை என்பதை மறந்திருகின்றோம் என்பதை மிக கவலையோடு தெரிவித்து கொள்கின்றேன். 

ஆகவே இவர்களின் படுகொலை செய்யப்பட்ட நாளிலே விடுதலை போராட்டம் ஆயுத முனையிலே திருப்பப்பட்டது.  இந்த 83ஆம் ஆண்டில்  எங்களுடைய மக்களினுடைய விடுதலைக்காக இளைஞர்கள் ஆயுதங்களை தங்களினுடைய கைகளில் எடுத்தார்களோ அதே போல  ஜனநாயக ரீதியில் இப்பொழுது இருக்கின்ற கட்சிகள் ஒன்றாக இணைந்து எங்களினுடைய மக்களினுடைய விடுதலைக்காக செயற்பட வேண்டும். தேசியத்தை கருத்தில் கொண்டவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதே என்னுடைய கருத்து.

இன்றைக்கு மாகாண சபை இரண்டு மூன்று பிரிவுகளாக செயற்பட போவதாக பல நிகழ்வுகள் நடந்து கொண்டிருகின்றது. இந்த மாகாண சபையானது எங்களுடைய தமிழர்கள் ஆழக்கூடிய வடக்கு மாகாண சபை அதனை யாரும் ஆண்டுவிடலாம் என்று எண்ண கூடாது. எங்களுடைய மக்களுடைய எண்ணங்கள், சிந்தனைகள், அவர்களுடைய அடிப்படை வாழ்க்கை, அவர்களுடைய அரசியல் விடுதலை என்பது இந்த மாகாண சபையினூடாகவும் செயற்படக்கூடிய திறன் இந்த மாகாண சபைக்கு இருக்கிறது. 

ஆகவே வருகின்ற மாகாண சபையிலே நாங்கள் பிரிந்து நின்றோம் என்றால் இப்பொழுது இருகின்ற நகரசபை, பிரதேச சபை போன்று தென்னிலங்கையில் இருகின்ற ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எப்படி இந்த நகரசபை, பிரதேச சபை தேர்தலில் தங்களுடைய காலை பதித்தார்களோ அதைவிட மோசமாக ஆட்சியை அவர்களோடு பேசி  ஆட்சி நடத்தக்கூடிய துர்ப்பாக்கிய நிலைக்கு  இந்த மாகாண சபை தள்ளப்படக்கூடிய வாய்ப்பை ஒருகாலும் அவர்களுக்கு விட்டுக்கொடுக்க முடியாது.

நாங்கள் தொடர்ந்தும் இந்த மாகாண சபையை ஒரு வல்லமை கொண்ட மாகாண சபையாக ஆட்சி நடத்தக்கூடிய மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டவர்களாக திகழவேண்டுமாக இருந்தால் நாங்கள் எங்களுக்குள் ஒற்றுமைப்பட வேண்டும். 

எங்களுடைய முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஏனைய கட்சிகள் எல்லோரும் இந்த மாகாண சபையிலே ஒன்றிணைந்து எங்களுடைய ஆட்சியை நாங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் அதற்காக இந் நாளிலே தமிழீழ விடுதலை இயக்கம் நிச்சயமாக செயற்படும் ஒற்றுமை வரவில்லை என்றால் அந்த ஒற்றுமையை விரும்பாதவர்களோடு ஒருகாலும் தொடர்ந்து பயணிக்காது என்பதனை நான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.  

ஒற்றுமை என்பது மக்களினுடைய கனவு, மக்களினுடைய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக தான் ஜனநாயக ரீதியாக வந்தாலும் சரி, ஆயுத ரீதியாக வந்தாலும் சரி ஒரே இலட்சியம் மக்களினுடைய விடுதலை. ஆகவே அதனை மனதில் கொண்டு செயற்படுவதற்கான சிந்தனையோடு அனைத்து தமிழ் கட்சிகளும் இருக்க வேண்டும். தேசியத்தை நினைக்கின்ற கட்சிகள் ஒன்றிணைந்து எங்களினுடைய மாகாண சபையை நல்லதொரு ஆட்சியை நடத்தக்கூடிய ஒரு இலக்கை கொண்டு வரவேண்டும் அத்தோடு கிழக்கு மாகாணத்திலும் ஆட்சியை நடத்தக்கூடிய வல்லமையை நாங்கள் கொண்டுள்ளோம்.

அதற்கும் எங்களினுடைய இந்த ஒற்றுமையான செயற்பாடு தான் கைகொடுக்கும் என்பதனை குறிப்பிட விரும்புகின்றேன்" என தெரிவித்தார் 

http://www.virakesari.lk/article/37039

5 hours ago, நவீனன் said:

 

இதனை முன்னிட்டு கறுப்பு ஜீலை நினைவேந்தல் கிண்ண உதைப்பந்தாட்ட  சுற்றுபோட்டியின் ஆரம்ப நிகழ்வு நகரசபை மைதானத்தில் நடைபெற்றது. அந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

 

 

கறுப்பு ஜீலை அப்பாவிச் சிறுபாண்மை தமிழர் மீது மிகக் கொடிய சிங்கள அரச பயங்கரவாதம் ஏவப்பட்ட மாதம், பல்வேறு அழிவுகளையும் தந்த மாதம் , தமிழரின் கண்கள் உயிருடன் பிடுங்கப்பட்டநாள்........, 
மிகவும் உணர்வுபூர்வமாக நினைவு கூறப்படவேண்டிய மாதம். வெளிநாட்டு இராசதந்திரிகளை நோக்கி அரச பயங்கரவாத ஏவலை நினைவூட்டி எமக்கான அரசியல் தீர்வை விரைவு படுத்தும் பிரசாரத்தை மேற் கொள்ளவேண்டிய முக்கிய மாதம்...
  "கறுப்பு ஜீலை நினைவேந்தல் கிண்ண உதைப்பந்தாட்டம்" எனவா இதனை நினைவு கூறுவது? உங்களைப் போன்ற தரம் கெட்ட அரசியல்வாதிகள்  தான் தமிழினத்தின் மிகப் பெரிய சாபம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.