Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்­பாந்­தோட்­டையில் இந்­தியாவின் கரி­ச­னை

Featured Replies

அம்­பாந்­தோட்­டையில் இந்­தியாவின் கரி­ச­னை

02-2674dbc65b83a0d2549c7eda062d5badb2224bd5.jpg

 

-சுபத்ரா

தற்­போ­தைய அர­சாங்கம் கடந்த பல மாதங்­க­ளா­கவே, காலி கடற்­படைத் தளம் அம்­பாந்­தோட்­டைக்கு மாற்­றப்­படும் என்று கூறி வரு­கி­றது. ஆனால் அது இன்­னமும் சாத்­தி­ய­மா­க­வில்லை. உட­ன­டி­யா­கவும் சாத்­தி­யப்­படும் போலவும் தெரி­ய­வில்லை.

இருந்­தாலும், காலியில் உள்ள கடற்­படைத் தளத்தை அம்­பாந்­தோட்­டைக்கு மாற்றும் திட்டம் இந்­தி­யாவைப் பெரிதும் திருப்­திப்­ப­டுத்தும் ஒன்­றாக -இந்­தி­யா­வினால் வர­வேற்­கப்­படும் ஒன்­றாக இருக்­கி­றது என்­பதில் சந்­தே­க­மில்லை

 

 

சீனாவின் கைக்குச் சென்று விட்­ட­தாக சர்­வ­தேச அளவில் பேசப்­ப­டு­கின்ற அம்­பாந்­தோட்­டையில், மத்­தள விமான நிலை­யத்­தை­யா­வது தக்க வைப்­பதே இப்­போது இந்­தி­யாவின் முத­லா­வது தெரி­வாக இருக்கும் என்­பது பல­ரதும் கணிப்பு.

ஆனால், அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­துக்கு ஈடான பாது­காப்பு நலன்­களை- மத்­தள விமான நிலை­யத்தின் ஊடாக பெற்­றுக்­கொள்ள முடி­யாது என்­பதே இந்­தி­யாவின் கணிப்­பாகத் தெரி­கி­றது.

இதனால், மத்­தள விமான நிலை­யத்தின் 70 வீத பங்­கு­களைக் குத்­த­கைக்குப் பெற்று, 40 ஆண்­டு­க­ளுக்கு அதனைக் கட்­டுப்­ப­டுத்தும் அதி­கா­ரத்தைப் பெறு­வதை விட, அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா தனது இரா­ணுவத் தேவை­க­ளுக்குப் பயன்­ப­டுத்திக் கொள்­ளாமல் தடுப்­பதில் தான், இந்­தியா ஆர்வம் காட்டி வரு­கி­றது.

காலியில் உள்ள தென் பிராந்­திய கடற்­படைத் தளம், அம்­பாந்­தோட்­டைக்கு மாற்­றப்­படும் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அண்­மையில் அறி­வித்­தி­ருந்தார்.

இந்த அறி­விப்பை பாரா­ளு­மன்­றத்தில் வெளி­யிட்ட பின்னர், கடந்த 13ஆம் திகதி பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச இரா­ஜ­தந்­திர பயிற்சி நிறு­வ­கத்தில் அவர் நிகழ்த்­திய உரை முக்­கி­ய­மா­னது.

அந்த உரை வெறு­மனே காலியில் உள்ள கடற்­படைத் தளத்தை அம்­பாந்­தோட்­டைக்கு மாற்­று­வதைப் பற்­றி­ய­தாக மாத்­திரம் இருக்­க­வில்லை.

பூகோள அர­சியல், பிராந்­திய பாது­காப்பு சிக்­கல்கள், அதில் இலங்­கையின் வகி­பாகம் என்­ப­ன­வற்­றையும் தொட்டுச் சென்­றி­ருந்தார் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க.

“ மோதல்­களைத் தடுப்­பது மற்றும் இந்­தியப் பெருங்­க­டலில் நீர்­மூழ்­கி­களால் ஏற்­படக் கூடிய அச்­சு­றுத்­தல்கள் போன்ற பாது­காப்புக் கரி­ச­னைகள் விட­யத்தில் புதிய தந்­தி­ரோ­பா­யங்கள் குறித்து கவனம் செலுத்­து­மாறு கடற்­ப­டை­யிடம் அர­சாங்கம் கேட்­டுள்­ளது.

இந்­தியப் பெருங்­க­டலில் பிரச்­சி­னை­க­ளையும் மோதல்­க­ளையும் தடுப்­ப­தற்கு புதிய உத்­திகள் தேவைப்­ப­டு­கின்­றன.

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தின் பாது­காப்பு இலங்கை அர­சாங்­கத்­தி­டமே இருக்கும் என்று உடன்­பாட்டில் தெளி­வாக கூறப்­பட்­டுள்­ளது. சீன நிறு­வனம் அதனை ஏற்­றுக்­கொண்­டுள்­ளது.

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தைச் சுற்றி பாது­காப்பை வலுப்­ப­டுத்த பல்­வேறு புதிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன.

தெற்­கி­லுள்ள அனைத்து கட்­டளை மையங்­களும், காலியில் இருந்து அம்­பாந்­தோட்­டைக்கு மாற்­றப்­படும். அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தின் பாது­காப்பை நாம் கவ­னிப்போம்.

எனவே, புதிய உத்­தி­களில் கவனம் செலுத்­து­மாறு நாம் கடற்­ப­டைக்கு கூறி­யுள்ளோம். அம்­பாந்­தோட்­டையை தள­மாக பயன்­ப­டுத்த சீனா­வுக்கு இட­ம­ளிக்­கப்­ப­டாது.

மத்­தள விமான நிலை­யத்தை இந்­திய நிறு­வ­னத்­துடன் இணைந்து இயக்­க­வுள்ளோம். எனவே, எல்­லா­வற்­றையும் சீனா­வுக்குக் கொடுத்து விட்­ட­தாக யாரும் குற்­றம்­சாட்ட முடி­யாது.

இந்­தியப் பெருங்­கடல் பிராந்­தி­யத்தின் அனைத்துப் பங்­கா­ளர்­க­ளையும் பேச்சு மேசைக்கு கொண்டு வரு­வதே எமது இலக்கு” என்றும் அவர் கூறி­யி­ருக்­கிறார்.

இதி­லி­ருந்து மத்­தள விமான நிலை­யத்தைக் கொடுத்து, இந்­தி­யாவைச் சமா­ளிக்­கவும், பிராந்­தி­யத்தில் மோதல்­களைக் குறைக்கும் பாது­காப்பு உத்­தி­களைக் கையா­ளவும், இலங்கை அர­சாங்கம் முற்­ப­டு­கி­றது என்­பது தெளி­வாகத் தெரி­கி­றது.

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தைக் கட்­டு­வ­தற்கு சீனா­வுக்கு இட­ம­ளிக்­கப்­பட்­டதன் பின்­னரே, இந்­தியப் பெருங்­கடல் பிராந்­தியம் மோச­மான அதி­காரப் போட்டிக் கள­மாக மாறி­யது. அது இப்­போது, மெது­மெ­து­வாக சூடேறி வரு­கி­றது.

இது பிராந்­தியப் பதற்­ற­மாக மாறினால் அதற்­காக, இலங்­கையும் விலை­கொ­டுக்க நேரிடும். பொறுப்­புக்­கூறும் நிலை இலங்­கைக்கும் ஏற்­படும். அதனைக் கருத்தில் கொண்டு தான், இப்­போது, இந்­தியப் பெருங்­கடல் பிராந்­தி­யத்தில் மோதல்கள், முரண்­பா­டு­களைத் தடுப்­ப­தற்­கான உத்­தி­களை கையா­ளு­மாறு கடற்­ப­டைக்கு உத்­த­ர­விட்­டுள்­ளது அர­சாங்கம். அதன் ஒரு கட்டம் தான் காலியில் உள்ள இலங்கைக் கடற்­ப­டையின் தென் பிராந்­தியத் தலை­மை­யகம் அம்­பாந்­தோட்­டைக்கு மாற்­றப்­ப­ட­வுள்­ளது என்ற தகவல். 

தற்­போ­தைய அர­சாங்கம் கடந்த பல மாதங்­க­ளா­கவே, காலி கடற்­படைத் தளம் அம்­பாந்­தோட்­டைக்கு மாற்­றப்­படும் என்று கூறி வரு­கி­றது. ஆனால் அது இன்­னமும் சாத்­தி­ய­மா­க­வில்லை. உட­ன­டி­யா­கவும் சாத்­தி­யப்­படும் போலவும் தெரி­ய­வில்லை.

இருந்­தாலும், காலியில் உள்ள கடற்­படைத் தளத்தை அம்­பாந்­தோட்­டைக்கு மாற்றும் திட்டம் இந்­தி­யாவைப் பெரிதும் திருப்­திப்­ப­டுத்தும் ஒன்­றாக -இந்­தி­யா­வினால் வர­வேற்­கப்­படும் ஒன்­றாக இருக்­கி­றது என்­பதில் சந்­தே­க­மில்லை.

காலி கடற்­படைத் தளம் அம்­பாந்­தோட்­டைக்கு மாற்­றப்­பட்டால், அது இந்­தி­யா­வுக்குச் சாத­க­மா­ன­தாக இருக்கும் என்று இந்­தியப் பாது­காப்பு அதி­கா­ரிகள் ஹிந்­துஸ்தான் டைம்­ஸுக்கு தெரி­வித்­தி­ருந்­தனர்.

ஏனென்றால், இலங்கைக் கடற்­படைத் தளம் அம்­பாந்­தோட்­டையில் அமைக்­கப்­பட்டால், இந்­தியா, அமெ­ரிக்கா, ஜப்பான், அவுஸ்­தி­ரே­லியா போன்ற நாடு­களின் கடற்­படைக் கப்­பல்கள் அங்கு கிர­ம­மான துறை­முகப் பய­ணங்­களை மேற்­கொள்ளும் வாய்ப்புக் கிட்டும் என்று தமது பெயரை வெளி­யிட விரும்­பாத அந்த பாது­காப்பு அதி­கா­ரிகள் கூறி­யுள்­ளனர்.

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை இந்­தியா கண்­கா­ணித்து வரு­கி­றது. ஆனால் அம்­பாந்­தோட்­டையில் இலங்கை கடற்­படைத் தளம் அமைக்­கப்­பட்டால், இப்­போ­துள்ள கண்­கா­ணிக்க முடி­வதை விட கூடு­த­லாக கண்­கா­ணிக்க முடியும்.

இது, சீனாவின் செயற்­பா­டு­களில் சில தடுப்பு விளை­வு­களை ஏற்­ப­டுத்தும். அத்­துடன், இரா­ணு­வ­மல்­லாத தேவை­க­ளுக்கு துறை­மு­கத்தைப் பயன்­ப­டுத்­து­வதை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு இலங்­கைக்கு அழுத்­தங்­களைக் கொடுக்கும் என்றும் இந்­திய பாது­காப்பு அதி­காரி ஒருவர் கூறி­யி­ருந்தார்.

இந்த அறி­விப்பு இந்­தி­யா­வுக்கு மகிழ்ச்­சியைக் கொடுத்­தி­ருக்­கி­றது. ஒரு வேளை இது இந்­தி­யாவின் ஆலோ­ச­னையின் பேரில் எடுக்­கப்­படும் முடி­வாகக் கூட இருக்­கலாம்.

இருந்­தாலும், இலங்கை அர­சாங்­கத்தின் அறி­விப்­புகள் உட­ன­டி­யாகச் செயற்­ப­டுத்­தப்­படும் வாய்ப்பு இல்லை என்­பதே இந்­தி­யாவின் கணிப்­பா­கவும் இருக்­கி­றது.

அம்­பாந்­தோட்­டைக்கு கடற்­படைத் தளத்தை மாற்­று­வ­தற்கு உத­வி­யாக எந்த உட்­கட்­ட­மைப்பு வச­தி­களும் கிடை­யாது. கடற்­ப­டையின் கப்­பல்­க­ளையோ, பட­கு­க­ளையோ பழு­து­பார்க்கும் வச­திகள் இல்லை. கப்­பல்­களை தரையில் இருந்து கட­லுக்கும், கடலில் இருந்து தரைக்கும் ஏற்­று­கின்ற வச­தி­களும், அதற்­கான இட­வ­ச­தி­களும் கிடை­யாது.

அங்கு இலங்கைக் கடற்­ப­டைக்கு, ஓர் இறங்­கு­துறை கூட இல்லை. இப்­ப­டி­யான நிலையில், உட­ன­டி­யாக கடற்­படைத் தளத்தை அங்கு அமைக்கும் சாத்­தி­யங்கள் இல்லை என்­பதே இந்­திய பாது­காப்பு அதி­கா­ரி­களின் கருத்­தாக உள்­ளது.

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­துக்கு வெளியே, கிழக்குப் பக்­க­மாகத் தான், கடற்­ப­டைக்குத் தளம் அமைக்க இட­ம­ளிக்­கப்­பட்­டுள்­ளது. இங்கு சிறி­ய­தொரு சிறந்த தளத்தை அமைப்­பது கடி­ன­மா­னது.

இதன்­மூலம் துறை­மு­கத்­துக்குள் கடற்­படை நுழை­வதை விட, அதன் விளிம்புப் பகு­தியில் செயற்­ப­டு­கின்ற வாய்ப்பே பெரும்­பாலும் கிடைக்கும் என்று கூறி­யி­ருக்­கிறார் இந்­திய பாது­காப்பு அதி­காரி ஒருவர்.

அதா­வது துறை­மு­கத்தின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தும் பொறுப்பு இலங்கை கடற்­ப­டைக்கு வழங்­கப்­பட்­டாலும், துறை­மு­கத்­துக்குள் கடற்­படை நுழையும் வாய்ப்பு அளிக்­கப்­ப­டுமா என்­பது குறித்து இந்­தி­யா­வுக்குச் சந்­தே­கங்கள் இருக்­கின்­றன.

இந்­தியக் கடற்­ப­டையின், முன்னாள் அதி­கா­ரியும் மூலோ­பாய நிபு­ண­ரு­மான சுதர்சன் ஸ்ரீகாந்த், கொழும்பு துறை­மு­கத்தின் கொழும்பு சர்­வ­தேச கொள்­கலன் முனை­யத்தில் உள்ள நடை­மு­றை­களைச் சுட்­டிக்­காட்டி கேள்வி எழுப்­பி­யி­ருக்­கிறார்.

கொழும்பு துறை­முகம் முழு­வதும் இலங்கைக் கடற்­ப­டை­யினர் பர­வி­யி­ருக்­கின்­றனர். ஆனாலும், சீனா­வினால் கட்­டப்­பட்ட, கொழும்பு துறை­மு­கத்தின் கொழும்பு சர்­வ­தேச கொள்­கலன் முனை­யத்­துக்குள் கடற்­ப­டையின் நட­மாட்­டங்கள் இல்லை.

அது­போ­லவே அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­துக்குள் கடற்­ப­டைக்கு இட­ம­ளிக்­கப்­ப­டாமல் இருப்­ப­தற்கு வாய்ப்­புகள் இருக்­கின்­றன என்று அவர் கூறி­யி­ருக்­கிறார்.

இந்­தியப் பெருங்­கடல் பகு­தியில் சீனாவின் நகர்­வு­களை கவ­ன­மாக கண்­கா­ணிக்க வேண்டும் என்றும் அதே­வேளை, அம்­பாந்­தோட்­டையில் இலங்கை கடற்­ப­டையின் நகர்வை இந்­தி­யாவில் எதிர்­ம­றை­யாக பார்க்கக் கூடாது. என்றும் அவர் கூறி­யி­ருக்­கிறார்.

அது­மாத்­தி­ர­மன்றி, இலங்கைக் கடற்­ப­டைக்கு சூழ்­நிலை விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்த முடிந்தால், அது இந்தப் பிராந்­தி­யத்தை தொடர்ந்து கண்­கா­ணிக்கும் ஆற்­றலை அதி­க­ரிக்கும் என்று தனது பெயரை வெளி­யிட விரும்­பாத இந்திய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார்.

அம்பாந்தோட்டைக்கு இலங்கைக் கடற்படைத் தளம் மாற்றப்படுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களும், தளம் அமைப்பதற்கான அடிப்படைச் சூழலும், உட்கட்டமைப்பு வசதியீனங்களும் உடனடியாக இந்த இடமாற்றத்தை சாத்தியப்படுத்துமா என்ற கேள்விகளை எழுப்ப வைத்திருக்கிறது.

அதேவேளை, அம்பாந்தோட்டையில் தளம் அமைப்பதன் மூலம், துறைமுகத்தை முற்றிலும் வணிக நோக்கில் பயன்படுத்துவதற்கு சீனாவுக்கு அழுத்தங்களைக் கொடுக்கும் வாய்ப்பு உருவாக்கப்படும்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை ஒரு மர்மமாக மற்ற நாடுகள் நோட்டம் விட்டுக் கொண்டிருக்கும் நிலையும் தவிர்க்கப்படும்.

இந்தியா இதனை தனது பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான அடித்தளமாக பார்க்கிறது. அதேவேளை, இலங்கையோ மோதல்களை தடுப்பதற்கான உத்தியாக நோக்குகிறது.

எது எவ்வாறாயினும், அம்பாந்தோட்டை கடற்படைத் தளம் உடனடிச் சாத்தியமாக இருக்காவிடினும், அது அவசியமான ஒன்றாக மாறியிருக்கிறது.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-07-22#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.