Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமராட்சி மீனவரின் படகுக்குத் தீ வைப்பு- கடலட்டை விவகாரத்தின் எதிரொலி!!

Featured Replies

வடமராட்சி மீனவரின் படகுக்குத் தீ வைப்பு- கடலட்டை விவகாரத்தின் எதிரொலி!!

 

 

20180808_080535-750x430.jpg

 
 
 

வடமராட்சி கிழக்குப் பகுதியில் பிறமாவட்ட மீனவர்கள் மேற்கொள்ளும். கடலட்டை தொழிலை பிடிக்கச் சென்ற உள்ளூர் மீனவரின் படகு நேற்று அதிகாலை இனம் தெரியாதோரினால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

கட்டைக்காட்டுப் பகுதியில் கடற்படைத் தளத்திற்கு அருகில் நிறுத்தி வைத்திருந்த செபமாலை சுஜீபன் என்பவருக்குச் சொந்தமான படகு மற்றும் இயந்திரம் , வலைகள் என்பனவே இவ்வாறு தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நீரியல் வளத் திணைக்களத்திற்கு சொந்தமான கடற்பிரதேசத்திற்கு உட்பட்ட கட்டைக்காட்டுப் பிரதேசத்தில் உள்ள கடற்படைத் தளத்தின் முன்பாக குறித்த படகின் உரிமையாளர் படகினை நிறுத்தி வைப்பது வழமையாகும். அவ்வாறு படகை நிறுத்தி வைக்கும் குறித்த படகின் உரிமையாளர் அண்மையில் உள்ளூர் மீனவர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் இணைத்து சட்டத்திற்கு முரணாக இரவு வேளையிலும் கடல் அட்டை பிடித்தவர்களை பிடித்த செயல்பாட்டில் பங்குகொண்டிருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

இவ்வாறு தீயிட்டு கொழுத்தப்பட்ட கடல் உபகரணங்களின் பெறுமதி தற்போது 5 லட்சம் ரூபா எனவும் குறித்த மீனவரால் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

http://newuthayan.com/story/00/வடமராட்சி-மீனவரின்-படகுக்குத்-தீ-வைப்பு-கடலட்டை-விவகாரத்தின்-எதிரொலி.html

  • தொடங்கியவர்

தென்னிலங்கை மீனவர்களை சுற்றி வளைத்து பிடித்தவரின் படகு தீக்கிரை…

படங்கள் இணைப்பு – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

V-East-Bort1-800x600.jpg

 

வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடித்த தென்னிலங்கை மீனவர்களை சுற்றி வளைத்து பிடித்த மீனவர்களில் ஒருவரின் படகு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தீக்கிரை ஆக்கப்பட்டு உள்ளது.

வடமராட்சி கிழக்கு முள்ளியானை சேர்ந்த செபமாலை சுஜீபன் என்பரின் படகே தீக்கிரை ஆக்கப்பட்டு உள்ளது. கடந்த 20ஆம் திகதி முள்ளியான் கடற்பகுதியில் சட்டவிரோதமான முறையில் தென்னிலங்கையை சேர்ந்த மீனவர்கள் கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு இருந்தனர். அவர்களை முள்ளியானை சேர்ந்த மீனவர்கள் சுற்றி வளைத்து பிடித்து கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்திருந்தனர்.

இந்நிலையில் அன்றைய தினம் தென்னிலங்கை மீனவர்களை பிடிப்பதற்கு உதவிய சுஜீபனின் 4 இலட்ச ரூபாய் மதிப்புள்ள படகு மற்றும் படகுக்கான வெளியிணைப்பு இயந்திரம் ஆகியவை இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளை தீக்கிரை ஆக்கப்பட்டு உள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

V-East-Bort2-800x624.jpgV-East-Bort3-800x597.jpg

http://globaltamilnews.net/2018/88847/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.