Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"முள்ளிக்குள மக்களின் வீடுகளில் வசிக்கும் கடற்படையை வெளியேற்ற வேண்டும்"

Featured Replies

"முள்ளிக்குள மக்களின் வீடுகளில் வசிக்கும் கடற்படையை வெளியேற்ற வேண்டும்"

 

 
 

முள்ளிக்குளம் மக்களின் காணிகள் மற்றும் வீடுகளில் வசித்து வருகின்ற கடற்படையினரை உடனடியாக வெளியேற்றி முள்ளிக்குளம் மக்களை மீள் குடியேற்றம் செய்ய ஜனாதிபதி மற்றும் பிரதமர் துரித நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ள வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

MULLIKULAM_MP_VISIT_25-07-2018__15___1_.

குறித்த மக்கள் காடுகளை துப்பரவு செய்து எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் தற்காலிய கூடாரங்களை அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.

குறித்த மக்களை இன்று காலை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில், மன்னார் நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ்,மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான மரிய சீலன், ஜீவகன்,ஏ.றொஜன் ஆகியோர் நேரடியாக சென்று பார்வையிட்டு அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினர்.

MULLIKULAM_MP_VISIT_25-07-2018__11___1_.

அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம்   கிராம மக்கள் தமது பூர்வீக கிராமத்திற்கு கடந்த ஒரு வராத்திற்கு முன்னர் செல்ல முயன்றுள்ள போதும் கடற்படையினருடைய அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த மக்கள் தற்காலிகமாக முள்ளிக்குளம் ஆலயத்திற்கு முன்பாக செட்டியார் குளம் என்ற ஒரு குளக்காணிக்குள் சுமார் 50 குடும்பங்கள் வரை மரங்களுக்கு கீழே பிள்ளைகளுடன் குடியேறியுள்ளனர்.

MULLIKULAM_MP_VISIT_25-07-2018__7___2_.j

இது வரை குறித்த 50 குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை.

குறிப்பாக அவர்களுக்கு தேவையான உலர் உணவுகள், குடி நீர் வசதி போன்றவை ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.

குறித்த கிராம மக்கள் கடந்த ஒரு வருடத்திற்கு முன் சுமார் 38 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

தமது பூர்வீக காணிகளில் இருந்து கடற்படையினரை வெளியேற்றி தமது சொந்த காணிகளில் குடியேற்ற கோரி குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

போராட்டத்தின் பின் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் ஒரு வருட காலம் கடந்துள்ள நிலையில் இது வரை நிறைவேற்றவில்லை.

MULLIKULAM_MP_VISIT_25-07-2018__6___2_.j

இந்த நிலையில் குறித்த மக்கள் கடந்த ஒரு வராத்திற்கு முன் தமது காணிகளுக்குள் சென்றுள்ளனர்.

தற்போது அந்த மக்கள் இருக்கின்ற இடத்தில் இருந்து சுமார் நூறு மீற்றர் தொலைவில் முள்ளிக்குளம் மக்கள் வியர்வை சிந்தி கட்டிய வீடுகளில் கடற்படையினரும், அவர்களுடைய குடும்பத்தினரும் வசித்து வருகின்றனர்.

ஆனால் குறித்த வீடுகளுக்கு சற்று தொலைவிலே முள்ளிக்குளம் கிராம மக்கள் பற்றைக்காட்டினுள் பல்வேறு துயரங்களுக்கு மத்தியில் வசித்து வருகின்றனர்.

mannar_1.jpg

 ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் சமாதானம் வர வேண்டும் என கூறுகின்ற நிலையில் முள்ளிக்குளம் மக்களினுடைய வீடுகளில் இருக்கின்ற கடற்படையினரை உடனடியாக குறித்த வீடுகளில் இருந்து அகற்றி முள்ளிக்குளம் கிராம மக்களுக்கு அந்த வீடுகள் காணிகள் வழங்கப்பட வேண்டும்.

யுத்தம் முடிவடைந்து 10 வருடங்களாகப் போகின்ற  நிலையில் சொந்த கிராமத்திலே மீளக்குடியேற முடியாத நிலையில் இந்த மக்கள் ஒரு பரிதாபத்திற்கூறிய நிலையிலே இருக்கின்றார்கள்.

ஆகவே இந்த மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.இவ்விடையம் தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் தொடர்பு கொண்டு குறித்த மக்களுக்கு தேவையான தற்காலிக கூடாரங்கள் அமைத்தல்,உலர் உணவு,குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கேட்டுள்ளேன்.

mannar_4.jpg

இந்த மக்கள் மிகவும் பரிதாவமான நிலையிலே உள்ளனர்.

இம்மக்களை அரசாங்கம் உடனடியாக அவர்களின் சொந்த வீடுகளிலும்,சொந்த காணிகளிலும் மீளக் குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் சென்ற குழுவினர் மக்களை சந்தித்து உரையாடியதோடு,பங்குத்தந்தை மற்றும் அருட்தந்தையர்களுடன் உரையாடியமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/37257

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.