Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அபிவிருத்திச் செயலணியின் – கூட்டத்தில் விக்னேஸ்வரன் பங்கேற்பார்!!

Featured Replies

அபிவிருத்திச் செயலணியின் – கூட்டத்தில் விக்னேஸ்வரன் பங்கேற்பார்!!

 

Vigneshwaran-01.jpg

 
 
 
 

வடக்கு –கிழக்கு மாகாண அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கைகளுக்­காக அரச தலை­வ­ரால் உரு­வாக்­கப்­பட்­டுள்ள செய­ல­ணி­யின் முத­லா­வது கூட்­டம் கொழும்­பி­லுள்ள அரச தலை­வர் செய­ல­கத்­தில் இன்று மாலை 3 மணிக்கு நடை­பெ­ற­வுள்­ளது.

செயல­ணி­யின் கூட்­டத்­தில் பங்­கேற்­கப்­போ­வ­தில்லை என்று வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், அரச தலை­வ­ருக்கு கடி­தம் அனுப்­பி­யி­ருந்­தா­லும் இன்­றைய கூட்­டத்­தில் அவர் பங்­கேற்­பார் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

கூட்­டத்­தில் பங்­கேற்று வடக்கு அபி­வி­ருத்திகள் தொடர்­பான விட­யங்­களை முன்­வைப்­பார். இனி­வ­ரும் கூட்டங்­க­ளில் பங்­கேற்­கா­மைக்­கான கார­ணங்­க­ளை­யும் இதன்­போது அவர் வெளிப்­ப­டுத்­து­வார் என்று கூறப்­ப­டு­கின்­றது.

 
 

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­னால் வடக்கு – கிழக்கு மாகாண அபி­வி­ருத்­தி­காக சிறப்­புச் செய­லணி அமைக்­கப்­பட்­டுள்­ளது. 48பேர் செய­ல­ணி­யின் உறுப்­பி­னர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்­கள்.

வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளில் இது­வரை முன்­னெ­டுக்­கப்­பட்ட அபி­வி­ருத்­தித் திட்­டங்­கள் தொடர்­பான விவ­ரங்­க­ளைச் செய­லணி திரட்­டி­யுள்­ளது.

திட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­தும்­போது எதிர்­கொண்ட சவால்­க­ளை­யும் பட்­டி­ய­லிட்­டுள்­ளது. இன்­றைய கூட்­டத்­தில் இந்த விட­யங்­கள் முன்­வைக்­கப்­பட்டு ஆரா­யப்­ப­ட­வுள்­ளது.

இதே­வேளை, அர­சி­யல் தீர்­வின் பின்­னரே அபி­வி­ருத்தி என்று வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தி­ருந்­தார்.

செய­ல­ணி­யின் கூட்­டத்­தில் பங்­கேற்­கப் போவ­தில்லை சில கார­ணங்­க­ளைப் பட்­டி­ய­லிட்டு அரச தலை­வர் மைத்­தி­ரி­பா­ல­வுக்கு கடி­தம் அனுப்­பி­யுள்­ள­தாக கடந்த 11ஆம் திகதி ஊடக அறிக்கை ஊடாக வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தார்.

இருப்­பி­னும் இன்­றைய கூட்­டத்­தில் முத­ல­மைச்­சர் பங்­கேற்­பார் என்று அவ­ருக்கு நெருக்­க­மான வட்­டா­ரங்­கள் தெரி­வித்­துள்­ளன. இதற்­காக கொழும்­பில் முத­ல­மைச்­சர் தங்­கி­யுள்­ளார்.

தனது அதி­கா­ரி­க­ளுக்கு, இன்­றைய கூட்­டத்­துக்­கு­ரிய விட­யங்­க­ளைத் தயார்­ப­டுத்­து­மாறு முத­ல­மைச்­சர் ஏற்­க­னவே பணித்­துள்­ள­தா­க­வும் தெரி­ய­வ­ரு­கின்­றது.

கூட்­டத்­தில் பங்­கேற்­கப் போவ­தில்லை என்று அவ­ச­ரப்­பட்டு முத­ல­மைச்­சர் அறிக்­கையை வெளி­யிட்­டி­ருந்­தார். முத­லா­வது கூட்­டத்­தில் பங்­கு­பற்றி, வடக்கு அபி­வி­ருத்­தி­யின் தேவைப்­பா­டு­களை வலி­யு­றுத்தி, இந்­தச் செய­ல­ணி­யில் தொடர்ந்து பங்­கேற்­கா­மைக்­கு­ரிய கார­ணங்­களை அறி­வித்­து­விட்டு பங்­கேற்­கா­மல் விடு­வதே சிறந்­தது என்று முத­ல­மைச்­ச­ருக்கு சில தரப்­புக்­கள் ஆலோ­சனை வழங்­கி­யுள்­ளன.

வடக்கு அபி­வி­ருத்தி தொடர்­பில் திட்­ட­மி­டு­வ­தற்கு முத­ல­மைச்­சரை அழைத்­தும் அவர் வர­வில்லை என்று அரச தரப்­புக்­கள் தெரி­விக்­கக்­கூ­டும்.

கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் இந்­தச் செய­ல­ணி­யில் உள்­வாங்­கப்­ப­டா­விட்­டா­லும், முத­ல­மைச்­சர் பங்­கேற்­கா­விட்­டால் அந்­தத் தரப்­புக்­கள் ஊடாக அரசு இத­னைக் கையா­ளக்­கூ­டும் என்­றும் முத­ல­மைச்­ச­ருக்கு ஆலோ­சனை வழங்­கிய தரப்­புக்­கள் கூறி­யுள்­ளன. இத­னை­ய­டுத்து அவர் தனது முடிவை மாற்­றிக் கொண்­டுள்­ளார்.

இதற்கு அமை­வாக இன்­றைய கூட்­டத்­தில், பங்­கேற்று வடக்கு அபி­வி­ருத்தி தொடர்­பான திட்­ட­வ­ரைவை முன்­வைப்­ப­து­டன், தான் ஏற்­க­னவே அரச தலை­வ­ருக்கு அனுப்­பிய கடி­தத்­தில் கூறப்­பட்ட விட­யங்­க­ளை­யும் செய­ல­ணிக்­குத் தெரி­யப்­ப­டுத்­து­வார் என்­றும் அறி­ய­மு­டி­கின்­றது.

http://newuthayan.com/story/09/அபிவிருத்திச்-செயலணியின்-கூட்டத்தில்-விக்னேஸ்வரன்-பங்கேற்பார்.html

  • தொடங்கியவர்

செயலணியின் கூட்டத்தை புறக்கணித்த விக்கி

 

 

ஜனாதிபதி தலைமையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பான செயலணியின் கூட்டத்தில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார். 

viki.jpg

ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெறும் இந்த செயலணியில் 48 பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். எனினும் வடக்கை பிரதிநிதித்துவப்படுத்த இரண்டு பிரதிநிதிகள் மாத்திரமே இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் மத்திய அரசாங்கத்தையும் பாதுகாப்பு தரப்பினரையுமே பிரதிநிதித்துவப் படுத்துகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் நான் ஏற்கனவே இரு கடிதங்கள் மூலம் உரிய தரப்பினருக்கு அறிவித்திருந்தேன். எனினும் அவர்கள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாகவே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

http://www.virakesari.lk/article/37506

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.