Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விக்கியின் நடைமுறை பொறுப்பற்றது என்கிறார் ஆனோல்ட்….

Featured Replies

விக்கியின் நடைமுறை பொறுப்பற்றது என்கிறார் ஆனோல்ட்….

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

Vikki-arnold.jpg

 

யாழ்.மாநகர சபை மக்களுக்கு சேவையை நிறைவேற்றுவதற்கு உரிய முறையில் திறம்பட செய்ய விடாது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தடுக்கின்றார் என யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் குற்றம் சுமத்தியுள்ளார்.

மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமலும், மாநகர சபை உறுப்பினர்களின் தேவைகளைக் கருத்தில் கொள்ளாமலும் வடமாகாண உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் ஊடாகவே அவர் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளுகின்றார் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்.மாநகர சபையின் 6 ஆவது அமர்வு இன்று செவ்வாய் கிழமை காலை நடைபெற்று. அதன் போது கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

யாழ். மாநகர சபையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் வடமாகாண உள்ளூராட்சி அமைச்சு நடக்கின்றது. குறிப்பாக அவ்வமைச்சு அனுப்பும் சுற்று நிருபங்கள் ஊடாக இக் கட்டுப்படு விதிக்கப்படுகின்றது. கொழும்பு மாநகர சபையை எடுத்து பார்தால் அவர்கள் மக்கள் சேவையை திறம்பட செய்வதற்க்காக பல வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது.

குறிப்பாக உறுப்பினர்களுக்கான போக்குவரத்து, தொலைபேசி, உபகரண செலவு என்பவை உட்பட பல மேலதிக செலவுகள் வழங்கப்படுகின்றது. ஆனால் யாழ்.மாநகரத்திற்க்கு சேவை செய்யும் உறுப்பினர்களுக்கு இவ்வாறான கொடுப்பனவுகளை மட்டுப்படுத்தியுள்ளது.

வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் இந்த நடவடிக்கையை ஏற்க்க முடியாது. இது போன்று பல விடயம் நடக்கின்றது. எல்லாவற்றையும் சபையில் சொல்ல முடியாது.

உறுப்பினர்களையும், அதிகாரிகளையும் வேலை செய்யாமல் தடுக்கவே இவ்வாறான சுற்று நிருபம் அனுப்பப்படுகின்றது. 30 வருடமாக பின்னோக்கி நலிந்து போயிருக்கும் எங்களை கௌரவ குறைவா நடத்த அனுமதிக்க முடியாது என்றார்.

இதன் போது கருத்து தெரிவித்த யாழ். மாநகர ஆணையாளர் த.ஜெயசீலன், அரச அதிகாரிகள் சுற்று நிருபத்திற்கு உட்பட்டு செயற்படுகின்றவர்கள். சுற்று நிருபத்தை மீறி செயற்பட முடியாது.

எனவே சுற்று நிருபத்தில் மாற்றம் தேவை. அதற்கான நடவடிக்கையினை சபை எடுக்க வேண்டும். ஆனால் சபையால் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு அதிகாரிகள் கட்டுப்பட்டு நடப்பார்கள் என முதல்வர் தெரிவித்தார்.

இதன் போது கருத்து வெளியிட்ட உறுப்பினர் மு.ரெமிடியஸ், வடமாகாண முதலமைச்சர் யாழ்.மாநகர சபையில் உள்ள ஒரு சிலருடைய தனிப்பட்ட வெறுப்பு காரணமாகவே இவ்வாறான செயற்பாடுகளில் தேவையற்ற விதத்தில் ஈடுபடுகின்றார் என்று குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/2018/90140/

3 hours ago, நவீனன் said:

குறிப்பாக உறுப்பினர்களுக்கான போக்குவரத்து, தொலைபேசி, உபகரண செலவு என்பவை உட்பட பல மேலதிக செலவுகள் வழங்கப்படுகின்றது. ஆனால் யாழ்.மாநகரத்திற்க்கு சேவை செய்யும் உறுப்பினர்களுக்கு இவ்வாறான கொடுப்பனவுகளை மட்டுப்படுத்தியுள்ளது.

வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் இந்த நடவடிக்கையை ஏற்க்க முடியாது. இது போன்று பல விடயம் நடக்கின்றது. எல்லாவற்றையும் சபையில் சொல்ல முடியாது.

ஆர்னோல்ட் போன்ற கைக்கூலி அரசியல் செய்யும் திருட்டுக்கு கும்பலுக்கு கொள்ளையடிக்கும் வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிகிறது. 

  • தொடங்கியவர்

கொழும்பு மாநகர சபைக்கு ஈடான சலுகைகள் வேண்டும் TNA – சலுகைகள் வேண்டாம் EPDP – TNPF.

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

offer.jpg
கொழும்பு மாநகர சபை முதல்வர் மற்றும் உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்ற சலுகைகள் யாழ் மாநகர சபை முதல்வர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கையை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈழ மக்கள் ஐனநாயக கட்சி ஆகியன எதிர்ப்பு தெரிவித்துள்ளது யாழ் மாநகர சபையின் ஆறாவது அமர்வு மாநகர மண்டபத்தில் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் நேற்று நடைபெற்றது.

 

இதன் போது முதல்வரின் பயணங்களுக்கான வாகனங்கள் குறித்து சபையில் சர்ச்சகைள் ஏற்பட்டிருந்தன. அதனைத் தொடர்ந்து உறுப்பினர்களுக்கான படிகள் குறித்து உறுப்பினர் தர்சானந்த் சபையில் கேள்வியெழுப்பினார்.

அதாவது கொழும்பு மாநகர சபையில் சம்பளத்துடன் சேர்த்து தொலை பேசி , போக்குவரத்து மற்றும் முத்திரைச் செலவுக்கு என ஒதுக்கீடுகள் வழங்கப்படுகின்றன. அதனை ஏன் எமக்கு இங்கு வழங்குவதில்லை என ஆணையாளரிடம் கேட்டிருந்தார்.

அவ்வாறு வழங்குவதற்கான சுற்று நிருபம் இல்லை என்றும் அது குறித்து நீங்கள் எங்களிடம் கேட்பதை விடுத்து ஒரு தீர்மானமாக நிறைவேற்றுங்கள் அதனை நாங்கள் உரிய இடங்களுக்கு அனுப்பி அதற்குப் பதிலளிக்கின்றோம் என ஆணையாளரும் சபைச் செயலாளரும் பதிலளித்திருந்தனர்.

இதன் போது எழுந்த முன்னணியின் உறுப்பினர் மணிவண்ணண் சலுகைகளுக்கு நாங்கள் ஆதரவை வழங்க முடியாது. இந்த விடயத்திற்கு நாங்கள் எங்களது எதிர்ப்பையே வெளிப்படுத்துகிறோம் என்ற கூறினார்.

இதன் பின்னர் பேசி முன்னணியின் உறுப்பினர் பார்த்தீபன் கொழும்பு மக்களின் வாழ்க்கைத் தரத்தையுமும் எமது மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் பார்க்க வேண்டும் என்றும் கொழும்பு மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருப்பது போன்று எமது மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்த பின்னர் இது குறித்து பேசலாம் என்றார்.

இதனையடுத்து குறித்த விடயத்தை பிரேரனையாக முன்மொழிந்த தர்சானந் இங்கு சிலர் இதனை எதிர்ப்பதாலும் அதே நேரம் பலரும் ஆதரிப்பதாலும் வாக்கெடுப்பிற்கு விட வேண்டுமென்று கோரினார்.

அதற்கு பதிலளித்த முன்னணி மற்றும் ஈபிடிபி ஆகிய கட்சிகள் தாங்கள் இதனை எதிர்ப்பதாகவும் இப்போதைக்கு இது தேவையில்லை என்று கூறியிருந்தன. இதே வேளை கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/2018/90181/

“மனைவிக்கு முன்னால் கேவலப்பட்டு, என்னால் நிற்க முடியாது” என்கிறார் யாழ்.மாநகர முதல்வர்….

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்….

Arnold-800x444.jpg

 

வெளிநாட்டுப் பயணமொன்றை மேற்கொண்ட மாநகர முதல்வருக்கு வாகனத்தை அனுப்பவில்லை என்பதால் மாநகர சபையின் நேற்றைய அமர்வில் பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன.

யாழ் மாநகர சபையின் ஆறாவது அமர்வு மாநகர மாநாட்டு மண்டபத்தில் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்ற போது முதல்வரின் வெளிநாட்டு பயணத்தின் போது வாகனம் வழங்கப்படவில்லை என்ற விடயம் சபையில் எடுத்துக் கொள்ளப்படுகையிலையே பெரும் சர்ச்சகைளும் ஏற்பட்டு குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மாநகர முதல்வர் தனிப்பட்ட விஐயமாக அண்மையில் வெளிநாடு சென்றார். அந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு மீளவும் கொழும்பிற்கு வந்த முதல்வரை ஏற்றுவதற்கு மாநகர சபையால் முதல்வரின் வாகனம் அனுப்பப்படவில்லை. இதனால் முதல்வருக்கு ஏன் வாகனம் அனுப்பப்படவில்லை என்று கூட்டமைப்பு மற்றும் ஈபிடிபி உறுப்பினர்கள் சபையில் கேள்வியெழுப்பியிருந்தனர்.

அதற்கு உள்ளுராட்சி அமைச்சின் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் உள்ளுராட்சி ஆணையாளரின் உத்தரவிற்கமைய முதல்வரின் தனிப்பட்ட பயணங்களுக்கு வாகனத்தை அனுப்ப முடியாது என்று அதிகாரிகளினால் விளக்கமளிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக் கொள்ளாத முதல்வர் உள்ளிட்ட கூட்டமைப்பின் உறுப்பினர்களும் ஈபிடிபியின் உறுப்பினர்களும் முதல்வருக்கான மரியாதையை வழங்க வேண்டும் என்றும் முதல்வருக்கு வழங்கும் மரியாதையே இந்தச் சபைக்கு வழங்கும் மரியாதை எனத் தெரிவித்து அதிகாரிகளிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

மேலும் முதல்வருக்க மரியாதையளித்து அவருக்கான வாகனம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வாகனம் வழங்கப்படாததால் நடுவழியில் முதல்வர் அவஸ்தைப்பட்டுள்ளார். ஆகவே மாநகர சபையின் முதல்வருக்கும் இந்தச் சபைக்கும் அதிகாரங்கள் சலுகைகள் வழங்கப்பட வேண்டும். அதனை யாரும் தனிப்பட்ட காரணங்களுக்காக தடுத்து நிறுத்தக் கூடாதென்றும் ஈபிடிபி மற்றும் கூட்டமைப்ப உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

இதன் போது எழுந்த முன்னணியின் உறுப்பினர் மணிவண்ணண் சட்டத்தின்பிரகாரம் அனைத்தும் நடைபெற வேண்டும். அதனை மீறி இலஞ்சம் ஊழல் இருக்கக் கூடாது. முதல்வரின் தனிப்பட்ட விஐயத்திற்கு வழங்கப்பட முடியாதென்று சுற்று நிரூபத்தில் இருந்தால் வழங்கப்பட கூடாது தான். ஒருவர் பிழை செய்கின்றார் என்பதற்காக மற்றவர்களும் பிழை செய்யக் கூடாது என்றார்.

இதற்குப் பதிலளித்த முதல்வர் ஆர்னோல்ட் என்னால் நடிக்க முடியாது. ஏனெனில் ஒருக்கா மாநகர முதல்வராகவும் இன்னொருக்கா ஆர்னோல்ட்டாகவும் செயற்பட முடியாது.

மனைவிக்கு முன்னால் கேவலப்பட்டு நிற்க கூடாதென்பதற்காகவே வாகனம் கோரினேன் .அது கிடைக்காது என்பதை உணர்ந்து மாற்றுவழியை ஏற்படுத்தினேன். ஆனால் மாநகர முதல்வர் சைக்கிளிலும் வருவார் நடந்தும் வருவார் என்பதையும் தெரிவித்தக் கொள்கிறேன்.

இதன் போது கருத்து வெளியிட்ட சபையின் செயலாளர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் அரச சுற்று நிருபங்களுக்கமைவே தம்மால் செயற்பட முடியுமென்றும் அதனை மீறி தம்மால் செயற்பட முடியாதென்றும் குறிப்பிட்டனர்.

அவ்வாறு சுற்று நிருபத்தை மீறிச் செயற்படுகின்றதற்கு அரச அதிகாரிகள் ஒரு போதும் பொறுப்பெடுக்க முடியாதென்றும் அதற்கான பொறுப்பை சபையே எடுக்க வேண்டுமென்றும் தெரிவித்தனர்.

இவ்வாறு கூட்டமைப்ப மற்றும் ஈபிடிபியினர் முதல்வரின் பயணங்களுக்கு வாகனம் வழங்கப்பட வேண்டுமென்றும் அதிகாரிகள் சுற்று நிருபத்திற்கமையவே செயற்பட முடியுமென்றும் தெரிவிக்க தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சட்டத்திற்கமையவே செயற்பட வேண்டுமென்றும் வலியுறுத்தினர்.

இவ்வாறு தான் முதல்வரின் வாகனம் மற்றும் அவரின் பயணங்கள் தொடர்பில் நேற்றைய அமர்வில் சுட்டிக்காட்டப்பட்டு பலரும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு மாநகர சபை தங்கம் என்றால் யாழ் மாநகர சபையும் தங்கமாக தான் இருக்க வேண்டும் – யோகேஸ்வரி பற்குணராசா-

கொழும்பு மாநகர சபை தங்கம் என்றால் யாழ் மாநகர சபையும் தங்கமாக தான் இருக்க வேண்டுமென யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் தற்போதைய உறுப்பினருமான யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார்.

யாழ் மாநகர சபையின் ஆறாவது அமர்வு மாநாகர மாநாட்டு மண்டபத்தில் மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன் போது முதல்வருக்கான அதிகாரங்கள் சலுகைகள் குறித்து கருத்து தெரிவிக்கையிலையே யோகேஸ்வரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

எமது சபையின் முதல்வர் வெளிநாடு சென்று வரும் போது வாகனமில்லாமல் அவதிப்பட்டுள்ளார். அவருக்கு வாகனம் அனுப்பி வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு வாகனம் அனுப்பப்படாது தடுக்கப்பட்டிருக்கின்றது. முதல்வர் முதல்வராக மதிக்கப்பட்டு அவருக்குரிய அதிகாரங்களும் சலுகைகளும் வழங்கப்பட வேண்டும்.

இங்கு எல்லாத்திற்கும் சுற்று நிருபம் இருக்கின்றது என்றும் அதனடிப்படையில் தான் செய்ய முடியுமெனக் கூறுவதானால் ஏனைய மாநகரங்களில் அவ்வாறு தான் இருக்கின்றதா என நாங்கள் பார்க்க வேண்டும். ஏனெனில் கொழும்புமாநகர முதல்வருக்கு சகல வசதிகளும் செய்த கொடுக்கப்பட்டு சலுகைகளும் வழங்கப்பட்டு இருக்கின்றன.

ஆகவே கொழும்பு மாநகர சபை தங்கமாக இருந்தால் யாழ்ப்பாண மாநகர சபையும் தங்கமாகவே இருக்க வேண்டும் என்றார். இதன் போது எழுந்த மாநகர சபை ஆணையாளர் யாழ் மாநகர சபையும் தங்கமாகவே தான் இருக்க வேண்டும் தகரமாக இருக்கக் கூடாதென்று குறிப்பிட்டார்.

 

http://globaltamilnews.net/2018/90179/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.