Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கபில் தேவ், கவாஸ்கர், சித்து, ஆமீர்கான் ஓ.கே - பரிசீலனையில் மோடி உள்ளிட்ட சார்க் தலைவர்கள்

Featured Replies

கபில் தேவ், கவாஸ்கர், சித்து, ஆமீர்கான் ஓ.கே - பரிசீலனையில் மோடி உள்ளிட்ட சார்க் தலைவர்கள்

 

 

பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்கும் விழாவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களை அழைக்கலாமா? என்ற ஆலோசனையில் வெளியுறவு துறை ஈடுபட்டுள்ளது. #ImranKhan #Pakistan

 
 
 
 
கபில் தேவ், கவாஸ்கர், சித்து, ஆமீர்கான் ஓ.கே - பரிசீலனையில் மோடி உள்ளிட்ட சார்க் தலைவர்கள்
 
இஸ்லாமாபாத்:
 
பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் அதிக இடங்கள் வென்ற இம்ரான்கானின் பிடிஐ கட்சி சிறிய கட்சிகள் உதவியுடன் ஆட்சியமைக்க உள்ளது. வரும் 11-ம் தேதி இம்ரான்கான் பிரதமராக பதவியேற்க உள்ளார். பதவியேற்புக்கான வேலைகள் ஜரூராக நடந்து வருகின்றன.
 
ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் இதற்கான பணியில் தீயாய் வேலை செய்து வருகின்றன. சீனா, துருக்கி நாட்டு தலைவர்கள் வருகை தருவது உறுதியாகிவிட்டது. மோடி பிரதமராக பதவியேற்கும் போது தெற்காசிய கூட்டமைப்பு (சார்க்) நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். 
 
அதேபோல, இம்ரான்கானும் இந்தியா உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களை அழைக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இதனால், அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் இதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறது. அழைப்பை ஏற்றுக்கொண்டு விழாவுக்கு வந்தால் சிக்கல் இல்லை. ஆனால், வராமல் புறக்கணித்துவிட்டால் அவமானம் என்பதால் மிகுந்த ஆலோசனைகள் நடந்து வருகிறது.
 
201808012231048823_1_imran22._L_styvpf.jpg
 
கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இம்ரான்கான் தனது விளையாட்டு காலத்தில் விளையாடிய இந்திய முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர், கபில் தேவ், சித்து ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதேபோல, பாலிவுட் நடிகர் ஆமீர்கானுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
எனினும், அவர்கள் பங்கேற்பது உறுதியாக தெரியவில்லை. சமீபத்தில் இம்ரான்கானை தொடர்புகொண்டு பேசிய மோடி, தேர்தல் வெற்றிக்கு தனது வாழ்த்துக்களை கூறியிருந்தார். இதனால், மோடியை நிகழ்ச்சிக்கு அழைக்கலாம் என்றே இம்ரான்கான் முடிவு செய்துள்ளார்.
 
அழைப்பை ஏற்று அங்கே சென்றால் சிவசேனா உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பை தெரிவிக்கலாம் என்பதால், வெறும் வாழ்த்து மட்டும் மோடி கூறவும் வாய்ப்பு உள்ளது. திடீரென விமானத்தை எடுத்துக்கொண்டு இஸ்லாமாபாத் சென்று இம்ரான்கானை கட்டி தழுவி வாழ்த்து கூறவும் வாய்ப்பு உள்ளது.

https://www.maalaimalar.com/News/World/2018/08/01223105/1181046/Kapil-Dev-Sunil-Gavaskar-Aamir-invited-for-Imran-Khan.vpf

  • தொடங்கியவர்

பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு அரசு இல்லத்துக்கு மாறுகிறார் இம்ரான் கான்

 
 
imran1jpg

பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு, அரசு இல்லத்துக்கு மாற இம்ரான் கான் ஒப்புக் கொண்டுள்ளார்.

பாகிஸ்தானில் கடந்த 25-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. இதில் முன்னாள் கிரிக்கெட் கேப்டனும் அரசியல்வாதியுமான இம்ரான் கானின், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியது. எனினும், ஆட்சி அமைக்க போதிய பலம் இல்லை. எனவே, சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் இம்ரான் கான் ஆட்சி அமைக்கிறார். வரும் 11-ம் தேதி பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான் பதவியேற்க உள்ளார்.

 

இதற்கிடையில் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு நாட்டு மக்களிடம் இம்ரான் உரையாற்றும் போது, ‘‘பாகிஸ்தானில் பிரதமருக்கு வழங்கப்படும் மிகப் பெரிய பங்களாவில் தங்க மாட்டேன். அரசு செலவுகளைக் குறைப்பேன். எளிமையாக இருப்பேன்’’ என்று தெரிவித்தார்.

தற்போது இஸ்லாமாபாத்தின் பனிகாலா பகுதியில் இம்ரான் வசிக்கிறார். அந்த இடம் பாதுகாப்புக்கு சரியானதாக இல்லை என்று உயரதிகாரிகள் எடுத்துரைத்துள்ள

னர். அத்துடன், சில யோசனைகளையும் தெரிவித்துள்ளனர். அதன்படி, இஸ்லாமாபாத்தில் அமைச்சர்கள் என்கிளேவ் பகுதியில் தங்க இம்ரான் ஒப்புக் கொண்டார். எனினும், பிளாட் போதும் என்று கூறியிருக்கிறார். அதையும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஏற்கவில்லை.

இதையடுத்து, அமைச்சர்கள் என்கிளேவ் பகுதியில் ஆடம்பரம் இல்லாத தனி வீட்டில் தங்க இம்ரான் ஒப்புக் கொண்டுள்ளார். தற்போது இம்ரான் கானுக்கு உச்ச கட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று ‘டான்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

https://tamil.thehindu.com/world/article24578695.ece

  • தொடங்கியவர்

இம்ரான் கான் முடிவில் திடீர் மாற்றம்: பதவியேற்பு விழாவில் பங்கேற்க வெளிநாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பில்லை

 

 

 
imran%20khanjpg

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க  வெளிநாட்டுத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கும் முடிவு கைவிடப்பட்டது.

பாகிஸ்தானில் கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பிடிஐ கட்சி, அதிக இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் ஆட்சியமைக்க போதுமான இடங்களை அந்தக் கட்சியால் பெற முடியவில்லை.

 
 

இந்த நிலையில் மற்ற கட்சிகளின் உதவியுடன் ஆட்சியமைக்க இம்ரான் கான் முடிவு செய்துள்ளார். ஆகஸ்ட் 11-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. பதவியேற்பு விழாவுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் அழைக்க இம்ரான் கான் முடிவு செய்தார்.

சார்க் நாடுகளின் தலைவர்களையும், பிரதமர் மோடியையும் பதவியேற்பு விழாவுக்கு அழைக்க அவர் விரும்பினார். எனினும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதி தேவை என்பதால் அதுதொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. வெளிநாட்டுத் தலைவர்கள் வருகைக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து உள்ளூர் தலைவர்களை மட்டும் அழைத்து பதவியேற்பு விழாவை எளிமையாக நடத்த பிடிஐ கட்சி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பவேத் சவுத்திரி கூறுகையில் ‘‘பதவியேற்பு விழாவுக்கு உலக நாடுகளின் தலைவர்களை அழைக்க முன்பு திட்டமிட்டோம். ஆனால் தற்போது விழாவை சிறிய அளவில் நடத்த முடிவு செய்துள்ளோம்.

உள்ளூர் தலைவர்கள் மட்டுமே இந்த நிகழச்சியில் பங்கேற்பார்கள், அதிபர் மாளிகையில் எளிமையாக விழா நடைபெறும். எனினும் இம்ரான் கான் வெளிநாடுகளைச் சேர்ந்த சில நண்பர்களுக்கு தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்துள்ளார்’’ எனக் கூறினார்.

இம்ரான் கான், இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களான சுனில் கவாஸ்கர், கபில்தேவ், நவஜோத்சிங் சித்து, இந்தி நடிகர் அமீர்கான் ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இம்ரான் கான் விடுத்த அழைப்பை சித்து ஏற்றுக் கொண்டா

https://tamil.thehindu.com/world/article24580519.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.