Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''கரும்பவாளி'' காலத்தின் தேவை ; ஆவணப்படம் திரையிடல்!

Featured Replies

38085383_1580400522086700_1025643589058691072_n.jpg?_nc_cat=0&oh=ff17985514851ad9e4f99c722d8f3c76&oe=5BC532BA

யாழ். பொதுசன நூலகக் குவிமாட கேட்போர் கூடத்தில் ஓகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 03:30  மணிக்கு ''கரும்பவாளி'' ஆவணப்படம் திரையிடப்படவுள்ளது.
 
 
மரபுரிமைகளைப் பேணுவதற்கும் அவற்றை மீளப்பயன்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கும் இருக்கின்ற காலத்தின் தேவையைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வரலாறு பற்றித் தேடல்களை முன்னெடுக்கவுமான ஒரு பயணமாக  கரும்பவாளி அமைந்துள்ளது.
 
கரும்பவாளி எனப்படும் இந்த ஆவணப்படமானது, உடுப்பிட்டிப் பகுதியில் இருநூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்த வீராத்தை எனும் பெண் அந்தக் கிராமத்திற்கு கேணிகளையும், ஆவுரஞ்சிக் கற்களையும், தண்ணீர்ப்பந்தலையும் தானங்களாக அமைத்துக் கொடுத்துள்ளமையையும், மந்தை வளர்ப்பை வாழ்வாதாரமாகக் கொண்ட குறித்த கிராமத்தின் மக்களுக்காக வீராத்தை செய்திருக்கும் பணிகளையும், அதைக் குறித்ததாக அந்தக் கிராமத்தில் நிகழும் வாய்மொழி வழக்காறுகளையும் ஆய்வு ரீதியிலான தகவல்களையும் திரட்டி ஆவணமாக்கும் முயற்சியோடு  வசீகரன் சுசீந்திரகுமார் அவர்களால் 25 நிமிடங்களை உள்ளடக்கி எடுக்கப்பட்டுள்ள ஆவணப்படமாகும்.
 
நமது மரபுரிமைகளைப் பேணவும், ஆவணப்படுத்தவும் அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்தவுமான பயணத்தின் ஒரு கீற்றை இந்த ஆவணப்படம் வெளிக்காட்டியுள்ளது.
 
இந்த நிலையில், நமது சமூகத்திற்குள் உரையாடலுக்குக் கொண்டு வரும் முயற்சியாக கரும்பவாளி ஆவணப்படத்தின் திரையிடல் யாழ். பொதுசன நூலகக் குவிமாட கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளதுடன், இவ் ஆவணப்பட திரையிடலில் ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்வதுடன் உங்கள் உள்ளீடுகளையும் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
ஒவ்வொரு பிரதேசங்களிலும் முன்னைய காலப்பகுதிகளுக்குள் வாழ்ந்தவர்கள் நமக்கான ஏதோவொரு வரலாற்று தடையங்களை விட்டுச்சென்றுள்ளனர். 
 
அவ்வாறாக அவர்கள் பேணி பாதுகாத்த மரபுரிமைகளையும், சமூகத்தின்பால் அவர்கள் கொண்டிருந்த நேசத்தையும் புரிந்து கொள்வதோடு மட்டுமன்றி, இன்றைய தலைமுறையினரான நாம் கடந்து கொண்டிருக்கிற காலப்பகுதியிலே பல வழக்காறுகள் மருவி வருவதை கண்கூடாக கண்டுகொண்டிருக்கின்றோம். 
 
ஆகையால், இவ்வாறான வரலாற்று தடையங்களை, காலத்தின் தேவைகளை, பழக்கவழக்கங்களை எம் எதிர்கால சந்ததியினருக்காக கொண்டு செல்ல வேண்டிய கடமை நிச்சயம் நம் அனைவரிடமும் உள்ளது.
 
எனவே, ஒவ்வொருவரும் உங்கள் பிரதேசங்களில் இருந்து இவ்வாறான தேடல்களை, மரபுரிமைசார் விடையங்களை ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவீர்களானால் நிச்சயம் வரலாற்று ஆவணங்கள் பாதுகாக்கப்படும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.