Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்ள மக்­களின் பாது­காப்பு

Featured Replies

கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்ள மக்­களின் பாது­காப்பு

sa01-88ef4d9da0c1184f1c8ce3817c58a4a210bf5382.jpg

 

 -என்.கண்ணன்

ஊட­கங்கள் கூறு­வது போன்று வடக்கில் மோச­மான நிலை இல்லை, என்ற அவ­ரது கருத்து அபத்­த­மா­னது. ஏனென்றால், ஊட­கங்கள் நடக்­காத ஒன்றைச் செய்­தி­யாக்­க­வில்லை.

நடந்த சம்­ப­வங்­களை செய்­தி­யாக்­கு­கின்ற போது, ஒரே நாளில் ஒன்­றுக்கு மேற்­பட்ட குற்­றங்கள் இடம்­பெறும் போது அல்­லது அடுத்­த­டுத்து இத்­த­கைய சம்­ப­வங்கள் தொடரும் போது, அதனை பார­தூ­ர­மா­கவே மக்கள் பார்ப்­பார்கள் என்­பது வெளிப்­படை.

ஓரிரு சம்­ப­வங்­களை வைத்துக் கொண்டு ஊட­கங்­களால் ஒன்­றையும் ஊதிப் பெருப்­பித்து விட முடி­யாது. அதே­வேளை, தொடர்ச்­சி­யான சம்­ப­வங்கள் நடக்கும் போது, அதனை ஒரு சமூகப் பிரச்­சி­னை­யாக வெளிப்­ப­டுத்த வேண்­டிய கடப்­பாடு ஊட­கங்­க­ளுக்கு ஏற்­ப­டு­கி­றது.

யாழ்ப்­பாணக் குடா­நாட்டு நிலை­மை­களைப் பார்த்தால், தடி­யெ­டுத்­தவன் எல்லாம் தண்­டல்­காரன் என்­பது போலாகி விட்­டது. எதற்­கெ­டுத்­தாலும், வாள், கத்தி, கோடரி என்று ஆயு­தங்­களைத் தூக்கிக் கொள்­வது வழக்­க­மாகி விட்­டது.

குடும்பச் சண்­டை­க­ளிலும், தெருச்­சண்­டை­க­ளிலும், திட்­ட­மிட்ட குற்­றங்­க­ளிலும் வாள்­வெட்டு என்­பது சாதா­ர­ண­மான ஒன்­றாக மாறி வரு­கி­றது.

எங்­கா­வது வாள்­வெட்டு இடம்­பெற்றால், உடனே அது ஆவா குழு, வாள்­வெட்டுக் குழு என்று கதையும் பரவி விடு­கி­றது.

1980 களின் தொடக்­கத்தில், இருந்து நடுப்­ப­குதி வரை­யான கால­கட்­டத்தில், வடக்கில் அதி­க­ளவு, ஆயுதப் போராட்ட அமைப்­புகள் செயற்­பட்­டன.

எல்­லாமே தமி­ழீ­ழத்தை அமைக்கப் போவ­தாக சொல்லி இயங்­கி­யவை தான்.

எங்­கா­வது சில பெயர்­களில் சுவ­ரொட்­டிகள் ஒட்­டப்­பட்­டி­ருக்கும். அதை வைத்துத் தான் இப்­படி ஒரு அமைப்பும் இருக்­கி­றது என்று தெரிய வரும்.

உண்­மையில் எத்­தனை இயக்­கங்கள் இருந்­தன, அவற்றின் தலை­வர்கள் யார், எத்­தனை பேர் அவற்றில் இருந்­தனர், பின்னர் அவர்கள் எல்­லோரும் என்­ன­வா­னார்கள் என்று கூடத் தெரி­யாது.

ஆனால் தாமும் விடு­தலைப் போரா­ளிகள், இயக்கம் என்று மக்கள் முன் நட­மா­டி­னார்கள். தாமும் ஆயு­தங்­களை வைத்­தி­ருக்­கிறோம் என்று, மக்கள் முன் காட்­டு­வ­தற்­காக, இடுப்பில் பனங்­கொட்­டையை (ஊமல்) வைத்துக் கொண்டும் நாட­க­மா­டி­னார்கள்.

அந்தக் கால­கட்­டத்தில், யாரு­டைய இடுப்­பி­லா­வது, சேர்ட் கொஞ்சம் வீங்­கி­ய­படி இருந்தால், அவரை இயக்­க­மாகப் பார்க்­கின்ற ஒரு­போக்கு இருந்­தது. இடுப்பில் கிரனேட் இருக்­கலாம் என்ற கணிப்பே அது. அவ்­வா­றா­ன­வர்கள் எல்­லோரும் இயக்­க­மா­கவே தென்­பட்­டார்கள்.

அது­போ­லவே, இப்­போது, எங்கு வாள்­வெட்டு நடந்­தாலும், ஆவா குழு. அந்தக் குழு, இந்தக் குழு என்று அடை­யா­ளப்­ப­டுத்­து­வது ஒரு வேலை­யாகி விட்­டது.

இந்தப் பெயர்­சூட்­ட­லுக்குப் பின்னால் ஊட­கங்கள் தான் இருக்­கின்­றன என்ற குற்­றச்­சாட்­டு­களும் கூட சில காலத்­துக்கு முன்னர் இருந்­ததை மறந்து விட முடி­யாது.

அண்­மையில், பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றிய, சட்டம் ஒழுங்கு இரா­ஜாங்க அமைச்சர் நளின் பண்­டார, ஊட­கங்­களில் செய்­திகள் வெளி­யா­வது போன்று, யாழ்ப்­பா­ணத்தில் நிலை­மைகள் ஒன்றும் மோச­மாக இல்லை என்று கூறி­யி­ருந்தார்.

சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்­தும பண்­டார மற்றும் பொலிஸ் மா அதி­ப­ருடன் வடக்கில் அதி­க­ரித்­தி­ருந்த வன்­மு­றைகள் குறித்து நேரில் ஆராய்ந்த பின்­னரே, அவர் அவ்­வாறு குறிப்­பிட்­டி­ருந்தார்.

ஊட­கங்கள் கூறு­வது போன்று வடக்கில் மோச­மான நிலை இல்லை, என்ற அவ­ரது கருத்து அபத்­த­மா­னது. ஏனென்றால், ஊட­கங்கள் நடக்­காத ஒன்றைச் செய்­தி­யாக்­க­வில்லை.

நடந்த சம்­ப­வங்­களை செய்­தி­யாக்­கு­கின்ற போது, ஒரே நாளில் ஒன்­றுக்கு மேற்­பட்ட குற்­றங்கள் இடம்­பெறும் போது அல்­லது அடுத்­த­டுத்து இத்­த­கைய சம்­ப­வங்கள் தொடரும் போது, அதனை பார­தூ­ர­மா­கவே மக்கள் பார்ப்­பார்கள் என்­பது வெளிப்­படை.

ஓரிரு சம்­ப­வங்­களை வைத்துக் கொண்டு ஊட­கங்­களால் ஒன்­றையும் ஊதிப் பெருப்­பித்து விட முடி­யாது. அதே­வேளை, தொடர்ச்­சி­யான சம்­ப­வங்கள் நடக்கும் போது, அதனை ஒரு சமூகப் பிரச்­சி­னை­யாக வெளிப்­ப­டுத்த வேண்­டிய கடப்­பாடு ஊட­கங்­க­ளுக்கு ஏற்­ப­டு­கி­றது.

அதனை செய்யும் போது தான், இது ஊட­கங்­களின் வம்பு வேலை­யாக அர­சாங்­கத்­துக்குத் தென்­ப­டு­கி­றது.

குடா­நாட்டில் அண்­மைக்­கா­லங்­க­ளாக வன்­மு­றை­களும், சமூக விரோதச் சம்­ப­வங்­களும் அதி­க­ரித்த போது, அதனைக் கட்­டுப்­ப­டுத்த அர­சாங்கம் உரிய நட­வ­டிக்கை எடுக்­க­வு­மில்லை. தடுக்­க­வு­மில்லை.

ஆனால், புலி­களின் காலத்தில் இப்­ப­டி­யெல்லாம் நடக்­க­வில்­லையே என்று அங்­க­லாய்த்த போது, அதுவும் அர­சாங்­கத்­துக்குப் பிடிக்­க­வில்லை. ஒவ்­வொ­ருத்­தரும் ஒவ்­வொன்றைச் சொல்லி புது விளக்கம் கொடுத்­தார்கள். ஊட­கங்கள் இதனை பெரிய விட­ய­மாக காண்­பித்த போது அதையும் அர­சாங்­கத்­தினால் பொறுத்­துக்­கொள்ள முடி­ய­வில்லை.

கடந்த ஜூன் மாத பிற்­ப­கு­தியில் அடுத்­த­டுத்து நடந்த பல சம்­ப­வங்கள், குடா­நாட்டைப் பீதியில் உறைய வைத்­தி­ருந்­தது.

அப்­போது, அதற்கு எதி­ராக மிகப் பெரி­யவில் ஊட­கங்கள் குரல் கொடுத்­தன. ஆனாலும் மிக ஆறு­த­லாக – கொழும்பில் இருந்து யாழ்ப்­பா­ணத்தைப் பார்க்க வந்­தது அமைச்­சர்கள் குழு.

பொடி நடை­யாக கொழும்பில் இருந்து வந்­தி­ருந்தால் கூட, இன்னும் விரை­வாக வந்து சேர்ந்­தி­ருக்­கலாம்.

ஜூன் மாத பிற்­ப­கு­தியில் தீவி­ர­ம­டைந்த வன்­முறைச் சம்­ப­வங்கள் குறித்து ஆராய ஜூலை மாத நடுப்­ப­டு­தியில் தான் கொழும்பில் இருந்து அமைச்­சர்­களும், பொலிஸ்மா அதி­பரும் வந்­தனர்.

அவர்கள் வந்து நின்ற போதே, தென்­ம­ராட்­சியில் வாள்­வெட்டுச் சம்­பவம் நிகழ்ந்­தது. அதற்குப் பின்­னரும் அத்­த­கைய சம்­ப­வங்கள் தொடர்ந்து வரு­கின்­றன.

கடந்­த­வாரம், ஒரே நாளில் ஐந்து, ஆறு சம்­ப­வங்கள் நடக்கும் அள­வுக்கு நிலைமை மோச­ம­டைந்­தி­ருக்­கி­றது. கிரா­ம­சே­வ­கரின் கழுத்தில் வாளை வைத்து அச்­சு­றுத்தும் அள­வுக்கு எல்லை மீறி­யி­ருக்­கி­றது.

ஆனாலும் அர­சாங்கம் எதையும் கண்டு கொள்­வ­தா­கவோ, அலட்டிக் கொள்­வ­தா­கவோ தெரி­ய­வில்லை.

சட்டம், ஒழுங்கு அமைச்­சரும், பொலிஸ் மா அதி­பரும் யாழ்ப்­பாணம் வந்து, சமூக விரோதச் செயல்­களை ஒடுக்கும் நட­வ­டிக்­கையில் விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரை அதி­க­ளவில் ஈடு­ப­டுத்­து­வ­தற்கு முடிவு செய்து விட்டுச் சென்ற பின்­னரும், அத்­த­கைய செயல்கள் முடிவு கட்­டப்­ப­ட­வில்லை.

இதனால் எங்­கி­ருந்து இந்தப் பிரச்­சினை முளைக்­கி­றது என்ற நியா­ய­மான கேள்வி மக்கள் மத்­தியில் எழு­கி­றது. யாரு­டைய துணை இவர்­க­ளுக்கு இருக்­கி­றது என்ற சந்­தேகம் எழு­கி­றது.

வடக்­கிற்கு கள ஆய்வுப் பய­ணத்தை மேற்­கொண்ட பின்னர், சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்­தும பண்­டார, இரா­ஜாங்க அமைச்சர் நளின் பண்­டார, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் திரும்பத் திரும்ப ஒரே விட­யத்தை கூறி­யி­ருந்­தனர்.

“ யாழ்ப்­பா­ணத்தில் வன்­முறைச் சம்­ப­வங்கள் ஒன்றும் அதி­க­ரிக்­க­வில்லை. வடக்கில் வாள்­வெட்­டு­களில் ஈடு­ப­டு­ப­வர்கள் ஒன்றும் தீவி­ர­வாதக் குழுக்கள் அல்ல. அவர்கள் தென்­னிந்­திய திரைப்­ப­டங்­களின் தாக்­கத்­தினால் வாள்­களை கையில் ஏந்­திய 17- 18 வய­துள்ள சிறு­வர்கள் தான். இவர்கள் யாரையும் கொல்­ல­வில்லை. சிறி­ய­ளவில் காயத்தை ஏற்­ப­டுத்தும் தாக்­கு­தல்­களை தான் நடத்­தி­யி­ருக்­கி­றார்கள்.” என்­றெல்லாம் அர­சாங்க அமைச்­சர்கள் கூறி­யி­ருந்­தனர்.

வடக்கில் வாள்­வெட்­டுகள் போன்ற வன்­மு­றையில் ஈடு­ப­டு­ப­வர்­களை யாரும் தீவி­ர­வா­திகள் அல்­லது பயங்­க­ர­வா­திகள் என்று கூற வர­வில்லை. தெற்கில் வேண்­டு­மானால் அத்­த­கைய அபத்­த­மான கருத்து பரப்­பப்­பட்­டி­ருக்­கலாம்.

வாள்­வெட்­டு­களில் ஈடு­படும் இளை­ஞர்கள், உணர்ச்சி வேகத்தில் செயற்­ப­டு­ப­வர்­க­ளாக மாத்­திரம் இருக்­க­வில்லை.

சமூக விரோதச் செயற்­பா­டு­களில், ஈடு­படும் அவர்­களை தடுப்­பதில், அல்­லது கட்­டுப்­ப­டுத்­து­வதில், அர­சாங்கம் அக்­கறை காண்­பித்­தி­ருந்தால், இன்று அரச அதி­கா­ரி­களின் கழுத்தில் வாளை வைக்கும் நிலை வந்­தி­ருக்­காது.

வாள்­வெட்டுக் குழுக்கள் என்று மக்கள் அஞ்­சு­கின்ற நிலை இன்று தோன்­றி­யி­ருக்­கி­றது. வீதி­களில் நட­மா­டு­வ­தற்கு மாத்­தி­ர­மன்றி - வீடு­க­ளுக்குள் இருக்­கவே பயப்­படும் நிலை வந்­தி­ருக்­கி­றது.

இரவில் தான் இந்த நிலை என்­றில்லை. இப்­போது பட்­டப்­ப­கலில் கூட தைரி­ய­மாக வாள்­க­ளுடன் மோட்டார் சைக்­கிள்­களில் வந்து தாக்கி விட்டுச் செல்லும் அள­வுக்கு வடக்கின் பாது­காப்பு இருக்­கி­றது.

சாதா­ரண மக்­களை நோக்கி நடத்­தப்­படும் வன்­மு­றைகள் மக்­களின் அதி­க­பட்ச பொறு­மைக்கு சோத­னை­யாக மாறி வரு­கி­றது.

ஆனால் அர­சாங்­கமோ இது சிறு­வர்­களின் விளை­யாட்டு, தென்­னிந்­திய படங்­களின் தாக்கம் என்று விளக்கம் கொடுத்துக் கொண்­டி­ருக்­கி­றது.

தென்­னிந்­தியத் திரைப்­ப­டங்­களில் மாத்­திரம் வன்­முறைக் காட்­சிகள் இல்லை. எல்லா மொழிப்­ப­டங்­க­ளிலும் அத்­த­கைய காட்­சிகள் இருக்­கின்­றன. அது பல­கா­ல­மா­கவே இத்­த­கைய படங்கள் வந்து கொண்டு தான் இருக்­கின்­றன.

திடீ­ரென இப்­போது தான் அது யாழ்ப்­பாண இளை­ஞர்கள் மத்­தியில் ஊறிப் போயி­ருப்­பது போல அர­சாங்கம் நியா­யப்­ப­டுத்­து­கி­றது.

சரி, அப்­ப­டியே இருந்­தாலும், வன்­முறைக் குழுக்கள் உரு­வா­கும்­போது அதனைக் கட்­டுப்­ப­டுத்தும் அவ­சியம் அர­சாங்­கத்­துக்கு இல்­லையா?

சட்டம், ஒழுங்கு சீர் கெட்டுப் போகி­றதே என்று குரல் கொடுக்கும் ஊட­கங்­களின் வாயை அடைக்கத் தெரிந்த அர­சாங்கம், அத்­த­கைய செயல்­களைக் கட்­டுப்­ப­டுத்தும் திரா­ணி­யற்­றி­ருக்­கி­றதே.

வாள்­வெட்டுக் குழுக்­களின் பீதியில் உறைந்­தி­ருக்­கின்ற மக்­களை இப்­போது, குள்ள மனி­தர்­களும் அச்­சு­றுத்த ஆரம்­பித்­தி­ருக்­கி­றார்கள். அப்­படி ஒன்­று­மில்லை என்று பொலிஸ் தரப்பு கூறி­னாலும் மக்கள் மிரண்டு போயி­ருக்­கி­றார்கள்.

யாழ்ப்­பா­ணத்தை எப்­போதும் பர­ப­ரப்­பாக -பயத்தில் உறைய வைத்திருக்க வேண்டும் என்பதில் அரசாங்கமும் கூட ஆசைப்படுகிறது போலத் தெரிகிறது.

முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் கிறிஸ் பூதங்கள் மக்களின் வீடுகளுக்குள் நுழைந்து பெண்களையும் சிறுவர்களையும் பயமுறுத்தினார்கள். துரத்திச் சென்றால் படைமுகாம்களுக்குள் ஓடி ஒளிந்தார்கள். கடைசியில் அது அரசாங்கத்துக்கே ஆபத்தாக வந்து முடிந்தது.

மீண்டும் அதேபோன்று இப்போது குள்ள மனிதர்கள் கிளம்பியிருக்கிறார்கள்.

சட்டம், ஒழுங்கை கவனிக்க வேண்டியவர்கள் அதனை உரியவாறு கவனித்தால், மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை ஏற்படாது. அரசாங்கத்தின் மெத்தனம், வடக்கை இன்னும் கொதிகளமாகவே மாற்றி வருகிறது.

ஒருவேளை இது, வாள்வெட்டுக் குழுக்களுக்கு எதிராக புதிய குழுக்களை தோற்றுவிக்கும், அவர்களே தமக்குள் அடிபட்டுச் சாகட்டும் என்ற நோக்கமும் கூட அரசாங்கத்திடம் இருக்கிறதோ தெரியவில்லை.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-08-05#page-1

  • கருத்துக்கள உறவுகள்

மாவு பிசைதல் என்பது இதுதானோ ? எண்ணத்தை கூற வருகிறது இந்த வீர கேசரி ? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.