Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவின் ராடார்கள் 1,000 அடிக்கு கீழ் தொழிற்பட முடியாதவை: கொழும்பு ஊடகம்.

Featured Replies

சிறிலங்காவின் ராடார்கள் 1,000 அடிக்கு கீழ் தொழிற்பட முடியாதவை: கொழும்பு ஊடகம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படையின் தாக்குதலின் பின்னர் கொழும்பு மிகப்பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ளது. கடந்த ஞயிறு இரவு வந்த அவர்களின் வானூர்திகள், தளத்தின் வான்பகுதியை இரு மணிநேரங்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளன. இந்தச் சம்பவம் அரசாங்கத்தையும், அதன் பாதுகாப்பு நடைமுறைகளையும் தொங்கு நிலையில் விட்டுள்ளது.

கொழும்பு ஊடகம் ஒன்று தனது பாதுகாப்பு ஆய்வு நிலவரப் பத்தியில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

அதன் சில பகுதிகள் வருமாறு:

"போர் நிறுத்தம் அமுலில் உள்ள போதும் நாளாந்தம் தாக்குதல்கள் அதிகரித்த படி உள்ளன. இது போர் நிறுத்த உடன்பாட்டை மேலும் நெருக்கடிக்குள் இட்டுச் சென்றுள்ளது.

இடம்பெற்று வரும் போரில் விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை தம்மிடம் உள்ள வான்படைப் பலத்தை பயன்படுத்த பின்னிற்கவில்லை. எனினும் விடுதலைப் புலிகளால் தற்கொலைப் பாணியிலான தாக்குதலே நடத்த முடியும் என படைத்தரப்பு வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. அதற்குரிய பாதுகாப்பு ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவை மேலும் தெரிவித்திருந்தன.

விடுதலைப் புலிகளின் வான்படை சிறிலங்காவின் வான் ஆளுமைக்கு பெரும் அச்சுறுத்தலாகும். தரைப்படையின் நடவடிக்கைகளுக்கு சிறிலங்கா வான்படை தனது முழுமையான வான் ஆதரவை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

மிகவும் ஆபத்தான விடயம் என்னவெனில், சிறிலங்கா வான்படையிடம் உள்ள ராடார்கள் 1,000 அடிக்கு குறைவான உயரத்தில் தொழிற்பட முடியாதவை. எனவே 1,000 அடிக்கு கீழே பறக்கும் வானூர்திகளால் எந்த இலக்குகளையும் தாக்க முடியும். எனவே விடுதலைப் புலிகளால் பொருளாதார மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இலகுவாக தாக்கமுடியும் என்பது தெளிவு.

விடுதலைப் புலிகள் கொழும்புத் துறைமுகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கடல் கண்ணிவெடிகளை விதைப்பதற்கும் முயற்சி எடுத்திருந்தனர். இதன் மூலம் அவர்கள் ஒரு முழு அளவிலான போரை ஆரம்பிக்கும் போது தம்மிடம் உள்ள வான்படைப் பலத்தை பயன்படுத்துவார்கள் என்பதும் தெளிவு. இந்த நிலைமைகளை சமாளிப்பதற்கு அரசாங்கம் தாயாராக உள்ளதா?

சந்தேகத்திற்கு இடமான வானூர்திகள் பறப்பதாக வவுனியாவில் இருந்து தகவல்கள் கிடைத்த பின்னரும் கட்டுநாயக்கா, ஹிங்குராங்கொட, வவுனியா, அனுராதபுரம் ஆகிய வானூர்தி தளங்களில் இருந்து ஒரு வானூர்தி கூட மேல் எழவில்லை.

கடந்த ஆண்டு ஓகஸ்ட் 11 ஆம் நாள் இரவு 9.00 மணியளவில் பலாலி வான்படைத் தளத்தின் மீது உந்துகணைத் தாக்கதலை விடுதலைப் புலிகளின் வானூர்தி நடத்திய பின்னரும் ஏன் படையினர் தாக்குதல் அச்சத்தை உணரவில்லை?

அரசாங்கம், தனது பெரிய சகோதரனான இந்தியாவை நோக்கி தனது கவனத்தை செலுத்தியிருந்தது. வானூர்தி எதிர்ப்பு சாதனங்களை வாங்குவது தொடர்பாக இந்தியாவுடன் தொடர்பு கொண்டதுடன். அண்மையில் வருகை தந்திருந்த இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சியாம் சரணிடமும் இது தொடர்பாக விவாதித்திருந்தனர்.

விடுதலைப் புலிகள் யாழ். குடாநாட்டை கைப்பற்றுவதற்கு ஏதுவாக படையினரின் வழங்கல் வழிகளை தடுப்பதற்காக இரத்மலானை, கட்டுநாயக்கா போன்ற வானூர்தித் தளங்கள் மீது அல்லது மிக முக்கியமான இலக்குகள் மீது வானூர்தித் தாக்குதலை நடத்தலாம் என கடந்த வாரம் நாம் தெரிவித்திருந்தோம். விடுதலைப் புலிகளிடம் வானூர்திகள் உள்ளன என்று 1990 களின் பிற்பகுதியில் பொதுமக்களின் விவாதத்திற்கு வந்திருந்தது.

2003 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட சுஜித் என்ற கடற்புலி உறுப்பினரின் தகவல்களின் படி விடுதலைப் புலிகள் 1997 ஆம் ஆண்டு தாய்லாந்தில் இருந்து வானூர்திகளை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்திருந்தார். இவை நடுக்கடலில் தரித்து நின்ற கப்பலில் இருந்து இரு பெட்டிகளில் கிழக்கு கடற்கரைப் பகுதியினூடாக தரையிறக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

விடுதலைப் புலிகள் செக் குடியரசு மற்றும் சுவிற்சர்லாந்து போன்ற நாடுகளில் இருந்து வானூர்திகளை கொள்வனவு செய்து பகுதிகளாக அவற்றைக் கொண்டு வந்து இங்கு மீண்டும் பொருத்தியுள்ளனர் என புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.

அவர்கள் சுவிற்சர்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து பொறியியலாளர்களையும் தருவித்ததுடன், வானோடிகளை பிரான்ஸ் மற்றும் செக் குடியரசுகளில் பயிற்றுவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளிடம் உள்ள சுவிற்சர்லாந்து நாட்டு தயாரிப்பான Plilatus PC 7 (P-21) பயிற்சி வானூர்தி மிகவும் கூடிய தூரவீச்சுக் கொண்டது. இது விடுதலைப் புலிகள் தமது தலைவர்களையும், உயர் பெறுமதியான பொருட்களையும் கடத்துவதற்கு பயன்படும். இந்த வானூர்தி மூலம் அவர்கள் தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளுக்கும் செல்ல முடியும் என்பதுடன் ஆயுதங்கள் மற்றும் மின்னியல் சாதனங்களையும் நகர்த்த முடியும். இந்த வானூர்தி இரவிலும் தொழிற்படக்கூடியது.

நவீனரக P-21 விமானங்கள், போர்க்களங்களிலும் படையினருக்கு எதிராக பயன்படுத்தக் கூடியவையாக இருப்பதுடன், உளவுப் பணிகள், வானில் இருந்து புகைப்படங்களை எடுத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கம் பயன்படுத்தப்படக் கூடியவை.

இவை தவிர அவர்களிடம் சிறிய உலங்குவானூர்தியும் உள்ளது. இது தற்கொலைத் தாக்குதல்களுக்கு அல்லது களமுனை தாக்குதலுக்கு உதவியாக பயன்படக்கூடியது. ஏனெனில் அதன் சிறந்த இயக்கம், தாழ்வான உயரத்தில் பறக்கும் தன்மை என்பன இதற்கான அனுகூலங்கள்.

இரணைமடு வானூர்தி ஓடுபாதை தொடர்ச்சியாக சிறிலங்கா வான்படையால் குண்டு வீச்சுக்கு உள்ளாகுவது இந்த சிறிய வானூர்திகளைப் பொறுத்த வரை ஒரு பிரச்சனை அல்ல. ஏனெனில் இந்த வானூர்திகள் தற்காலிகமாக வெட்டப்பட்டு துப்பரவு செய்யப்பட்ட காடுகளில் கூட தரையிறங்கி ஏறக்கூடியவை.

விடுதலைப் புலிகளின் தாக்குதலால் சில உலங்குவானூர்திகள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. சிலர் இரண்டு என்று கூறினாலும் 5 சேதமடைந்ததாக தெரியவந்துள்ளது. பொறியியல் பிரிவின் மீது வீழ்ந்த குண்டினால் பல பாதுகாப்புக் கணணிகளும் சேதமடைந்துள்ளன" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

-Puthinam-

"இந்த வானூர்தி மூலம் அவர்கள் தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளுக்கும் செல்ல முடியும் என்பதுடன் ஆயுதங்கள் மற்றும் மின்னியல் சாதனங்களையும் நகர்த்த முடியும். இந்த வானூர்தி இரவிலும் தொழிற்படக்கூடியது....."

புதிய செய்தியாய் இருக்கின்றது! நல்ல விடயம் வாழ்த்துக்கள்! இச்செய்தி உண்மையாக இருந்தால் தமிழீழத்தில் சர்வதேச விமான ஓட்டம் உத்தியோகப்பற்றற்ற முறையில் ஏற்கனவே ஆரம்பித்து வைக்கப்பட்டுவிட்டது என்று அர்த்தம்! தமிழீழம் எயார் வேய்ஸ்சில் பயணம் செய்வதற்கு பலர் இங்கு ஆர்வமாக காத்திருக்கின்றார்கள்! :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

அப்போ 1001 அடியில போன வேலை செய்யுமா.......? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

pilatus_pc7_trainer.jpg

Plilatus PC 7 (P-21)

3v-pc7.gif

Plilatus PC 7 (P-21)

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.