Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்பில் போக்குவரத்து ஸ்தம்பிதம் ; புறக்கோட்டையில் பதற்றம்

Featured Replies

கொழும்பில் போக்குவரத்து ஸ்தம்பிதம் ; புறக்கோட்டையில் பதற்றம்

 

 
 

புறக்கோட்டையில் இருந்து வெளிச் செல்லும் அனைத்து பஸ் சேவைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளது.

pettah.jpg

ரயில் சேவை ஊழியர்களின் தற்காலிக பணிப்புறக்கணிப்பு காரணமாக கொழும்பு புறக்கோட்டையில் இருந்து வெளிப் பகுதிகளுக்குச் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ் சேவைகளை ரயில் சேவை ஊழியர்கள் தடுத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொழும்பு புறக்கோட்டையில் பயணிகள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்

அத்தோடு ஒல்கொட் மாவத்தை மற்றும் முதாலம் குறுத்தெரு பகுதியில் கடும் வாகன நெரிசல் காணப்படுவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த போராட்டம் காரணமாக புறக்கோட்டை பகுதி மிகவும் பதற்றமான நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் 3 மணி முதல் புகையிரத இயந்திர சாரதிகள் மற்றும் காப்பாளர்கள் மறு அறிவித்தல் வரும் வரை வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக புகையிரத தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. 

 

இந்த போராட்டம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பயணிகள் கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். 

 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் புகையிரத சேவையை தனியார் மயப்படுத்துமாறு கோரி கோஷங்களை எழுப்பி போராட்டத்திலீடுபட்டுள்ளனர். மேலும் ஆத்திரமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் புகையிர நிலையத்தில் பல்வேறு சோதங்களை ஏற்படுத்தியுள்ளததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

 

அமைச்சரவை கூட்டத்தில் புகையிரத ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தீர்மானம் நிதி அமைச்சரினால் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராகவே புகையிரத ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தகது. 

http://www.virakesari.lk/article/38114

  • தொடங்கியவர்

கோட்டை புகையிரத நிலையத்தில் விசேட அதிரடிப் படையினர் 

 

 
 

கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் தற்போது விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

pettah_002.jpg

இன்று பிற்பகல் 3 மணி முதல் புகையிரத இயந்திர சாரதிகள் மற்றும் காப்பாளர்கள் மறு அறிவித்தல் வரும் வரை வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக புகையிரத தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. 

இந்த போராட்டம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பயணிகள் கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். 

இதனால் கொழும்பு புறக்கோட்டை பகுதியிலிருந்து வெளிப்பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பஸ் சேவைகளையும் முடங்கியுள்ள நிலையில் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்நிலையில் கோட்டை புகையிரத நிலையம் முழுவதும் தற்போது  விசேட அதிரடிப் படையினரின் காட்டுப்பட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் கொழும்பு புற்க்கோட்டை பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதோடு பயணிகளும் மிகுந்த பாதிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/38117

  • தொடங்கியவர்

போராட்டம் தொடரும் ; புகையிரத தொழிற்சங்கம்

 

புகையிர பணியாளர்கள் முன்னெடுத்து வரும் பணிப் பகிப்ஷ்கரிப்பு போராட்டமானது தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்  என புகையிரத தொழிற்சங்கத்தினர் தெரித்துள்ளது.

tra1.jpg

http://www.virakesari.lk/article/38128

  • தொடங்கியவர்

தொடர்­கி­றது ரயில் வேலை நிறுத்தம் கடும் சிர­மங்­களை எதிர்­கொண்ட பய­ணிகள்

 

(எம்.மனோ­சித்ரா)

சம்­பள உயர்வை வலி­யு­றுத்தி புகை­யிரத தொழிற்­சங்க ஊழி­யர்கள் முன்­னெ­டுத்­துள்ள வேலை­நி­றுத்தப் போராட்டம் நேற்­றைய தினமும் தொடர்ந்­ததால் பய­ணி

கள் பெரும் சிர­மங்­களை எதிர்­கொண்­டனர். தூரப்­பி­ர­தே­சங்­க­ளி­லி­ருந்து கொழும்­புக்கு பணி­க­ளுக்­காக வருகை தந்த பொதுமக்கள் நேற்­றைய தினம் பல்­வேறு சிர­மங்­க­ளுக்கு முகம் கொடுத்­தனர்.

குறிப்­பாக பஸ்­களில் பய­ணிகள் முண்­டி­ய­டித்­துக்­கொண்டு நேற்­றைய தினம் பய­ணித்­ததை

தொடர்கிறது..

அவ­தா­னிக்க முடிந்­தது. இதே­வேளை வேலை நிறுத்தப் போராட்­டத்தை கால­வ­ரை­ய­றை­யின்றி தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுக்­க­வுள்­ள­தாக ரயில் ஊழி­யர்கள் சங்­கத்தின் செய­ளாலர் நிரோஷ தெரி­வித்தார்.

"எமது சங்­கத்தால் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள வேலை­நி­றுத்­தத்தின் கார­ண­மாக பொது மக்கள் அளெ­க­ரி­யங்­க­ளுக்கு முகங்­கொ­டுத்­துள்­ளனர். எனினும் அதற்கு அர­சாங்­கமே பொறுப்பு கூற வேண்டும். புகை­யி­ரத சேவை ஊழி­யர்­களின் சம்­பள உயர்வு தொடர்­பாக நாம் பல சந்­தர்ப்­பங்­களில் பிர­த­ம­ருக்கு அறி­வித்­தி­ருந்தோம். எனினும் இது வரையில் எமக்கு அதற்­கான தீர்­வுகள் வழங்­கப்­ப­ட­வில்லை. இதன் கார­ண­மா­கவே திடீர் வேலை நிறுத்­தத்தை மேற்­கொண்­டுள்ளோம். வழமை போன்று அர­சாங்­கத்தால் வழங்­கப்­படும் பொய் வாக்­கு­று­தி­களை நம்பி ஏமா­று­வ­தற்கு இம்­முறை நாம் தயா­ராக இல்லை. எனவே எமக்­கான தீர்வு கிடைக்கும் வரையில் தாம் பணிக்கு திரும்பப் போவ­தில்லை" எனவும் அவர் குறிப்­பிட்டார்.

இரா­ணு­வத்தின் விஷேட பஸ் சேவை

பய­ணிகள் எதிர்­நோக்­கிய அசௌ­க­ரி­யங்­க­ளினால் இலங்கை போக்­கு­வ­ரத்து சபையின் வேண்­டு­கோ­ளுக்கு அமைய இரா­ணு­வத்தின் மூலம் 33 பஸ்கள் சேவையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக இரா­ணுவ ஊடக பேச்­சாளர் பிரி­கே­டியர் சுமித் அத­பது தெரி­வித்தார்.

பொது மக்கள் மற்றும் உயர்­தர பரீட்­சைக்கு தோற்­று­கின்ற மாண­வர்­களின் நலன் கருதி இந்த விஷேட பஸ் சேவை ஒழுங்­கு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இதற்­காக 33 பஸ்கள் தயார்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. அதற்­க­மைய 28 பஸ்கள் இது வரையில் சேவையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. தேவை­யேற்­படும் சந்­தர்ப்­பத்தில் ஏனைய பஸ்­களும் சேவையில் ஈடு­ப­டுத்­தப்­படும்.

இவ் விஷேட பஸ் சேவை காலி, கண்டி, அநு­ரா­த­புரம் மற்றும் குரு­ணாகல் ஆகிய பிர­தே­சங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. மேலும் உயர்­தர பரீட்­சாத்­தி­க­ளுக்­காக மாத்­திரம் 9 பஸ்கள் சேவையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இவை கம்­பஹா, மாத்­தறை, நீர்­கொ­ழும்பு, இரத்­தி­ன­புர , களுத்­துறை , மொன­ரா­கலை உள்­ளிட்ட பிர­தே­சங்­களில் இயங்கும் எனவும் அவர் மேலும் தெரி­வித்தார்.

பொது மக்கள் ஆர்­பாட்டம்

புகை­யி­ரத தொழிற்­சங்­கங்கள் திடீர் வேலை­நி­றுத்­தத்தை அறி­வித்­த­மையால் பய­ணிகள் அதற்கு எதிர்ப்புத் தெரி­வித்து நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை கோட்டை புகை­யி­ரத நிலை­யத்­திற்கு முன்­பாக ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.

ஆர்ப்­பாட்­டத்தின் போது புகை­யி­ரத நிலைய அதி­பரின் அலு­வ­ல­கத்­துக்குள் நுழைந்த ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் பலத்த கோஷங்­களை எழுப்­பி­ய­தோடு, வேலை­நி­றுத்­தத்தைக் கைவி­டு­மாறு எதிர்ப்புக் கோஷங்­களை எழுப்­பினர். அத்­துடன் கோட்டை புகை­யி­ரத நிலைய சொத்­துக்­க­ளுக்கு சேதம் ஏற்­பட்­ட­தோடு, மாத்­த­றை­யி­லி­ருந்து வந்த புகை­யிர ஜன்­னர்­க­ளையும் உடைத்து சேதப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

பொலிஸ் பாது­காப்பு

ஏற்­ப­டுத்­தப்­பட்ட கல­வ­ரத்தைத் தொடர்ந்து பாது­காப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்­காக விஷேட அதி­ர­டிப்­ப­டை­யினர் சேவையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தனர். நாட­ளா­விய ரீதியில் பல புகை­யி­ரத நிலை­யங்­க­ளிலும் பாது­காப்பு படை­யினர் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தனர்

மேல­தி­க­மாக சேவையில் 500 அரச பஸ்கள்

மேலும் இலங்கை போக்­கு­வ­ரத்­து­சபை ஊழி­யர்­களின் அனைத்து விடு­மு­றை­களும் ரத்து செய்­யப்­பட்­டுள்­ளன. அத்­துடன் இம்­முறை உயர்­தர பரீட்­சைக்கு தோற்­ற­வுள்ள மாண­வர்­களின் நலன் கருதி மேல­தி­க­மாக 500 பஸ்கள் சேவையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன என போக்­கு­வ­ரத்து அமைச்சு மேற்­கொண்­டுள்­ள­தாக அமைச்சின் செய­ளாலர் ஜீ.எஸ்.விதா­னகே தெரி­வித்தார்.

தனியார் பஸ்கள் விஷேட அனுமதி

  தனியார் பேரூந்துகளுக்கு தேவையேற்படும் சந்தர்ப்பத்தில், எந்த வழியிலும் பேரூந்தைச் செலுத்தக் கூடிய அனுமதியை வழங்குமாறு பொலிஸ் திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு இலங்கை பொலிஸினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதே வேளை புகையிரத பருவச் சீட்டுக்களை பயன்படுத்தும் பிரயாணிகள் அதனை இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ்களில் பயன்படுத்த முடியும் எனவும் அறிவிக்க்பட்டுள்ளது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-08-10#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.