Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அகிலவின் அதிர்ச்சி வைத்தியம் ; மீண்டும் வெற்றியை ருஷித்தது இலங்கை

Featured Replies

மெத்தியூஸின் அதிரடியால் தென்னாபிரிக்காவுக்கு வெற்றியிலக்கு 300

 

 
 

மெத்தியூஸின் அசத்தலான துடுப்பாட்டம் காரணமாக இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து 299 ஓட்டங்களை பெற்று, தென்னாபிரிக்க அணிக்கு வெற்றியிலக்காக 300 ஓட்டங்களை நிர்ணியித்துள்ளது.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் ஐந்தாவதும் இறுதியுமானதுமான போட்டி இன்று கொழும்பு, ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானது.

c4.jpg

இதில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. அதன்படி இலங்கை அணி சார்பில் களமிறங்கிய நிரோஷன் திக்வெல்ல மற்றும் உபுல்  தரங்க ஆகியோர் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சுக்களை அழகான முறையில் எதிர்கொண்டு துடுப்பெடுத்தாடி அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுச் சேர்த்தனர்.

இதன்படி இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து 50 ஒட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக் கொண்டனர். இதையடுத்து 8.3 ஓவரில் ஜூனியர் டாலாவின் பந்து வீச்சினை எதிர்கொண்ட உபுல் தரங்க விக்கெட் காப்பளரும் தென்னாபிரிக்க அணியின் தலைவருமான டீகொக்கிடம் பிடிகொடுத்து 19 ஓட்டங்களுடன் வெளியேற, அடுத்து களமிறங்கிய குசல் பெரேராவும் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்காது முல்டரின் பந்து வீச்சில் 8 ஓட்டங்களுடன் கிளேசனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்து களம் விட்டு நீங்கினார்.

அதன் பின்னர் திக்வெல்லவுடன் ஜோடி சேர்ந்து ஆட ஆரம்பித்த குசல் மெண்டீஸ் திக்வெல்வுக்கு பக்கபலாக இருந்து ஆட்டம் காட்ட ஆரம்பித்தார். 

16.3 ஆவது ஓவரின் போது இலங்கை அணி இரண்டு விக்கெட்டுக்களை இழந்து 100 ஓட்டங்களை தொட்டது. சிறப்பாக ஆடி வந்த திக்வெல்ல மற்றும் குசல் மெண்டீஸ் ஜோடியினர் 54 பந்துகளை எதிர்கொண்டு 50 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர். இதையடுத்து தென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சுக்களை சிறப்பாக எதிர்கொண்டு ஆடி வந்த திக்வெல்ல 5 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 43 ஓட்டங்களுடன் 18.6 ஆவது ஓவரில் பலக்கொய்யோவின் பந்துவீச்சில் டீகொக்கிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இதன் பின்னர் ஆடுகளம் புகுந்தார் அணியின் தலைவர் மெத்தியூஸ்.

ஒரு கட்டத்தில் இலங்கை அணி 25 ஓவர்களுக்கு மூன்று விக்கெட் இழப்புக்கு 142 ஓட்டங்களை பெற்றுக் கொள்ள 25.2 பந்து வீச்சில் குசல் மெண்டீஸ் 5 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 38 ஓட்டங்களுடன் மஹாராஜின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். 

இவரைத் தொடர்ந்து தனஞ்ய டிசில்வா மெத்தியூஸுடன் ஜோடி சேர்ந்து ஆடி வர இருவருமாக இணைந்து 53 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை 37.4 ஆவது பந்தில் தனஞ்சய டிசில்வா 30 ஓட்டங்களுடன் முல்டரின் பந்து வீச்சில் ஹேண்ட்ரிக்ஸிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்து வெளியேற திஸர பெரேரா ஆடுகளம் புகுந்தார்.

இதைத் தொடர்ந்து இலங்கை அணி 38.1 ஓவரில் நான்கு விக்கெட்டுக்களை இழந்து 200 ஓட்டங்களை பெற்றது. பின்னர் 39.6 ஓவரில் இலங்கை அணியின் அணித் தலைவர் மெத்தியூஸ் 66 பந்துகளை எதிர்கொண்டு ஆறு நான்கு ஓட்டங்கள் அடங்களாக தனது 37 ஆவது அரைசதத்தினை பூர்த்தி செய்ததுடன் அதன் பின்னர் அதிரடி கட்ட ஆரம்பித்தார்.

c3.jpg

ஒரு கட்டத்தில் அணியின் ஓட்ட எண்ணிக்கை 247 ஆக இருக்கும் போது மெத்தியூஸுக்கு தோள் கொடுத்து ஆடி வந்த திஸர பெரேரா 13 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க கடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய கசூன் சானக்க களமிறங்கினார். 

இறுதியாக இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 299 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. அஞ்சலோ மெத்தியூஸ் ஆட்டமிழக்காது 97 பந்துகளை எதிர்கொண்டு 11 நான்கு ஓட்டங்கள் ஒரு ஆறு ஓட்டம் அடங்களாக 97 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். 

இதன்படி தென்னாபிரிக்க அணிக்கு வெற்றியிலக்காக 300 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

c2.jpg

பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பாக முல்டர் மற்றும் பெலக்கொய்யோ ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் ஜூனியர் டலா, கேஷவ் மஹாராஜ் மற்றும் ரபடா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

http://www.virakesari.lk/article/38354

 

 

 

அகிலவின் அதிர்ச்சி வைத்தியம் ; மீண்டும் வெற்றியை ருஷித்தது இலங்கை

 

 
 

அகில தனஞ்சய அளித்த அதிர்ச்சி வைத்தியம் காரணாக தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஐந்தாவது போட்டியில் இலங்கை 178 ஓட்டங்களால் அபாரமாக வெற்றியீட்டியுள்ளது.

இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று கொழும்பு, ஆர். பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பிற்பகல் 2:30 மணிக்கு ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை முதலில் துடுப்பெடுததாட தீர்மானித்தது. இதன் பிரகாம் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 299 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

c7.jpg

அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் 97 ஓட்டங்களையும் நிரோஷன் திக்வெல்ல 43 ஓட்டங்களையும் குசல் மெண்டீஸ் 38 ஓட்டங்களையும் தனஞ்சய டிசில்வா 30 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.

300 என்ற வெற்றியிலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணிக்கு முதல் ஓவரிலேயே சுரங்க லக்மால் அதிர்ச்சி அளித்தார். அதன்படி தென்னாபிரிக்க அணி எதுவித ஓட்டங்களையும் பெற்றுக் கொள்ளாது முதல் ஓவரின் நான்காவது பந்திலேய அம்லா போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதையடுத்து அணித் தலைவர் டீகொக்குடன் இணைந்து மர்க்ரம் இலங்கை அணிக்கு ஆட்டம் காட்ட ஆரம்பித்தபோது 5.4 ஆவது பந்தில் அகில தனஞ்சயவிடம் சிக்கினார். இதன்படி அவர் 13 பந்துகளை எதிர்கொண்டு 20 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஹேண்ட்ரிக்ஸும் அகில தனஞ்சயவின் அடுத்த பந்தில் எதுவித ஓட்டங்களும் பெறாது போல்ட் முறையில் ஆட்டமிழக்க தென்னாபிரிக்க அணிக்கு அகில தனஞ்சய அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.

இவரையடுத்து வந்த கிளேசனும் தனஞ்சயவின் சுழலில் சிக்கி அதிக நேரம் தாக்குபிடிக்காது மூன்று ஓட்டங்களுடன் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழக்க தென்னாபிரிக்க அணி 39 ஓட்டங்களுக்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து நிலைகுலைந்து தடுமாறியது.

அதன்பின் களம் புகுந்த டூமினியுடன் ஜோடி சேர்ந்து டீகொக்கும் சேர்ந்தாட தென்னாபிரிக்க அணி 85 ஓட்டங்களை கடந்தது. இதன் பின் தனஞ்சய டிசில்வாவின் பந்து வீச்சினை எதிர்கொண்ட டூமினி 12 ஓட்டங்களுடன் அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

தென்னாபிரிக்காவுக்கா மிகவும் போராடி வந்த அணியின் தலைவர் டீகொக் அரைசதத்தினை பூர்த்தி செய்த நிலையில் அகில தனஞ்சய பந்தை மீண்டும் கையில் எடுக்க 57 பந்துகளுக்கு 54 ஓட்டங்களுடன் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

c6.jpg

இறுதியாக தென்னாபிரிக்க அணி இலங்கையின் பந்து வீச்சுக்களை எதிர்கொள்ள முடியாது 24.4 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 121 ஓட்டங்களை பெற்று 178 ஓட்டங்களினால் படுதோல்வி கண்டது.

இலங்கை அணி சார்பாக தென்னாபிரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த அகிலதனஞ்சய 29 ஓட்டங்களுக்கு ஆறு விக்கெட்டுக்களையும், லஹுரு குமார இரண்டு விக்கெட்டுக்களையும், சுரங்க லக்மால், தனஞ்சய டிசில்வா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 

இவ்விரு அணிகளுக்கிடையிலான ஒரு இருபதுக்கு 20 போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதி ஆர்.பிரேமதாஸ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/38361

  • தொடங்கியவர்

 

5th ODI Highlights - Sri Lanka beat South Africa by 178 runs

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.