Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரித்தானிய பாராளுமன்றிற்கு அருகில் காரால் மோதி தாக்குதல்

Featured Replies

பிரித்தானிய பாராளுமன்றிற்கு அருகில் காரால் மோதி தாக்குதல்

 

 
 

பிரித்தானிய பாராளுமன்றத்திற்கு அருகில் காரால் மோதி தாக்குதல் நடத்தியதில் பாதசாரிகள் சிலர் காயமடைந்துள்ளதாக ஸ்கொட்லண்ட் யாட் பொலிஸார் தெரிவித்தனர்.

london.jpg

குறித்த தாக்குதலை மேற்கொண்ட நபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

_102962522_crash_map-nc.png

பிரித்தானிய பாராமன்றத்திற்கு அருகிலுள்ள பாதுகாப்பு அரணுக்கு அருகிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

http://www.virakesari.lk/article/38454

  • தொடங்கியவர்

பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் கார் மோதி பலர் படுகாயம்!

 

london-parliament-720x450.jpg

பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு வெளியே பாதுகாப்பு மதில்களையும் அரண்களையும் காரொன்று இடித்துச் சென்றதில், பாதசாரிகள் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கார் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தைத் தொடர்ந்து மத்திய லண்டனில் பொலிஸாரும் அவசர வாகனங்களும் அனுப்பிவைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் ஏனைய விபரங்கள் குறித்து இதுவரை எவ்வித விடயங்களையும் அறிவிக்க முடியாதுள்ளதாக லண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தீவிரவாத செயற்பாடா அல்லது தற்செயலாக இடம்பெற்றதா என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

http://athavannews.com/பிரித்தானிய-நாடாளுமன்ற-15/

  • தொடங்கியவர்

பிரித்தானிய நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு மதில்கைளை மோதிச் சென்றது கார் – பாதசாரிகள் காயம்…

 

parliament crash

Parliament crash: A car has crashed outside parliament (Image: BBC/SKY NEWS )

பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு வெளியே பாதுகாப்பு மதில்களையும் அரண்களையும் காரொன்று இடித்துச் சென்றதில், பாதசாரிகள் பலர் படுகாயமடைந்துள்ளனர். இன்று (14.08.18) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.கார் சாரதி காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தைத் தொடர்ந்து மத்திய லண்டனில் காவற்துறையிரும் அவசர வாகனங்களும் அனுப்பிவைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் ஏனைய விபரங்கள் குறித்து இதுவரை எவ்வித விடயங்களையும் அறிவிக்க முடியாதுள்ளதாக லண்டன் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தீவிரவாத செயற்பாடா அல்லது தற்செயலாக இடம்பெற்றதா என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

parliament-crash

 

Parliament crash: A car has carried into security barriers outside the Houses of Parliament (Image: NC)

parliament crash

Parliament crash: A man was led away in handcuffs (Image: SKY NEWS )

http://globaltamilnews.net/2018/91430/

  • தொடங்கியவர்

பிரிட்டன் பாராளுமன்ற பாதுகாப்பு வேலியில் மோதிய கார்: நடந்தது என்ன?

 

 

பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு வெளியே உள்ள பாதுகாப்பு வேலியின் மீது கார் ஓன்று மோதிய சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ள அதேவேளை காரை செலுத்திய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் இது விபத்தல்ல எனவும் திட்டமிடப்பட்ட சம்பவம் என குறிப்பிட்டுள்ளனர்.

"பல அலறல்களை கேட்டு திரும்பிப்பார்த்த வேளை கார் ஒன்று பிழையான திசையில் சென்று அப்பகுதியில் நின்று கொண்டிருந்த சைக்கிள் ஓட்டிகளை மோதியதை பார்த்தேன். இதன் பின்னர் அந்த கார் வேகமாக பின்னோக்கி வந்து முன்னோக்கி பயணித்து  நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு தடுப்பு வேலியை வேகமாக மோதியது. 

அது ஒரு சில்வர் நிற சிறிய கார், அது மிக வேகமாக மோதியதால் அது ஓரு முறை நிலத்திலிருந்து மிக உயரத்திற்கு எழுந்தது. அதன் பின்னர் பொலிஸார் பாய்ந்து வரத்தொடங்கினர்,இரு பொலிஸார் பாதுகாப்பு வேலிக்கு மேலாக பாய்ந்தனர் ஆயுதமேந்திய பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் குவியத்தொடங்கினர்.

காரிலிருந்து புகைவெளியே வந்தது நான் சிலர் நிலத்தில் வீழ்ந்து கிடப்பதை பார்த்தேன்,சுமார் பத்து பேரிற்கு நிலத்தில் வீழ்ந்து கிடப்பதையும் பார்த்தேன் என தெரிவித்துள்ள அவர் நான் எனது உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓடினேன்.

இது தற்செயலான சம்பவம் போன்று தென்படவில்லை இது திட்டமிடப்பட்ட சம்பவம்" என பிபிசியை சேர்ந்த பரி வில்லியம்ஸ் என்பவர் தெரிவித்துள்ளார்.

london_3.jpg

இதேவேளை இந்த சம்பவத்தை பார்த்த எவலினா  ஒச்சாப் என்பவர் "இது திட்டமிடப்பட்ட சம்பவம் கார் மிகவேகமாக வந்து பாதுகாப்பு வேலியுடன் மோதியது நான் வீதியின் மற்றைய பக்கத்தில் நின்றுகொண்டிருந்தேன், நான் சில சத்தங்களையும் சிலர் கதறுவதையும் கேட்டேன்,  நான் திரும்பி பார்த்தவேளை கார் ஒன்று வேகமாக சென்றுகொண்டிருப்பதை பார்த்தேன்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

http://www.virakesari.lk/article/38464

  • தொடங்கியவர்

லண்டனில் பயங்கரவாதத்தாக்குதல்! உறுதிப்படுத்தியது ஸ்கொட்லான்ட்யாட்!!

 

 
 

பிரித்தானிய நாடாளுமன்ற முன்றலில் உள்ள பாதுகாப்பு அரண்மீது வாகனத்தை மோதவைத்த சம்பவம் ஒரு பயங்கரவாத தாக்குதல் என ஸ்கொட்லான்ட் காவற்துறை தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.

இன்று காலை 7.30 மணியளவில் நாடாளுமன்ற முன்றலில் உள்ள பாதுகாப்பு அரண்மீது வாகனம் ஒன்று மோதவைக்கபட்ட சம்பவத்தில் இரண்டுபேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து ஆயுதந்தாங்கிய காவற்துறையினர் நாடாளுமன்றத்தை சுற்றிவளைத்து கடுமையான பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அத்துடன் இந்த சம்பவத்துக்கு காரணமான 20 வயதுகளுடைய சாரதியையும் கைது செய்துள்ளனர். அவரது வாகனமும் கடுமையாக சோதனையிடப்பட்டது. ஆயினும் அதில் ஆயுதங்கள் எவையும் காணப்படவில்லை.

அவர் மீது தற்போது தீவிரமான விசாரணைகள் நடத்தப்பட்டுவரும் போதிலும் அவர் காவற்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்துவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இது ஒரு பயங்கரவாத தாக்குதல் சம்பவம் என உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து பிரித்தானிய அரசாங்கத்தின் அவசரகால குழுவான கோப்ரா அவசரமாக கூடவுள்ளது.

https://www.ibctamil.com/uk/80/104730?ref=imp-news

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

பிரிட்டன் நாடாளுமன்ற பாதுகாப்பு வேலியில் காரை மோதிய நபர் யார்?வெளியாகின விபரங்கள்

 

 
 

பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு வெளியே கார்த்தாக்குதலை மேற்கொண்ட நபர் சூடான் வம்சாவளியை சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சாலி காட்டெர் என்ற நபரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார் பிரிட்டிஸ் பிரஜையான இவர் சூடான் வம்சாவளியை சேர்ந்தவர் என ஐரோப்பிய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறிப்பிட்ட நபர் சம்பவ இடத்திலேயே  கைதுசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து அவருடன் தொடர்புடைய மூன்று முகவரிகளில் பாதுகாப்பு தரப்பினர் தேடுதல் நடத்தியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நபர் பேர்மிங்காமை சேர்ந்தவர் என தெரிவித்துள்ள அதிகாரிகள்  பாதுகாப்பு தரப்பினர்  அவரை முன்னர் அறிந்திருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

திங்கட்கிழமை இரவு இவர் 115 மைல்கள் காரில் பயணித்து  லண்டனிற்கு வந்து தாக்குதல் பகுதிக்கு சென்றுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர் ஐந்து வருடங்களிற்கு முன்னர் லண்டனிற்கு வந்தவர் அதிகம் தனிமையில் கழிப்பவர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாக்குதலிற்கான காரணம் இன்னமும் தெரியவரவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை இவர் இலக்குவைத்ததால் இதனை பயங்கரவாத தாக்குதலாக கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டனில் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு வேலியை காரால் மோதிய நபரை உடனடியாக கைதுசெய்த ஆயுதமேந்திய பொலிஸார் பெரும் பாராட்டடை பெற்றுருவருகின்றனர்.

london_parli_5.jpg

 

ஆபத்தையும் பொருட்படுத்தாது உடனடியாக அப்பகுதிக்கு சென்ற ஆயுதமேந்திய காவல்துறையினர்  காருக்குள் இருந்த நபரை வெளியில் இழுத்து எடுத்து கைதுசெய்தனர்.

பொலிஸாரின் இந்த துணிகர நடவடிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொதுமக்களும் டுவிட்டரில் பாராட்டியுள்ளனர்.

எமது அவசரசேவை பிரிவினரின் துணிச்சலையும் தொழில்சார்செயற்பாட்டையும் நான் நேரில் பார்த்தேன்  உடனடி நடவடிக்கைக்காக அவர்களை நான் பாராட்டுகின்றேன் என  அமைச்சர் அம்பெர் ரூட் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/38527

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.