Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நேவிசம்பத் தலைமறைவாவதற்கு பணம் வழங்கினார் முன்னாள் கடற்படை தளபதி- சிஐடி தகவல்

Featured Replies

நேவி சம்பத் கைது

 

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டமை உட்பட பல சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த நேவி சம்பத் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இதனை தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடற்படையினை சேர்ந்த பிரசாத் சந்தன ஹெட்டியாராச்சி என அழைக்கப்படும் நேவி சம்பத் கைதுசெய்யப்பட்டுள்ளார் என குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

ரவிராஜ் கொலை கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டமை உட்பட பல சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த நேவி சம்பத் தலைமறைவாகியிருந்ததை தொடர்ந்து நீதிமன்றம் அவரிற்கு எதிராக பிடியாணை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து நேவி சம்பத்தை கைதுசெய்வதற்காக பொதுமக்களின் உதவியை நாடிய குற்றப்புலனாய்வு பிரிவினர் அவரை சில தரப்புகள் மறைத்து வைத்துள்ளன எனவும் தெரிவித்திருந்தனர்.

nevy_sampath.jpg

அவரை மறைத்து வைத்துள்ளவர்களிற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

http://www.virakesari.lk/article/38461

  • தொடங்கியவர்

6 மாதங்களுக்கு முன்னரே மலேசியாவில் இருந்து திரும்பினார் நேவி சம்பத்

 

navy-sampath-1-300x200.jpgகொழும்பில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய வழக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கு ஆகியவற்றில் முக்கிய சந்தேக நபராக தேடப்பட்டு வந்த நேவி சம்பத், மலேசியாவில் இருந்து ஆறு மாதங்களுக்கு முன்னரே நாடு திரும்பியிருந்தார் என்று கூறப்படுகிறது.

சிறிலங்கா கடற்படையின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான நேவி சம்பத் எனப்படும், லெப். கொமாண்டர் பிரசாத் சந்தன ஹெற்றியாராச்சி நேற்றுமுன்தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இவரை நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் காஞ்சன நிரஞ்சன சில்வா முன்னிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னிலைப்படுத்தினர்.

அப்போது, இன்று வரை அவரை விளக்கமறியலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்த நீதிவான் மீண்டும் இன்று மன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவிட்டார்.

navy-sampath-1.jpg

navy-sampath-2.jpgலோட்டஸ் வீதியில் உள்ள தொலைத் தொடர்பு நிலையம் ஒன்றில் வைத்து, குற்றப் புலனாய்வுப் பிரிவின் மூன்றாவது பிரிவு பொறுப்பதிகாரியான ஆய்வாளர் நிசாந்த டி சில்வாவினால் நேற்றுமுன்தினம் நேவி சம்பத் கைது செய்யப்பட்டார்.

இவரை நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய, குற்றப் புலனாய்வுப் பிரிவினர், “மூத்த கடற்படை அதிகாரிகள் சிலரின் உதவியுடன், மலேசியாவுக்குத் தப்பிச் சென்றதாகவும், வெளிநாட்டில் கைது செய்யப்படும் ஆபத்து இருந்த்தால், ஆறு மாதங்களுக்கு முன்னர் சிறிலங்கா திரும்பியதாகவும், நேவி சம்பத் விசாரணையில் தெரிவித்தார்” என்று நீதிவானிடம் கூறினர்.

சிறிலங்கா திரும்பிய அவர், பொல்வத்தகே கல்லகே அசோக என்ற பெயரில், போலியான தேசிய அடையாள அட்டையுடன், தொம்பே பகுதியில் உள்ள தென்னந்தோட்டம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வந்தார் என்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

http://www.puthinappalakai.net/2018/08/15/news/32333

  • தொடங்கியவர்

நேவி சம்பத்திற்கு விளக்கமறியல்!!!

 

 
 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் கொலை மற்றும் கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் சாட்டில் நேற்று கைதான நேவி சம்பத் என்றழைக்கப்படும் பிரசாத் சந்தன ஹெட்டியாராச்சிக்கு எதிர் வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியல்.

navy_sampath.jpg

நேற்று குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட நேவி சம்பத்தை இன்று  கொழும்பு நீதவான் நீதி மன்றில் ஆஜர்படுத்திய போதே மேலதிக நீதவான் காஞ்சன சில்வா குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Navy-sampath-hettiarachchi.jpg

http://www.virakesari.lk/article/38530

  • தொடங்கியவர்

நேவிசம்பத் தலைமறைவாவதற்கு பணம் வழங்கினார் முன்னாள் கடற்படை தளபதி- சிஐடி தகவல்

 

 
 

கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரியான நேவி சம்பத் தலைமறைவாகயிருப்பதற்கு முன்னாள் கடற்படை தளபதியும் முப்படைகளின் பிரதானியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ண பணம் வழங்கினார் என குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று கைதுசெய்யப்பட்ட நேவி சம்பத் இன்று நீதிமன்றத்தில ஆஜர் செய்யப்பட்டவேளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இதனை தெரிவித்துள்ளனர்.

முப்படைகளின் பிரதானி கடற்படை தளபதியாகயிருந்தவேளை நேவி சம்பத் தப்பிச்செல்வதற்கு உதவினார் என்பதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன என குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து கடந்த வருடம் பொலிஸாரிடமிருந்து தப்புவதற்காக நேவிசம்பத்திற்கு 500,000 ரூபாய் கடற்படையின் வங்கிக்கணக்கிலிருந்து வழங்கப்பட்டது தொடர்பிலான விபரங்களை சமர்ப்பிக்குமாறு இலங்கை  வங்கிக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த வருடம் மார்ச்மாதத்திற்கும் மே மாதத்திற்கும் இடையில் இடம்பெற்ற வங்கிபரிவர்த்தனைகள் தொடர்பான விபரங்களை பகிரங்கப்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

raveendraaa_wij.jpg

மேலும் சந்தேகநபரை தொடர்ந்து விசாரணை செய்யுமாறும் உத்தரவிட்டுள்ள நீதவான் சந்தேகநபர் வெளிநாடு தப்பிச்செல்வதற்கு உதவிய நபர்கள் குறித்த விசாரணைகளைமேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

http://www.virakesari.lk/article/38547

  • தொடங்கியவர்

நேவி சம்பத் தப்பிச் செல்லப் பயன்படுத்தப்பட்ட சிறிலங்கா கடற்படையின் 5 இலட்சம் ரூபா நிதி

 

Navy-sampath-300x200.jpgகொழும்பில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பாக, கைது செய்யப்பட்டுள்ள கடற்படைப் புலனாய்வு அதிகாரியான நேவி சம்பத் எனப்படும், லெப். கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெற்றியாராச்சிக்கு கடற்படை நிதியில் இருந்து 5 இலட்சம் ரூபா வழங்கப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் கைது செய்யப்பட்ட நேவி சம்பத் நேற்று இரண்டாவது தடவையாக கோட்டை நீதிவான் முன்னிலையில் நிறுத்தப்பட்ட போது,, ஓகஸ்ட் 29ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று நீதிமன்றில் முன்னிலையாகிய குற்றப் புலனாய்வு அதிகாரிகள், நேவி சம்பத் போலியான ஆவணங்களைக் கொடுத்து, தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு என்பனவற்றைப் பெற்று, 2017 ஏப்ரல் மாதம் மலேசியாவுக்குச் சென்று மறைந்திருந்தார் என்று தெரிவித்தனர்.

பின்னர் இவர் கடந்த மார்ச் மாதம், நாடு திரும்பி தொம்பே பகுதியில் உள்ள தென்னந்தோட்டம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.

சிறிலங்கா துறைமுக அதிகாரசபையிடம் வாடகைக்குப் பெற்ற இரண்டு வாகனங்களை பெற்றுக் கொள்வதற்காக கொழும்பு வந்திருந்த போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Navy-sampath.jpg

நேவி சம்பத் மலேசியாவுக்குத் தப்பிச் செல்வதற்கு, சிறிலங்கா கடற்படையின் உயர் அதிகாரி ஒருவர் கடற்படை நிதிக் கணக்கில் இருந்து, 5 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளார் என்றும் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கு பற்றிய விபரங்களை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வழங்குமாறு இலங்கை வங்கிக்கு உத்தரவிட்ட நீதிவான், நேவி சம்பத் போலி அடையாள அட்டை, கடவுச்சீட்டு ஆகியவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு உதவிய எந்தவொரு அதிகாரியையும் கைது செய்யுமாறும் உத்தரவிட்டார்.

http://www.puthinappalakai.net/2018/08/16/news/32360

  • தொடங்கியவர்

நேவி சம்பத் தப்­பிக்க உத­விய அனை­வ­ரையும் கைது செய்­யவும்

CITY-01Page1Image0011-d62a56c4002e7c2ed11981f21ef9392283721691.jpg

 

 (எம்.எப்.எம்.பஸீர்)

நீதி­மன்றம் உத்­த­ரவு ; பணக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கடற்­படை வங்­கிக்­க­ணக்கை விசா­ரிக்­கவும் அனு­மதி 

கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்தி காணாமல் ஆக்­கி­யமை தொடர்பில் கைது செய்­யப்­பட்­டுள்ள

நேவி சம்பத் எனப்­படும் கடற்­படை புல­னாய்வுப் பிரிவின் முன்னாள் லெப்­டினன் கொமாண்டர் ஹெட்­டி­ஆ­ரச்சி முதி­யன்­ச­லாகே சந்­தன பிரசாத் ஹெட்டி ஆரச்­சிக்கு நாட்டை விட்டு தப்பிச் செல்ல 5 இலட்சம் ரூபா பணம் கொடுக்­கப்­பட்­ட­தாக கூறப்­படும் வங்­கிக்­க­ணக்கு தொடர்பில் குற்றப் புல­னாய்வுப் பிரிவு விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளது.

 நேவி சம்பத் எனப்­படும் லெப்­டினன் கொமாண்டர் ஹெட்டி ஆரச்சி நாட்டில் இருந்து தப்பிச் செல்ல, முன்னாள் கடற்­படை தள­ப­தியும் தற்­போ­தைய முப்­ப­டை­களின் தள­ப­தி­யா­கவும் உள்ள அத்­மிரால் ரவீந்ர விஜே­கு­ன­ரட்ன பணம் வழங்­கி­ய­தாக கூறப்­படும் வங்­கிக்­க­ணக்கு தொடர்­பி­லேயே இந்த விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக குற்றப் புல­ன­யவுப் பிரிவு நேற்று கோட்டை நீதி­வா­னுக்கு அறி­வித்­தது.

' கனம் நீதிவான் அவர்­களே, குற்றப் புல­ன­யவுப் பிரிவின் பணிப்­பா­ள­ருக்கு கிடைத்த இர­க­சிய தக­வ­லுக்கு அமைய, கடற்­ப­டையின் வங்­கிக்­க­ணக்­கொன்­றி­லி­ருந்தே ஹெட்டி ஆரச்சி நாட்டை விட்டு தப்பிச் செல்ல 5 இலட்சம் ரூபா பணம் எடுத்து கொடுக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. குறித்த இலங்கை வங்கிக் கணக்கு விப­ரங்­களை மேல­திக விசா­ர­ணைக்­காக சி.ஐ.டி.க்கு வழங்க இலங்கை வங்­கிக்கு உத்­த­ர­வி­டவும்' என குற்றப் புல­னாய்வுப் பிரிவின் விசா­ரணை அதி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த சில்வா, சந்­தேக நப­ரான நேவி சம்­பத்தை நீதி­மன்றில் ஆஜ­ராக்கி கோரிக்கை முன்­வைத்தார். இதற்கு கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன அனு­ம­தி­ய­ளித்து குறித்த வங்­கிக்­க­ணக்கு விப­ரங்­களை சி.ஐ.டி.யிடம் ஒப்­ப­டைக்­கு­மாறு இலங்கை வங்­கியின் தலைமை அலு­வ­லக பிர­தா­னிக்கு உத்­த­ர­விட்டார்.

கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று, சட்ட விரோ­த­மாக தடுத்து வைத்து, கப்பம் பெற்­றமை மற்றும் காணாமல் ஆக்­கி­யமை தொடர்பில் தேடப்­பட்டு வந்த பிர­தான சந்­தே­க­ந­ப­ரான நேவி சம்பத் எனப்­படும் கடற்­படை புல­னாய்வுப் பிரிவின் முன்னாள் லெப்­டினன் கொமாண்டர் ஹெட்­டி­ஆ­ரச்சி முதி­யன்­ச­லாகே சந்­தன பிரசாத் ஹெட்டி ஆரச்சி குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கடந்த 13 ஆம் திகதி கைது செய்­யப்­பட்­டுள்ளார். அவ­ரிடம் 48 மணி நேர தடுப்புக் காவல் விசா­ர­ணைகள் நிறைவு பெற்­றதன் பின்னர் நேற்று பிற்­பகல் அவர் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன முன்­னி­லையில் ஆஜர் செய்­யப்­பட்டார்.

 அவரை மன்றில் ஆஜர் செய்து குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சார்பில் விசா­ரணை அதி­கா­ரி­க­ளான பொலிஸ் பரி­சோ­தகர் நிஷாந்த சில்வா உப பொலிஸ் பரி­சோ­தகர் சம்பத் ஆகியோர் நீதி­வா­னுக்கு மேல­திக அரிக்­கையை சமர்ப்­பித்து விளக்­க­ம­ளித்­தனர்.

 கைது நிகழ்ந்­தது எப்­படி?

"" குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சமூக கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­கா­ரி­ய­கைய நானும் ( பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த சில்வா ) எனது குழு­வி­னரும் வேறு ஒரு கடமை நிமித்தம் சென்­ரு­கொண்­டி­ருந்தோம். இதன்­போது கோட்டை லோட்டஸ் வீதி ஊடாக நாம் பய­ணித்த வாகனம் செல்லும் போது வாகன நெரி­சலில் சிக்­கி­யி­ருந்­தது. . இதன்­போது எனக்கு மிக பரிச்­ச­ய­மான முக சாயலை ஒத்த ஒருவர் எமது வாக­னத்தை கடந்து செல்­வதை அவ­தா­னித்தேன். உட­ன­டி­யாக வாக­னத்தில் இருந்து இறங்கி அவரை பின் தொடர்ந்து கைது செய்தேன். கைது செய்த மறு கணமே அவர் தேடப்­படும் பிர­தான சந்­தேக நபர் ஹெட்டி ஆர்ச்சி என தெரி­ய­வந்­தது. தாடி, தலை மயிர் என்­ப­வற்றை வளர்த்து அடை­யாளம் தெரியா வண்ணம் இப்­போது இருக்கும் இந்த தோற்­றத்­தி­லேயே அவர் இருந்தார். அவர் சி.ஐ.டி.யால் ஏற்­க­னவெ வேறு குற்­றத்­துக்­காக கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­ததால் அவ­ரது முகம் எனக்கு மிகவும் பரீட்­ச­ய­மா­னது. எனவே அவரை உடன் அடை­யாளம் காண முடிந்­தது. அவரை சி.ஐ.டி.க்கு அழைத்துச் சென்று முன்­னெ­டுத்த மேல­திக விசா­ர­ணை­களில் சந்­தேக நபர், கடந்த 2017.04.17 அன்று இலங்­கையில் இருந்து தப்பி மலே­ஷி­யா­வுக்கு சென்­றுள்­ள­மையும், அங்கு செல்ல பொல்­வத்த கால்­லகே அசோக்க எனும் பெய­ரி­லான அடை­யாள அட்டை, கடவுச் சீட்டு ஆகி­ய­வற்றை பயன்­ப­டுத்­தி­யுள்­ள­மையும், வீசாவை கூட தரகர் ஊடா­கவே பெற்­றுள்­ள­மை­யையும் வெளிப்­ப­டுத்­திக்­கொண்டோம். கடந்த மார்ச் மாதம் மலே­ஷி­யாவில் இருந்து இலங்கை வந்­துள்ள சந்­தேக நபர் , தொம்பே பகு­தியில் உள்ள தென்னந் தோப்பில் பாது­காப்பு ஊழி­ய­ராக கட­மை­யாற்றி வந்­துள்ள நிலை­யி­லேயே, போலி அடை­யாள அட்­டை­யி­லேயே வலம் வந்­துள்ளார்.

லோட்டஸ் வீதிக்கு வந்­தது ஏன்?

 சந்­தேக நப­ருக்கு துறை முக அதி­கார சபையில் இரு கொள்­க­லன்கள் உள்­ளன. அவற்­றி­லி­ருந்து மாதாந்தம் அவ­ருக்கு வரு­மானம் வரு­கின்­றது. அந்த வரு­மா­னத்தை பெற வந்த போதே எம்­மிடம் சிக்­கினார்.

 தொம்­பேயில் பிள்ளை, மனை­வி­யையும்

 உடன் வைத்­தி­ருந்த சந்­தேக நபர்

 சந்­தேக நபரைக் கைது செய்­ததும் நாம் அவர் வேலை செய்த தொம்பே பகு­திக்கு சென்று அந்த தென்னந் தோப்பில் இருந்த வீட்­டினை சோதனைச் செய்தோம். இதன்­போது அவ­ருடன் அவ­ரது இரண்­டா­வது பிள்ளை தங்­கி­யி­ருந்­துள்­ளமை தெரி­ய­வந்­தது. அவ்­வப்­போது மனை­வியும் வந்து சென்­றுள்ளார். தோட்ட உரி­மை­யா­ள­ரிடம் நாம் இது குரித்து வாக்கு மூலம் பெற்றோம். அவரும் இவர் போலி அடை­யாள அட்­டையை காட்­டியே, பத்­தி­ரிகை விளம்­ப­ரத்­துக்கு அமைய வேலைக்கு வந்­துள்­ளதை வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார். அத்­துடன் அந்த வீட்­டி­லி­ருந்து களனி, கோண­வல முக­வ­ரியை உடைய பிரி­தொரு அடை­யாள அட்­டையும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. அது குறித்தும் விசா­ரணை நடக்­கின்­றது.

 தப்பிச் செல்ல முன்னாள் கடற்­படை தள­பதி கொடுத்த பணம் 

சி.ஐ.டி. பனிப்­பா­ள­ருக்கு இர­க­சிய தக­வ­லொன்று அண்­மையில் கிடைத்­தி­ருந்­தது. சந்­தேக நபர் வெளி­நாட்­டுக்கு தப்பிச் செல்ல, முன்னாள் கடற்­படை தள­ப­தியும் தற்­போ­தைய முப்­படை தள­ப­தி­யு­மான அத்­மிரால் ரவீந்ர விஜே­கு­ன­ரத்ன கொடுத்த 5 இலட்சம் ரூபா பணம் கொடுக்­கப்­பட்ட வங்­கிக்­க­ணக்­கி­லக்கம் தொடர்பில் தக­வ­ல­ளிக்­கப்­பட்­டுள்­ளது. அந்த வங்கி இலக்கம் தொடர்பில் விசா­ரணை இடம்­பெ­று­கின்­றது. குறித்த இலங்கை வங்­கிக்­க­ணக்கு விப­ரங்­களை மேல­திக விசா­ர­ணைக்­காக சி.ஐ.டி.க்கு வழக்க இலங்கை வங்­கிக்கு உத்­த­ர­வி­ட­மாறு கோரு­கின்றோம்.

 மேலும் இரு சந்­தேக நபர்கள் வெளி­நாட்டில்:

இத­னை­விட இந்த கடத்தல் விவ­கா­ரத்தில் மேலும் பலர் புணைப் பெயர்கள் ஊடாக தொடர்­பு­பட்­டுள்­ளனர். அதில் இரு புணைப் பெயர்கள் தொடர்பில் கடற்­ப­டை­யி­ன­ரிடம் தகவ்ல் கோரிய போது அவ்­வி­ரு­வரும் வெளி­நாட்டில் உள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது.

 புனைப் பெயர்­களில் இக்­குற்­றத்­துடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் யார் என்­பதை வெளிப்­ப­டுத்த, தற்­போது கைது செய்­யப்­பட்­டுள்ள இந்த சந்­தேக நபரின் கீழ் சேவை செய்த கடற்­ப­டை­யி­னரின் பெயர் பட்­டி­யலை நாம் நீதி­மன்ற உத்­த­ர­வுக்கு அமைய கோரினோம். எனினும் அந்த பட்­டியல் அழிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவே எமக்கு பதில் கிடைத்­தது. ' என பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த சில்வா நீதி­வா­னுக்கு கூறினார்.

இத­னை­ய­டுத்து ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி அனோஜ பிரே­ம­ரத்­னவின் ஆலோ­ச­னைக்கு அமைய சந்­தே­க­ந­ப­ரான நேவி சம்பத் எனப்­படும் ஹெட்டி ஆர்ச்சி சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணி மேஜர் அஜித் பிர­சன்ன பின்­வ­ரு­மாறு விட­யங்­களை முன்­வைத்தார்.

 ரவிராஜ் கொலை தொடர்­பி­லான கைதும் விடு­த­லையும்:

கனம் நீதிவான் அவர்­களே, சந்­தேக நபர் கடந்த 2015.03.13 அன்று முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவிராஜ் கொலை தொடர்பில் கைது செய்­யப்ப்ட்டார். 2016.12.23 அன்ரு அனைத்து குற்­றச்­சாட்­டுக்­களில் இருந்தும் விடு­விக்­கப்­பட்டார்.

 பின்னர் 2017.03.13 அன்று இந்த கடத்தல் விவ­கா­ரத்தில் சி.ஐ.டி.யில். ஆஜ­ராக கோரப்­பட்­டது. ரவிராஜ் விவ­கா­ரத்தில் விடு­த­லைாகும் வரை சிறையில் இருந்­தது போன்று இதிலும் சி.ஐ.டி. தம்மை சிறையில் அடைக்கும் என்ற பயத்­தி­லேயே அவர் அங்கு ஆஜ­ர­காது வெளி­நாடு சென்றார். ரவிராஜ் கொலை சந்­தேக நப­ராக அவர் சிறையில் இருந்த காலப்­ப­கு­தியில் அவ­ருக்கு கடற்­படை செலுத்த வேண்­டி­யி­ருந்த ஏழரை இலட்சம் ரூபா அவ­ருக்கு 2017.01.17 அன்று மீள செலுத்­தப்­பட்­டது. அதனை பயன்­ப­டுத்­தியே அவர் மலே­ஷியா சென்றார். யாரும் அவ­ருக்கு பணம் கொடுக்­க­வில்லை என்றார்.

 இதற்கு பதி­ல­ளித்த பொலிஸ் பரி­சோ­தகர் நிசாந்த சில்வா,

' அந்த ஏழரை இலட்­சத்­துடன் மேலும் பணம் சேர்த்தே சந்­தேக நபரால் கொள்­கலன் கொள்­வ­னவு செய்­யப்­பட்­டது. வெளி­நாடு செல்ல மேல­தி­க­மாக 5 இலட்சம் ரூபா ரவீந்ர விஜே­கு­ண­ரத்­னவால் வழங்­கப்­பட்­டுள்­ளது. இது குறித்து கடற்­படை அதி­காரி லக்­சி­ரியின் வாககு மூலத்தை நாம் ஏற்­க­னவே மன்­றுக்கு அறி­வித்து அதனை தனி வழக்­காக கையாள்­கின்றோம். என்றார்.

 போலி அடை­யாள அட்டை, கடவுச் சீட்டு, பிறப்பிச் சான்­றிதழ் தொடர்பில் தனி­யாக வழக்கு  

 இந் நிலையில் திறந்த நீதி­மன்றை அழைத்த நீதிவான் லங்கா ஜய­ரத்ன, சந்­தேக நப­ரான ஹெட்டி ஆரச்சி முதி­யன்­ச­லாகே சந்­தன பிரசாத் ஹெட்டி ஆரச்­சி­யிடம் அவ­ரது பெயரை கூறு­மாரு கூறி உறு­திப்­ப­டுத்­தி­யதன் பின்னர் இவ்­வாறு அறி­வித்தார்.

 போலி அடையாள அட்டை தொடர்பில் ஆட்பதிவு சட்டத்தின் கீழும், போலி கடவுச் சீட்டு தொடர்பில் குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழும் போலி பிறப்புச் சான்றிதல்கள் உள்ளிட்ட போலி ஆவணங்கள் குறித்து தண்டனை சட்டக் கோவையின் கீழும் இந்த சந்தேக நபராக தனியாக மற்றொரு வழக்கை தாககல் செய்து, அது தொடர்பில் பூரண விசாரணை நடாத்துங்கள். அதில் இந்த சந்தேக நபர் நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க நேரடியாக, மறைமுகமாக உதவிய அனைவரையும் தேடி கைது செய்து சட்ட நடவடிக்கை எடுங்கள்.' என நீதிவான் அறிவித்தார்.

இதனையடுத்து சந்தேக நபருக்கு எதிராக தண்டனை சட்டக் கோவையின் 296 ஆவது அத்தியாயத்தின் கீழும் குற்றச்சாட்டுக்கள் உள்ளதால் பிணை வழ்னக்க முடியாது என அறிவித்த நீதிவான், அவரை எதிர்வரும் 29 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-08-16#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.