Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொள்ளிடம் மேலணையில் 7 மதகுகள் உடைப்பு

Featured Replies

கொள்ளிடம் மேலணையில் 7 மதகுகள் உடைப்பு

 

Colors:
  •  
  •  
  •  
  •  
 
 

திருச்சி: கொள்ளிடம் முக்கொம்பு மேலணையில் உள்ள 7 மதகுகளும் உடைந்து வெள்ளத்தில் அடித்து சொல்லப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கரையோர கிராம மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கொள்ளிடம் அணையில் மொத்தம் உள்ள 45 மதகுகளில் தற்போது 7 மதகுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.
 

 

 

கரையோர மக்களுக்கு எச்சரிக்கை



அணையின் 7 மதகுகள் உடைந்து அதன் வழியாக தண்ணீர் வெளியேறி வருவதை அடுத்து கொள்ளிடம் ஆற்றின் கரையோரங்களில்வசித்து வரும் மக்கள்பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.1836-ம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் காலத்தில் முக்கொம்பு மேலணை கட்டப்பட்டது. அணையின் 7 மதகுகள் உடைந்ததை அடுத்து பாலமும் உடைந்தது. இதில் 90 ஆயிரம் கன அடி நீர் வெளியேறி வருகிறது. இதனையடுத்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாலம் உடைந்ததையடுத்து அப்பகுதியில் பாலத்தின் மீது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

123180_Manikandan_DSC_1491_230818031724.jpg
prev.png
திருச்சி முக்கொம்பில், உள்ள கொள்ளிடம் மேலணையில் ஆறாவது மதகில் இருந்து 12 வது மதகுகள் வரை ஆற்றில் அடித்து செல்லப் பட்டது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=2086160

123177_Manikandan_DSC_1488_230818031704.jpg

123173_Manikandan_DSC_1481_230818031508.jpg

  • தொடங்கியவர்

கோடி கோடியாக நடைபெற்ற கொள்ளை… முக்கொம்பு அணை உடைந்த ரகசியம்!

 

கொள்ளிடம் அணை, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதும் அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் துடிப்பதற்குப் பின்னணியில் மணல் கொள்ளையும் அதில் பல கோடி ரூபாய் மதிப்பில் அரசு அதிகாரிகள் கொள்ளையடித்திருப்பதுமே காரணம் எனத் தற்போது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கோடி கோடியாக நடைபெற்ற கொள்ளை… முக்கொம்பு அணை உடைந்த ரகசியம்!
 

திருச்சி மாவட்டம் முக்கொம்பின் கொள்ளிடம் மேலணை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம், பெரும் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில வாரங்களாகப் பெய்துவந்த கனமழை காரணமாகக் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு, மேட்டூர் அணையிலிருந்து அளவுக்கு அதிகமான தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் கொள்ளிடம் பாலம் உடைந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. இந்நிலையில், நேற்று இரவு சுமார் 8.10 மணியளவில் முக்கொம்பு கொள்ளிடம் மேலணையில் உள்ள 9 மதகுகள் அடுத்தடுத்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

இதையடுத்து முதல்வரின் முதன்மைச் செயலாளர் சாய்குமார், பொதுப் பணித்துறை முதன்மைச் செயலாளர் பிரபாகர், திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணி ஆகியோர் முக்கொம்புக்கு நேரில் வந்து பார்வையிட்டனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை நேரில் பார்வையிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

 

கொள்ளிடம் அணை, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதும் அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் துடிப்பதற்குப் பின்னணியில் மணல் கொள்ளையும் அதில் பல கோடி ரூபாய் மதிப்பில் அரசு அதிகாரிகள் கொள்ளையடித்திருப்பதுமே காரணம் எனத் தற்போது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

 

 

முக்கொம்பு

“கடந்த சில வருடங்களுக்கு முன்னாள், திருச்சி முக்கொம்பு மேலணையில் மராமத்துப் பணிகள் செய்யத் தமிழக அரசு ரூ.10 கோடி ரூபாய் ஒதுக்கியது. அந்தப் பணத்தில் முக்கொம்பு மேலணை கொள்ளிடம் ஆற்றின் வலது மற்றும் இடதுகரை உள்ள 55 அடைப்புப் பலகைகள், சீரமைக்கப்பட்டன. அதேபோல் மதகுகள் அனைத்தும் மின் மோட்டார் வசதியுடன் இயக்கும் முறை அப்போதுதான் செயல்படுத்தப்பட்டது. ஆனால், இந்தப் பணத்தில் பாதிப் பணத்தை அதிகாரிகள் அமுக்கிவிட்டனர்'' என்று குற்றம்சாட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள். 

``வழக்கமாக மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு ஒருமுறை அணையின் பராமரிப்புப் பணிக்காகக் கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கினால், மதகுகளுக்கு வர்ணம் பூசுதல், இரும்புத் துரு நீக்குதல் போன்ற பணிகளை மட்டும் செய்துவிட்டு மீதிப் பணத்தை அமுக்கிவிடுகின்றனர். இதுகுறித்து எழுந்த புகார்களை அதிகாரிகள் மூடி மறைத்துவிடுகின்றனர். இவை குறித்து முறையாக விசாரணை நடத்தினால் பல அதிகாரிகள் சிக்குவார்கள்” என்கின்றனர் அவர்கள்.

கொள்ளிடம் அணை, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது குறித்துப் பேசிய திருச்சி மாவட்ட ஆட்சியர் ராசாமணி, ``திருச்சி முக்கொம்பில் காவிரி பிரியும் பகுதியான கொள்ளிடத்தில் உள்ள 45 ஷட்டர்களில், 6 முதல் 13 வரையிலான தூண்கள் என மொத்தம் 9 மதகுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மற்ற ஷட்டர்களின் ஸ்திரதன்மை பொதுப் பணித்துறை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட உள்ளது. நேற்று இரவு நிலவரப்படி காவிரியில் 32,000 கன அடி தண்ணீரும் கொள்ளிடத்தில் 8,000 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டது. மாயனூரிலிருந்து கூடுதலாகத் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அதன்படி, இன்று காலை நிலவரப்படி காவிரியில் 50,000 கன அடியும் கொள்ளிடத்தில் 23,000 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளன. 

 

 

கொள்ளிடம்

முக்கொம்புக்கு வரும் நீரின் அளவு குறையும். முக்கொம்பு கொள்ளிடம் அணை உடைந்ததால், வெள்ளப் பாதிப்புகளோ விவசாயத்துக்குத் தண்ணீர் பற்றாக்குறையோ ஏற்படாது. மேலும் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்குத் தேவையான நீர் காவிரி வழியாகத் தொடர்ந்து திறந்துவிடப்படுகிறது. இதனால் விவசாயத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. காவிரியைவிடக் கொள்ளிடம் கொஞ்சம் மேடாக இருப்பதால், பெரிய பாதிப்பு இல்லை. அணை இடிந்த பகுதிகளில் இன்று மாலை முதல் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்தப் பணிகள் ஒரு வார காலத்துக்குள் முடிக்கப்படும். இதற்காக ராட்சத இயந்திரங்கள், தொழில்நுட்பக் குழுவினர்கள் வரவழைக்கப்படுகின்றனர். உடைந்த கொள்ளிடம் ஆற்றில் இரும்புக் கம்பிகள், மணல் மூட்டைகள், பில்லர்கள் கொண்டு அமைக்கப்படும் கட்டுமான சீரமைப்புப் பணிகள் ஒரு வாரத்தில் முடியும்” என்றார்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் எஸ்.கே.பிரபாகர், ``முக்கொம்பு மேலணையில் ஏற்பட்ட உடைப்பால் பாதிப்பு ஏதுமில்லை. முதல்கட்டமாக அணையில் ஏற்பட்ட உடைப்பைச் சீரமைப்பது பற்றி ஆய்வு நடக்கிறது. மேலணையில் உடைப்பையடுத்து நிரந்தரத் தீர்வு காண்பது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. முக்கொம்பு மேலணையில் ஏற்பட்ட உடைப்பு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இங்கிருந்து காவிரிக்கு நீர் திறக்கும் பகுதி பாதுகாப்பாக உள்ளது. தமிழகத்தில் 100 ஆண்டுகள் பழைமையான அணைகள் அரசின் ஆலோசனை பெற்று ஆய்வு செய்யப்படும்” என்றார்.

அணையைப் பாதுகாக்காதது யார் தவறோ?

https://www.vikatan.com/news/tamilnadu/134909-why-did-kollidam-dam-broken-social-activists-says-the-reason.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.