Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் போடும் வேஷங்கள்

Featured Replies

நான் போடும் வேஷங்கள்

நாடகத்தில் ஒருவர் நடிக்கும் போது தான் வேறு, தான் ஏற்றிருக்கும் பாத்திரம் வேறு என்பதை நன்றாகவே அறிந்திருக்கிறார். அதனால்தான் பிச்சைக்காரர் வேடம் ஏற்று மேடையில் அழுது புரண்டாலும் ரசிகர்களின் கைதட்டல்களைக் கேட்டுத் தன்னையே உள்ளூரப் பாராட்டிக் கொள்ள அவரால் முடிகிறது.

நடிகன் இல்லாமல் வேடம் இல்லை. ஆனால், வேடம் இல்லாமல் நடிகன் இருக்கிறான். நடிகன் எந்த வேடம் ஏற்றாலும் அவை எல்லாம் நடிகனைச் சார்ந்து தான் இருக்கின்றன. ஆனால், எல்லா வேடங்களில் இருந்தும் நடிகன் விலகி நின்று சுதந்திரமாகவே இருக்கிறான்.

அதேபோல், சிந்திப்பவன், படிப்பவன், துக்கப்படுபவன், சந்தோஷப்படுபவன் என்று ஒருபக்கம் பல்வேறு வேடங்களில் `நான்' இருந்தாலும் இன்னொரு பக்கம் இந்த வேடங்களிலிருந்து விடுபட்டு அவன் சுதந்திரமாகவே இருக்கிறான். அந்த `நான்' என்பது என்ன என்பதை புரிந்து கொள்ளாமல், வேடங்கள் தான் `நான்' என்ற குழப்பத்தோடு நாம் செயல்படுகிறோம்! இந்தக் குழப்பம் காரணமாக, ஏற்கும் வேடங்களின் பிரச்சினைகளெல்லாம் நம்முடைய பிரச்சினைகளாக மாறி நம்மை துக்கத்தில் ஆழ்த்தி விடுகின்றன.

எல்லா பொருட்களும் சூழ்நிலைகளும் `நான்' என்பதையே சார்ந்து இருக்கின்றன. ஆனால் `நான்' இவை எதையும் சாராமல் சுதந்திரமாகச் சுயதன்மையோடு இருக்கிறது.

`நான்' என்பது சுத்த சைதன்யம், உணர்வு மட்டுமே (இணிணண்ஞிடிணிதண்ணஞுண்ண் `நான்'). மற்ற எல்லா பொருட்களும் இந்த உணர்வினாலேயே உணர்த்தப்படுகின்றன. இதில் உடல், மனம், அகங்காரம் முதலியவையும் அடங்கும்.

ஒருவர் எப்போது `நான்' என்று சொன்னாலும் உண்மையில் இந்த உணர்வையே குறிப்பிடுகிறார். அதோடு சேர்த்து வெவ்வேறு கண்ணோட்டங்களில் இருந்து பார்க்கும்போது அப்பா, அம்மா, பிள்ளை, படிப்பவன், மகிழ்பவன், செய்பவன், அறிபவன் முதலியவையும் `நான்' என்று குறிப்பிட்டாலும் இந்த வேடங்கள் எல்லாம் வந்து போகும் விஷயங்கள். அதனால், இவை யாவும் `நான்' என்பதன் இயல்பில் அடங்காது. எப்படி உஷ்ணமானது நெருப்பின் இயல்போ, அதேபோல் உணர்வு அல்லது சைதன்யமே நம் உண்மையான இயல்பு. அதுவே `நான்' என்பதன் உண்மையான பொருள்.

நாம் அனைவரும் காலத்தினால் வரையறுக்கப்பட்டு இருப்பதாக நினைக்கின்றோம். அதனால், மரணபயம் நமக்கு இருக்கிறது. ஆனால் காலமே `நான்' என்பதைச் சார்ந்து இருக்கிறது. என்னைச் சார்ந்த என் நிழல் எப்படி என்னை அழிக்க முடியாதோ, அதேபோல் காலமும் என்னை ஒன்றும் செய்ய முடியாது. `காலம்' என்பது எல்லோரையுமே சமமாக்கிவிடுகிறது. காலப்போக்கில் எல்லாமே மாறிவிடுகின்றனவே என்றால், இங்கு `நான்' என்று குறிப்பிடப்பட்டது. இந்த உடலை அல்ல. இந்த உடலில் காலத்தினால் ஏற்படும் எல்லா மாற்றங்களும் தோன்றினாலும் `நான்' அப்படியேதான் இருக்கிறது.

`நான்' என்பதை சுத்த சைதன்யமாகப் பார்த்தோமானால் அது தேசத்தாலோ, காலத்தாலோ கட்டுப்படாமல் இருக்கிறது. விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு இருக்கிறது. அது பூர்ணமாக, ஆனந்த ஸ்வரூபமாகவே இருக்கிறது.

அதனால் தான் நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய விருப்புகள் ஒரு பக்கம் நிறையவே இருந்தாலும் நாம் மகிழ்ச்சியாக இருந்த தருணங்கள் நிறையவே இருந்திருக்கின்றன.

எந்நேரமும் எல்லா விருப்புகளையும் நினைவில் வைத்துக் கொண்டிருந்தால் பத்திரிகையில் ஒரு ஜோக்கைப் படித்தால் கூட சிரித்து மகிழ முடியாது.

அந்த வகையில் `மறதி' என்ற ஒன்று நமக்குக் கொடுக்கப்பட்டதற்காக கடவுளுக்கு நன்றி சொல்லவேண்டும்! நிறைவேறாத ஆசைகள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு நம்மால் தற்போதைக்கு இயல்பாக இருக்க முடிகிறதென்றால் அதற்குக் காரணம் மறதி!

மறதி என்பது என்ன? எல்லா பிரச்சினைகளையும் ஒதுக்கி வைத்துவிடும் திறன். இந்தத் திறமை மட்டும் இல்லையெனில் எல்லோரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டியதுதான்!

முழங்கால் இன்னும் வலித்துக் கொண்டிருக்கிறது. அல்சர் இன்னும் குணமாகவில்லை. வாங்கிய கடன் இன்னமும் திருப்பிக் கொடுக்கப்படவில்லை. உங்களிடம் கடன் வாங்கியவரும் தலைமறைவாகிவிட்டார். இப்படி எல்லா பிரச்சினைகளும் அப்படியே இருக்க, அப்படியும் ஒரு ஜோக்கைப் படித்துவிட்டுச் சிரிக்க முடிகிறது என்றால் கடவுள் அருள் உங்களுக்கு இருப்பதே காரணம்!

ஒருவர் மகிழ்ச்சியாக இருக்கும் போது வேண்டுபவர் வேண்டப்பட்டது, விரும்புவர், விரும்பப்பட்டது, குறைவுள்ளவர் குறைபாடு போன்ற பேதங்கள் இல்லை.

ஆனால், எவ்வளவு நேரத்துக்கு?

மறுபடியும் நம் நினைவில் குறைகளும் தேவைகளும் ஆசைகளும் வரும் வரையில்தான்! பிறகு நமக்கு ஏற்படுவதோ துக்கமும் அதிருப்தியும் தான். ஆனால், இவை எதையுமே நீக்காமலேயே ஒரு ஐஸ்கிரீம் சாப்பிடும்போதோ, இசையை ரசிக்கும்போதோ அல்லது ஒருவர் மீது அன்பு செலுத்தும் போதோ நம்மால் சந்தோஷமாக இருக்க முடிகிறது. உண்மையில் `நான்' என்பது பூர்ணமாகவும் ஆனந்த ஸ்வரூபமாகவும் இருக்கிறது. ஆனால், இந்த உண்மையை அறியாததால் தான் நாம் துக்கத்துக்கும் சோகத்துக்கும் ஆளாகிறோம்.

இந்த உண்மையை நமக்குப் போதிப்பதற்காகவே வேதாந்தம் இருக்கிறது. குருவும் இருக்கிறார். ஆனால், இந்த அறிவைப் பெற நமக்குச் சில தகுதிகள் வேண்டும். எப்படி எம்.ஏ.படிக்க, ஏற்கெனவே பி.ஏ.முடித்திருக்க வேண்டுமோ, அவ்வாறே இந்த வேதாந்தம் கூறும் உண்மையை உணர, நாம் விருப்பு - வெறுப்புகளில் இருந்து விடுபட்டவராக, மனப்பக்குவம் அடைந்தவராக இருக்க வேண்டும்.

thinakkural.com

தலை வாழ்க்கை என்பது ஒரு நாடகமேடை அதில நாம எல்லாம் நடிகர்கள் ஆனால் ஒற்றன் போல சில பேர் ஓவராஅக்டிங் கொடுக்கிறது தான் சிரிப்பா இருக்குது

:P :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.