Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெளிமாவட்ட மீனவர்களில் ஒருவர் கூட வெளியேற்றப்படவில்லை….

Featured Replies

வெளிமாவட்ட மீனவர்களில் ஒருவர் கூட வெளியேற்றப்படவில்லை….

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

 

 

யாழ்.வடமராட்சி கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் அடாத்தாக தங்கியிருந்து கடலட்டை பிடிக்கும் வெளிமாவட்ட மீனவர்களை வெளியேற்றுமாறு கடற்றொழில் அமைச்சர் விஜிதமுனிசொய்ஷா உத்தரவிட்டிருந்தபோதும், குறித்த வெளிமாவட்ட மீனவர்களில் ஒருவர் கூட வெளியேற்றப்படவில்லை. அவர்கள் தொடர்ந்தும் தங்கியிருப்பதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கடந்த 21ம் திகதி யாழ்.மாவட்டத்திற்கு வருகைதந்த மத்திய கடற்றொழில் அமைச்சர் விஜிதமுனி சொய்ஷா யாழ்.நகரில் உள்ள விடுதி ஒன்றில் கடற்றொழிலாளர்களை சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

இந்த கலந்துரையாடலின் பின்னர் வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் சம்மேளன பிரதிநிதிகள் அமைச்சரை தனியே சந்தித்து வடமராட்சி கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் அடாத்தாக தங்கியிருக்கும் வெளிமாவட்ட மீனவர்களால் தாம் எதிர்கொள்ளும் பாதிப்புக்கள் குறித்து கூறியதுடன், அவர்களை அங்கிருந்து வெளியேற்றும்படி கேட்டிருந்தனர்.

இதனடிப்படையில் மேற்படி வெளிமாவட்ட மீனவர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றும்படி மத்திய கடற்றொழில் அமைச்சர் கடற்படை, கடற்றொழில் நீரியல்வளத்துறைத்திணைக்களம் மற்றும் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த உத்தரவு வழங்கப் பட்டு 3 நாட்கள் நிறைவடைந்த நிலையில் அடாத்தாக தங்கியுள்ள வெளிமாவட்ட மீனவர்களில் ஒருவர் கூட வெளியேற்றப்படவில்லை. என வடமராட்சி கிழக்கு மற்றும் வடக்கு பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இது குறித்து மேலும் அவர்கள் கூறுகையில், கடந்த 18ம் திகதி வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்பரப்பில் சட்டத்திற்கு மாறாக இரவில் ஒளிபாய்ச்சி கடலட் டை பிடித்துக் கொண்டிருந்த 81 வெளிமாவட்ட மீனவர்களையும், 28 படகுகளையும் கடற்படையினர் கைது செய்தனர்.

பின்னர் கடற்றொழில் திணைக்களத்தின் தலையீட்டினால் சட்டத் திற்கு மாறாக அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் வெளிமாவட்ட மீனவர்களை வெளியேற்றக்கோரி ஜனாதிபதி வருகையின்போது கறுப்பு கொடி போராட்டத்தை நடத்துவதற்கு மீனவர்கள் திட்டமிட்டமிட்டிருந்த நிலையில் 21ம் திகதி மத்திய கடற்றொழில் அமைச்சர் வெளிமாவட்ட மீனவர்களை உடனடியாக வெளியேற்றுமாறு உத்தரவிட்டார்.

அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 3 நாட்களாகும் நிலையில் எந்தவொரு மீனவரும் வெளியேற்றப்படவில்லை. என்பதுடன் அமைச்சரின் உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்கான சமிக்ஞை கூட வெளிக்கா ட்டப்படவில்லை. ஜனாதிபதிக்கு எதிரான மக்கள் போராட்டங்களை மழுங்கடிக்கும் நோக்கில் மத்திய கடற்றொழில் அமைச்சர் இந்த உத்தரவை வழங்கினாரா? என தமக்கு சந்தேக எழும்பியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

http://globaltamilnews.net/2018/92606/

  • தொடங்கியவர்

தொடருகின்றது கடலட்டைத் தொழில்

வடமராட்சி மீனவர் சமாசம் குற்றச்சாட்டு

DSC03575-780x405.jpg

வட­ம­ராட்சி கிழக்­கில் வெளி­மா­வட்ட மீன­வர்­கள் கட­லட்டை பிடிப்­பது நிறுத்­தப் ப­டும் என்று யாழ்ப்­பா­ணத்­துக்கு வந்த மீன்­பிடி அமைச் சர் வாக்­கு­று­தி­ய­ளித்­தி­ருந்­தார். அமைச்­ச­ரின்வாக்­கு­று­திக்கு மாறாக வட­ம­ராட்சி கிழக்­கில் வெளி­மா­வட்ட மீன­வர்­கள் தொடர்ந்­தும் கட­லட்டை பிடிப்­பில் ஈடு­ப­டு­கின்­ற­னர் என்று வட­ம­ராட்சி மீன­வர் சமா­சத் தலை­வர் நா.வர்­ண­கு­ல­சிங்­கம் குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளார்.

இது தொடர்­பில் யாழ்ப்­பாண மாவட்ட கடற்­தொ­ழில் நீரி­யல்­வ­ளத் திணைக்­க­ளத்­துக்கு எழுத்­து­மூ­லம் முறைப்­பா­டும் செய்­துள்­ளார்.

“வட­ம­ராட்சி கிழக்­கில் வெளி­மா­வட்ட மீன­வர்­கள் தங்­கின்று கட­லட்டை பிடிக்­கின்­ற­னர். அதற்கு நாம் எதிர்ப்பு வெளி­யிட்­டி­ருந்­தோம். கட­லட்டை பிடிப்­ப­வர்­கள் 4 நிபந்­த­னை­க­ளின் அடிப்­ப­டை­யி­லேயே தொழில் செய்ய அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­ற­னர் என்று எமக்­குக் கூறப்­பட்­டது. இர­வில் கட­லட்டை பிடிக்­கப்­பட முடி­யாது என்­பது முக்­கிய நிபந்­த­னை­யா­கக் கூறப்­பட்­டது.

27 பட­கு­க­ளில் சென்ற மீன­வர்­கள் இர­வில் மீன்­பி­டித்­த­னர் என்று கடற்­ப­டை­யி­ன­ரால் கைது செய்­யப்­ப­ட­னர். இர­வில் மீன்­பி­டிப்­ப­தற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது என்று தெரி­வித்து அவர்­கள் விடு­விக்­கப்­பட்­ட­னர். இதற்கு எதிர்ப்­புத் தெரி­வித்து அரச தலை­வ­ரின் வந்­த­போது போராட்­டம் நடத்த திட்­ட­மிட்­டி­ருந்­தோம். அதற்­கு­மு­தல் நாள் கடற்­தொ­ழில் அமைச்­சர் மீன­வர்­க­ளு­டன் சந்­திப்பு நடத்­தி­னார்.

கட­லட்டை பிடிப்­போரை முழு­மை­யாக வெளி­யேற்­று­வ­தாக சந்­திப்­பில் வாக்­கு­று­தி­ய­ளித்­தார். ஆனால் எமது கண்­கள் முன்­பா­கவே கட­லட்டை பிடிப்­போர் எங்­க­ளின் 6 வலை­களை அறுத்­த­னர். இது தொடர்­பில் மாவட்­டப் பணிப்­பா­ள­ரி­டம் தெரி­யப்­ப­டுத்­தி­யுள்­ளோம்”- என்­றார் வர்­ண­கு­ல­சிங்­கம்.

மாவட்ட கடற்­தொ­ழில் நீரி­யல் வளத்­துறை பிர­திப் பணிப்­பா­ளர் சுதா­க­ரன் இது தொடர்­பில் கேட்­ட­போது, “அமைச்­ச­ரு­ட­னான கலந்­து­ரை­யா­ட­லின்­போது வாய்­மூ­ல­மாக கூறப்­பட்­டுள்­ளது. எமக்­குப் பணிப்­பா­ளர் நாய­கத்­தி­ட­மி­ருந்து இது­வரை எந்­த­வி­த­மான உத்­த­ர­வு­க­ளும் வர­வில்லை. அவ்­வாறு ஏதா­வது உத்­த­ர­வு­கள் கிடைத்­தால் மட்­டுமே நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யும்.” – என்­றார்.

https://newuthayan.com/story/11/தொடருகின்றது-கடலட்டைத்-தொழில்.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.