Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குழப்­பத்தில் கூட்டு எதி­ரணி

Featured Replies

குழப்­பத்தில் கூட்டு எதி­ரணி

S-04Page1Image0002-f701bacb311107ab0d7955ab75014db6652e9919.jpg

 

மஹிந்த ராஜபக் ஷ அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­ட ஒரு வழி இருக்­கி­றது. அதனை இப்­போது சொல்­ல­மாட்டோம். நேரம் வரும்­போது வெளிப்­ப­டுத்­துவோம் என்று கூட்டு எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­ டலஸ் அழ­கப்­பெ­ரும சில வாரங்­க­ளுக்கு முன்னர் கூறி­யி­ருந்தார்.

அதைக் கேட்ட பலரும், 19 ஆவது திருத்­தச்­சட்­டத்தில் எங்­கா­வது ஓட்டை இருக்­கி­றதா என்று, திருத்­தச்­சட்­டத்தின் வாச­கங்­களை மீண்டும் ஒரு முறை வரிக்கு வரி படித்துப் பார்த்துக் கொண்­டனர். இந்­த­நி­லையில் அண்­மையில் கூட்டு எதி­ரணி ஒரு பர­ப­ரப்பைக் கிளப்பி விட்­டி­ருக்­கி­றது. மஹிந்த ராஜபக் ஷ மாத்­தி­ர­மல்ல, சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவும் கூட அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட முடியும், அர­சி­ய­ல­மைப்பு ரீதி­யாக அவர்­க­ளுக்கு எந்தத் தடையும் இல்லை என்­பதே அந்தப் பர­ப­ரப்புத் தகவல்.

இதனைக் கிளப்பி விட்­டவர், பொது­ஜன முன்­ன­ணியின் தலை­வ­ராக இருக்கும் முன்னாள் அமைச்­சரும், அர­சி­ய­ல­மைப்பு விவ­கார நிபு­ண­ரு­மான பேரா­சி­ரியர் ஜி.எல்.பீரிஸ். அவர் இந்தச் சர்ச்­சையைக் கிளப்பி விட்ட பின்னர், சட்ட நிபு­ணர்­களில் ஒரு பிரி­வினர், அது சரியே என்று வாதிடத் தொடங்க, இன்­னொரு பிரி­வினர் அதனை மறுக்க, அர­சி­யலில் இப்­போது இது தான் முக்­கி­ய­மான விவ­கா­ர­மாக மாறி­யி­ருக்­கி­றது.

மஹிந்த ராஜபக் ஷவின் கவ­னத்தைத் தமது பக்கம் திருப்­பு­வ­தற்கு எத்­த­னிக்­கின்ற பலரும், அவ­ருக்குச் சாத­க­மான வகையில் கருத்­துக்­களைக் கூறிக் கொண்­டி­ருக்­கின்­றனர்.

அதே­வேளை, அர­சாங்­கத்தில் உள்ள சட்ட விற்­பன்­னர்­களும், மேதா­வி­களும், அப்­படி ஒன்றும் அவர்­களால் போட்­டி­யிட்டு விட முடி­யாது என்று அடித்துச் சொல்­கி­றார்கள்.

1978ஆம் ஆண்டு அர­சியல் யாப்­பின்­படி, இரண்டு தட­வைகள் ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்டு பதவி வகித்த ஒருவர், மூன்­றா­வது பத­விக்­கா­லத்­துக்­காக, போட்­டி­யிட முடி­யாது.

இந்த விதி­மு­றையை ஜே.ஆர்.ஜய­வர்த்­த­னவும், சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவும் பின்­பற்­றி­னார்கள்.

ஆனால், இரண்­டா­வது தடவை ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்­ற­வுடன், 2010 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக் ஷ 18 ஆவது அர­சி­ய­ல­மைப்புத் திருத்­தத்தைக் கொண்டு வந்து, இந்தக் கட்­டுப்­பாட்டை நீக்­கினார். அதன் மூலமே 2015 ஜனா­தி­பதித் தேர்­த­லையும் எதிர்­கொண்டார்.

எனினும், 2015 ஜனா­தி­பதித் தேர்­தலில் அவர் தோல்­வியைச் சந்­திக்க, அதில் வெற்­றியைப் பெற்ற மைத்­தி­ரி­பால சிறி­சேன, முதல் வேலை­யாக 19 ஆவது திருத்தச் சட்­டத்தைக் கொண்டு வந்து, இரண்டு தட­வைகள் ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்­டவர் மீண்டும் அந்தப் பத­விக்­காக போட்­டி­யிட முடி­யாது என்ற நிலையை உரு­வாக்­கினார். அது­மாத்­தி­ர­மன்றி, 35 வய­துக்கு மேற்­பட்­டவர் தான் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக போட்­டி­யிட முடியும் என்று நாமல் ராஜபக் ஷவை அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் நிறுத்த முடி­யாத நிலையும் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.

இந்த அர­சி­ய­ல­மைப்புத் திருத்­தத்­துக்கு ஆத­ர­வாக, மஹிந்­தவும், நாமலும், சமலும் கூட பாரா­ளு­மன்­றத்தில் கை தூக்­கி­யி­ருந்­தனர். அப்­போது இந்த அர­சி­ய­ல­மைப்பு விதி­மு­றை­களை ஏற்­றுக்­கொண்­ட­வர்கள் தான் இப்­போது, மஹிந்­தவும், சந்­தி­ரி­காவும், அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட தடை இல்லை என்ற விதண்­டா­வா­தத்தைக் கிளப்­பி­யி­ருக்­கி­றார்கள்.

19 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் செய்­வ­தற்கு முன்னர் தான் இவர்கள் ஜனா­தி­ப­தி­யாக இரண்டு முறை பதவி வகித்­தார்கள் என்­ப­தற்­காக, 19 ஆவது திருத்தம் இவர்­களைத் தடுக்­காது என்ற வாதத்­துக்கு அதிகம் வலு­வில்லை.

ஆனாலும் முக்­கி­ய­மான பல அர­சி­ய­ல­மைப்பு விவ­கார நிபு­ணர்கள் கூட இந்த விட­யத்தில் தடு­மா­று­கி­றார்கள். மாற்றுக் கருத்­துக்­களை முன்­வைக்­கி­றார்கள்.

இந்த நிலையில், உயர்­நீ­தி­மன்றம் தான், இவர்­களால் போட்­டி­யிட முடி­யுமா- இல்­லையா என்­பதை தீர்­மா­னிக்க வேண்டும். உயர்­நீ­தி­மன்­றத்தின் வியாக்­கி­யா­னத்தைப் பொறுத்தே, இவர்­களின் தகு­தி­நிலை தீர்­மா­னிக்­கப்­படும்.

இப்­போது, மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சியில் இருந்­தி­ருந்தால், உயர்­நீ­தி­மன்­றத்தின் வியாக்­கி­யானம், அவ­ருக்குச் சாத­க­மாக வந்­தி­ருக்க வாய்ப்­பு­களும் அதிகம். ஆனால் இப்­போது அந்த நிலை இல்லை. அர­சியல் சார்­பு­டைய தீர்ப்­பு­களை உச்­ச­நீ­தி­மன்றம் அளிப்­ப­தற்கு வாய்ப்­புகள் அரிது. நீதித்­துறை சுதந்­தி­ர­மாக செயற்­ப­டு­கி­றது.

அதை­விட, உயர்­நீ­தி­மன்­றத்­திடம், இந்த விவ­காரம் குறித்து விளக்கம் கோரு­வ­தற்கு ஜனா­தி­பதி ஒரு­வ­ருக்குத் தான் அதி­காரம் உள்­ளது என்று அமைச்சர் விஜே­தாச ராஜபக் ஷ கூறி­யி­ருக்­கிறார். இதனால், மஹிந்த தரப்பில் உள்ள எவ­ரேனும் உயர்­நீ­தி­மன்­றத்­திடம் நேர­டி­யாகப் போய் விளக்கம் கோர முடி­யாது. மாவட்ட நீதி­மன்றம் ஒன்றின் ஊடாக, இந்த விவ­காரம் குறித்து விளக்கம் கோரு­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்­ளது பொது­ஜன முன்­னணி. தாமே அதனைச் செய்­வ­தற்குத் தயா­ராக இருப்­ப­தாக கூறி­யி­ருக்­கிறார் பேரா­சி­ரியர் ஜி.எல்.பீரிஸ்.

மாவட்ட நீதி­மன்­றத்­தினால் அர­சி­ய­ல­மைப்பு விவ­காரம் தொடர்­பான விளக்­கங்­களை அளிக்க முடி­யாது. மேல் நீதி­மன்­றமோ, மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்­றமோ கூட இந்த விட­யத்தில் விளக்கம் கூற முடி­யாது.

வடக்கு மாகாண அமைச்சர் டெனீஸ்­வரன் விவ­கா­ரத்தில் மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்றம், அர­சி­ய­ல­மைப்­பின்­படி, அமைச்சர் நிய­மனம் குறித்து கருத்து வெளி­யிட்­டுள்­ளதைச் சுட்­டிக்­காட்­டியே முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் அந்த தீர்ப்­புக்கு எதி­ராக உயர்­நீ­தி­மன்­றத்தில் முறை­யீடு செய்­தி­ருந்தார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

எனவே, மாவட்ட நீதி­மன்­றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்யும் போது, அது­பற்­றிய விளக்­கத்தைப் பெறு­வ­தற்கு அந்த மனுவை உயர்­நீ­தி­மன்­றத்தில் பாரப்­ப­டுத்த முடியும். உயர்­நீ­தி­மன்றம் அதனை பரி­சீ­லனை செய்து இரண்டு மாதங்­க­ளுக்குள் சட்­ட­வி­ளக்­கத்தை மாவட்ட நீதி­மன்­றத்­துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதுவும் அர­சி­ய­ல­மைப்பு விதி­முறை.

மஹிந்த ராஜபக் ஷவினால் மீண்டும் போட்­டி­யிட முடி­யுமா என்­பதை உறு­திப்­ப­டுத்த இந்த வழியைத் தான் பீரிஸ் நாடப் போகிறார்.

இதில் பெரும்­பாலும், மஹிந்­த­வுக்குச் சாத­க­மான முடிவு கிடைக்­காது என்­பதே அரச தரப்­பி­லுள்ள பெரும்­பா­லா­ன­வர்­களின் கருத்து. அர­சி­ய­ல­மைப்பு நிபு­ணர்கள் பலரும் கூட அதனைத் தான் கூறி­யி­ருக்­கி­றார்கள்.

19 ஆவது திருத்­தத்தை அடிப்­ப­டை­யாக வைத்து உயர்­நீ­தி­மன்றம் அண்­மையில் அளித்­தி­ருந்த தீர்ப்பை அவர்கள் அதற்குச் சான்­றாக முன்­வைக்­கி­றார்கள். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தனது பத­விக்­காலம் எப்­போது முடி­வ­டை­கி­றது என்று உயர்­நீ­தி­மன்­றத்­திடம், எழுப்­பியபோது அளிக்­கப்­பட்ட பதில் முக்­கி­ய­மா­னது,

மைத்­தி­ரி­பால சிறி­சேன, 18 ஆவது திருத்­தச்­சட்டம், நடை­மு­றையில் இருந்த போதே, ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்தார். அதன்­படி, அவர் 6 ஆண்­டுகள் ஜனா­தி­ப­தி­யாக இருக்க முடியும். ஆனால் 19 ஆவது திருத்­தச்­சட்டம், ஜனா­தி­ப­தியின் பத­விக்­கா­லத்தை 5 ஆண்­டு­க­ளாக குறைத்து விட்­டது. அதற்கு உயர்­நீ­தி­மன்றம், நடை­மு­றையில் உள்ள 19 ஆவது திருத்­தச்­சட்­டத்­தின்­படி, 5 ஆண்­டுகள் தான் பத­வியில் இருக்க முடியும் என்று விளக்கம் கொடுத்­தி­ருந்­தது.

எனவே, 19 ஆவது திருத்­தச்­சட்­டத்­துக்கு அமைய மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பத­விக்­கா­லத்தை, 5 ஆண்­டுகள் என்று வரை­ய­றுத்த உயர்­நீ­தி­மன்றம், மஹிந்த ராஜபக் ஷவை மீண்டும் போட்­டி­யிட முடியும் என்று விளக்கம் கொடுக்கும் வாய்ப்­புகள் இல்லை என்­பதே பல­ரதும் வாத­மாக இருக்­கி­றது.

இந்த நிலையில், மஹிந்த தரப்பு இந்த விவ­கா­ரத்தில் வீம்­புக்கு சட்­டத்தின் கத­வு­களைத் தட்­டு­கி­றது போலவே தெரி­கி­றது. அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தின் போது, இரண்டு முறை ஜனா­தி­ப­தி­யாக இருந்த ஒருவர் மூன்­றா­வது முறை போட்­டி­யிட முடி­யாது என்ற கொள்­கையின் அடிப்­ப­டையில் பாரா­ளு­மன்­றத்தில் கை தூக்கி விட்டு, இப்­போது அதனை எதிர்த்தே, நீதி­மன்­றத்தை அவர்கள் நாடு­வது கொள்கை ரீதி­யான குழப்­பத்­தையும் காட்­டு­கி­றது.

அதே­வேளை, இது­வ­ரையில் கோத்­தாவா அல்­லது வேறு யாருமா போட்­டி­யி­டு­வது என்று குழம்பிக் கொண்­டி­ருந்த மஹிந்த தரப்பு திடீரென இப்போது, மஹிந்தவை மீண்டும் போட்டியிட வைக்க முடியும் என்ற சட்டப் போராட்டத்துக்குள் இறங்கியிருப்பதும் சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.

அதாவது ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் கூட்டு எதிரணிக்குள் அப்பட்டமான பிளவுகள் இருந்தன.

இதனைச் சமாளிக்கவே, மீண்டும் மஹிந்த போட்டியிட முடியும் என்ற பிரச்சினையைக் கிளப்பி நிலைமையைச் சமாளிக்க முற்பட்டிருக்கிறது என்று கூறுகிறார் அமைச்சர் துமிந்த திசாநாயக்க.

அதாவது, ஒரு கோட்டுக்குப் பக்கத்தில் மற்றொரு பெரிய கோட்டை வரைந்து, முன்னைய கோட்டை சின்னதாக மாற்றும் எளிய உத்தி தான் இது என்பதே அவரது கருத்து.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-08-26#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.