Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அப்ப இனி வடக்கு கிழக்கு அபிவிருத்தியில மூழ்குமாக்கும்

Featured Replies

16838.jpg

வடக்கு கிழக்குக்கான ஜனாதிபதியின் அபி விருத்திச் செயலணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கலந்து கொண்டுள்ளனர்.

ஜனாதிபதியின் அபிவிருத்திச் செயலணி யில் பங்கேற்க வேண்டாமென வடக்கின் முதல மைச்சர் கூட்டமைப்பின் தலைமையைக் கேட்டி ருந்தபோதிலும் அதனை உதாசீனம் செய்துவிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அபிவிருத்திச் செயலணியில் பங்கேற்றுள்ளனர்.

ஜனாதிபதியின் அபிவிருத்திச் செயலணியில் கூட்டமைப்பினர் பங்கேற்பது சரியா பிழையா என்பதற்கப்பால், ஜனாதிபதி அமைத்துள்ள அபிவிருத்திச் செயலணியில் பங்கேற்க வேண் டாம் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஏன் கூறினார் என்பது தொடர்பில் அவருடன் ஆலோசனை நடத்திய பின்பு ஒரு முடிவுக்கு இரண்டு தரப்பும் வந்திருக்கலாம்.

ஆனால் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கோரிக்கையை நிராகரிப்பது என்ற விடயத்தை அதிரடியாக கூட்டமைப்பினர் எடுத்தமை ஓர் ஆரோக்கியமான செயற்பாடு என்று கூறிவிட முடியாது.

அபிவிருத்தி என்பதை நாம் ஒருபோதும் புறக்கணிக்க முடியாது. அதற்காக எங்கள் உரிமை என்பதையும் தமிழ் மக்களின் வாழ்வு என்பதையும் தொலைத்துவிட்டு அபிவிருத்தி என்று கொக்கரிப்பது எந்தவகையிலும் பொருந்தாது.

வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ் வரன் அவர்கள் அபிவிருத்திச் செயலணியில் கலந்து கொள்ள வேண்டாமென தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பிடம் விடுத்த கோரிக்கை என்பது எங்களுக்கு அபிவிருத்தி வேண்டாம் என்ற அடிப்படையில் விடுக்கப்பட்டதல்ல என்பது தெளிவு.

அதாவது வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ் வரன் அவர்கள் அபிவிருத்திக்கு எதிரானவர் அல்ல.
ஆனால் அவர் முன்வைக்கின்ற கருத்து வடக்கு கிழக்கில் உள்ள இராணுவத்துடன் சேர்ந்து அபிவிருத்தியை முன்னெடுக்கும் போது, அது பல்வேறு நடைமுறைச் சிக்கல் களை உருவாக்கும் என்பதுதான்.

எனவே முதலமைச்சர் முன்மொழிந்த கருத் துக்களை நிதானமாகப் பரிசீலனை செய்ய வேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பைச் சார்ந்ததாக இருந்தபோதிலும் அதனை அறவே கைவிட்டு, அபிவிருத்திச் செயலணியில் பங்கேற்பது என எழுந்தமான மாகக் கூட்டமைப்பு தீர்மானம் எடுத்துள்ளது.

உண்மையில் முதலமைச்சர் விக்னேஸ்வர னுடனும் துறைசார்ந்த நிபுணர்களுடனும் கூட்டமைப்பின் தலைமை கூடி ஆராய்ந்திருந் தால், அபிவிருத்திச் செயலணியின் இயங்கு நிலையை ஒழுங்குபடுத்திய பின்னர் அதில் பங்கேற்பது பற்றி சிந்தித்திருக்க முடியும்.
ஆனால் இவை நடைபெறாத நிலையில், வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ முகாம் களை அகற்ற முடியாத ஒரு சூழ்நிலையை கூட்டமைப்பு ஏற்படுத்தியுள்ளதுடன் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இறுக்க மான பிடியில் இருந்தும் அரசை கூட்டமைப்பு காப்பாற்றியுள்ளது என்பதே நிதர்சனமான உண்மை.

http://www.valampurii.lk/valampurii/content.php?id=16838&ctype=news

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.