Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொறுப்­புக்­கூறும் விட­யத்தில் ஜனா­தி­ப­தியின் புதிய யோசனை

Featured Replies

பொறுப்­புக்­கூறும் விட­யத்தில் ஜனா­தி­ப­தியின் புதிய யோசனை

 

இறுதி யுத்­தத்தின் போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள், யுத்­தக்­குற்­றங்கள் தொடர்பில் உரிய விசா­ரணை நடத்தி நீதி வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டு­மென்று ஐ.நா. மனித உரிமை பேரவை வலி­யு­றுத்தி தீர்­மா­னங்­களை நிறை­வேற்­றி­யுள்ள நிலையில் அதற்­கான நட­வ­டிக்­கை­களை எடுப்­பதில் இலங்கை அர­சாங்கம் காலம் ­தாழ்த்தி வரு­கின்­றது. சர்­வ­தேச நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய உள்­ளக விசா­ரணைப் பொறி­மு­றையின் கீழ் விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்கு நல்­லாட்சி அர­சாங்கம் இணங்­கி­யி­ருந்­த­போ­திலும் அதற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை.

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மீது சர்­வ­தேச சமூகம் நம்­பிக்கை வைத்து இரண்டு வரு­ட­கால அவ­கா­சமும் வழங்­கப்­பட்­டி­ருந்­தது. இந்த இரண்­டு­வ­ரு­ட­கால அவ­காசம் அடுத்த வருடம் மார்ச் மாதத்­துடன் முடி­வ­டை­ய­வுள்­ளது. இந்­தக்­கால எல்­லைக்குள் பொறுப்­புக்­கூறும் விட­யத்தில் நல்­லாட்சி அர­சாங்கம் உரிய நட­வ­டிக்­கை­களை எடுக்­குமா என்ற சந்­தேகம் தற்­போது வலு­வ­டைந்­தி­ருக்­கின்­றது.

2015ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் 1ஆம் ­தி­கதி இலங்கை தொடர்­பான 30/1 தீர்­மானம் ஐ.நா. மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்­டது. இதற்கு நல்­லாட்சி அர­சாங்கம் இணை அனு­ச­ரணை வழங்கி ஏற்­றுக்­கொண்­டி­ருந்­தது. இதே­போன்றே 34/1 தீர்­மா­னமும் அதன் பின்னர் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தது. இந்த தீர்­மா­னங்­க­ளுக்கு அனு­ச­ரணை வழங்­கிய நல்­லாட்சி அர­சாங்கம் இன்­னமும் பொறுப்­புக்­கூறும் விட­யத்தில் அக்­கறை செலுத்­தாத நிலைமை நீடித்து வரு­கின்­றது. தற்­போது ஐ.நா. மனித உரிமை பேர­வையின் 39 ஆவது அமர்வு நடை­பெற்று வரும் வேளையில் அர­சாங்­கத்தின் மந்­த­க­ர­மான செயற்­பாடு தொடர்பில் கடும் அதி­ருப்தி தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

இந்த நிலை­யில்தான் ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் முன்­மொ­ழி­வுகள் தொடர்பில் புதிய யோச­னை­யொன்றை ஐ.நா. பொதுச்­ச­பைக்­கூட்­டத்தில் முன்­வைக்­க­வுள்­ள­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார். இலங்கை மீதான மனித உரிமை மீறல் குற்­றச்­சாட்­டுக்கள் மற்றும் யுத்­தத்­திற்குப் பின்­ன­ரான நிலை­வரம் என்­ப­வற்­றுக்­கான தீர்­வுகள் தொடர்­பா­கவே இந்த யோச­னையை தான் முன் வைக்­க­வுள்­ள­தாக ஜனா­தி­பதி அறி­வித்­தி­ருக்­கின்றார்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஊடக நிறு­வ­னங்­களின் பிர­தா­னி­களை ஜனா­தி­பதி மாளி­கையில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டிய ஜனா­தி­பதி இந்த விடயம் தொடர்பில் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார். ஐ.நா. மனித உரிமை பேரவை இலங்­கைக்கு முன்­வைத்­துள்ள பிரே­ர­ணை­களை நடை­மு­றைப்­ப­டுத்­துதல் தொடர்பில் சலு­கை­களைப் பெற்­றுக்­கொள்ள, நாட்டின் சுயா­தீனத் தன்மை மற்றும் தேசிய பாது­காப்­பிற்கும் முப்­ப­டை­யி­னரின் கௌர­வத்­திற்கும் பாதிப்பு ஏற்­ப­டா­த­வ­கையில் செயற்­ப­டுதல் ஆகிய விட­யங்­களை உள்­ள­டக்­கியே தான் யோச­னையை முன்­வைக்­க­வுள்­ள­தாக அவர் தெரி­வித்­துள்ளார்.

ஐ.நா. பொதுச்­ச­பைக்­கூட்­டத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கலந்­து­கொண்டு எதிர்­வரும் 25ஆம் திகதி உரை­யாற்­ற­வுள்ளார். இந்த உரையின் போதே தனது புதிய யோச­னை­யினை அவர் முன்­வைக்­க­வுள்ளார். ஐ.நா. மனித உரிமை ஆணைக்­குழு முன்­னி­லையில் பாது­காப்பு படை­யி­ன­ருக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்­களைப் போன்றே கடந்த யுத்­த­ கா­லத்தில் இரு­த­ரப்­பி­ன­ருக்­கு­மி­டையில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் சில சம்­ப­வங் கள் தொடர்பில் இன்னும் தீர்க்­கப்­ப­டா­துள்ள பல பிரச்­சி­னை­களை சுமு­க­மாக தீர்த்­துக்­கொள்­வ­தற்கு இந்த யோசனை ஊடாக வாய்ப்பு ஏற்­படும் என்­பதே ஜனா­தி­ப­தியின் நிலைப்­பா­டாக உள்­ளது.

தனது யோச­னைகள் அடங்­கிய எழுத்­து­மூ­ல­மான அறிக்­கையை ஐ.நா. செய­லா­ள­ரி­டமும் ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ள­ரி­டமும் கைய­ளிக்­க­வுள்­ள­தா­கவும் ஜனா­தி­பதி இந்த சந்­திப்­பின்­போது சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

இத­னை­விட கடந்­த­வாரம் இடம்­பெற்ற வைப­வ­மொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன யுத்­தக்­குற்­றச்­சாட்­டுக்­க­ளி­லி­ருந்து படை­யி­னரை மீட்கும் வகையில் ஐ.நா. பொதுச்­ச­பைக்­கூட்­டத்தில் யோச­னையை முன்­வைத்து தான் உரை­யாற்­ற­வுள்­ள­தாக தெரி­வித்­தி­ருந்தார். இதி­லி­ருந்து படை­யினர் மீதான யுத்­தக்­குற்­றச்­சாட்­டுக்­களை இல்­லாது செய்­ய­வேண்டும் என்ற நிலைப்­பாட்­டி­லேயே ஜனா­தி­ப­தியின் உரை அமை­ய­வுள்­ள­தாக கரு­தப்­ப­டு­கின்­றது.

மனித உரிமை மீறல் குற்­றச்­சாட்டு தொடர்பில் உரிய விசா­ரணை நடத்­தப்­படும் நிலையில் அந்த குற்­றச்­சாட்­டுக்­க­ளி­லி­ருந்து படை­யி­னரை விடு­விக்கும் வகையில் ஜனா­தி­பதி முன்­வைக்­க­வுள்ள யோச­னை ஐ.நா.வினால் எந்­த­ள­விற்கு ஏற்­றுக்­கொள்­ளப்­படும் என்ற கேள்வி தற்­போது எழு­கின்­றது.

2015ஆம் ஆண்டு சர்­வ­தேச நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய உள்­ளகப் பொறி­மு­றையின் கீழ் விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்­டு­மென்ற தீர்­மானம் ஐ.நா. மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்­ட­போதும் ஜனா­தி­பதி இந்த விசா­ர­ணையில் சர்­வ­தேச நீதி­ப­தி­களை உள்­ள­டக்க முடி­யாது என்ற நிலைப்­பாட்டில் ஆணித்­த­ர­மாக நின்­றி­ருந்தார். பல கூட்­டங்­களில் அவர் இதனை பகி­ரங்­க­மா­கவே தெரி­வித்­தி­ருந்தார். இதே நிலைப்­பாட்­டி­லேயே ஜனா­தி­பதி தற்­போதும் உள்­ளமை அவ­ரது கூற்­றுக்­க­ளி­லி­ருந்து புல­னா­கின்­றது.

இறுதி யுத்­த­கா­லத்தின் போது இடம்­பெற்ற சில மனித உரிமை மீறல் சம்­ப­வங்கள் தொடர்பில் தற்­போது குற்­றப்­பு­ல­னாய்­வுப்­ பி­ரி­வினர் விசா­ர­ணை­களை நடத்தி வரு­கின்­றனர். இந்த விசா­ர­ணை­களில் முப்­படை அதி­கா­ரிகள் பலரும் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இவர்­களில் பலர் தற்­போது பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர். இந்த நிலை­யில்தான் கொழும்பில் ஐந்து மாண­வர்கள் உட்­பட 11 பேர் கடத்­தப்­பட்டு காணாமல் ஆக்­கப்­பட்ட வழக்கு விசா­ரணை தொடர்பில் கடற்­படை அதி­கா­ரிகள் பலரும் கைது­செய்­யப்­பட்­டி­ருந்­தனர். அதன் தொடர்ச்­சி­யாக முன்­னைய கடற்­படை தள­ப­தியும் கூட்­டுப்­ப­டை­களின் பிர­தா­னி­யு­மான ரவீந்­திர விஜ­ய­கு­ண­ரட்­ன­விடம் விசா­ரணை நடத்­து­வ­தற்கு குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவு முயன்­ற­போது அதற்கு கடும் எதிர்ப்பு தற்­போது தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த விடயம் தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விசேட அமைச்­ச­ர­வையைக் கூட்டி ஆராய்ந்­தி­ருந்தார். இத்­த­கைய நிலை­வரம் கார­ண­மாக தற்­போது பாது­காப்பு படை­களின் பிர­தா­னியை கைது­செய்­ய­வேண்­டிய அவ­சி­ய­மில்லை என்று அர­சாங்கம் அறி­வித்­தி­ருக்­கின்­றது.

ஐ.நா. மனித உரிமை பேர­வையின் பொறுப்­புக்­கூறல் தொடர்­பான தீர்­மா­னத்தை நிறை­வேற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­காத அர­சாங்­க­மா­னது இடம்­பெற்று வரும் சில குற்­றங்கள் தொடர்­பான விசா­ர­ணை­க­ளையும் தலை­யீடு செய்யும் நிலைமை தற்­போது தொடர்ந்து வரு­கின்­றது. இந்த நிலை­யில்தான் ஐ.நா. பொதுச்­ச­பைக்­கூட்­டத்­திலும் புதிய யோசனை ஒன்றை முன்­வைப்­ப­தற்கு ஜனா­தி­பதி திட்­ட­மிட்­டி­ருக்­கின்றார்.

இந்த விடயம் தொடர்பில் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பா­னது தனது அதி­ருப்­தி­யினை தெரி­வித்­தி­ருக்­கின்­றது. கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம். ஏ. சுமந்­திரன் இந்த விடயம் தொடர்பில் கடும் அதி­ருப்­தியை வெளி­யிட்­டுள்ளார். பொறுப்­புக்­கூறல் விட­யத்தில் இலங்­கையின் உள் நகர்­வுகள் மிகவும் மோச­மா­ன­தாக உள்­ளன. தமிழ் மக்­க­ளுக்கு நீதி கிடைக்கும் வரையில் சர்­வ­தேச மேற்­பார்வை இருப்­பது அவ­சி­ய­மாகும். உண்­மை­களை கண்­ட­றியும் பொறி­மு­றையில் இலங்­கையின் நீதித்­துறை செயற்­பா­டுகள் மோச­மா­ன­வை­யாகும். எனவே சர்­வ­தேச நீதி­மன்ற தலை­யீ­டுகள் அவ­சியம் என்று சுமந்­திரன் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

இத­னை­விட ஜனா­தி­ப­தியின் புதிய யோசனை தொடர்பில் கருத்து தெரி­வித்­துள்ள சுமந்­திரன் எம்.பி. இலங்­கையில் இடம்­பெற்­றுள்­ள­தாக தெரி­விக்­கப்­படும் போர்க்­குற்­றங்­க­ளி­லி­ருந்து படை­யி­னரை பாதுகாக்கும் நோக்கில் ஐ.நா.விற்கு புதிய யோசனையொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்தால் அதனை ஒரு அங்குலம் கூட முன்நகர இடமளிக்கமாட்டோம் என்று அவர் கூறியிருக்கின்றார்.

 உண்மையிலேயே இறுதி யுத்தத்தின் போது உயிர்களையும் உடைமைகளையும் இழந்த மக்கள் பல்வேறு துன்பங்களுடன் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு இழப்புக்களை சந்தித்த மக்கள் தமக்கு நீதி வழங்கப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சர்வதேச சமூகத்திற்கு அளித்த வாக்குறுதிக்கு இணங்க பொறுப்புக்கூறும் விடயத்தில் அரசாங்க மானது உண்மையான அக்கறை காண்பிக்கவேண்டும். அதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். ஆனால் அவ்வாறு செயற்படாது அரசாங்கமானது எதிர்மறையான செயற்­பாட்டில் ஈடுபடுவதாகவே தெரிகின்றது. நாட்டில் உண்மையான நல்லிணக்கம் ஏற்படவேண்டுமானால் பொறுப்புக்கூறும் விடயத் தில் அரசாங்கம் அக்கறை செலுத்த வேண்டும் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-09-17#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.