Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீன கடன்­பொ­றியும், நவ கால­னித்­து­வமும்

Featured Replies

சீன கடன்­பொ­றியும், நவ கால­னித்­து­வமும்

SAMAKALAM150918-PG03-R1Page1Image0002-6936ca0cc8ff3630d4a0aef2444d66fd4500667c.jpg

 

ஒரு ஊர். அதி­லொரு செல்­வந்தர். தமது சுய முயற்­சியில் சமீ­பத்தில் பணக்­கா­ர­ரான செல்­வந்தர்.

இந்த செல்­வந்தர் ஊரின் ஒரு கோடியில் வசிக்­கிறார். ஆற்றைத் தாண்டி மறு­கோ­டியில் சில வறிய குடும்­பங்கள்.

வறிய குடும்­பங்­க­ளுக்கு செல்­வந்தர் வாரி வழங்­கு­கிறார். அந்தக் குடும்­பங்­களின் தேவை­களை நிறை­வேற்­று­கிறார்.நான் வளர்ந்து விட்டேன். உங்­க­ளிடம் குறைகள் இருக்­கின்­றன. நான் உதவி செய்து உங்கள் குறைகள் தீர்ந்தால், நாம் வள­ரலாம். ஊரும் பயன் பெறலாம் என்­கிறார், செல்­வந்தர்.

செல்­வந்­தரின் வார்த்­தை­களை வறிய குடும்­பங்கள் நம்­பு­கின்­றன. அவ­ரிடம் இருந்து வாங்­கு­கின்­றன. தமக்குத் தரப்­ப­டு­வதை தாம் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற பிரக்ஞை அவற்­றுக்கு இல்லை. தம்மால் திருப்பிச் செலுத்த முடி­யாத அள­விற்கு தாம் வாங்­கு­கிறோம் என்ற உணர்வும் கிடை­யாது.

இந்த செல்­வந்­த­ருக்கு ஊரில் பகை­யா­ளிகள். செல்­வாக்கு இழந்த பகை­யா­ளி­களின் எண்­ணிக்கை அதிகம். அந்தப் பகை­யா­ளிகள் வறிய குடும்­பங்­களை எச்­ச­ரிக்­கின்­றனர். இங்கே பார், இந்த பணக்­காரன் உனக்கு நல்ல நோக்­கத்­துடன் தர­வில்லை. உன்னை கடன் பொறியில் சிக்க வைக்­கிறான், என்று எச்­ச­ரிக்கை விடுக்­கின்­றனர்.

ஒட்­டு­மொத்த ஊரும் பணக்­கா­ரனைப் பார்த்து கேட்­கி­றது: நீ நல்­ல­வனா, கெட்­ட­வனா? நீ உத­வு­கி­றாயா, உத­வி­யென்ற போர்­வையில் எம்மை ஏமாற்­று­கி­றாயா? செல்­வந்தன் பதில் அளிக்­கிறான். நான் நல்­லவன் தான் என்­கிறான். தனது உத­வியின் மூலம் வறிய குடும்­பங்கள் வளர்ச்சி பெறும்­போது தம்மைப் பற்றி அறி­வார்கள் என்று கூறு­கிறான்.

இது இன்­றைய அர­சியல் உலகின் தலை­யாய பிரச்சி­னை­யொன்றை விப­ரிக்கும் உவ­மானம். இதில் சீனா செல்­வந்தர் என்றால், சீனா­விடம் இருந்து உதவி பெறும் ஆசிய, ஆபி­ரிக்க நாடு­களை வறிய குடும்­பங்­க­ளாகக் கொள்­ளலாம். இந்­நா­டு­க­ளுக்கு சீனா வழங்கும் உத­விகள் கடன்­பொ­றியா, அபி­வி­ருத்தி உத­வியா என்­பது முதன்மைக் கேள்வி.

சீனா என்ற செல்­வந்­த­னிடம் இலட்­சியத் திட்டம் உள்­ளது. அதனை Belt and Road Initiative என்­பார்கள். சுருக்­க­மாகச் சொன்னால் BRI. இது பண்­டைய காலத்தில் கிழக்­கையும் மேற்­கையும் இணைத்து, வர்த்­த­கத்தை இல­கு­வாக்­கிய பட்­டுப்­பாதைத் திட்­டத்தின் புதிய வடி­வ­மாகும்.

சீனாவின் பிர­சித்தி பெற்ற பட்டு உற்­பத்­தி­களை தென்­மேற்கில் ஐரோப்பா வரை­யிலும், தென்­கி­ழக்கில் ஆபி­ரிக்கா வரை­யிலும் கொண்டு செல்­வ­தற்­கான பாதை. அது ஆசிய கண்­டத்தின் பல நாடு­களை ஊட­றுத்துச் செல்லும் வீதி வலைப்­பின்­ன­லையும், இந்து சமுத்­தி­ரத்தைக் கடந்து செல்லும் கடல் மார்க்­கங்­க­ளையும் உள்­ள­டக்­கி­யது.

பட்­டுப்­பாதை வணி­கத்தின் மூலம் பண்­டைய காலத்தில் பெரும் செல்வம் ஈட்­டிய சீனா, இன்று BRI முன்­மு­யற்­சியின் மூலம் அனு­கூலம் பெற முயல்­கி­றது. இந்த இலட்­சியத் திட்டம் தமது நாட்­டுக்கு மாத்­தி­ர­மன்றி, ஒட்­டு­மொத்த உல­கிற்கும் நன்மை பயக்கும் என்­பது சீன ஜனா­தி­பதி ஷி ஜின்­பிங்கின் வாதம்.

புதிய பட்­டுப்­பா­தையை அமைக்க வேண்­டு­மானால், அந்தப் பாதையில் அமைந்­துள்ள நாடு­களில் வச­தி­களை அபி­வி­ருத்தி செய்­வது அவ­சியம். அந்­நா­டு­களில் துறை­மு­கங்­களை நிர்­மா­ணிப்­பது அவ­சியம். வீதி­களை அமைப்­பதும் கட்­டா­ய­மா­னது. இன்ன பிற அபி­வி­ருத்தி வேலை­க­ளையும் நிறை­வேற்ற வேண்டும்.

அத்­த­கைய கட்­டு­மாண அபி­வி­ருத்திப் பணி­க­ளுக்கு நான் உத­வு­கிறேன், நீங்கள் எமது இலட்­சியத் திட்­டத்தில் இணைந்து கொண்டால் போது­மா­னது என்­பது சீனாவின் கோரிக்கை. இதன் கீழ், பல நாடுகள் உத­வி­களைப் பெற்­றுள்­ளன. அவற்றில் ஆபி­ரிக்க நாடு­களின் எண்­ணிக்கை அதிகம்.

இன்று சீனாவின் நோக்­கங்கள் குறித்து பல்­வேறு வாதப்­பி­ர­தி­வா­தங்கள். இந்­நாடு வறிய நாடு­களைக் கடன்­பொ­றிக்குள் தள்ளி, அவற்றின் வளங்­களை சூறை­யாட முனை­கி­றது என்­பது பிர­தான குற்­றச்சாட்டு. BRI என்­பது பொரு­ளா­தார நலன்­களைத் தாண்டிச் சென்று, பிராந்­திய நாடு­களை அடி­மை­யாக்கும் சீனாவின் நவ­கா­ல­னித்­துவம் என்­பது மற்­றைய குற்­றச்­சாட்டு.

BRI திட்­டத்தை விளம்­ப­ரப்­ப­டுத்­து­வ­தற்­காக பெருந்­தொகை பணத்தை செல­விடும் சீன அர­சாங்கம், அதனை நியா­யப்­ப­டுத்­து­வ­திலும் தீவிர அக்­கறை காட்­டு­கி­றது. BRI என்­பது சகல தரப்­புக்­க­ளையும் உள்­வாங்கிக் கொண்டு முன்­னேறும் நீண்­ட­கால அபி­வி­ருத்தித் திட்டம். இந்தத் திட்­டத்தை தவ­றாகப் புரிந்து கொள்ள வேண்டாம் எனவும், எதிர்­மறைக் கண்­ணோட்­டத்­துடன் பார்க்க வேண்டாம் எனவும் சீனத் தலை­வர்கள் கூறு­கி­றார்கள்.

இம்­மாத முற்­ப­கு­தியில் சீனத் தலை­ந­கரில் முக்­கி­ய­மான மாநா­டொன்று இடம்­பெற்­றது. இதில் ஆபி­ரிக்கக் கண்­டத்­தி­லுள்ள ஐம்­பது நாடு­களின் தலை­வர்கள் தமது பரி­வா­ரங்கள் சகிதம் கலந்து கொண்­டார்கள். இதில் சீன ஜனா­தி­பதி ஷி ஜின்பிங் உரை­யாற்­றினார். ஆபி­ரிக்கா கண்­டத்தில் சீனா நல்ல நோக்­கத்­துடன் முத­லீடு செய்­கி­றது. இந்த உத­வி­களில் அர­சியல் உள்­நோக்கம் கிடை­யாது என அவர் வலி­யு­றுத்­தினார்.

சீனாவின் BRI திட்­ட­மா­னது, அமெ­ரிக்கா முத­லான வல்­ல­ர­சு­களின் கண்­களை உறுத்­து­கி­ற­தாயின், அதற்­கு­ரிய கார­ணங்­களைப் புரிந்து கொள்­வதில் சிரமம் இல்லை. ஆசிய ஆபி­ரிக்க நாடு­களில் சீனாவின் செல்­வாக்கு அதி­க­ரிப்­பதை அமெ­ரிக்கா போன்ற நாடுகள் விரும்பப் போவ­தில்லை. இத்­த­கைய செல்­வாக்கு கார­ண­மாக, சீனா பொரு­ளா­தார ரீதியில் மாத்­தி­ர­மன்றி பாது­காப்பு மூலோ­பாய ரீதி­யிலும் வலு­வ­டையும் என்­பது அந்­நா­டு­களின் கரி­சனை.

BRI திட்­டத்தின் ஊடாக, ஆசிய ஆபி­ரிக்க நாடு­க­ளுக்கு வழங்­கப்­படும் உத­விகள் கடன்­பொ­றியே. அதனைத் தவிர வேறொன்றும் இல்லை என அமெ­ரிக்கா வாதி­டு­கி­றது. அந்த வாதத்தை நிரூ­பிக்க பல்­வேறு கார­ணிகள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. ஒரு செல்­வந்தர் ஏழைக்கு கடன் வழங்­கு­கிறார் என்று கரு­துவோம். அந்த ஏழை ஒரு­நாளும் திருப்பிச் செலுத்த முடி­யாத அள­விற்கு கடன் வழங்கும் பட்­சத்தில், செல்­வந்தர் ஏழை­யிடம் வேறு ஏதோ­வொன்றை எதிர்­பார்க்­கிறார் என்று தானே அர்த்தம் என்ற கேள்வி முதன்­மை­யா­னது.

மொன்­டி­நீக்ரோ என்ற நாட்டை உதா­ர­ண­மாகக் கொள்ள முடியும். தனது துறை­மு­க­மொன்றில் இருந்து செர்­பியா நோக்கி நெடுஞ்­சாலை அமைப்­ப­தற்­காக சீனாவின் நிதி­யு­த­வியைப் பெற்­றது. இந்த நெடுஞ்­சா­லையின் நிர்­மாணப் பணிகள் பாதி­யில் நிற்­கின்­றன. எனினும், இன்று மொன்­டி­நீக்­ரோவின் படு­கடன் எகி­றி­யுள்­ளது. மொத்த தேசிய உற்­பத்­தியில் 80 சத­வீ­தத்­திற்கு மேலான பெறு­ம­தி­யு­டைய தொகையை மொன்­டி­நீக்ரோ கட­னாக செலுத்த வேண்டும்.

அடுத்து பாகிஸ்தான். அந்­நாட்டில் கடந்த சில ஆண்­டு­க­ளாக பல்­வேறு அர­சியல் நெருக்­க­டிகள். ஆற்றல் அற்ற கறை­ப­டிந்த ஆட்­சி­யா­ளர்கள் சீனா­விடம் இருந்து தாறு­மா­றாக கடன் பெற்­றார்கள். BRI திட்­டத்­திற்கு சீன-­–பா­கிஸ்­தா­னிய பொரு­ளா­தார தாழ்­வாரம் என்று பெயர் சூட்டி சீனாவின் உத­வி­யுடன் நெடுஞ்­சாலை அமைத்­தார்கள். ரயில் பாதை நிர்­மா­ணித்­தார்கள். இன்று சீனாவின் படு­க­டன்­களைத் திருப்பிச் செலுத்த முடி­யாத நிலைக்கு பாகி;தான் தள்­ளப்­பட்­டுள்­ள­தாக சர்­வ­தேச நாணய நிதியம் அறி­வித்­துள்­ளது.

ஆபி­ரிக்க நாடு­களில் நிலைமை படு­மோசம். இந்­நா­டுகள் பல­வற்றில் ஆட்சி நிர்­வாகம் சீர்­கு­லைந்து, இலஞ்­சமும் ஊழலும் தலை­வி­ரித்­தா­டு­கின்­றன. பொரு­ளா­தாரம் பெரும் வீழ்ச்­சியை எதிர்­கொள்­கி­றது. பெரும்­பா­லான நாடு­க­ளுக்கு சீனா கடன் வழங்­கி­யி­ருக்­கி­றது. இதற்கு முன்னர் 60 பில்­லியன் டொலர் கடன். இம்­மாத முற்­ப­கு­தியில் இடம்­பெற்ற மாநாட்டில் மேலும் 60 பில்­லியன் டொலரை உத­வி­யாக வழங்கப் போவ­தாக சீன ஜனா­தி­பதி ஷி ஜின்பிங் அறி­வித்­துள்ளார்.

இந்தக் கடன்கள் குறித்து கடும் விமர்­ச­னங்கள். தமது மக்­களை ஏமாற்­று­வ­தற்­காக சீன அர­சாங்கம் ஆபி­ரிக்க நாடு­க­ளுக்­காக கடன்­களை உத­விகள் என்றே கூறு­வ­தாக மேற்கு நாடுகள் சாடு­கின்­றன. ஆபி­ரிக்க மக்­க­ளிடம், இது சலுகைக் கடன் என்று விப­ரிக்­கப்­ப­டு­கி­றது. ஆனால், 60 பில்­லியன் டொலரில் 15 பில்­லி­ய­னுக்கு வட்டி செலுத்தத் தேவை­யில்­லை­யென ஷி ஜின்பிங் கூறி­யதை மேற்­கு­லகம் சுட்­டிக்­காட்­டு­கி­றது. சலுகைக் கடன் என்று சீனா ஏமாற்­றி­னாலும், 45 பில்­லியன் டொல­ருக்கு ஆபி­ரிக்க நாடுகள் வட்டி செலுத்த வேண்டும் என மேற்­கு­லக சார்­பு­டைய ஆய்­வா­ளர்கள் கூறு­கி­றார்கள்.

கடன் என்ற பெயரில் சீனா பொறி வைக்­கி­றது என்ற சந்­தேகம் பற்றி இன்று வெளிப்­ப­டை­யாக பேசப்­ப­டு­கி­றது. சில நாடுகள் நிலைமை உணர்ந்து, சீனாவின் உத­வியின் கீழான அபி­வி­ருத்தித் திட்டங்­களை முடக்­கி­யி­ருக்­கின்­றன. மியன்மார் சீன உத­வி­யி­லான துறை­முக நிர்­மாணத் திட்­டத்தை மீள்­ப­ரி­சீ­லனை செய்­வ­தென முடிவு செய்­துள்­ளது. சீனக் கம்­ப­னிகள் நிர்­மா­ணிக்கும் இரு நீர்­மின்­வலு உற்­பத்தித் திட்­டங்­களின் கட­டு­மாணப் பணி­களை நிறுத்­து­வது பற்றி நேபாளம் சிந்­திக்­கி­றது.

இந்தத் தீர்­மா­னங்­களின் பின்னால் முக்­கி­ய­மான கார­ணங்கள் இருக்­கின்­றன. உதவி என்ற பெயரில் சீனக் கம்­ப­னி­களின் ஆதிக்­கமும், சீனத் தொழி­லா­ளர்­களின் படை­யெ­டுப்பும் தீவிரம் பெறு­வது முதன்மைக் காரணம். இந்த நிலை­மையை மொன்­டி­நீக்ரோ முதல் மலேஷியா வரை­யி­லான பல நாடு­களில் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது என மேற்கு நாடுகள் குற்­றஞ்­சு­மத்­து­கின்­றன. எங்­கெல்லாம் சீனக் கம்­ப­னிகள் கால்­ப­தித்­துள்­ள­னவோ, அங்­கெல்லாம் சீனர்­க­ளுக்­கான குடி­யி­ருப்­புக்கள் முளைப்­ப­தாக அவை குற்­றஞ்­சு­மத்­து­கின்­றன.

இலங்­கையின் துறை­முக நகரைப் போன்று, மலேஷி­யாவில் நான்கு செயற்கைத் தீவு­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு ஃபொரெஸ்ட் சிற்றி என்ற பெயரில் பாரிய நகரம் உரு­வாக்­கப்­ப­டு­கி­றது. இந்த நகரில் ஏழு இலட்சம் பேர் மாத்­தி­ரமே வசிக்­கலாம்.. இதில் சரா­சரி மலே­ஷியப் பிர­ஜைகள் எவரும் காணி­க­ளையோ, வீடு­க­ளையோ வாங்க முடி­யாது. அவ்­வ­ளவு விலை. இது மலேஷி­யாவில் வாழும் செல்­வந்த சமூ­கத்தை இலக்­காக வைத்து உரு­வாக்­கப்­பட்ட திட்­ட­மென வெளிப்­ப­டை­யாகத் தெரி­வ­தாக மேற்­கு­லகம் குறை கூறு­கி­றது. இவை போன்ற திட்­டங்கள் நவ கால­னித்­து­வத்­திற்கு சம­மா­னவை என கூறப்­ப­டு­வ­தற்­குக் காரணம், இவை சுதந்­திரம் பெற்ற நாடு­களின் இறை­மையை மீறும் வகையில் அமைந்­தி­ருப்­பது தானென்ற வாதத்தை முற்­று­மு­ழு­தாக நிரா­க­ரிக்க முடி­யாது.

சம­கால அர­சியல், பொரு­ளா­தார உலகில் தவிர்க்க முடி­யாத பிரச்சி­னை­யொன்று உள்­ளது. அது சீனாவைப் புறக்கணித்து முன்னேற முடியாது என்ற நிலைப்பாடாகும். சுதந்திர நாடுகள் மாத்திரமன்றி, அரசியல் தலைவர்களும் இத்தகைய நிலைப்பாட்டிலேயே உள்ளார்கள் என்பதை, அவர்களின் செயற்பாடுகள் உணர்த்தி நிற்கின்றன. சீனா வலைவிரிக்குமானால் அந்த வலையில் இருந்து சூசகமாகத் தப்பித்து, சீனாவின் வலையை வைத்து மீன்பிடிக்கும் அரசியல் சாணக்கியமோ, தைரியமோ பல நாடுகளுக்கு இல்லை. இருந்தபோதிலும், முதுபெரும் அரசியல்வாதியான மஹதிர் மொஹம்மட் சீனா என்ற ஜாம்பவானை தைரியமாக எதிர்த்து நின்றிருக்கிறார். தமது நாட்டில் பெருந்தொகை முதலீட்டுடன் சீனா முன்னெடுக்கும் இரு திட்டங்களை ரத்துச் செய்யப் போவதாக மலேஷியப் பிரதமர் அறிவித்துள்ளார். நாம் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாவிட்டால், அந்தத் திட்டங்களை அமுலாக்கி சிக்கலில் மாட்டிக் கொள்ளத் தேவையில்லை என்பது அவரது நிலைப்பாடு. சீனக் கடன்பொறி ராஜதந்திரம் பற்றிய வாதப்பிரதிவாதங்களுக்கு மஹதிர் மொஹமட்டின் நிலைப்பாடே சிறப்பான பதிலாகத் தோன்றுகிறது.   

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-09-16#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.