Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்­தி­யாவின் கனவைக் கலைக்கும் நேபாளம்

Featured Replies

இந்­தி­யாவின் கனவைக் கலைக்கும் நேபாளம்

Untitled-7-824e0b4432f75ea08b1c6c422bad8b23811ca223.jpg

 

வங்­காள விரி­குடா விளிம்பு நாடு­களின் கூட்­ட­மைப்­பான பிம்ஸ்ரெக் இப்­போது, சர்­வ­தேச அரங்கில் பலம்­பெற்று வரும், பிராந்­திய நாடு­களின் மற்­றொரு கூட்­ட­மைப்­பாக மாறத் தொடங்­கி­யி­ருக்­கி­றது.

இது ஒன்றும் புதிய அமைப்பு அல்ல. 1997ஆம் ஆண்­டி­லேயே உரு­வாக்­கப்­பட்­டது. ஆனால், கிட்­டத்­தட்ட இரண்டு தசாப்த கால­மாக அது பெரி­ய­ளவில் இயங்­க­வில்லை.

2016ஆம் ஆண்டு மீண்டும் உயிர்த்துக் கொண்­டது. இதற்குக் காரணம், பாகிஸ்­தா­னுக்கும் இந்­தி­யா­வுக்கும் இடையில் தோன்­றிய பிரச்­சினை.

அது­வரை தெற்­கா­சியப் பிராந்­தி­யத்தின் வலு­வான பிராந்­திய நாடு­களின் கூட்­ட­மைப்­பாக சார்க் அமைப்புத் தான் இருந்­தது.

2016ஆம் ஆண்டு சார்க் மாநாடு பாகிஸ்­தானில் நடை­பெ­ற­வி­ருந்த நிலையில் இந்­தியா அதனைப் புறக்­க­ணிப்­ப­தாக அறி­வித்­தது. அது­போ­லவே, இலங்கை, பூட்டான் ஆகிய நாடு­களும் முடி­வெ­டுத்­தன.

இதனால் பாகிஸ்­தானில் நடக்க வேண்­டிய சார்க் மாநாடு நடக்­க­வில்லை. பாகிஸ்தான் பல்­வேறு முயற்­சி­களை எடுத்தும் அது கைகூ­ட­வில்லை.

சார்க் அமைப்பில் பாகிஸ்தான் உறுப்பு நாடாக இருக்­கி­றது. சீனா­வுக்கும் கண்­கா­ணிப்பு நாடு என்ற அந்­தஸ்து வழங்­கப்­பட்­டது. இது இந்­தி­யா­வுக்கு அசௌ­க­ரி­யத்தைக் கொடுத்­தது.

பாகிஸ்­தா­னுடன் ஏற்­பட்ட முரண்­பா­டு­களை அடுத்து. சார்க் அமைப்பை பல­வீ­னப்­ப­டுத்தும் முடி­வுக்கு இந்­தியா வந்­தது. 2016ஆம் ஆண்டு அந்த திட்டம் நிறை­வே­றி­யது.

உட­ன­டி­யா­கவே, இந்­தியா, பிம்ஸ்ரெக் கூட்­ட­மைப்­புக்கு மீளுயிர் கொடுத்­தது. கோவாவில் நடந்த பிறிக்ஸ் நாடு­களின் தலை­வர்­களின் உச்சி மாநாட்­டுடன் இணைந்­த­தாக, பிம்ஸ்ரெக் தலை­வர்­களின் உச்சி மாநாட்­டையும் இந்­தியா நடத்­தி­யது.

அதற்குப் பின்னர் கடந்த ஓகஸ்ட் மாதம், 30, 31ஆம் திக­தி­களில் பிம்ஸ்ரெக் அமைப்பின் உச்சி மாநாடு நேபா­ளத்தில் நடந்­தது.

இந்த பிம்ஸ்ரெக் அமைப்பில், பாகிஸ்தான், மாலை­தீவு, ஆப்­கா­னிஸ்தான் ஆகிய சார்க் நாடுகள் இல்லை. இலங்கை, பங்­க­ளாதேஷ், நேபாளம், பூட்டான், இந்­தியா ஆகிய ஐந்து சார்க் நாடு­க­ளுடன், மேல­தி­க­மாக மியன்­மாரும், தாய்­லாந்தும் இடம்­பெற்­றுள்­ளன.

பிராந்­திய நாடு­களின் அமைப்­பு­களை வழி­ந­டத்தும்- தலைமை தாங்கும் ஆர்வம் இந்­தி­யா­வுக்கு உள்­ளது. சார்க் அமைப்பு சற்று விரி­வ­டைந்து, .இந்­தி­யாவின் தலை­மைத்­து­வத்­துக்கு சவால்­களைத் தோற்­று­விக்கும் சூழல் ஏற்­பட்ட போது, அதனை ஓரம்­கட்டும் முடி­வுக்கு வந்­தது இந்­தியா.

இப்­போது, பாகிஸ்­தானை தவிர வேறெ­வரும் பெரி­தாக சார்க் பற்றி பேசு­வ­தில்லை.

அண்­மையில், நேபா­ளத்தில் பிம்ஸ்ரெக் மாநாட்­டுக்குச் சென்­றி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, காத்­மண்­டுவில் உள்ள சார்க் செய­ல­கத்­துக்கும் சென்­றி­ருந்தார். இது நாங்கள் நடு­நி­லை­யாக இருக்­கிறோம் என்று பாகிஸ்­தா­னுக்கு சமிக்­ஞையை வெளிப்­ப­டுத்தும் யுக்தி.

பிராந்­திய அர­சியல், இரா­ஜ­தந்­திர, பொரு­ளா­தார ரீதி­யாக பிம்ஸ்ரெக் அமைப்பை பலப்­ப­டுத்­து­வதில் அக்­கறை காட்­டிய இந்­தியா, இந்த ஆண்டு அதனை இன்­னொரு கட்­டத்­துக்குக் கொண்டு சென்­றி­ருக்­கி­றது.

பிம்ஸ்ரெக் மாநாடு தொடங்­கப்­ப­டு­வ­தற்கு முன்­னரே, இந்­தியா அதி­கா­ரிகள் மட்­டத்தில் பேச்­சுக்­களை நடத்தி, பிம்ஸ்ரெக் நாடு­களின் இரா­ணுவக் கூட்டுப் பயிற்சி ஒன்­றுக்கு ஒழுங்கு செய்­தது.

புனேயில் ஒரு வார காலம் இந்தக் கூட்டுப் பயிற்சி இடம்­பெற்­றது. ஒவ்­வொரு நாட்டில் இருந்தும், தலா 30 படை­யினர் பங்­கேற்­றனர். ஆரம்­பத்தில், பிம்ஸ்ரெக் அமைப்பின் 7 நாடு­களும் இதற்கு இணங்­கின.

எனினும், பின்னர், இலங்கை, பங்­க­ளாதேஷ், மியன்மார், பூட்டான் ஆகிய நான்கு நாடுகள் தான் இந்­தி­யா­வுக்கு தமது படை­யி­னரை அனுப்பி வைத்­தன.

தாய்­லாந்து, கூட்டுப் பயிற்­சிக்கு தமது படை­யி­னரை அனுப்­ப­வில்லை. கண்­கா­ணிப்பு அதி­கா­ரி­களை மாத்­திரம் அனுப்­பி­யது. நேபாளம் தான் கடைசி நேரத்தில் இந்­தி­யா­வுக்கு அதிர்ச்­சியைக் கொடுத்­தது.

புனேக்கு நேபாள இரா­ணுவ அணி புறப்­ப­டு­வ­தற்கு முதல் நாள் தான், இந்தக் கூட்டுப் பயிற்­சியில் பங்­கேற்­ப­தில்லை என்று முடிவு செய்­தது நேபாளம். இது இந்­தி­யா­வுக்கு அதிர்ச்­சி­யையும் ஏமாற்­றத்­தையும் கொடுத்­தது.

ஏனென்றால், இந்த பிம்ஸ்ரெக் வியூ­கத்தில் நேபாளம் முக்­கி­ய­மா­ன­தொரு நாடு.

பிம்ஸ்ரெக் அமைப்பை இந்­தியா வலுப்­ப­டுத்­தி­ய­மைக்கு இரண்டு கார­ணிகள். ஒன்று பாகிஸ்தான். இரண்­டா­வது சீனா.

சார்க் அமைப்­புக்குள் இருந்து பாகிஸ்­தானை விலக்கி வைப்­பது இந்­தி­யாவின் ஒரு நோக்கம் என்றால், சீனாவின் பிராந்­திய ரீதி­யான தலை­யீட்டை ஓரம்­கட்­டு­வது இன்­னொரு நோக்கம்.

சார்க் அமைப்பின் கண்­கா­ணிப்பு நாடு என்ற அந்­தஸ்தை பெறும் அள­வுக்கு சீனா முன்­னே­றி­யி­ருந்­தது.

இந்­தியப் பெருங்­க­டலில் சீனாவின் ஆதிக்கம் வலு­வ­டைந்து வந்த நிலையில், அதற்கு முடி­வு­கட்­டு­வ­தற்­கான மாற்று உபா­ய­மா­கவும், சார்க்கை முடக்கி பிம்ஸ்­ரெக்கை உரு­வாக்­கி­யது இந்­தியா.

நேபாளம், நீண்­ட­கா­ல­மா­கவே இந்­தி­யாவின் ஒரு மாநிலம் போலத் தான் இருந்து வந்­தி­ருக்­கி­றது. இன்னும் கூட நேபா­ளத்தைச் சேர்ந்­த­வர்கள் தான், இந்­தி­யாவில் காவல் பணி­களில் கூர்க்­காக்­க­ளாக இருக்­கி­றார்கள். இந்­திய இரா­ணு­வத்­தி­னரால் கூர்க்கா ரெஜிமென்ட் என்ற படைப்­பி­ரிவும் இருக்­கி­றது.

நேபா­ளத்­துக்கு கடலோ, துறை­முக வச­தி­களோ கிடை­யாது. இம­ய­ம­லையில் உள்ள நாடாக நேபா­ளத்­துக்­கான அத்­தி­யா­வ­சியப் பொருட்கள், நிதி என்று இந்­தி­யாவே கொடுத்து வந்­தி­ருக்­கி­றது.

ஆனால் அண்­மைக்­கா­ல­மாக நேபாளம் இந்­தி­யாவின் கட்­டுப்­பாட்­டுக்குள் இல்லை. அங்கு சீனாவின் தலை­யீ­டுகள் அதி­க­ரித்து விட்­டன. இந்­தி­யாவை விட அதி­க­மா­கவே நேபா­ளத்­துக்கு கொட்டிக் கொடுக்க சீனா தயா­ராக இருக்­கி­றது.

சீனாவின் பேச்சைக் கேட்டு இந்­தி­யா­வுடன் அடிக்­கடி முரண்டு பிடிக்கும் நிலைக்கும் நேபாளம் வந்­தி­ருக்­கி­றது.

இரண்டு நாடு­க­ளுக்கும் நடுவே இருப்­பதால், நேபா­ளத்தை கைக்குள் போட்டுக் கொள்­வது இப்­போது இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான, ஒரு பனிப்­போ­ரா­கவே நடந்து கொண்­டி­ருக்­கி­றது.

பிம்ஸ்ரெக் அமைப்பில் நேபாளம் அங்கம் வகித்­தி­ருந்­தாலும், அர­சியல், இரா­ஜ­தந்­திர ரீதி­யாக இந்­தி­யா­வுடன் இணைந்­தி­ருப்­ப­தாக காட்டிக் கொண்­டாலும், இரா­ணுவ மற்றும் பாது­காப்பு விவ­கா­ரங்கள் என்று வந்து விட்டால், நேபாளம் இந்­தி­யாவின் சொல்­லுக்குத் தலை­யாட்டும் நிலையில் இல்லை.

புனேயில் நடந்த பிம்ஸ்ரெக் நாடு­களின் இரா­ணுவ கூட்டுப் பயிற்­சியில் இருந்து விலக நேபாளம் எடுத்­தி­ருந்த முடிவே இதனை உறு­திப்­ப­டுத்­து­கி­றது. நேபா­ளத்தின் இந்த முடிவை இந்­தியா எதிர்­பார்க்­க­வில்லை.

ஏற்­க­னவே, இந்­தி­யாவின் அண்டை நாடு­களில் ஒன்­றான, மாலை­தீவை இந்­தியா கிட்­டத்­தட்ட சீனா­விடம் இழந்து விட்­டது. மாலே விமான நிலைய அபி­வி­ருத்தித் திட்­டத்தில் இருந்து இந்­தி­யாவை வெளி­யேற்ற எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கையில் இருந்து தொடங்­கி­யது அந்தப் பிரச்­சினை.

மாலை­தீவில் அவ­சர உதவித் தேவை­க­ளுக்­காக இந்­திய விமா­னப்­ப­டையின் எம்.ஐ.17 ஹெலி­கொப்­டர்கள் மூன்றும், 48 விமா­னப்­ப­டை­யி­னரும், அங்கு நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இந்­திய ஹெலி­கொப்­டர்­களை அகற்­று­மாறும், இந்­திய விமா­னப்­ப­டை­யி­னரின் வீசா முடி­வுக்கு வந்து விட்­ட­தா­கவும், அண்­மையில் மாலை­தீவு அறி­வித்த போது இந்­தியா குழப்­ப­ம­டைந்­தது,

கடை­சி­யாக இரண்டு நாடு­க­ளுக்­கு­மி­டையில் நடத்­தப்­பட்ட பேச்­சுக்­களை அடுத்து, இந்­திய ஹெலி­களும், விமா­னப்­ப­டை­யி­னரும் தங்­கி­யி­ருக்க தற்­கா­லிக அனு­ம­தியை வழங்­கி­யி­ருக்­கி­றது மாலை­தீவு.

அதே­போன்­ற­தொரு நிலையை நோக்­கியே நேபா­ளமும் செல்லத் தொடங்­கி­யுள்­ளதா என்ற அச்சம் இந்­தி­யா­வுக்கு இருக்­கவே செய்­கி­றது.

பிம்ஸ்ரெக் நாடு­களின் இரா­ணுவக் கூட்டுப் பயிற்­சியின் ஒரு கட்­ட­மாக, உறுப்பு நாடு­களின் இரா­ணுவத் தள­ப­திகள் பங்­கேற்ற மாநாடு ஒன்றும், புனேயில் நடை­பெற்­றது. அதில் இரா­ணுவத் தள­பதி லெப்.ஜெனரல் மகேஸ் சேன­நா­யக்­கவும் பங்­கேற்­றி­ருந்தார்.

அதில் உரை­யாற்­றிய இந்­திய இரா­ணுவத் தள­பதி ஜெனரல் பிபின் ராவத், சீனா­விடம் இருந்து உதவி பெறும் நாடுகள், அந்த உத­விகள் எது­வுமே இல­வசம் அல்ல என்­பதை தெரிந்து கொள்­வார்கள் என்று எச்­ச­ரித்­தி­ருந்தார்.

அத்­துடன், நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகள் இந்­தி­யாவின் பக்கம் சாய வேண்டும் என்றும், ஏனென்றால் அது தான் புவி­யியல் என்றும் அவர் கூறி­யி­ருந்தார்.

பாகிஸ்­தா­னுக்கும் அமெ­ரிக்­கா­வுக்கும் இடையில் முன்­பி­ருந்த நெருக்கம் இல்­லாமல் போனது போலவே, நேபா­ளத்­துக்கும் சீனா­வுக்கும் இடை­யி­லான நெருக்கம் தற்­கா­லி­க­மா­னது தான் என்ற தொனியில் அவர் கருத்து வெளி­யிட்­டி­ருந்தார்.

இந்­திய இரா­ணுவத் தள­பதி ஒருவர் பிராந்­திய அர­சியல் பற்றி அதிகம் வெளி­யிட்ட கருத்­தாக இதனைக் கொள்­ளலாம். இது, பிராந்­திய அர­சி­யலை விட, பிராந்­திய பாது­காப்­புக்கு இந்­தியா முக்­கி­யத்­துவம் கொடுக்­கி­றது என்­பதை காட்­டி­யி­ருக்­கி­றது.

ஆனாலும், சார்க் அமைப்பில் தனக்கு அடங்­காத நாடு­க­ளான, பாகிஸ்தான், மாலை­தீவை விலக்கி வைத்துக் கொண்டு, தனக்குக் கீழ் செயற்­படக் கூடிய நாடு­களை உள்­ள­டக்கி பிம்ஸ்ரெக் அமைப்பை பலப்­ப­டுத்­திய இந்­தி­யா­வுக்கு நேபாளம் சவா­லா­கவே இருக்­கி­றது.

புனே இரா­ணுவப் பயிற்சி நிறைவு நிகழ்வில் உரை­யாற்­றிய இந்­திய இரா­ணுவத் தள­பதி, இந்­தி­யாவின் பிரதான பொருளாதாரப் போட்டியாளராக சீனாவே உள்ளது, இரண்டு நாடுகளும், தெற்காசியாவின் ஆதிக்கத்துக்காக போட்டியிடுகின்றன என்ற உண்மையை உடைத்திருந்தார்.

அதுபோலவே, இந்த நிகழ்வில் உரையாற்றிய இந்தியாவின் பாதுகாப்பு இணை அமைச்சர் சுபாஸ் பாம்ரே, பிம்ஸ்ரெக் பிராந்தியத்தில், தீவிரவாதம் மற்றும் நாடு கடந்த குற்றங்களுக்கு எதிரான முயற்சிகளுக்கு தலைமை வகிக்கும் பொறுப்பை இந்தியா கொண்டிருப்பதாகக் கூறியிருந்தார்.

பிராந்தியத் தலைமைத்துவத்தை வகிக்க இந்தியா விரும்புகிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

அவ்வாறு பிராந்திய தலைமைத்துவத்தை உறுதிப்படுத்துவது உறுப்பு நாடுகள் தான். தலைமைக்கு அடங்கிப்போகும் உறுப்பு நாடுகள் இருக்கும் வரை தான் அது சாத்தியம்.

நேபாளம் குறுக்கே இழுத்துக் கொண்டு செல்வது. இந்தியாவின் அந்த தலைமைத்துவ கனவுக்கு சவாலாகவே இருக்கும்.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-09-23#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.