Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சி.வி.க்கு எதிரான நடவடிக்கைகள் தமிழர்களை பலவீனமாக்கும்: சித்தார்த்தன்

Featured Replies

சி.வி.க்கு எதிரான நடவடிக்கைகள் தமிழர்களை பலவீனமாக்கும்: சித்தார்த்தன்

 

 

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நடவடிக்கைகள் தமிழர்களின் பலத்தினை பலவீனமாக்கும் என ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் முப்பதாவது நிறைவினையொட்டி முத்து விழா மட்டக்களப்பில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “எமது கட்சியின் செயலதிபர் உமா மகேஸ்வரனின் செயற்பாடுகள் என்றும் தூர நோக்குடனேயே இருந்து வந்தது. தமிழீழம் என்ற விடயத்தினை இந்தியா மற்றுமின்றி உலக நாடுகளும் ஏற்றுக்கொள்ளாது.

ஆகவே நியாயமான தீர்வொன்றை நோக்கி சென்றால் தான்  வடக்கு, கிழக்கு பிரதேசத்தினை சுதந்திரமான பகுதியாக பெறமுடியும் என்ற நம்பிக்கையுடனேயே அவர் கூடுதலாக செயற்பட்டு வந்தார்.

எமது பின்னடைவுகளுக்கு முக்கிய காரணம் நாங்கள் தனியாக செயற்படவேண்டும், வேறு நாடுகளுடன் சார்ந்திருக்ககூடாது போன்ற அரசியல் நிலைப்பாடுகளே ஆகும்.

மேலும் இந்தியாவுடன் யுத்த நடைபெற்ற காலத்திலும் இராணுவத்துடன் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் எமது மக்களின் பாதுகாப்புக்காக எமது கட்சி உறுதியுடன் செயற்பட்டது.

1990க்கு பின்னர் வவுனியாவில் 27 கிராமங்களை நாங்கள் உருவாக்கி எமது இருப்பினை பாதுகாக்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தோம். இவைகள் எல்லாம் நாங்கள் தேர்தலில் நிற்போம் என நினைக்காத காலங்களில் மேற்கொண்ட நடவடிக்கையாகும்.

அந்தவகையில் தமிழர் விடுதலைக்கூட்டணி என்பது தமிழ் தலைவர்கள் ஒன்றிணைந்து பேசி உருவாக்கிய ஒரு கூட்டமைப்பு. தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது வலிந்துகொண்டுவரப்பட்ட அமைப்பாகும். அது உண்மையாக அனைவரையும் ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்று கொண்டுவரப்படவில்லை.

இவ்வாறு தமிழ் தேசிய கூட்டமைப்பில் பல வேறுபாடுகள் பிரச்சினைகள் இருந்தாலும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதில் எமது கட்சி மிகவும் தீவிரமாக இருக்கின்றது.

மேலும் வடமாகாண முதலமைச்சர் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தமிழர்களின் பலத்தினை பலவீனமாக்கும் சூழ்நிலையினை ஏற்படுத்தும்.

ஆகவே ஒற்றுமையினை வலியுறுத்தும் அதேவேளையில் ஒற்றுமையினை குழப்புபவர்களை நிராகரிப்பதன் மூலம் தமிழ் மக்களின் விடுதலைக்கான பாதையில் கட்சிகளை கொண்டுசெல்வதற்கு தமிழ் மக்கள் பிரதிநிதிகள் உதவ வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/சி-வி-க்கு-எதிரான-நடவடிக்/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.