Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நடிகர் ராஜ்குமார் கடத்தல்: வீரப்பன் கூட்டாளிகள் என சந்தேகிக்கப்பட்ட 9 பேரும் விடுதலை செய்யப்பட்டது ஏன்?

Featured Replies

நடிகர் ராஜ்குமார் கடத்தல்: வீரப்பன் கூட்டாளிகள் என சந்தேகிக்கப்பட்ட 9 பேரும் விடுதலை செய்யப்பட்டது ஏன்?

18 ஆண்டுகளுக்கு முன்பாக கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த 9 பேரையும் ஈரோடு மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

வீரப்பன்படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES

கன்னட திரையுலகின் மிகப் பிரபலமான நடிகராக விளங்கிய ராஜ்குமார் கடந்த 2000ம் ஆண்டு ஜூலை மாதம் 30ஆம் தேதியன்று தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள தொட்டகஜனூரில் உள்ள தனது பண்ணை வீட்டில் தங்கியிருந்தபோது சந்தன மரக்கடத்தல் வீரப்பன் தலைமையிலான ஆயுதம் தாங்கிய குழு ஒன்றால் கடத்தப்பட்டார். அவருடன் மேலும் மூன்று பேரும் கடத்திச் செல்லப்பட்டனர்.

108 நாட்கள் கழிந்த பிறகு, கர்நாடக - தமிழக அரசுகள் நடத்திய பல்வேறுகட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின் நவம்பர் 15ஆம் தேதியன்று ராஜ்குமார் விடுவிக்கப்பட்டார். வீரப்பனும் அவருடைய கூட்டாளிகள் 14 பேரும் இந்தக் கடத்தலில் ஈடுபட்டதாகச் சொல்லப்பட்டது.

இந்த நிலையில், 2004ஆம் ஆண்டில் வீரப்பனும் அவருடைய கூட்டாளிகள் சந்தன கவுடா, மல்லு, சேத்துக்குளி கோவிந்தன் ஆகியோர் தர்மபுரி அருகே சுட்டுக்கொல்லப்பட்டனர்.

 

ராஜ்குமார் கடத்தப்பட்டபோது வீரப்பனுடன் இருந்தவர்கள் என கோவிந்தராஜ், அன்றில், பசுவண்ணா, நாகராஜ், முத்துசாமி, கல்மண்டி ராமன், மாறன், சத்தியா, அமிர்தலிங்கம், ரமேஷ் ஆகியோர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையம் 3வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவந்தது.

குற்றஞ்சாட்டப்பட்டிருந்தவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் ரமேஷ் என்பவர் தலைமறைவாகிவிட்டார்.

வீரப்பன்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

18 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த இந்த வழக்கில் நீதிபதி கே. மணி இன்று தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ராஜ்குமார் கடத்தலோடு சம்பந்தப்பட்டவர்கள் என அரசுத் தரப்பால் நிரூபிக்கப்படாததால், அனைவரும் விடுவிக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.

இந்த வழக்கில் முக்கிய சாட்சிகளாக இருந்திருக்கக்கூடிய நடிகர் ராஜ்குமாரிடமுமோ அவருடைய மனைவி பார்வதம்மாவிடமோ எந்த விசாரணையும் நடத்தப்படவில்லையென்பதை நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.

வீரப்பன்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

குற்றம்சாட்டப்பட்டவர்களை அடையாளம் காணும் அணிவகுப்பு நடந்தபோதும் அவர்கள் பங்கேற்கவில்லை என்பதையும் நீதிபதி சுட்டிக்காட்டியிருக்கிறார்.

தவிர, குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என்றும் நீதிபதி சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இலங்கைஇலங்கை

பிணைத் தொகை கேட்கும் ஆடியோ கேஸட் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதோடு, பிற ஆதாரங்களும் பத்து மாதங்கள் கழித்தே அளிக்கப்பட்டன என்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, குற்றம் நடந்த இடத்தில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற நடைமுறை பின்பற்றப்படவில்லை எனவும் கூறினார்.

இந்தக் கடத்தல் சம்பவத்தின்போது வீரப்பனுடன் அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்திய அரசுத் தூதர்களின் (நக்கீரன் கோபால், பழ.நெடுமாறன், பேராசிரியர் பிரபா.கல்விமணி (கல்யாணி) புதுவை சுகுமாரன்) சாட்சியங்களும் பெறப்படவில்லை என்பதையும் நீதிபதி குறிப்பிட்டார்.

வீரப்பனை கொன்ற காவல்துறையினருக்கு பதக்கம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

மேலும், இந்த ஒன்பது பேர்தான் கடத்தலில் ஈடுபட்டார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் சாட்சியங்கள் ஏதும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை என்பதைக் குறிப்பிட்ட நீதிபதி, சந்தேகத்தின் பலனை குற்றவாளிகளுக்கு அளித்து அவர்களை விடுதலை செய்வதாகத் தீர்ப்பளித்தார்.

பரபரப்பான இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதையடுத்து, நீதிமன்றத்தில் பெரும் எண்ணிக்கையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். குற்றம்சாட்டப்பட்ட 9 பேரில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.

https://www.bbc.com/tamil/india-45641376

  • தொடங்கியவர்

ராஜ்குமாரின் 108 நாட்கள் ‘வனவாச’ பின்னணி

e2001d48P1546455mrjpg

கடத்திச் செல்லப்பட்ட நடிகர் ராஜ்குமாரை விடுவிக்கும்போது அவருக்கு அன்பளிப்பாக வேட்டி, சட்டை வழங்கிய வீரப்பன்.(கோப்புப் படம்)

கன்னட நடிகர் ராஜ்குமார் உள்ளிட்டோரை சந்தனக் கடத்தல் வீரப்பனும் அவரது கூட்டாளிகளும் கடத்திச் சென்று 108 நாட்கள் அடர்ந்த வனப்பகுதிகளில் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

அதன் முழு விவரம்: தாளவாடி அருகே தொட்டகாஜனூரில் உள்ள பண்ணை வீட்டில் இருந்து, 2000-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி, அமாவாசை நாளில் கன்னட நடிகர் ராஜ்குமார், அவரது மைத்துனர் எஸ்.ஏ.கோவிந்தராஜு, உறவினர் நாகேஷ், இயக்குநரும், ராஜ்குமாரின் உதவியாளருமான நாகப்பா ஆகியோரை துப்பாக்கி முனையில் வனத்துக்குள் கடத்திச் சென்றனர் வீரப்பனும், அவரது கூட்டாளிகளும்.

 

‘நான் அவருக்கு (ராஜ்குமார்) ஒரு தீங்கும் செய்ய மாட்டேன். என்னிடம் அவர் பத்திரமாக இருப்பார். இந்த கேசட்டை (ஒலிநாடா) கர்நாடக முதல்வரிடம் கொடுங்கள்’ என கடத்தலின்போது ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாளிடம், வீரப்பன் ஒரு ஒலிநாடாவைக் கொடுத்து விட்டுச் சென்றார்.

அதில், ‘இதற்கு முன்பு நான் தனி மனிதனாக இருந்தேன். அப்போது உங்களுடைய அனுதாபமும், பரிவும் எனக்குத் தேவையாக இருந்தது. சரணடைய நான் விரும்பினேன். ஆனால், இப்போது நான் ஒரு இயக்கத்தின் அங்கமாக இருக்கிறேன். உங்களுடைய அனுதாபத்தை நான் தேடவில்லை. ராஜ்குமாரை விடுவிக்க காவல் துறையினரை அனுப்புவது பற்றி நீங்கள் சிந்திக்கக் கூடாது. நீங்கள் காவல் துறையை அனுப்பினால், ராஜ்குமாரின் உடல் கூறுகூறாகத் துண்டு போடப்பட்டு விடும். சில நிபந்தனைகளின் பேரில் ராஜ்குமாரை விடுவிப்பேன். அதற்காக ஒரு தூதரை என்னிடம் அனுப்புங்கள். விடுவிப்பது பற்றிய நிபந்தனைகளை நான் அவரிடம் விவாதிப்பேன்’ என்று அதில் பேசியிருந்தார் வீரப்பன்.

அடுத்த இரு நாட்களில் இரு மாநில அரசுகளின் தூதுவராக நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால், வீரப்பனைச் சந்திக்க வனப்பகுதிக்குள் சென்றார். இதனிடையே, தான் நலமாக இருப்பதாகவும், இரு மாநில மக்களும் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் ராஜ்குமார் பேசிய ஒலிநாடா, வனத்தில் இருந்து வந்து சேர்ந்தது.

நக்கீரன் கோபால் குழுவினர் மூலமாக ஆகஸ்ட் 5-ம் தேதியன்று வீரப்பனின் நிபந்தனைகள் அடங்கிய அடுத்த ஒலிநாடா வந்து சேர்ந்தது. அதில் வீரப்பனின் 10 நிபந்தனைகள் இடம்பெற்றன.

காவிரி நடுவர் மன்ற இடைக்கால உத்தரவின்படி தமிழகத்துக்கு 205 டிஎம்சி நீரைத் திறந்துவிட கர்நாடகா ஒப்புக்கொள்ள வேண்டும். காவிரி கலவரத்தின்போது பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நஷ்டஈடு அளிக்க வேண்டும். திருவள்ளுவர் சிலையை பெங்களூருவில் உடனே திறக்க வேண்டும். அதிரடிப்படையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் அதில் இடம்பெற்றிருந்தன.

ஒவ்வொரு கோரிக்கைக்கும் தமிழக - கர்நாடக அரசுகளின் சார்பில் பதில் தயாரிக்கப்பட்டு அவை வெளிப்படையாக அறிவிக்கப்பட்டன. நக்கீரன் கோபால் மூலமாக இந்த பதில் வீரப்பனை சென்றடைந்தது.

வனத்தில் வீரப்பனைச் சந்தித்துவிட்டு திரும்பிய கோபால் மூலம் வீரப்பன் சார்பில் பதில் அறிக்கை வந்தது. அதில், அரசின் பதில் திருப்தி அளிக்கவில்லை என கோரிக்கை வாரியாக பதிவு செய்த வீரப்பன், கூடுதலாக 10-ம் வகுப்பு வரை தமிழே பாடமொழியாக இருக்க வேண்டும், சின்னாம்பதி, வாச்சாத்தியில் வன்கொடுமைக்கு ஆளான பெண்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என 2 புதிய கோரிக்கைகள் சேர்க்கப்பட்டு இருந்தன.

நக்கீரன் கோபால் குழுவினர் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு சென்ற நிலையில், நீதிமன்ற வழக்கு உள்ளிட்ட காரணங்களால், பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அதே நேரத்தில் வீரப்பன் - ராஜ்குமாரிடம் இருந்து ஒலி-ஒளி நாடாக்கள் வந்தன. அகில இந்திய வானொலி மூலம் பர்வதம்மாள், எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோர் வீரப்பனுக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்த சம்பவங்களும் நடந்தன.

இதற்கிடையே ராஜ்குமாருடன் கடத்தப்பட்ட அவரது உதவியாளர் நாகப்பா, வீரப்பனின் பிடியில் இருந்து செப்டம்பர் 28-ம் தேதி தப்பித்து வந்தார். வீரப்பனைத் தாக்கிவிட்டு, தான் தப்பித்து வந்ததாக நாகப்பா தெரிவித்தார்.

மீட்பு பணியில் நெடுமாறன்

பழ.நெடுமாறன், பேராசிரியர் கல்யாணி, கே.சுகுமாரன் ஆகியோர் கொண்ட குழுவினர் மீட்புப் பணிக்காக வனத்துக்குள் சென்றனர். ராஜ்குமாருடன் கடத்தப் பட்ட அவரது மைத்துனர் கோவிந்தராஜுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவரை நெடுமாறன் - நக்கீரன் கோபால் குழுவினருடன் வனத்தில் இருந்து வீரப்பன் அனுப்பி வைத்தார்.

கைதிகளை விடுவிப்பது தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு உள்ளிட்ட பின்னடைவுகளால் மீட்பு பணி தாமதமானது. நெடுமாறன் குழுவினருடன் பானு என்ற மருத்துவரும் வனப்பகுதிக்கு சென்று ராஜ்குமாருக்கு சிகிச்சை அளித்துவிட்டு திரும்பினார்.

108 நாள் வனவாசத்துக்குப் பிறகு, நவம்பர் 14-ம் தேதி நெடுமாறன் குழுவினர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றனர். அன்று இரவு வீரப்பனிடம் இருந்து ராஜ்குமாரை விடுவித்த நெடுமாறன் குழுவினர், ஈரோடு ஊஞ்சப்பாளையம் கிராமத்தில் உள்ள ராமராஜ் என்ற அரசியல் கட்சி பிரமுகர் வீட்டுக்கு அழைத்து வந்தனர். நவம்பர் 15-ம் தேதி ராஜ்குமார் விடுவிக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.

https://tamil.thehindu.com/tamilnadu/article25044663.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.