Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்முனை தொடர்பாக - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கல்முனை தொடர்பாக
ON KALMUNAI

Latter from Ashroffali Fareed 
கல்முனையில் மாநகர சபையில் ஒன்றிணைந்து இருக்கவே அங்குள்ள தமிழர்கள் விரும்பவில்லை என்பதே நிதர்சனம். அதன் காரணமாகவே ஹென்றி மகேந்திரன் காரியப்பர் வீதிக்கான பெயர்ப்பலகையை உடைத்து நொறுக்கினார். இப்படி எத்தனையோ சம்பவங்களை வரிசைப்படுத்தலாம். அதன் பின்னர் தான் ஹென்றி மகேந்திரனின் செல்வாக்கு அதிகரித்தது. அடுத்தவர் கோடீஸ்வரன். நாளுக்கு நாள் இனவாதம் பேசிக் கொண்டிருக்கின்றார். இவர்கள் மாறமாட்டார்கள்- Ashroffali Fareed
*

Reply of V.I.S.Jayapalan. 
*
அன்புக்குரிய Ashroffali Fareed அவர்களுக்கு, ஆம் நண்பா நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை. 
.
தமிழர்கள் 1948ல் இருந்தே தங்கள் நிலத்தை விட்டுக்கொடுக்காத அரசியலுக்காகவே இரத்தம் சிந்தினார்கள். 1948ல் இருந்தே தமிழர்களது அரசியல் 1, தமிழர் நிலம் 2.தமிழர் கட்சி 3. தமிழர் போராட்டம் என்கிற அடிப்படையி தானே நடந்து வருகிறது. 
.
அம்பாறை மாவட்டம் முதன்மையாக கிழக்கு மாகாணத் தமிழர்கள் தமிழரின் நில உரிமை அடிப்படையிலான போராட்டத்துக்கு பெரிய அளவில் தங்கள் பிள்ளைகளை பலி கொடுத்திருக்கிறார்கள். 
உண்மையில் சிங்கள குடியேற்றத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டம் முதலில் கல்முனை வட்டாரத்தில்தான் ஆரம்பித்தது. 1956ல் கல்முனை பிரதேசத்தில் அடாத்தாக குடியேற சிங்களவர்கள் படையாக திரண்டு வந்தார்கள். அன்று சிங்களவர்களை தடுத்து நிறுத்த துறை நிலாவணை தமிழ் விவசாயிகள் சிங்களவருக்குப் பாதுகாப்புக் கொடுத்த இராணுவ ஜீப்பை நோக்கி சுட்டார்கள். இந்த போராட்டத்தின் மூலம்தான் கல்முனை பாதுகாக்கபட்டது. 
.
முஸ்லிம் அலகு அடிப்படையிலான கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாலர் பிரிவு தரம் உயர்த்தபடுவதை தமிழர்களும் தமிழர்கள் அலகு அடிப்படையிலான கல்முனை பிரதேச செயலாளர் பிரிவு தரம் உயர்த்தப்படுவதை முஸ்லிம்களும் எதிர்ப்பதில் அறமும்இல்லை அர்த்தமுமில்லை. அதேசமயம் முஸ்லிம்களுக்கு சில அடிப்படை அச்சங்கள் உள்ளது. அவற்றை தமிழர்கள் அலட்சியப்படுத்தி விட முடியாது. அவை தொடர்பான வாக்குறுதிகளை செயல்பாட்டுகளை இணக்கமான சூழலை உருவாக்குவது தமிழ் தலைமையின் கடமையாகும். 
.
திரு. ஹென்றி மகேந்திரன்மீது முஸ்லிம்களும் திரு. ஹாரிஸ் அவர்கள் மீது தமிழர்களும் குறை சொல்லுகிறார்கள். முஸ்லிம் தலைவர்களை தமிழர்களும் தமிழர் தலைவர்களை முஸ்லிம்களும் தெரிவு செய்ய முடியாது என்பதை இருதரப்பும் உணரவேண்டும். இது வியாழெந்திரன் கோடீஸ்வரன் ஹாரிஸ் ஹிஸ்புல்லா எல்லோர் தொடர்பாகவும் பொருந்தும் என்பதை தமிழரும் முஸ்லிம்களும் உணரவேண்டும். கல்முனையில் திரு ஹாரிசும் திரு கென்றி மகேந்திரனும் கலந்துரையாடி அரசியல் செய்வதா அல்லது வண. ரண்முத்துக்கல சங்கரரட்ண தேரர் ஆட்ச்சிபுரிவதா என்பதற்கிடையில்தான் கல்முனை மக்களுக்கு தெரிவுள்ளது. வடகிழக்கு மாகாணம் அடங்கிலுமுள்ள தமிழ் முஸ்லிம் தலைவர்கள் தொடர்பாகவும் இதுதான் விதி. திரு.சம்பந்தர் தலைமையில் தமிழர் கூட்டமைப்பு இயங்குவதுபோல திரு.றவுப் ஹக்கீம் ஹிரு, றிசாத் பதிதியூன் திரு.அதாவுல்லா போன்றவர்கள் உட்கார்ந்துபேசி ஒரு கூட்டமைப்பை உருவாக்க வேண்டுமென பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இது முஸ்லிம்களின் பலமாகும், இது முஸ்லிம்களின் அச்சங்களுக்கு ஒளடதமாகும். இது தமிழ் முஸ்லிம் உறவுகளுக்கு அத்திவாரமாகவும் சுமூகமான சூழலை உருவாக்குவதற்க்கு பெரிய அளவுக்கு பங்களிப்பதாகவும் அமையும். . வடகிழக்கு மாகாணத்தில் சுமூகமான தீர்வு உருவாவதானால் அது தமிழ் முஸ்லிம் கூட்டமைப்புகள் உட்கார்ந்துபேசி மட்டுமே உருவாகும். வடகிழக்கு தமிழ் முஸ்லிம் மக்களின் சுமூகமான உறவு மட்டுமே தென்னிலங்கை முஸ்லிம்களினதும் மலையக தமிழரதும் பலமாக அமையும். 
.
தமிழரும் முஸ்லிம்களும் கலந்து பேசியும் பரஸ்பரம் விட்டுகொடுத்தும் முற்போக்கான மலையகத் தமிழ் சிங்கள மக்கள் சக்திகளின் ஆதரவுடனும் புதிய அரசியல் செய்ய ஆரம்பியுங்கள் என வேண்டுகிறேன். . அல்லது இருதரப்புக்கும் மோதும் அடிமைகளின் அரசியல்தான் விதியாகிவிடும். தயவு செய்து இதனை இனியாவது புரிந்து கொள்ளுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.