Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலை உலகின் எந்த நாடும் கண்டிக்கவில்லையே ஜே.வி.பியின் வீரவன்ச விசனம்

Featured Replies

"சர்வதேச நாடுகளின் ஆதரவை இலங்கை அரசு அடியோடு இழந்துவிட்டது. விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் தொடர்பாக சர்வதேச சமூகம் மௌனம் சாதிப்பது இதனை அப்பட்டமாக உறுதிப் படுத்துகிறது'' என்று குறிப்பிட்டு, இது தொடர்பாக விசனம் தெரிவித்திருக்கின்றார் ஜே.வி.பியின் பிரசாரச் செயலாளரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான விமல் வீரவன்ஸ.

அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலம் நீடிக்கும் பிரேரணைமீது நாடாளு மன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

அவர் அங்கு மேலும் கூறியவையாவது:

உலக பயங்கரவாத நாடான அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெறவேண்டும் என்பதற்காகவே இந்த அரசு ஜே.வி.பியுடனான தனது உறவைத் துண்டித்துக்கொண்டது.

ஜே.வி.பியினரின் நல்லாலோசனைகளுடன் செயல்பட்டால் சர்வதேச சமூகத்தின் முகம் கறுத்துவிடும் என அரசு கருதியது.

ஆனால், இப்பொழுது நடப்பது என்ன? சர்வதேச பயங்கரவாத இயக்கம் என அங்கீகரிக்கப்பட்ட புலிகள், கட்டுநாயக்க விமானப் படைத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தியபோது இந்த அரசின் கூட்டாளியான அமெரிக்காவோ அன்றி எந்த ஒரு சர்வதேச நாடோ ஒரு வார்த்தையில் கூடக் கண்டனம் தெரிவிக்கவில்லை.

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகமும் பெயருக்கு இரண்டு வரிகளில் சாடை மாடையாகக் கண்டித்ததோடு சரி. சர்வதேச நாடுகளின் இந்த மௌனம் புலிகளின் வான் தாக்குதலை அங்கீகரித்துள்ளது. இத்தாக்குதலின் மூலம் சமாதானப் பேச்சுகளுக்கு இட்டுச்செல்லமுடியும் என அவர்கள் நம்புகின்றனர் போலும்.

பாதுகாப்புக் கட்டமைப்புகளில் பாரிய குறைபாடுகள் இருக்கின்றன என்பதை அரசு ஒப்புக்கொள்ளவேண்டும்.

சீனா திறமையான "ராடர்' கருவிகளை வழங்க முன்வந்தபோதும், இந்தியாவிடமிருந்து "ராடர்'களை வாங்கியது ஏன்? அரசின் இந்தச் செயல் புலிகளுக்கு வெற்றிபெற வழியமைத்துக் கொடுத்துவிட்டது.

நமது விமானப் படையினருக்கு எதிர்த்தாக்குதல் தொடர்பாக போதிய பயிற்சிகள் அளிக்கப்படவில்லை.

அரசு உள்ளூரில் இருப்பவர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள முயலாமல் வெளிநாடுகளின் உதவிகளை நாடியது.

ஜே.வி.பியினர் அரசுடன் இருந்தால் உலக நாடுகளின் உதவிகளைப் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்று அரசு கருதியது. இதனால், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து 18 வெற்றுத் தோட்டாக்களைத் தன்னுடன் அது இணைத்துக் கொண்டது.

கிழக்கில் பெற்றுள்ள வெற்றியை தனிப்பட்ட அரசியல் லாபமாக்கிக்கொள்ள முயற்சிக்கக் கூடாது. நாட்டு மக்கள் புலிகளின் தாக்குதலினால் பெரும் பீதியடைந்துள்ளனர். புத்தாண்டைக் கொண்டாட முடியாத நிலையில் அவர்கள் இருக்கின்றனர்.

புலிகளின் வான் தாக்குதல் இதுவே கடைசியும் முதலுமாக இருக்கவேண்டும். அதற்கேற்ப பாதுகாப்புத் தரப்புக் கட்டமைப்புகள் சீரமைக்கப்படவேண்டும்.

இந்த அரசாங்கத்தின் மீது நாம் நம்பிக்கை வைக்கவில்லை என்றாலும் நாம் நாட்டின் மீது பற்றுள்ளவர்கள். நாடு காக்கப்படவேண்டும் என்ற நோக்கமுடையவர்கள். அரசை ஆதரிக்காவிட்டாலும் அவசர காலச்சட்டத்தை ஆதரிக்கின்றோம் என்றார் வீரவன்ஸ.

நன்றி : உதயன்

அட காலம் கடந்தாலாவது பரவாயில்லை களத்து உறவுகளாவது ஒரு அறிக்கைய விட்டு இந்த மோட்டு சிங்களவன்ட மனசத் தேத்துங்கோவன்

பாதுகாப்புக் கட்டமைப்புகளில் பாரிய குறைபாடுகள் இருக்கின்றன என்பதை அரசு ஒப்புக்கொள்ளவேண்டும்.

சீனா திறமையான "ராடர்' கருவிகளை வழங்க முன்வந்தபோதும், இந்தியாவிடமிருந்து "ராடர்'களை வாங்கியது ஏன்? அரசின் இந்தச் செயல் புலிகளுக்கு வெற்றிபெற வழியமைத்துக் கொடுத்துவிட்டது.

நமது விமானப் படையினருக்கு எதிர்த்தாக்குதல் தொடர்பாக போதிய பயிற்சிகள் அளிக்கப்படவில்லை.

:D:(

சீனா இல்ல எங்க வாங்குனாலும், அதெதான் நடந்திருக்கும். :(

இது போன்ற மரை கழண்ட ஆட்கள் மேல ஒரு குண்டு போடணும். :angry: :angry:

:D:(

சீனா இல்ல எங்க வாங்குனாலும், அதெதான் நடந்திருக்கும். :(

இது போன்ற மரை கழண்ட ஆட்கள் மேல ஒரு குண்டு போடணும். :angry: :angry:

இவங்க மேல குண்டு போடக்கூட்டாது, போட்ட புலிகள்ட வினனப் படிக்குத்தான் கேவலம். புலிகளுக்கு எதிரா பேசுறம் என்டு சொல்லிக்கொண்டு தங்க ஏலாமைய காட்டுறவினம், பாவம் நாயகள் நல்லா குறைக்கட்டும்

இல்லை முந்தி பாருங்க சிறீல்ங்காவினை இனம் காணுவது மாக்காதீவு எண்டு.

பின்பு கிறிகட் சாம்பியன் அவங்களா..

இப்ப அட அந்த சொந்தமா பிளேன் செய்து சொல்லி அடிச்சாங்களே அவர்களுக்கு பக்கத்திலையா நீங்கள் என்று?

முன்னம் அவன் நாலு திசையில பார்க்காம உங்களுக்கு உதவி செய்தான். இப்ப கண்டுபிடிச்சிட்டான் ...இப்படி கெட்டித்தனமாந்துகள் போராடுரதில நியாயம் இருக்கு எண்டு சிந்திக்க தொடங்கியிருக்கிற படியால் அமைதியாய் இருக்கலாம் வீரவன்ச

  • கருத்துக்கள உறவுகள்

சில நாட்களுக்கு முன்

வெள்ளைக்காறர் பொத்திக்கொண்டிருக்கணும் என்று கர்ச்சித்தமாதிரி இருந்தது

அதுக்குள்ள என்னண்ண வீரவன்ச நடந்தது உங்க

ஓ பிளேன் ஏதும் பறந்ததே????

வீரவன்ச பேச்சு எல்லாம் ஒரு பேச்சா?

சீரியசாக கமெடி செயக்கூடிய திறமையாளர் என்று வேண்டுமென்றால் சொல்லலாம்...! :lol:

வீரவன்ச பேச்சு எல்லாம் ஒரு பேச்சா?

சீரியசாக கமெடி செயக்கூடிய திறமையாளர் என்று வேண்டுமென்றால் சொல்லலாம்...! :lol:

:lol::rolleyes::lol:

மட்டக்களப்பு வெப்பர் அரங்கு ஆட்டிலரி அடியுடனேயே உலகம் சிந்திக்கத்தொடங்கிவிட்டது. இப்படி அச்சொட்டாக அரசினால் கிழக்கில் இருந்து துடைத்தெடுத்த புலிகளால் எப்படியடிக்க முடிந்தது என்று,இன்று விமானத்தாக்குதலுடன் முடிவுசெய்துவிட்டது தாங்கள்

போட்டது தப்புக்கணக்கு, இவங்கள் சும்மா இல்லை ஒரு நாட்டுக்கு என்ன என்ன தேவையோ அவையெல்லாம் வைத்து தேவையான இடத்தில் கட்டுப்பாட்டுடன் தாக்குகிறார்கள். இவங்களை குறைவாக மதிப்பு இட்டாகிவிட்டது. இனி அமுக்கு வாசிப்பது நல்லது இலங்கை விமானத்தாக்குதல் தமிழ் மக்களின் மீது நடாத்தும் போது மௌனம்= புலிகள் கட்டு நாயக்க விமானப்படை தாக்குதல்= புலிகளுக்கு வெளினாடுகளிலிருந்து எப்படி பணம் போகுது ஆராய்ச்சி(இரகசிய முடக்கல் நடவடிக்கைகள் ஐரோப்பிய நாடுகளில்

கூலிகள் அமெரிக்க பின்புல வழி நடத்தல்கள்,தொடர்பு சாதனங்கள் ஒட்டுக்கேட்பு, தகவல் தொடர்பு சாதனங்கள் முடக்கல்-இலங்கையின் விருப்பம்-தனது உள்ளாந்தங்கள் அம்பலமாகும் பயம்)... இப்படி தொடரப்போகுது...

எனவே தமிழ் மக்களே வெளி நாடுகளில் சாதரண மக்கள்(வெளி நாட்டு) தொடக்கம்,தகவல் தொடர்பு சாதனங்கள், அரச நிருவனங்கள்,அரசுக்கள் எல்லாம் நம் போரட்டத்தின் நியாயங்களும் அரசின் மனிதவுரிமை மீறல்களும் மிக தெளிவாக புறியப்படுத்தப்படல் வேண்டும். அல்லது இனவாத பூதம் வெளினாடுகளிலும் தனது கோரப்பற்களை எல்லாத்தமிழ் மக்களிலும் காட்ட தொடங்கும்......... இதன் மூலம் எம் ஈழ மக்களை மேலும் பலயீனப்படுத்தி அரக்கத்தனங்கள் தொடரும்......

எமக்கு என இருந்தால் வெள்ளம் அடித்துக்கொண்டு போய்விடும்....வெள்ளம் வர முன்னர் அணைகட்டவேண்டும்.......

புலிகளை பலவீனப்படுத்தி தீர்வு ஒண்டை திணித்து விடலாம் என்னும் நிலைப்பாட்டில் சர்வதேசம் திளைத்தபோது கண்டனங்களை வெளியிட்டு இருக்கலாம்....! ஆனால் புலிகளை பலவீனப்படுத்துவது முடியாது என்பதை சர்வதேசம் உணரதலைப்பட்டதன் வெளிப்பாடுதான் கண்டனங்களை வெளியிட தடையாக இருப்பது....!

கண்டனங்களை வெளீயிடுவதாக இருப்பின் புலிகளின் செயற்பாடுகளை எதிர்ப்பதாக இருப்பதாக கொள்ள முடியும்.... எதுவுமே சொல்லாமல் பேசாமல் இருப்பது ஆதரிப்பதாக அமையாவிட்டாலும் அனுசரித்து போக இருப்பதையே காட்டுகிறது....! ஜேவிபி கவலை கொள்வது இதனால் பிழை எண்டும் சொல்ல முடியாது தானே..??

2005ம் ஆண்டு மாவீரர் உரையின் விரிவாக்க பேச்சில் பாலா அண்ணா சொன்ன ஐரோப்பிய தடைய எதிர் நோக்க காத்து இருக்கின்றோம் என்பதின் அர்த்தமும் அதுக்கு ஏற்றாப்போண்ற அரசியல், இராணுவ காய் நகர்த்தலும் தமிழரை விடிவை நோக்கி எந்தளவு கொண்டுபோய்க்கொண்டு இருக்கிறது என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது...!

இவங்க தொல்லை தாங்க முடியலபா இவங்கழுக்காக நான் கண்டிறன் இந்த தீரமிகு தாக்குதலை :P :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.