Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கத்தலோனியர்களும்... ஈழத்தமிழர்களும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கத்தலோனியர்களும்... ஈழத்தமிழர்களும்!

இன்று உலகஊடகங்களில் மீண்டும் ஒருமுறை கத்தலோனியா குறித்த செய்திகள்முக்கிய இடத்தைப் பிடித்தன. அதற்குக்காரணம் கடந்த இரவு அங்கு இடம்பெற்றமோதல்கள்.

பார்சலோனா நகரில் அறவழியில்பேரணி சென்ற ஒரு லட்சத்து எண்பதினாயிரத்துக்குமேற்பட்ட கத்தலோனியர்களுக்கும் காவற்துறையினருக்கும்இடையில் மோதல்கள் இடம்பெற்றன.

நூற்றுக்கணக்கனக்கான கத்தலோனிர்கள் அதிவேக தொடருந்து வழிதடங்களையும்அதிவேகச்சாலைகளையும் வீதிகளையும் சில மணிநேரங்களாக முடக்கி போராடினர்.

சுதந்திரகத்தலோனியா குறித்து கடந்த வருடம் ஒக்டோபர் 1-ந் திகதி கத்லோனியர்கள் நடத்திய குடியொப்ப வாக்கெடுப்பின்ஒருவருட நினைவு நாளுக்காக இந்த போராட்டங்கள் இடம்பெற்றன.

இற்றைக்கு ஒரு வருடத்துக்கு முன்னர் சுமார் 75 லட்சம் கத்தலோனியர்களுக்குரிய தன்னாட்சி நிர்வாகமும் இந்தவாக்கெடுப்பை நடத்தியது.இந்தக் குடியொப்பவாக்கெடுப்பை தடுத்து நிறுத்துவது என ஸபெயின் அரசாங்கம் கங்கணம் கட்டிச்செயற்பட்டது.

அப்போதைய ஸ்பெயினில் தலைமையமைச்சர் மரியானோ ரஜோய் கத்தலொனிய அதிகாரிளிடமிருந்துபொறுப்புக்களை பறித்து மத்தியஅரசுக்கும் வழங்கினார். பாதுகாப்பு ஏற்பாடுகளை இறுக்கினார்.இறுதிநேரத்தில் வாக்குச்சீட்டுக்களும் பறிப்பட்டன.

ஆனால் சுதந்திர கேடலோனியாவுக்காக பெருமளவில் வாக்களித்தனர். வெற்றிபெற்றனர்.

ஆனால் எதிர்பார்த்தது போலவே இதனை ஏற்க ஸ்பெயின் மறுத்தது

எனினும்ஸ்பெயினிருந்து பிரிந்து தனி நாடாகப்பிரிந்துசெல்வதற்குஆதரவாக கலோனிய பிராந்திய நாடாளுமன்றம் வாக்களித்தபின்னர் ஸ்பெயின் தனது அதிரடிகளை எடுத்து கத்தலோனியாவின் தன்னாட்சி அரசாங்கத்தை கலைத்துஅதனை தனது கட்டுப்பாட்டில் எடுத்தது.

அதன்பின்னர் கத்தலோனியத் தலைவர் கார்லஸ் பூயிக் து மோன் கத்தலோனியாவில்இருந்துவெளியேறினார். ஸ்பெயினில் தேசத்துரோக குற்றச்சாட்டை எதிர்நோக்கும் அவர் இன்றுவரை பெல்ஜியத்தில் அஞ்ஞாதவாசம் செய்கிறார்.

இப்போது கடந்தவருடத்தின் குடியொப்ப வாக்கெடுப்பின் ஒரு வருட நினைவுநாளில் மீண்டும் இரண்டு தரப்புக்களும் நேற்றிரவு இழுபறிப்பட்டுள்ளன.

ஈழத்தமிழர்களுக்கும் கத்தலோனியர்களுக்கும் இடையில் ஒரு ஒற்றுமைஉண்டு சமகாலஉலகஒழுங்கில் அவர்களுக்குரிய ஓரவஞ்சனைகள் கடுமையாக எதிரொலிக்கின்றன.

உலக வல்லரசுகளும் ஒன்று திரண்டு நின்று அழித்த ஒரு விடுதலைப்போராட்டமாக ஈழத்தமிழினத்தின் ஆயுதவழி அரசியல் போராட்டம் மாறியது.

ஆனால் அதே வல்லரசுகளின் மேற்கு அணியில் நின்ற தெற்கு சூடான்இ கோசாவா போன்றன தமக்குரிய வகிபாகத்தைஎடுத்துக்கொண்டன.

ஈழத்தமிழினத்தின் சமகால கையறு நிலையின் இன்றைய யதார்த்தம் பலமுனைகளில் தாக்கினாலும் தமிழ்அரசியல் கைதிகளின் நிலைமை ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

பொதுமன்னிப்பு அல்லது வேறு எந்தப் பொறிமுறையிலாவதுஇ தங்களை விடுதலைசெய்ய வேண்டும் என அவர்களின் கோரிக்கையுடன் தமது விடுதலை தொடர்பாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இன்று கொழும்பு அதிகாரமையத்துடன் நடத்தும் இன்றைய பேச்சுக்களில் சாதகமானமுடிவுகள் கிடைக்காவிட்டால் தாமும் போராட்டத்தை நடத்தப்பொவதாக்போவதாக புதிய மகசீன்சிறையில் உள்ள தமிழ் அரசிய்கைதிகளும் குறிப்பிட்டுள்;ளனர்.

அத்துடன் கொழும்பு அதிகார மையத்தால் தொடர்ந்து சட்டத்துக்குப்புறம்பாக நடத்தப்பட்டு வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இப்போது மீண்டும்கத்லோனியர்களின் முற்றங்களுக்குத்திரும்புங்கள்.

ஸ்பெயினின் ஆணவப்போக்கு சுதந்திரம் குறித்த முடிவில் குழம்பியிருந்த கத்தலோனியர்களைக்கூட சுதந்திரத்துக்குஆதரவானவர்களாக மாற்றிய போக்கு தீவிரப்படுகிறது.

பெரிய நாடுகள் இதுவரை சுதந்திர கத்லோனியாவை அங்கீகரிக்கவில்லைவரலாற்றுரீதியாக ஏற்கப்பட்ட சுயநிர்ணய உரிமைகள் கோட்பாட்டின் துணைகொண்டு அவர்கள் போராடுகிறார்கள்.

1936 ஆம் ஆண்டு முதல் 39; ஆம் ஆண்டுவரை ஸ்பானிய குடிசார் யுத்தம் இடம்பெற்றபோது ஸ்பானிய சர்வாதிகாரிபுpரான்சிஸ்கோ பிராங்கோ கத்தலோனியர்களின் தன்னாட்சிஉரிமையைப்பறித்தார். ஆயினும்

1975 இல் சர்வாதிகாரி பிராங்கோ மரணித்த பின்னர் கத்தலோனியர்கள்தமது சுயாட்சிஉரிமையைப்பெற்றனர்.

ஆயினும் 2010 இல் கத்தலோனியர்களின் தன்னாட்சி உரிமை சட்டரீதியானதல்லஎன ஸ்பெயினின் அரசியலமைப்பு நீதிமன்றம் குறிப்பிட்டபின்னர் கத்தலோனியர்களின் சமகாலநெருக்கடிகள்உருவாகின.

இதேபோல முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப்பின்னர் 2015 ஜனவரியில்இடம்பெற்ற ஆட்சிமாற்றத்தின் ஊடாக உருவாக்கப்பட்டதாகக்கூறப்படும் நல்லாட்சியிலும் சவால்கள்தொடர்கின்றன.

மைத்திரி – மகிந்த எனவோ அல்லது சிறிலங்கா சுதந்திரக்கட்சி எதிர்ஐக்கிய தேசியக்கட்சி எனவோ புறத்தோற்றப்பிரிவுகள்இருந்தாலும்தமிழமக்களை கையாள்வதில்அவர்கள் ஏறக்குறைய ஒரு அணியில் தான் நிற்கின்றனர்.

இதனால் தான் போர்க்குற்றங்களுக்குரிய ரோம்சாசனத்தில் 2002 ஆம்ஆண்டு ஆட்சியில் இருந்த பிரதமர் என்ற அடிப்படையில் ரணில் ஒப்பம் இடாததால் எந்தவொருஇலங்கை குடிமகனையும் வெளிநாட்டு நீதிமன்றங்களுக்கோ அல்லது இராணுவநீதிமன்றங்களுக்கோஅழைத்துச் செல்லமுடியாது என சிறிலங்காவின நீதியமைச்சர் தலதா அத்துக்கோறளவால் புளுகப்படமுடிகிறது.

அத்துடன் தன்னைக்காப்பாற்றிய ரணில்இருக்கும் திசையை நோக்கி மஹிந்ததினமும் வணங்கவேண்டுமெனவும் அவரால் எள்ளல் செய்ய முடிகிறது.

சிறிலங்கா நீதியமைச்சரின் இந்தக்கருத்தாகட்டும் அல்லது 2009 இல் போரின் இறுதிக்கட்டத்தின் இரண்டு வாரங்களில்பதில் பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றினேன்.

அந்தக்காலத்தில் மகிந்தவோ பிரதமரோ அல்லது இராணுவத் தளபதியாக இருந்தசரத் பொன்சேகாவோஇ பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாயவோ இலங்கையில் இருக்கவில்லையென அமெரிக்கவாழ்இலங்கையர் ஊடாக எல்லோருக்கும் செய்திகூறியமைத்திரியின் உள்ளுடன் ஆகட்டும் ஒரே ருசிக்குஉரியவை.

எனினும்இ மைத்தரி கூறிய செய்தியை ஆ..அப்படியா என எதிர்கொண்ட கோட்டாபாயஇது புதுத்தகவல் போரின் இறுதி நாட்களில் தான் வெளிநாடு செல்லவில்லையே என்கிறார்.

அத்துடன் அப்படி மைத்திரி பதில் பாதுகாப்பு அமைச்சராக அரசியலில்தலைமையேற்றிருந்தால் இராணுவம போர்க் குற்றங்களைப் புரிந்ததான குற்றச்சாட்டுக்களை பொய்என்பதை நிரூபிக்கும் பொறுப்பு மைத்திரிக்குத்தானே உள்ளதெனவும் தட்டை திருப்பிப்போட்டுள்ளார்.

ஆக மொத்தம் தமிழினத்தின் பாரிய உதிரப்பழியில் பகடைகள் உருட்டிப்போடப்படுகின்றன.இந்தநிலையில் நேற்று இரவு பார்சலோனாவில் வெளிப்பட்ட எழுச்சிநினைவூட்டப்படவேண்டும்.ஒரு லட்சத்து எண்பதினாயிரத்துக்கு மேற்பட்ட கத்தலோனியர்கள் அறவழியில்பேரணி சென்றனர்.

ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்களை சந்தித்து ஒன்றரைவருடங்களாகின்றது. அமைச்சர் மனோகணேசனும் முன்பு போல எங்களது விடுதலைக்காக குரல் கொடுப்பதில்லைஎன தமிழ் அரசியல் கைதிகள் நேற்று விசனப்பட்டனர்.

ஆம் கத்தலோனியர்களுக்கும் ஈழத்தமிழர்களின் அரசியலுக்கும் இடையில்ஒற்றுமைகளும் உள்ள சில வேற்றுமைகளும் இருக்கதான் செய்கின்றன போலும்.

 

https://www.ibctamil.com/articles/80/107000?ref=rightsidebar

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.