Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இரண்டாவது முறையாகவும் இரத்தானது சம்பந்தன்- விக்னேஸ்வரன் சந்திப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது முறையாகவும் இரத்தானது சம்பந்தன்- விக்னேஸ்வரன் சந்திப்பு!

October 2, 2018
DGd4nccUwAABssv-696x458.jpg

வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும், கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்குமிடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பு இரண்டாவது முறையாகவும் இரத்தாகியுள்ளது. இது குறித்த நம்பகரமான தகவல்களை தமிழ்பக்கம் பெற்றுள்ளது. கடந்த வாரம் இந்த சந்திப்பு முயற்சி, பின்னர் இரத்தான சம்பவம் நடந்தது.

கடந்த மாத இறுதியில் 23ம் திகதி வரையும்- கிட்டத்தட்ட ஒரு வாரமாக கொழும்பில் தங்கியிருந்தார் முதலமைச்சர். அந்த சமயத்தில் ஒரு இரவு, சட்டத்தரணி கனகஈஸ்வரனை தொலைபேசியில் அழைத்த சம்பந்தன், முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்திப்பதை பற்றி பேசியிருக்கிறார். விக்னேஸ்வரன் மீது தொடுக்கப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, தமிழரசுக்கட்சிக்கு மக்கள் மத்தியில் பயங்கர அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது, ப.சத்தியலிங்கம் சார்பிலேயே சுமந்திரன் முன்னிலையாகியிருந்த போதும், இந்த வழக்கில் தமிழரசுக்கட்சியும், சுமந்திரனும் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதாக மக்கள் மத்தியில் அதிருப்தி உள்ளது, இந்த அதிருப்தியை வளரவிடுவது சரியல்ல என இரா.சம்பந்தன் விரிவாக கனகஈஸ்வரனுடன் பேசியுள்ளார்.

 

இவற்றை ஆமோதித்த கனகஈஸ்வரன், தனது வீட்டிலேயே இருவரும் சந்தித்து பேசலாமென்றும், அதற்கான ஏற்பாட்டை தான் செய்வதாகவும் கூறியிருந்தார்.

இந்த மாத தொடக்கத்தில்- 07ம் திகதியளவில்- சம்பந்தர்- விக்னேஸ்வரன் சந்திப்பு நடக்கவிருந்த சமயத்தில், முதன்முறையாக கூட்டமைப்பின் தலைமையை விமர்சித்திருந்தார் விக்னேஸ்வரன். அதுவரை சுமந்திரன் மீதான விமர்சனங்களை நேரடியாகவும், சாடைமாடையாகவும் வைத்து வந்தவர், சம்பந்தரையும் தாக்குதல் வலயத்திற்குள் கொண்டு வந்திருந்தார். அதிருப்தியடைந்த சம்பந்தர், சொல்லாமல் கொள்ளாமல் இந்தியா பறந்து விட்டார்.

இதேவகையில்தான் இரண்டாவது சந்திப்பும் இரத்தாகியுள்ளது.

இந்த சந்திப்பிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த சமயத்தில்தான், கூட்டமைப்பில் மாற்று தலைமை ஏற்பட்டால் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட தயாராக இருப்பதாக முதலமைச்சர் அறிவித்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இதனால் அப்செற் ஆன சம்பந்தன், அந்த சந்திப்பை பின்தள்ளி வைப்போமே என தொடர்பாளர்களிடம் பேசி, தற்போதைக்கு தவிர்த்து விட்டார்.

 

http://www.pagetamil.com/17713/

காலம் காலமாக கைக்கூலி அரசியலில் ஈடுபடும் சம்மந்தன் தனது திருட்டு அரசியலுக்கு நேர்மையானவர்கள் உதவ மாட்டார்கள் என்றெண்ணி ஓடிக்கொண்டே இருக்கிறார்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.