Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை, தூக்கிலடக் கோரி சட்டத்தரணி உண்ணாவிரதப் போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை, தூக்கிலடக் கோரி சட்டத்தரணி உண்ணாவிரதப் போராட்டம்

Lawyer-720x450.png

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை, தூக்கிலடக் கோரி காங்கிரஸ் சட்டத்தரணி ஒருவர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறைதண்டனை அனுபவித்து வரும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதில், தமிழக அரசு தீவிரம் காட்டி வருகின்றது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குற்றவாளிகளுக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமென வலியுறுத்தியும், காங்கிரஸ் கட்சி சட்டத்தரணி பிரிவினை சேர்ந்த வழக்கறிஞர் அய்யலுச்சாமி, காந்தி மண்டப வளாகத்தில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஈடுபட்டார்.

ராஜீவ்காந்தியை கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சிறப்பு சட்டம் இயற்றி உடனடியாக தூக்கிலிட வேண்டும். அவர்களின் விடுதலைக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருபவர்களை தேச விரோத சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் அவர் தனது உடலில் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகள் மற்றும் ராஜீவ் காந்தி படத்தினை தொங்கவிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து கோவில்பட்டி பொலிஸார், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி உண்ணாவிரதம் இருந்த அய்யலுச்சாமியை கைது செய்தனர்.

இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

http://athavannews.com/ராஜீவ்-காந்தி-கொலைக்-குற/

  • கருத்துக்கள உறவுகள்

அனுமதி இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்வார்கள் என்று ஒரு சட்டத்தரணிக்குத் தெரியாதா என்ன?

இதெல்லாம் ஒரு பரபரப்புக்குத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

Lawyer-720x450.png  Bildergebnis für rucksack

உண்ணாவிரதம் இருப்பவர், ஏன்  பக்கத்தில் ஒரு Rucksack வைத்து இருக்கின்றார்.
முதலில்... அதனை திறந்து பாருங்கள், அதற்குள்... "பிரியாணி பார்சல்"  கட்டாயம்  இருக்கும்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.