Jump to content

வேற்றுக்கிரகங்களில் யாராவது வாழ்கிறார்களா? உலகிற்கு அப்பால் 11 தகவல்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
நியூ மெக்ஸிகோ பால் வீதிபடத்தின் காப்புரிமைGetty Images Image caption ஹலோ.....லோ? யாராவது இருக்கீங்களா?

நீரை கொண்டிருக்கும் அளவுக்கு அதிக வெப்பமில்லாத அல்லது அதிக குளிரில்லாத "கோல்டிலாக்ஸ் மண்டலத்தை" தேடி கண்டறிவதன் மூலம் விஞ்ஞானிகள் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

வேற்றுக்கிரங்களில் வாழுகின்ற நம்மை போன்ற உயிரினங்களை பற்றி அறிந்து கொள்வதற்கு வேற்றுக்கிரவாசிகளை கணக்கெடுப்பது முதல் சூரிய சக்தியால் இயங்குகின்ற விண்கலம் வரை நாம் அறிந்திருக்க வேண்டும்.

வேற்றுக்கிரகங்களில் யாரவது வாழ்கிறார்களா?

பல நூற்றாண்டுகளாக மனிதர்களால் இந்த கேள்வி கேட்கப்பட்டு வருகிறது.

இதற்கு சிறந்த விடையை சொல்ல விஞ்ஞானிகள் துணிந்திருக்கின்றனர் அல்லது ஏதாவது விடையை கூற முனைந்துள்ளனர்.

இதனை பற்றி மேலும் அறிந்துகொள்ள ஆவல் உள்ளது. இது தொடர்பாக முக்கிய வானியல் திருப்பங்கள் வந்துள்ளன. அவற்றில் சில எதிர்பார்க்காத கோட்பாடுகள் மற்றும் முழுவதும் விசித்திரங்கள் நிறைந்த உண்மைகள் காணப்படுகின்றன.

வேற்றுக்கிரகவாசிகள் வாழ்வதாக இருந்தால், அவர்கள் கோல்டிலாக்ஸ் மண்டலத்தில்தான் வாழ முடியும் என்று தெரிகிறது. வேற்றுக்கிரகங்களில் உயிர்கள் வாழ்வது பற்றி விஞ்ஞானிகள் எவ்வாறு கண்டுபிடிக்க முயல்கின்றனர்?

1. நிலவில் கறுப்பான இடங்கள்

மேற்பரப்பு தெரியும் அளவிலான முழு நிலவு.படத்தின் காப்புரிமைGetty Images Image caption கலிலியோவின் புரட்சிகர தொலைநோக்கி மூலம் சந்திரனை முன்பைவிட மிகவும் தெளிவாக மனிதர்களால் பார்க்க முடிந்தது.

17ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வானில் வெகு தொலைவில் இருப்பவற்றை உற்று பார்ப்பதற்கு கலிலியோ கண்டுபிடித்த புதிய தொலைநோக்கி உதவியதை தொடர்ந்து வேற்றுக்கிரகங்களில் உயிரினங்கள் பற்றி அறியும் ஆவல் நம்மிடம் அதிகரித்தது.

நிலவில் கறுப்பாக தெரிந்த இடங்கள் நீர் நிறைந்த பெருங்கடல்கள் என்று நம்பப்பட்டு, லத்தீன் மொழியில் 'கடல்கள்' என்று பொருள்படும் "மரியா" என்று அழைக்கப்பட்டன.

நம்முடைய கடல்களில உயிரினங்கள் வாழ்வதுபோல அங்கும் இருக்கலாமா?

நிலவிலுள்ள இந்த கறுப்பு இடங்கள் முற்காலத்தில் எரிமலை சீற்றங்களால் உருவான கருங்கல் சமவெளிகள் என்று இப்போது நாம் அறிய வந்துள்ளோம்.

2. சக்தி வாய்ந்த செவ்வாய் கிரகவாசிகள்

செவ்வாய் கிரகவாசிகள் எவ்வாறு தோற்றமளிப்பார்கள்?

செவ்வாயில் சூரிய உதயம்.படத்தின் காப்புரிமைGetty Images Image caption செவ்வாய் கிரகவாசிகள் பார்க்க எவ்வாறு இருப்பார்கள்?

சிவப்பு கிரகம் என்று அழைக்கப்படும் செவ்வாயில் வாழ்வோர் சராசரியாக மனிதர்களைவிட உயரமானவர்களாக இருப்பர் என்று 1870ம் ஆண்டு வானியலாளர் வில்லியம் ஹெர்ச்செல் தெரிவித்தார்.

அதிக சக்தி வாய்ந்த தொலைநோக்கிகளை பயன்படுத்தி செய்வாய் கிரகத்தை அளவிட்ட அவர், அதன் பருவகால அளவையும், நாட்களையும் கவனமாக அளவிட்டுள்ளார்.

நமது பூமியை விட செவ்வாய் கிரகம் சிறியதாக இருப்பதால், அதிலுள்ள ஈர்ப்பு விசை குறைவாக உள்ளது என்று அவர் கூறினார். செவ்வாய் கிரகவாசிகள் அதிக உயரம் கொண்டிருப்பர் என இதனால் பொருள்படுகிறது.

3. மேல்நிலையான சனிக்கிரகவாசிகள்

சூரிய குடும்பத்திலுள்ள கோள்கள் வரிசையாக - சூரியன் முதல் நெப்டியூன் வரைபடத்தின் காப்புரிமைGetty Images Image caption உங்களது இடைவெளியை பராமரித்து கொள்ளவும்.

புத்திசாலிகள் அல்லாத புதன்கிரகவாசிகளில் இருந்து புத்திக்கூர்மையுடைய சனிக்கிரகவாசிகள் வரை புவிக்கு அப்பாலுள்ளவை பற்றிய அறிவு சூரியனிடம் இருந்து காணப்படும் தொலைவை போல எட்டாத ஒன்றாகவே இருந்தது என்று தத்துவயியலாளர் இம்மானுவேல் கான்ட் கூறியுள்ளார்.

4. வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய கணக்கெடுப்பு

17ம் நூற்றாண்டு சமகால மக்களுக்கு தொலைநோக்கியை பயன்படுத்துவது பற்றி செயல்முறை விளக்கம் அளிக்கும் கலிலியோ.படத்தின் காப்புரிமைGetty Images Image caption தொலைநோக்கி பயன்படுத்தும் பயிற்சி: 17ம் நூற்றாண்டு சமகால மக்களுக்கு தொலைநோக்கியை பயன்படுத்துவது பற்றி செயல்முறை விளக்கம் அளிக்கும் கலிலியோ.

1848ம் ஆண்டு ஸ்காட்லாந்து திருச்சபை அமைச்சரும், அறிவியல் ஆசிரியருமான தபமஸ் டிக், சூரிய கும்பத்திற்குள் வாழுகின்ற வேற்றுக்கிரகவாசிகளின் எண்ணிக்கையை கணக்கிட தொடங்கினார்.

புவிக்கு அப்பால் வாழுகின்ற உயிரினங்களின் செறிவு ஒரு சதுர கிலோமீட்டருக்கு 280 பேர் வாழுகின்ற இங்கிலாந்துக்கு ஒத்தாக இருந்தால், சூரிய குடும்பத்திற்குள் 22 டிரில்லியன் வேற்றுக்கிரகவாசிகள் வாழ வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

5. சந்திரனில் உயிர் வாழ்க்கை

ஐரோப்பாவின் மிகவும் நெருங்கிய படம். வியாழன் கிரகத்தின் சந்திரன்களில் ஒன்று. 1979.படத்தின் காப்புரிமைGetty Images Image caption ஐரோப்பிய பெருங்கடல்களில் வேற்றுக்கிரக சூழியல் அமைப்புக்களை நாம் கண்டறிய முடியுமா?

உயிர் வாழ்வதை ஆய்வு செய்ய சிறந்த இடம் புதன் கிரகம் போன்ற அருகிலுள்ள சூரிய குடும்பமல்ல. வியாழன் கிரகத்தை சுற்றிவருகின்ற யுரோப்பா மற்றும் சனிக்கிரகத்தின ஒரு செயற்கைக்கோளான என்சிலாடுஸ் போன்ற தொலைதூர சந்திரன்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

இவை இரண்டும் அடர்த்தியானதொரு பனிக்கட்டி அடுக்குக்கு அடியில் நீர்நிலை பெருங்கடலை கொண்டுள்ளன.

இந்த சந்திரன்களின் பெருங்கடல்கள் பனியாக உறைந்து விடுவதை தடுப்பதற்கு உள்ளக வெப்ப ஆதாரம் ஒன்று இருக்குமென நம்பப்படுகிறது.

இந்த சந்திரன்களின் மையப்பகுதியில் வெப்பம் உருவாகி, பெருங்கடல் தரையிலுள்ள வெப்பநீர் துளைகள் வழியாக வெளியாகலாம்.

பூமியில் வெப்பநீர் துளைகள் ரசாயன எதிர்வினையை உருவாக்கி, விறுவிறுப்பாக உள்ள நீர்நிலையிலுள்ள சூழலியல் அமைப்புகளுக்கு தேவையான உணவை உற்பத்தி செய்கிறது.

6. விண்வெளி மீன் வகை உயிரினங்கள்

வேற்றுக்கிரகவாசிகள் இவ்வாறுதான் தோன்றுவார்கள் என்று நீங்கள் கற்பனை செய்கிறீர்களா?படத்தின் காப்புரிமைGetty Images Image caption வேற்றுக்கிரகவாசிகள் இவ்வாறுதான் தோன்றுவார்கள் என்று நீங்கள் கற்பனை செய்கிறீர்களா?

இத்தகைய நீர்நிலையுடைய சந்திரன்களில் உயிரினங்கள் வாழ்வதாக இருந்தால், அவை எவ்வாறு தோன்றும் என்பதற்கு எளிமையான இயற்பியல் துப்புகளை வழங்கும்.

பெரிய நீர்வாழ் வேற்றுக்கிரக உயிரினங்கள் வாழ்ந்தால், இரையை பிடிப்பதற்கு அல்லது இரையாகுவதில் இருந்து தப்பிக்க அவை வேகமாக செல்ல வேண்டியிருக்கும்.

எனவே, மீன் வகைகள், டால்பின்கள் மற்றும் சுறாக்கள் போன்ற வடிவங்களில் அந்த உயிரினங்கள் இருக்கலாம்.

மீன் வகை உயிரினங்களை தேடுகின்ற படலம் இங்குதான் தொடங்குகிறது.

7. தொலைதூர உலகங்கள்

நாசாவின் வெளிபுற சந்திரனோடு ஓர் அழகான வெளிக்கிரகத்தின் கூறுகளை பயன்படுத்தி முப்பரிமாண சித்தரிப்புபடத்தின் காப்புரிமைGetty Images Image caption இ,ரண்டு நட்சத்திர அமைப்பு ஒன்று சந்திரனோடு வெளிக்கிரகத்தை சுற்றுவது எப்படி?

பால் வீதியில் பூமியை போன்ற 4000 கோடி கிரகங்கள் இருக்கலாம் என்று வானியலாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

சூரிய குடும்பத்திற்கு வெளியில், நமக்கு அருகிலுள்ள நட்சத்திர மண்டலத்தில் 3,800 கிரகங்களை கண்டறிந்த பின்னர், இந்த மதிப்பீட்டுக்கு அவர்கள் வந்துள்ளனர்.

இதனை விண்மீன் மண்டலம் (கேலக்ஸி) முழுவதும் கணக்கிட்டால் பல்லாயிரம் கோடிக்கணக்கான கிரகங்களை நாம் பார்க்கலாம்.

8. உயிரினங்கள் வாழும் அறிகுறிகள்

உறைந்த ஏரிக்குள் எரிவாயு குமிழ்கள் சிக்கியுள்ளன. தொலைதூர கிரகத்தில் இதனை கண்டுபிடித்துவிட்டால், அங்கு உயிர்கள் வாழலாம் என்பதன்அடையாளமாக இருக்குமா?படத்தின் காப்புரிமைGetty Images Image caption உறைந்த ஏரிக்குள் எரிவாயு குமிழ்கள் சிக்கியுள்ளன. தொலைதூர கிரகத்தில் இதனை கண்டுபிடித்துவிட்டால், அங்கு உயிர்கள் வாழலாம் என்பதன்அடையாளமாக இருக்குமா?

உயிரினங்கள் வாழ்வதை பற்றி அறிய எப்படி தேடுகிறார்கள்?

சூரிய குடும்பத்திற்கு வெளியிலுள்ள கிரகங்களை பற்றி ஆய்வு செய்கையில், உயிர்கள் வாழுகின்ற அடையாளங்களான தனித்துவ குறியீடுகள் என்று வானியலாளர்கள் குறிப்பிடும் வாயுக்களை ஆய்வு செய்கின்றனர்.

கரையான்கள் முதல் பசுக்கள் வரை பூமியில் வாழும் உயிரினங்களால் மீத்தேன் வெளியேற்றப்படுகிறது. எரிமலைகளாலும் மீத்தேன் வெளியிடப்படுகிறது.

எனவே, சூரிய ஒளியால் நமது வளிமண்டலத்தில் இயற்கையாக உற்பத்தியாகும் ஆக்ஸிஜன் மற்றும் ஓசோன் போன்ற பிற வாயுக்களோடு கலந்துள்ள மீத்தேனை கண்டறிய பாடுபடுகிறோம்.

9. கோல்டிலாக்ஸ் மண்டலம்

நீரை கொண்டிருக்கும் அளவுக்கு அதிக வெப்பமில்லாத அல்லது அதிக குளிரில்லாத கோல்டிலாக்ஸ் மண்டலத்தில் வேற்றுக்கிரகவாசிகள் வாழ்கின்றார்களா?

பேரண்டம். இருண்ட பின்னணியில் பில்லியன்கணக்கான நீல மற்றும் ஊதா வண்ணத்தில் ஒளிரும் நட்சத்திரங்கள்படத்தின் காப்புரிமைGetty Images Image caption கோல்டிலாக்ஸ் மண்டலத்தில் வேற்றுக்கிரகவாசிகள் வாழுகின்றார்களா?

நாம் எங்கு தேடுகிறோம்? சூரிய குடும்பத்திற்கு வெளியிலுள்ள கிரகங்களில் கோல்டிலாக்ஸ் மண்டலம் என்று அழைக்கப்படும் அல்லது வசிக்கும் சாத்தியம் இருக்கும் பிரதேசங்கள் கவனத்தை செலுத்தி தேடுவதற்கு சிறந்த இடம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இந்த இடம் முக்கிய நட்சத்திரத்தில் இருந்து மிகவும் நெருங்கியும் (அதிக வெப்பமாகவும்) இல்லை. வெகுதொலைவிலும் (அதிக குளிராகவும்) இல்லை. இதனால், உயிர்கள் வாழ்வதற்கு சிறந்த சூழல் வழங்கப்படுகிறது.

நாம் கண்டறிந்துள்ள மிகவும் அருகிலுள்ள சூரிய குடும்பத்திற்கு வெளியிலுள்ள கிரகம் 'பிராக்ஸிமா சென்தௌரி பி' என்பதாகும். சூரியனுக்கு அருகில் சுற்றியிருக்கும் உயிரினங்கள் வசிக்கக்கூடிய பகுதியில் இது காணப்படுகிறது.

10. சூரிய சக்தியால் இயங்கும் விண்கலம்

விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங்படத்தின் காப்புரிமைGetty Images Image caption சூரிய சக்தியால் இயங்கும் விண்கலத்தை பயன்படுத்தி ஒளியின் 20 சதவீத வேகத்தில் வேற்றுக்கிரகவாசிகளை தேட முடியும் என்ற கருத்தை ஒப்புக் கொண்ட விஞ்ஞானிகளில் ஒருவர் ஸ்டீஃபன் ஹாக்கிங்

இந்த நட்சத்திய குடும்பத்தை சென்றடைவதற்கான தனியார் லட்சிய பணித்திட்டமான 'பிரேக்த்ரு ஸ்டார்ஷாட்' 2016ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

ரஷ்யாவின் "முதலாளித்துவ மற்றும் இயற்பியலாளர்" யூரி மில்னரால் நிதியுதவி அளிக்கப்படும் இந்த பணித்திட்டம், சூரிய புயலின் ஊடாக ஒளியின் 20 சதவீத வேகத்தில் பயணிக்கும் சூரிய சக்தியால் இயற்குகின்ற விண்கலனை வடிவமைப்பதை இலக்காக கொண்டு செயல்படுகிறது.

இந்த முயற்சி வெற்றிபெற்றால், இத்தகைய சிறிய விண்கலன்கள் 'பிராக்ஸிமா சென்தௌரி பி' கிரகத்தை சென்றடைய 20 ஆண்டுகள் ஆகலாம். அங்கிருந்து தரவுகளை பூமிக்கு அனுப்புவதற்கு 4 ஆண்டுகள் மேலும் ஆகலாம்.

11. புத்திக்கூர்மையான வேற்றுக்கிரகவாசிகள்

பால் வீதியின் மையத்திலுள்ள கருந்துளைகள் அல்லது மிக பெரிய நட்சத்திரங்கள் அல்லது மீக பெரிய கருந்துளைகளில் சில வேற்றுக்கிரகவாசிகள் வாழலாம் என வானியலாளர்கள் கருதுகின்றனர்.

மிக பெரிய கருந்துளைபடத்தின் காப்புரிமைGetty Images

நம்மை விட ஆயிரக்கணக்கான அல்லது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய ஏதாவது பண்பாடுகள் செயற்கை மதிநுட்ப கருவிகளை உருவாக்கியிருக்கலாம்.

அவைகள் மென்மையும், ஈரமும் கொண்டவைகளாக இல்லாமல் அல்லது நீரும், ஆக்ஸிஜனும் இருக்கின்ற இடத்தில் உயிர் வாழுகின்ற மண்டலத்தில் வாழாமல் இருக்கலாம்.

கருந்துளைகள் அல்லது மீக பெரிய நட்சத்திரங்களை போல, எல்லா வேற்றுக்கிரகவாசிகளும் அதிக சக்தியுடைய வெப்பமான இடங்களில் அடிக்கடி உலவுவதை விரும்பலாம் என்று சில வானியலாளர்கள் கருதுகின்றனர்

https://www.bbc.com/tamil/science-45849585

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்  1) goshan_che 2)பாலபத்ர ஓணாண்டி 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் 4)சுவி 5)நிழலி 6)கிருபன் 7)ஈழப்பிரியன் 8)தமிழ்சிறி 9)கந்தையா57 10)வாத்தியார்
    • பிற்சேர்க்கை III வெஸ்டேர்ன் மெடிசின் Vs வெதமாத்தையா  அடுத்த பாகத்தை கொடுக்க பிந்தியமைக்கு மன்னிக்கவும். படங்களை போட்டது திரியை எழுத்தில் இருந்து படங்கள் நோக்கி திருப்பி விட்டது. ————— இலங்கை போவதில் ஒரு வசதி - கொஞ்சம் காசை செலவழித்து ஒரு புல் மெடிக்கல் செக்கப் செய்துகொண்டு வரலாம். அதுவும் நவலோக்க, டேர்டன்ஸ், ஆசிரி, லங்கா ஹொஸ்பிட்டல் போன்ற முதல் தர வைத்தியசாலைகளிலேயே £230 க்குள் ஒரு டோட்டல் மெடிக்கல் செக்கப்பை செய்துகொள்ளலாம்.. முன்னர் ஒரு காலம் இருந்தது யூகே NHS என்றால் உலகிற்கே முன்மாதிரி, ஆனால் இப்போ அப்படி இல்லை. எல்லாம் 14 வருட வலதுசாரி மகாராசாக்களின் ஆட்சி தந்த “முன்னேற்றம்”. இப்போதெல்லாம் ஜீ பி யிடம் அப்பாயின்மெண்ட் வாங்குவதை விட நோயில் சாகலாம் என்ற நிலை. அப்படியே ஜி பி யை சந்திக்க முடிந்தாலும், அவர் refer பண்ணி ஒரு ஸ்கான் எடுப்பதற்குள் சித்திரகுப்தன் சீட்டை கிழிக்க ரெடியாகி விடுவார். அத்தோடு இலவசம் என்பதால் கண்ட மாதிரி speculative டெஸ்டுகளும் எடுக்க refer பண்ண மாட்டார்கள். முதலில் தண்ணீர் குடியுங்கள், ரெஸ்ட் எடுங்கள் என்றே சொல்லி அனுப்புவார்கள். ஆகவே உடனடி கவனிப்பு தேவை எனில், ஒன்றில் கணிசமான அளவு பணத்தை கட்டி யூகேயில் தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து வைக்க வேண்டும்.  அல்லது….இலங்கை அல்லது இந்தியா (பல்லு கட்ட போலந்து, துருக்கி) போன்ற நாடுகளுக்கு போய் இப்படி ஒரு செக்கப்பை செய்து வரலாம். இந்த ரிப்போர்ட்டுகள் எல்லாம் எடுக்க ஒரு நாள் செலவாகும். பின்னர் இதை வைத்து ஒரு கன்சல்டண்டுடன் உங்களுக்கு அப்பாயின்மெண்ட்டும் தருவார்கள். இதில் நன்மை என்னவென்றால் - இந்த டெஸ்டுகளில் ஏதாவது கோளாறாக கட்டினால் - அதை நேரடியாக இங்கே ஜி பி யிடம் காட்டும் போது - நோயின் தார்பரியம் அறிந்து வேலை கட…. கட…. என நடக்கும். எனக்கு தெரிந்த சிலர் முன்பே இவ்வாறு செய்திருந்தாலும், இதுவரை நான் செய்ததில்லை. இந்த முறை வயதும் 45 இன் அடுத்த பக்கத்துக்கு போய் விட்டதாலும், கடந்த 3 வருடத்தில் ஜி பி க்கள் தந்த அனுபவத்தினாலும் - ஒரு டெஸ்டை செய்ய முடிவு செய்தேன். இந்தியா போல் அல்லாது, இலங்கையில் health tourism த்தின் பெறுமதி இன்னும் வடிவாக அறியப்படவில்லை. விலைகளும் உள்ளூர் ஆட்களை குறிவைத்தே உள்ளன (வடை, கொத்து, சிகிரியா டிரிக்ஸ் இன்னும் இங்கே வரவில்லை).  ஒவ்வொரு ஆஸ்பத்திரியும், பல வகை வகையான packages வைத்திருக்கிறார்கள்.  ஒன்றிற்கு மூன்றாக தெரிந்த வைத்தியர்களிடம் கதைத்து - ஒரு package ஐ நானும் ஒரு முண்ணனி வைத்தியசாலையில் தெரிந்து கொண்டேன். டெஸ்ட் எடுக்கும் நாள் அதிக நிகழ்வுகள் இன்றி கழிந்தது. ஒவ்வொரு உடல் பகுதிக்குமுரிய இடத்துக்கு அந்த டெஸ்டுக்காக போகும் போது, அவை உள்ளூர் வாசிகளால் நிரம்பியே இருந்தது. எந்த நாட்டிலும், எந்த நிலையிலும் உணவுக்கு அடுத்து நல்ல பிஸினஸ் மருத்துவம் என்பது புரிந்தது. எல்லாம் முடிந்து கன்சல்டேசன் போனால் -கன்சல்டன் - எடுத்த எடுப்பிலேயே எந்த நாடு என்று கேட்டார் - டாக்டரிடம் பொய் சொல்ல கூடாதாமே? ஆகவே எனது “யாழ்பாணம்/மாடகளப்பு/வன்னி/இந்தியா” உத்தியை கைவிட்டு யூகே என உண்மையை சொன்னேன். கண்ணாடிக்கு மேலால் ஒரு பார்வை பார்த்து விட்டு, நான் அங்கேதான் மேற்படிப்பு படித்தேன், “இப்படி ஒரு முழுமையான டெஸ்டை அங்கே உன்னால் செய்யவே முடியாது அல்லவா”, என அவருக்கு ஏலவே தெரிந்த விடயத்தை என்னிடம் உறுதி செய்தார். என்ன இருந்தாலும் என் குஞ்சல்லவா? விட்டு கொடுக்க முடியாதே? ஆம், ஆனால் இங்கும் அரச வைத்தியசாலையில் இப்படி ஒரு முழுமையான டெஸ்டை செய்யமாட்டீர்கள்தானே என்றேன். உனக்கு வாயில் கொலஸ்டிரோல் கூட என்பதை போல் ஒரு பார்வை பார்த்து விட்டு, ரிப்போர்ட்டுக்கான வியாக்கியானத்தை ஆரம்பித்த வைத்தியர். 40 நிமிட கன்சல்டேசனின் பின், ஏலவே தெரிந்த விடயங்களை தவிர வேறு ஏதும் கோளாறு இல்லை என்பது நிம்மதியாக இருந்தாலும்…. இவ்வளவு செலவழித்துள்ளேனே…ஒன்றும் இல்லையா என இன்னொரு மனம் மொக்குத்தனமாய் ஒரு கணம் சிந்திக்கவும் செய்தது🤣. கடைசியாக…எனி அதர் குவெஸ்சன்ஸ் க்கு வைத்தியர் வர, என் நெடுநாள் உபாதையான சயாடிக்கா கால் வலியை பற்றி சொன்னேன். அக்கம் பக்கம் பார்த்த வைத்தியர், மெல்லிய குரலில் “இதுக்கு இங்கே உள்ள வெதமாத்தையாதான் சரி” என கூற, யாரையாவது ரெக்கெமெண்ட் பண்ண முடியுமா என நான் அவரை விட மெல்லிய குரலில் கேட்டேன். கன்சல்டேசன் அறையை விட்டு கிளம்பும் போது எனது போனில் ஒரு பிரபல வெதமாத்தையாவின் தொடர்பிலக்கமும், விலாசமும் சேமிக்கப்பட்டிருந்தது. ———————- ஆவலோடு காத்திருங்கள்! பிற்சேர்க்கை IV வெதமாத்தையாவும் ஆவா குரூப்பும்
    • 1994 இல் மயிலாப்பூர் சட்டமன்றத்துக்கும் இன்னுமொரு சட்டமன்றத்துக்கும் இடைக்கால தேர்தல் நடைபெற்றது.  யாராவது MLA காலமானால் அல்லது வேறு சில காரணங்களுக்காக இடைக்கால தேர்தல் நடைபெறும். தமிழகம் முழுவதும் தேர்தல் நடைபெறாமல் ஒன்று இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுவதினால் முக்கிய தலைவர்களை இத்தொகுதிகளில் அடிக்கடி காணலாம். நான் அடையார் , Besant நகர் பகுதியில் எனக்கு தெரிந்தவர்கள் வீடுகளுக்கு செல்வதுண்டு. அப்பொழுது பல தலைவர்களை பார்த்திருக்கிறேன். பாட்டாளி மக்கள் தலைவர் இராமதாஸ் சென்ற வாகனத்தில் மன்சூர் அலிகானை வந்திருந்தார். ‘ பிரபாகரன் கிரேட், இராவணன் கிரேட்’ என்று அவர் உரையாற்றினார்.  வைகோவுடன் எஸ் எஸ் சந்திரன் வந்திருந்தார்.  நடிகர் எஸ் எஸ் சந்திரன் மதிமுகவில் அப்பொழுது இருந்தார் கலைஞ்சர் கருணாநிதிஐக்கண்டதும் பல ஆதரவாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட சொன்னார்கள். ஒரு பிள்ளைக்கு ‘ கனிமொழி’ என்று பெயர் சூட்டினார். இன்னுமொரு பிள்ளைக்கு ‘இளவரசன்’ என்று பெயர் சூட்ட, ‘இவர் பெண் குழந்தை’ என்று குழந்தையின் தகப்பனார் சொல்ல ‘இளவரசி’,என்று கலைஞர் பெயர் சூட்டினார்.  ‘அவர்கள் லட்டினுள் மோதிரம் வைத்து குடுக்கிறார்கள் ( அதிமுக கட்சி) . வாங்குங்கள் . ஆனால் வாக்குகளை எமக்கு அளியுங்கள்’ என்றார். பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தருகில் துவிச்சக்கரவண்டியில் வரும்போது காவல்துறையினர் என்னையும் சேர்ந்து பலரை மறித்து நிறுத்தினார்கள். சில நிமிடங்களில் ‘அதோ அந்த பறவை போல’  பாடலை Band குழு ஒன்று இசை அமைக்க வாகனம் ஒன்று வந்தது. பின்னால் வந்த இன்னுமொரு வாகனத்தில் ஜெயலலிதா அவர்கள் துப்பாக்கிகள் ஏந்திய பாதுகாப்பு படைகளுடன் வந்து உரையாற்றினார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் வீட்டின் அருகே செல்லும் போது எப்போதும்கண்டும் காணாமல் மாதிரி செல்வார்.  ஆனால் தேர்தல் என்றதினால் கை குப்பி என்னை பார்த்து வணங்கினார். தமிழக பத்திரிகைகளில் தேர்தல் செய்திகள் வாசிப்பதுண்டு. இதனால் ஓரளவு ஆர்வம்
    • "மாற்றம்" [யாழ்ப்பாணத்து மருத்துவ மாணவனின் கதை]   துடிப்பான நகரமான யாழ்ப்பாணத்தில், இலங்கையின் வடபகுதியில், பரபரப்பான தெருக்களுக்கும், யாழ்ப்பாணக் கடல் நீரேரியின் [கடற்காயல் அல்லது வாவி] அமைதியான கடற்கரைக்கும் நடுவே, குறளரசன் என்ற இறுதியாண்டு மருத்துவ மாணவர் வாழ்ந்து வந்தான். தீவின் வரலாற்றில் வேரூன்றிய நீண்ட பரம்பரையுடன் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்த குறளரசன், பல நூற்றாண்டுகளின் பாரம்பரியத்தின் எடையையும் 'மாற்றத்திற்காக' ஏங்கும் மக்களின் அபிலாஷைகளையும் [ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பையும்] தனக்குள் சுமந்தான். குறளரசன் மருத்துவம் படிக்கும் மாணவன் மட்டுமல்ல; அவன் தனது தமிழ் சமூகத்தின் உரிமைகள் மற்றும் அங்கீகாரத்திற்காக ஒரு தீவிர சமூக உழைப்பாளியாகவும் இருந்தான். தமிழரின் வாழ்வில் ஏற்பட்ட பின்னடைவுகள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தின் வரலாற்று கதைகளிலும் மற்றும் இன்று நடைபெறும் அரசியல் அழுத்தங்களிலும் வளர்க்கப்பட்ட அவன், ஒரு அரசியல் 'மாற்றம்' தேவை என்பதை விரும்பியது  மட்டுமல்ல, தனது மக்களின் வாழ்வு மற்றும் செழிப்புக்கு அது இன்றியமையாதது என்றும்  நம்பினான். குறளரசன் மருத்துவப் படிப்பைத் தொடர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், இலங்கை வாழ் தமிழ் இளைஞர்களின், சமூகத்தின்  நம்பிக்கையின் விளக்காக நின்றது. இங்குதான் சிங்கள வம்சாவளியைச் சேர்ந்த, அனுராதபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட,  முதலாம் ஆண்டு மருத்துவ மாணவியான ருவனிக்காவை [Ruwanika] அவன் முதல் முதல் சந்தித்தான். அவர்களின் நட்பு இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டி ஆழமான ஒன்றாக மலர்ந்தது. ஆனால் அவர்களின் பாசத்தின் அரவணைப்பில் கூட, குறளரசனால் அவர்களது சமூகத்தை ஆட்கொண்ட ஆழமான வேரூன்றிய பிளவுகளின் நிழலை மறக்க  முடியவில்லை. அவன் அதில் உறுதியாக நின்றான்.  குறளரசன் தனது படிப்பில் ஆழமாக இருந்தாலும், தன் இலங்கை மக்களின் வரலாற்றை சரியாக அறிவதிலும் முழுமையாக தன் கவனத்தை செலுத்தினான். தமிழ் சிறுபான்மை யினருக்கும் சிங்கள பெரும்பான்மை அரசாங்கத்திற்கும் இடையிலான உறவில், அரசாங்க தலைவர்களால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையும், பின் அவ்வாற்றில் முக்கியமான ஒன்றையேனும் நிறைவேற்றாமல் உடைக்கப்பட்டு கிடங்கில் போட்டத்தையும் மற்றும் ஒவ்வொரு முறையும் தமிழர்களின் சுதந்திரம், கல்வி, உரிமைகள், காணிகள், வழிபாடுகள் மேலும் மேலும் பறிக்கப்படத்தையும், மறுக்கப்படத்தையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் தொல்லைகளையும்  சிதைந்த கனவுகளையும் பற்றி அவன் அடிக்கடி சிந்தித்தான். 1957 பண்டாரநாயக்கா - செல்வநாயகம் உடன்படிக்கையில் இருந்து தொடர்ந்து பல தசாப்தங்களில் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான தோல்வியுற்ற முயற்சிகள் வரை, குறளரசன் காட்டிக்கொடுப்பு மற்றும் ஏமாற்றங்களின் தொடர்ச்சிகளைக் கண்டான்.  ஆனாலும், விரக்தியின் மத்தியில், புத்தரின் உண்மையான போதனைகளில் குறளரசன் ஆறுதல் கண்டான். ஞானம் பெற்றவர் போதித்த இரக்கம், சகிப்புத்தன்மை, புரிதல் ஆகிய கொள்கைகளை அவன் நம்பினான். இனம் மற்றும் மதத்தின் தடைகளைத் தாண்டி, இந்த விழுமியங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளும் ஒரு சமூகத்திற்காக அவன் ஏங்கினான். நீண்ட காலமாக தனது மக்களை ஒடுக்கிய ஒரு மகாவம்சம் என்ற புராண கதையின் கனத்துடனும் போராடினான். குறிப்பாக புத்த சமயத்தை போதிக்கும் துறவிகள், உண்மையில் இலங்கையில் முறையாக பின்பற்றுகிறார்களா என்று தனக்குத் தானே கேள்வி கேட்டான்?   மகாவம்சம், பாளி மொழியில் எழுதிய, புத்தமதத்தை முன்னிலைப்படுத்திய வரலாற்றின் புராணக் கதையாகும். மகாவிஹரா துறவிகள் கி பி 5ம் அல்லது கி பி 6ம் நூற்றாண்டில், புத்த மதத்தை பின்பற்றும் அரசனின் ஆதரவுடன், புத்த மதத்தை பின்பற்றும் வெவேறு இனக்குழுக்களை ஒருங்கிணைத்து ஒரு இனமாக, புராண விஜயனை பின்பற்றுபவர்களாக, சிங்கத்தின் வழித்தோன்றலாக, உருவாக்க முன், இலங்கையில் ஒரு சிங்கள இனம் என்று ஒன்றும் இருக்கவில்லை என்பது வரலாற்று உண்மையாகும். அதனை  முதல் வில்ஹெய்ம் கெய்கர் பாளி மொழியில் இருந்து ஜெர்மன் மொழிக்கும் பின்னர், 1912ல் ஆங்கிலத்திற்கும் மொழிப்பெயர்ப்பு செய்தனர், அதன் பின்பு தான் சிங்கள மொழிபெயர்ப்பு வந்தது, அதுவரை இலங்கையில் சிங்கள - தமிழ் வேறுபாடுகிடையாது, அதன் பின் தமிழருக்கு எதிரான கருத்துக்கள் தீவின் மீது நீண்ட நிழலைப் போட்டு இன்றைய நிலைக்கு இட்டுச் சென்றது. எனவேதான் குறளரசன் மற்றும் தமிழ் சமூகத்திற்கு, மகாவம்சம் ஒரு வரலாற்று புராண நூல் மட்டுமல்ல; அது ஒடுக்கு முறைக்கான ஒரு கருவி, ஓரங்கட்டப்படுதல் மற்றும் பாகுபாடுகளை நியாயப்படுத்த பயன்படுத்தப் பட்ட ஆயுதம் ஆக அது தென்பட்டது, அதனால் தான் பொய்யான புராண கதையில் இருந்து உண்மையான தொல்பொருள் மற்றும் வரலாறுச் சான்றுகள் கூடிய இலங்கை வரலாறு 'மாற்றம்' காணவேண்டும், உண்மையின் அடிப்படையில், இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ் பேசி வாழும் இலக்கை தமிழர்களின் மேல் அரசு கொண்டு இருக்கும் நிலையில் 'மாற்றம்' வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக புத்தரின் போதனைகளை போதிப்பவர்கள், அவர் வழியில் தங்கள் வாழ்க்கையை அமைக்கும்  'மாற்றம்' தேவைப்படுகிறது. இந்த மூன்று மாற்றங்களையும் தான் குறளரசன் காணத் துடித்தான்.   சிறுவயதிலிருந்தே, மகாவம்சத்தின் உண்மைத் தன்மையை கேள்விக்குள்ளாக்கும் பல வரலாற்று உண்மைகளை கற்றுக் கொண்டான், உண்மையை மறைக்கும் கட்டுக்கதைகள் மற்றும் பிரச்சாரத்தின் அடுக்குகளையும் அது முன்வைக்கும் ஆபத்தான முறையில் தவறாக வழிநடத்தும், வெறும் பக்கச்சார்பான விவரிப்புகளையும் அறிந்தான். இது சிங்கள புத்த  தலைமுறைகளின் மனதை விஷமாக்கும் பொய்கள் என்பதை அவன் உண்மையான சான்றுகளுடன் அறிந்தான். அதனால்த் தான் 'மாற்றம்' உடனடியாகத் தேவை என்கிறான்!  ஆனால் மகாவம்சத்தின் வஞ்சகத்தால் பாதிக்கப்பட்டது தமிழர்கள் மட்டும் அல்ல. இந்த வரலாற்று சூழ்ச்சிக்கு சிங்கள சாமானிய மக்களும் எப்படி பலியாகினர் என்பதை குறளரசன் இலங்கையின் இன்றைய நிகழ்வுகளில் நேரில் கண்டான். மற்ற சமூகங்களின் பங்களிப்புகள் மற்றும் இருப்பை அழிக்கும் அரசியல் மற்றும் மத தலைவர்களின் செயல்களில்! அது தான் 'மாற்றத்துக்காக' ஏங்குகிறான்!  புத்தர், ஞானம் பெற்றவர், இரக்கம் மற்றும் அகிம்சையின் செய்தியைப் போதித்தார், ஆனால் அவரது போதனைகள் அதிகாரத்தில் இருப்பவர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்கு சேவை செய்ய திரிக்கப்பட்டன. உலகளாவிய அன்பு மற்றும் புரிதல் கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட ஒரு மதம், மற்றவர்களை ஒதுக்கி வைப்பதையும் ஒடுக்குவதையும் நியாயப்படுத்த எப்படி இன்று ஒத்துழைக்கப்பட்டது என்று குறளரசனால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. குறளரசனும் ருவனிக்காவும்  தங்களின் உறவின் சிக்கல்களை சிலவேளை எதிர் கொள்ளவேண்டி இருந்தது. அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள தப்பெண்ணங்கள் மற்றும் பாரபட்சங்களை அடிக்கடி எதிர்கொண்டனர். கடந்த காலத்தின் பாவங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டு, திருத்தப்பட்டு, மன்னிப்பு கேட்டு, அனைத்து சமூகங்களும் நல்லிணக்கத்துடனும், பரஸ்பர மரியாதையுடனும் இணைந்து வாழக்கூடிய எதிர்காலத்தை, இவ்வாறான அதி முக்கிய 'மாற்றத்தை' இருவரும் எதிர் பார்த்தனர்.  "இருஇனம் வாழும் ஒரு நாட்டில்  இருக்கையை பிடுங்கி எடுத்து தனதாக்கி இறுமாப்புடன் வரலாற்றையும் திருத்தி எழுதி இதயமற்று நசுக்குவது பெருமை அல்ல? "  "இச்சை படுத்துவதை உணர்ந்து நிறுத்தி  இணக்கம் கண்டு இதயம் பரிமாறி  இன்று நேற்று செய்த அநியாயங்களுக்கு  இனியாவது மன்னிப்பு கேள் நாடுமுன்னேறும்! " இந்த 'மாற்றம்' தான் அவன் சுருக்கமாக எதிர்பார்ப்பது. எது எப்படியானாலும்,  அவர்களின் காதல் ஒரு இணக்கமான சகவாழ்வு சாத்தியம் என்பதற்கு ஒரு சான்றாக இருந்தது, கருத்து வேறுபாடு இலங்கையில் நிலவினாலும், அவர்களின் வாழ்க்கை என்ற கடலில், நம்பிக்கை கலங்கரை விளக்காக இருந்தது. வருடாந்த ஜெனிவா தலையீடுகள் குறளரசனுக்கும் அவரது சமூகத்திற்கும் ஒரு நம்பிக்கையை அளித்தன. இலங்கையில் ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் அமைப்பு ரீதியான அநீதிகளுக்கு தீர்வு காண சர்வதேச சமூகம் இங்குதான் கூடுகிறது. குறளரசன் அர்த்த முள்ள 'மாற்றத்திற்காகவும்', தனது கடமைகளை மதிக்கும் மற்றும் அனைத்து குடிமக்களின் கண்ணியத்தை நிலைநிறுத்தும் ஒரு அரசாங்கத்திற்காகவும் உருக்கமாக பிரார்த்தனை செய்தான். அவனுடன் அவனின் காதலி ருவனிக்காவும்  இணைந்து கொண்டாள். என்றாலும் குறளரசனும் ருவனிக்காவும் பாவத்தில் இருந்து இலங்கையை மீட்பதற்கான பாதை தடைகள் நிறைந்தது என்பதை உணர்ந்தனர். மேலும் 'மாற்றம்' எளிதில் வராது என்பது  குறளரசக்குத் தெரியும். அறியாமை மற்றும் தப்பெண்ணத்தின் தூக்கத்திலிருந்து ஒரு நாள் முழு சமூகமும் விழித்து, கடந்த கால தவறுகளை உணர்ந்து, நல்லிணக்கம் மற்றும் நீதியை நோக்கி ஒரு புதிய பாதையை உருவாக்குமா? அல்லது அனைத்து குடிமக்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் அங்கீகரிக்கும் அதிகாரங்களை கட்டாயப்படுத்த சர்வதேச சமூகத்தின் இடைவிடாத அழுத்தம் தேவைப்படுமா?. அவன் மனம் அலை பாய்ந்தது. இந்த கவலையிலும், மற்றும் படிப்பாலும், அவன் சிலவேளை தனிமையை விரும்பினான். இதனால் அவன் ருவனிக்காவை சந்திப்பதும் குறையத் தொடங்கியது. இது அவளுக்கு ஒரு தவிப்பைக் கொடுத்தது.  ஒரு நாள் அவள், அவனின் காதில் விழக்கூடியதாக தன் தவிப்பை ஒரு சிங்கள பாடலை முணுமுணுத்து எடுத்துக் காட்டினாள். 'සිහිනෙන් වගේ ඇවිදින් ආයෙත් සැගවී හිටියේ කොහෙදෝ? මදකින්  පෙනී නොපෙනී ගියේ මේ ආදරේ හැටිදෝ  ?' 'නෙත සනසනා නුඹගේ සිනා මා රැය පුරා එය සිහි කලා නිදි දෙවු දුවත් අද නෑ ඇවිත් ඈතින් ඉදන් සරදම් කලා.'. 'නෙතු වෙහෙසිලා  දහවල  පුරා නුඹ සොය සොයා සිත දුර ගියා  මදකින්  පෙනී නොපෙනී ගියේ මෙ ආදරේ හැටිදෝ  ?'   குறளரசன் மௌனமாக கண்ணீர் சிந்தி, அதே பாடலை தமிழில் முணுமுணுத்தான். "மீண்டும் வருவாயோ கனவில் அணைப்பாயோ? எங்கே மறைந்தாய் ? எந்தத் தொலைவில் ? திடீரெனத் தோன்றுவாய்? சடுதியாக மறைவாய்? உண்மைக் காதலா?, வெறும் நாடகமா?" "சோர்ந்த கண்களுக்கு புன்னகை தைலம் இரவின் மடியில் முகத்தைக் காண்கிறேன்  இரவுதேவதை என்னைத் தழுவ மறுக்கிறாள்?  தூர விலகி கிண்டல் செய்கிறாள்?." "பகலில் கண்கள் சோர்வு அடையுதே  இதயம் அலைந்து உன்னைத் தேடுதே!  கண்ணுக்குள் அகப்படாதா காதலா இது? கணப்பொழுதில் கடக்கும் கனவின் மகிழ்ச்சியா ?" குறளரசன் தனது மருத்துவப் பயிற்சியின் இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டிருந்தபோது, அவன் நம்பிக்கைக்கும் விரக்திக்கும் இடையே கிழிந்துக் கொண்டு இருந்தான். முன்னோக்கி, செல்லும் நேரிய பாதை சவால்கள் நிறைந்ததாக இருந்தது, ஆனால் அவன் ஒரு சிறந்த நாளைய கனவுகளை என்றும் கைவிட மறுத்துவிட்டான். கல்வி, சுறுசுறுப்பு மற்றும் அன்பு ஆகியவற்றின் சக்தியை அவன் நம்பினான். பிளவு மற்றும் அவநம்பிக்கையால் பிளவுபட்ட சமூகத்தின் குழப்பங்களுக்கு மத்தியில் அவர்களின் காதல் மலர்ந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக முற்றங்களில் மற்றும் மாலை நேர உலாக்களில் அவர்கள் ஒருவருக்கொருவர் கைகளில் ஆறுதலைக் கண்டார்கள், அவர்களின் காதல் வெளியில் வீசும் புயல்களிலிருந்து ஒரு தற்காலிக அடைக்கலமாக இருந்தது.  "மாலை நேர தென்றல் என்ன பாடுதோ என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ மஞ்சள் வண்ண வெய்யில் என்று தோணுதோ என் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ?" "பூ விரிந்த சோலை என்ன எண்ணுதோ இந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோ தங்க நிற கலசம் எடுத்து நடக்கும் தேரோடு பக்கம் வந்து மெதுவாய் பதமாய் இதமாய் உறவாடு?" ஒரு சிங்கள குடும்பத்தின் மகளான ருவனிக்காவுக்கு, குறளரசனை நேசிப்பது என்பது பிறப்பிலிருந்தே அவளிடம் சூழ்நிலை காரணமாக வேரூன்றியிருந்த தப்பெண்ணங்கள் மற்றும் பக்கசார்புககளின் தாக்கங்களை கலையத் தொடங்கியது. குறளரசனின் தமிழ் மக்கள் சமூகத்தின் விளிம்புநிலையில் நலிந்தபோது, எழுபத்தி ஆறு ஆண்டுகளாக, சலுகை மற்றும் அதிகாரத்தால் பயனடைந்த ஒரு சமூகத்தைச் தான் சேர்ந்தவர் என்ற குற்ற உணர்வுடன் அவள் சிலவேளை மல்யுத்தம் செய்தாள். ஆனால் குறளரசனிடம், அவள் ஒரு காதலியாக மட்டுமல்ல, நீதி மற்றும் சமத்துவத்திற்கான போராட்டத்தில் ஒரு பங்காளியாகவும் இருந்தாள். ஒன்றாக, காதல் இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டிய எதிர்காலத்தை கற்பனை செய்யத் துணிந்தனர், அங்கு கடந்த கால பாவங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டு பரிகாரம் செய்யப்பட்டன. அவர்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தின் வாசலில் நிற்கும் போது, குறளரசனும் ருவனிக்காவும் ஒருவரையொருவர் ஒட்டிக்கொண்டனர், அவர்களின் காதல் இருள் கடலில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருந்தது. ஏனென்றால், அவர்களின் கூட்டணியில், மகாவம்சத்தின் எதிரொலிகள் மௌனமாகி, ஒற்றுமை, சமத்துவம் மற்றும் புரிந்துணர்விற்காக அழைப்பு விடுக்கும் குரல்களின் சேர்ந்திசையால் [கோரஸால்] பதிலீடு செய்யப்பட்ட எதிர்காலம் பற்றிய வாக்குறுதி இருந்தது. யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில், குழப்பமான கடந்த காலத்தின் எதிரொலிகள் மற்றும் நிச்சயமற்ற எதிர்காலத்தின் கிசுகிசுக்களின் மத்தியில், குறளரசன் தனது மக்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக உயர்ந்து நின்றான். மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய அவனது அசைக்க முடியாத நம்பிக்கையில், ஒரு நாள், தமிழர்களின் குரல்கள் கேட்கப்படும், அவர்களின் கனவுகள் நனவாகும், 'மாற்றம்' கட்டாயம் நிகழும் என்ற நம்பிக்கை, மற்றும் இரவீந்தரநாத் தாகூரின் கீதாஞ்சலி பாடல் [“Where the mind is without fear and the head is held high; Where knowledge is free;] அவனின் போராட்டத்தைத் தொடர ஊக்கம் & கொடுத்தது.  வலிமையைக் கொடுத்தது. "இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ, அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை உள்ளதோ, குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால் வெளி உலகின் ஒருமைப்பாடு எங்கே  உடைபட்டுத் துண்டுகளாய்ப் போய்விட படவில்லையோ, வாய்ச் சொற்கள் எங்கே மெய்நெறிகளின் அடிப்படையிலிருந்து வெளிப்படையாய் வருகின்றனவோ, விடாமுயற்சி எங்கே தளர்ச்சி யின்றி பூரணத்துவம் நோக்கி தனது கரங்களை நீட்டுகிறதோ, அடிப்படை தேடிச் செல்லும் தெளிந்த அறிவோட்டம்  எங்கே பாழடைந்த பழக்கம் என்னும் பாலை மணலில் வழி தவறிப் போய்விட வில்லையோ, நோக்கம் விரியவும், ஆக்கவினை புரியவும் இதயத்தை எங்கே வழிநடத்திச் செல்கிறாயோ,  அந்த விடுதலைச் சுவர்க்க பூமியில் எந்தன் பிதாவே! விழித்தெழுக என் தேசம்!" [கீதாஞ்சலி / தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா] நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]        
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.