Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் ஆலயங்கள் , வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்கள் கைது…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் ஆலயங்கள் , வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்கள் கைது…

October 17, 2018

Robbary5.png?resize=786%2C439

யாழ்.திருநெல்வேலி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலும் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்களை நேற்று மாலை மடக்கி பிடித்த இளைஞர்கள், நையபுடைத்ததாக காவற்துறையினர் தெரிவித்தனர். குறிப்பாக திருநெல்வேலி பகுதியில் 2 ஆலயங்களிலும் 3 வீடுகளில் கடந்த இரு நாட்களில் 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது.

குறித்த கொள்ளைகளில் ஈடுபட்ட கொள்ளையர்களின் தெளிவான அடையாளங்களுடன் கூடிய சீ.சீ.ரி.வி ஆதாரங்கள் மீட்கப்பட்டிருந்தன.  இதனடிப்படையில் இந்தக் கொள்ளையர்களை பிடிப்பதற்காக இளைஞர்கள் திட்டமிட்டிருந்த நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் 4 பேர் நேற்று மாலை நடமாடியுள்ளனர். அவர்களை   மறித்த இளைஞர்கள் விசாரித்ததுடன் அவர்களிடம் இருந்த பையை சோதனையிட்டபோது கோவிலில் மீட்கப்பட்ட பித்தளை பொருட்கள் மீட்கப்பட்டன. பின்னர் கொள்ளை சம்பவம் தொடர்பான சீ.சீ.ரி.வி காட்சிகளை பார்த்த போது, பிடிபட்டவர்களே கொள்ளையர்கள் என அடையாளம் கண்டதை தொடர்ந்து கொள்ளையர்களை இளைஞர்கள் பிடித்து கட்டுவதற்கு முயற்சித்தபோது இருவர் தப்பி ஓடியுள்ளனர். எனினும் இருவர் அகப்பட்டனர். அவர்கள் இருவரையும் நையபுடைத்த இளைஞர்கள் அவர்களை மின் கம்பத்துடன் கட்டிவைத்தனர்.

பின்னர் காவற்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு சென்ற காவற்துறையினர் இந்தக் கொள்ளையர்களை தாம் இதற்கு முன்னரும் கைது செய்ததாகவும் இவர்கள் பிணையில் வெளிவந்து வந்து மீண்டும் மீண்டும் கொள்ளையில் ஈடுபடுவதாகவும் கூறி இருவரையும் கைது செய்துள்ளனர்.

Robbary2.png?resize=781%2C470Robbary4.png?resize=782%2C450Robbary3.png?resize=616%2C516Robbary1.png?resize=632%2C613

 

http://globaltamilnews.net/2018/99601/

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.திருநெல்வேலி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் தொடர்ச்சியாக ஆலயங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த கொள்ளையர்கள் மடக்கி பிடிக்கப்பட்டு பொது இடத்தில் கட்டிவைத்து தாக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

திருநெல்வேலி பகுதியில் 2 ஆலயங்களிலும் 3 வீடுகளிலும் கடந்த இரு நாட்களில் 4 பேர் கொண்ட கொள்ளை கும்பல் கொள்ளையில் ஈடுபட்டு வந்தது.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

இந்த கொள்ளைகளில் ஈடுபட்ட கொள்ளையர்களின் தெளிவான அடையாளங்களுடன் கூடிய சீ.சீ.ரி.வி ஆதாரங்கள் மீட்கப்பட்டிருந்தன.

இதனடிப்படையில் குறித்த கொள்ளையர்களை பிடிப்பதற்காக இளைஞர்கள் திட்டமிட்டிருந்த நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் 4 பேர் இன்று மாலை நடமாடியுள்ளனர்.

அவர்களை மறித்த இளைஞர்கள் விசாரித்ததுடன் அவர்களிடம் இருந்த பையை சோதனையிட்டபோது கோவிலில் மீட்கப்பட்ட பித்தளை பொருட்களை இளைஞர்கள் மீட்டனர்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

பின்னர் கொள்ளை சம்பவம் தொடர்பான சீ.சீ.ரி.வி காட்சிகளை பார்த்து பிடிபட்டவர்களே கொள்ளையர்கள் என அடையாளம் கண்டதை தொடர்ந்து, கொள்ளையர்களை இளைஞர்கள் பிடித்து கட்டுவதற்கு முயற்சித்தபோது இருவர் தப்பி ஓடியுள்ளனர்.

எனினும் இருவர் அகப்பட்டனர். அவர்கள் இருவரையும் நையபுடைத்த இளைஞர்கள் அவர்களை மின் கம்பத்துடன் கட்டிவைத்தனர். பின்னர் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த கொள்ளையர்களை தாம் இதற்கு முன்னரும் கைது செய்ததாகவும், அவர்கள் பிணையில் வந்து மீண்டும், மீண்டும் கொள்ளையில் ஈடுபடுவதாக கூறி கொள்ளையர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

https://www.tamilwin.com/community/01/196089?ref=rightsidebar

On 10/17/2018 at 5:47 AM, கிருபன் said:

காவற்துறையினர் இந்தக் கொள்ளையர்களை தாம் இதற்கு முன்னரும் கைது செய்ததாகவும் இவர்கள் பிணையில் வெளிவந்து வந்து மீண்டும் மீண்டும் கொள்ளையில் ஈடுபடுவதாகவும் கூறி இருவரையும் கைது செய்துள்ளனர்.

கள்ளரையும் காடையரையும் ,வாள்வெட்டு குழுவையும் வளர்த்தெடுப்பது போலிசும் அரசியல்வாதிகளும் தான் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.