Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்சின் ஜனாதிபதி சிராக் அவர்களுக்கு சுவிஸ் மக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிதி சேகரிப்பில் ஈடுபட்டார்கள் என்று காரணம் காட்டி 16 தமிழர்கள் பிரான்ஸ் பொஸிசாரினால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பிரான்சின் ஜனாதிபதி கௌரவ ஐக்குவாஸ் சிராக் அவர்களுக்கு சுவிஸ் மக்கள் தமது கவலையை தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பாக தமிழர் பேரவை சுவிஸ் அனுப்பிய கடிதத்தில்:

நிதி சேகரிப்பில் ஈடுபட்டார்கள் என்று காரணம் காட்டி 16 தமிழர்கள் பிரான்ஸ் பொஸிசாரினால் கைது செய்யப்பட்ட செய்தி அறிந்து சுவிஸ்சர்லாந்திலே வாழுகின்ற தமிழர்களாகிய நாம் அதிர்ச்சியும் மன வேதனையும் அடைந்தோம்.

சர்வதேச மத்தியஸ்தத்துடனான ஒரு போர்நிறுத்த நடவடிக்கை அமுலில் உள்ள சூழலில் அரச படைகளின் இராணுவ நடவடிக்கை காரணமாக கிழக்கு பகுதி மக்கள் ஆயிரக்கணக்கில் வீடுகளை இழந்தும் யாழ்குடா நாட்டில் நான்கு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் பொருளாதார தடை காரணமாக முற்றுகைக்கு உட்பட்டுள்ள தருணத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

இலங்கை அரசபடைகளின் விமானக் குண்டுவீச்சு மற்றும் ஆழ ஊடுருவும் அணியின் ஊடுருவல் காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் தினமும் நாட்டை விட்டு தப்பியோடுவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன பிரான்ஸ் குடிமக்களாகவோ அன்றி அகதிகளாகவோ வாழ்ந்து வந்த இந்த 16 பேரும் கைது செய்யப்படும் நாள் வரை சட்டத்தை மதித்து நடப்பவர்களாகவே வாழ்ந்து

வந்தவர்கள்.

நிதி சேகரிக்கும் நோக்கத்துடன் அவர்கள் பிரான்ஸ் வந்தவர்கள் அல்ல. அரச பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து தம்மை காத்துக் கொள்வதற்காக நாட்டை விட்டு தப்பி வந்தவர்கள் தமிழர் தாயகத்தில் நிலவும் தற்போதைய சூழல் காரணமாகவே இந்த நடவடிக்கைக்கு தள்ளப்பட்டனர். இலங்கை அரச படைகளினாலும் ஒட்டுக்குழுக்களினாலும் அப்பாவித் தமிழ்மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சட்டத்திற்கு எதிரான கொலைகள் கடத்தல்கள் தடுத்து வைப்புக்கள் காணாமல் போதல்கள் சித்திரவதைகள் பாலியல் வல்லுறவுக்கள் பாலியல் துன்புறுத்தல்கள் பொருளாதார தடைகள் கட்டுப்பாடுகள் மீன்பிடித்தடை இடப்பெயர்வுகள் எறிகணை வீச்சுக்கள் ஆகியவை தமிழ்மக்களின் வாழ்வை துயர்நிலைக்கு தள்ளியுள்ளதுடன் அவர்களை நாட்டை விட்டு தப்பியோடுவதற்கும் உந்துகின்றன.

மனச்சாட்சி உள்ள எவரும் சகமனிதருக்காக கவலைப்படுவது இயல்பு மேற்குறித்த எமது சகோதரர்களும் இதனையே செய்தனர் . இடம் பெயர்ந்து தடுப்பு முகாம்களில் போதிய அடிப்படை வசதிகள் மற்றும் உணவு இன்றி வாழும் ஆயிரக்கணக்கான சகோதரர்களுக்கு உதவும் முகமாகவே நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு சிறிலங்கா அரசங்கம் உதவுவதும் இல்லை ஏனைய உள்ளுர் மற்றும் சர்வதேச உதவி நிறுவனங்களை எதையும் அனுமதிப்பதுமில்லை என முழு உலகுமே அறியும். மேலும் தமிழ் மக்களுக்கு இடைவிடாது உதவும் ஒரே ஒரு தொண்டர் நிறுவனமான தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் வங்கி கணக்கை முடக்கி அதன் நடவடிக்கையை பெரிதும் மட்டுப்படுத்தியுள்ளது.

அத்தகைய நிகழ்வுகளின் பி;ன்னணியிலேயே தமிழ் மக்கள் மீது இரக்கம் கொண்டசிலர் ஏதாவது ஓரு முறையில் தமிழ் மக்களுக்கு உதவும்முகமாக நிதிசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர் அண்மைய கைதுகளில் அதுவும் தடைப்பட்டுவிட்டன பிரான்ஸ் அரசாங்கத்தின் மீதும் சுதந்திரத்திற்காக மிகத்தீவிரமாக போராட்டத்தை நடத்திய கடந்த கால வரலாற்றை கொண்டவர்களும் குடியரசு ஆட்சிமுறையை உலகுக்கு அறிமுகம் செய்த அந்நாட்டு மக்கள் மீதும் நாம் மிகவும் மதிப்பும் மரியாதையும் கொண்டவர்கள் குடியரசின் மகுடவாசகமான, சுதந்திரம் , சமத்துவம், சகோதரத்துவம், ஆனது பிரான்ஸ் மக்கள் என்றென்றும் எமது பக்கமே. அதாவது ஒடுக்குபவர் பக்கமல்ல, ஒடுக்கப்படுபவர் பக்கமே என்பதை உணர்த்தி நிற்கின்றது. இரண்டாம் உலக யுத்த காலகட்டத்தில் சுதந்திர பிரான்ஸ் படைகள்நாட்டிற்கு வெளியேயும், பிரான்ஸ் தற்காப்பு படைகள் உள்நாட்டிலும், அமெரிக்கா இங்கிலாந்து , கனடா போன்ற நாடுகளின் உதவியுடனும் தீயசக்திகளுக்கு எதிராக போரிட்டன. அன்னிய உதவிகள் எதுவுமின்றி பிரான்ஸ் மக்களால் விடுதலை பெற்றிருக்க முடியாது.

இந்த சூழலை நாம் எமது சூழலுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றோம். தமிழ் மக்கள் எந்த ஒரு வெளியாரின் உதவியும் இன்றி தாய்நாட்டிற்காகப் போராடி வருகின்றார்கள். புலம் பெயர்ந்த தமிழர்களிடம் மாத்திரம் இருந்தே அவர்களுக்கு உதவிகள் கிடைக்கின்றன. இத்தகைய சூழலில் பிரான்ஸ் அரசாங்கத்தின் நடவடிக்கையானது போராட்டத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது மட்டுமன்றி தமிழ் பொதுமக்களின் நிலையையும் மோசமாக்கியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளை பிரான்ஸ் அரசாங்கம் தடைசெய்துள்ள போதிலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளையே தமது ஏகப் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். தமது அங்கீகாரத்தை அவர்கள் ஜனநாயகத் தேர்தல்கள் உட்பட பல வழிகளினாலும் நிரூபித்தும் இருக்கின்றார்கள். தடைக்கு முன்பதாக, பிரான்ஸ் அரசாங்கம் கூட இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை வரைவு தொடர்பான பேச்சுக்களுக்காக சட்ட வல்லுனர்கள் தமது நாட்டில் கலந்துரையாட அனுமதி கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேற்குறித்த காரணங்களின் அடிப்படையில், பிரான்ஸ் அரசாங்கமானது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கையை சொல்லில் அன்றி செயலில் கடைப்பிடித்து, தனது முடிவை மீள் பரிசீலனை செய்யுமாறு நாம் கேட்டுக்கொள்கிறோம்.

கைதுசெய்யப்பட்ட அனைவருமே குடும்பஸ்தர்கள். அவர்களின் உறவினர்கள் தங்கள் வாழ்க்கைத் துணைவர்களையும், தந்தையினரையும் பிரிந்து வாடுகின்றார்கள். அவர்கள் மீண்டும் ஒரு தடவை பிரிக்கப்பட்டுள்ளார்கள். விசாரணைக்காகவே கைதுசெய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ள போதிலும், அதற்கு மாறாக நாட்கணக்கில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இதனை ஒரு நியாமற்ற ஒரு நடவடிக்கையாகவே நாங்கள் கருதுகின்றோம்.

மேலும், ஐரோப்பாவில் வீரியத்துடன் செயற்பட்டு வரும் ஸ்ரீலங்கா அரசாங்கத்துடன் செயற்பட்டு வரும் தமிழ் விரோத ஊடகங்கள், அண்மைய கைதுகளை ஒரு பிரசார கருவியாகப் பாவித்து தமிழ் தேசியத்திற்கு ஆதரவான தமிழர்களை விமர்சித்து அவர்களை அதைரியப்படுத்துவதனூடாக பிரான்ஸ் அரசாங்கத்திற்கு எதிராக அவர்களைத் தூண்டிவிட முனைந்துள்ளார்கள்.

சுவிஸ்லாந்தில் செயற்பட்டு வரும் 27 தமிழ் அமைப்புகளின் அங்கத்தினர்களாகிய நாம், தமது சக உறவுகளுக்கு உதவி செய்யும் தூய்மையான ஒரு நோக்கத்தோடு தமது மனச்சாட்சிகளின் படி செயற்பட்ட 16 நபர்களினதும் விடுதலை தொடர்பான விடயத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கி தாமதம் இன்றி அவர்களை விடுதலைசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு மேன்மை தங்கிய தங்களை கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி செய்தி மூலம் தமிழ் நியூஸ் 24 கொம்

http://tamilnews24.com//index.php?option=c...89&Itemid=2

பிரான்ஸ் அரசாங்கத்துக்கு இக்கைதின் எதிர்ப்பு நடவடிக்கையாக ஜரோப்பா முழுவதும் கண்டன ஊர்வலம் அல்லது கூட்டம் நடத்தினால் என்ன

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.